Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாகிஸ்தான் பல்கலை.யில் தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்: மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்

Featured Replies

 

பாகிஸ்தான் பல்கலை.யில் தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்: மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்

 

 

 
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர். | படம்: ஏ.எஃப்.பி.
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர். | படம்: ஏ.எஃப்.பி.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்துவானில் சார்சடா என்ற இடத்தில் அமைந்துள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2014-ல் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவர்கள் உட்பட 140 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றது.

அதே பாணியில் தீவிரவாதிகள் தற்போது பச்சா கான் பல்கலைக்கழகத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தானின் 'டான்' செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், "பச்சா கான் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்து இரண்டுக்கும் மேற்பட்ட முறை பயங்கர குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடைபெற்று வருகிறது. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் டி.ஐ.ஜி. சையது வாசிர் தெரிவித்துள்ளார். 8-ல் இருந்து 10 தீவிரவாதிகள் வளாகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவர்களில் 5 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் சார்சடா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகம் அருகே மீட்புப் பணியில் உதவி வரும் ஏதி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் இதுவரை 15 பேரது சடலங்களை மீட்டுள்ளதாக கூறுகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தலைக்கு குறிவைத்த தீவிரவாதிகள்:

மீட்புக் குழுவில் இருந்த அதிகாரி ஒருவர் டான் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "தீவிரவாதிகள் மாணவர்கள் தலையை குறிவைத்தே சுட்டுள்ளனர்" என்றார்.

பச்சா கான் நினைவு தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. பல்கலைக்கழகத்தில் 3000 மாணவர்கள் உள்ளனர். இதுவரை 70 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8128250.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாக். பல்கலையில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்: 20 மாணவர்கள் பலி- 3000 பேரின் நிலை என்ன?

 

பாகிஸ்தானில் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், 20 மாணவர்களை சுட்டுக் கொன்றனர். 3 ஆயிரம் மாணவர்கள், பேராசிரியர்களை தீவிரவாதிகள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
 

pak%20university.jpg

பாகிஸ்தானின் சர்சட்டா பகுதியில் அமைந்துள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்திற்குள் இன்று காலை தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் புகுந்தனர். அப்போது, கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 மாணவர்கள் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். தகவல் அறிந்து ராணுவத்தினரும், பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்போது, நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

pak%20university%20attack.jpg

தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. 3 ஆயிரம் மாணவர்கள், பேராசிரியர்களை தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவமும், பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்திற்குள் 8ல் இருந்து 10 தீவிரவாதிகள் வரை இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தினுள் 4 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2014ம் ஆண்டு, பெஷாவரில் பள்ளி ஒன்றில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/world/57874-bacha-khan-university-terror-attack.art

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.