Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்: ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின விழா

Featured Replies

டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்: ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின விழா

 
 
டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.

ராஜபாதையில் அணிவகுப்பை பிரதமர் மோடி,

பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே பார்வையிட்டு வருகின்றனர்

 

நாட்டின் 67-வது குடியரசு தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

நாட்டின் ராணுவ வலிமையையும் பல்வேறு கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றுவரும் இவ்விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னமான 'அமர் ஜவான் ஜோதி'யில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின், குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை அவர் சந்தித்தார். ராஜபாதையில் வரவேற்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே, பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜாபாதையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி வரவேற்றார்.

பிறகு, 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து முப்படை களின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், 76 உறுப்பினர்கள் கொண்ட பிரான்ஸ் ராணுவத்தினர், 48 பேரின் இசை முழங்க, குடியரசுத் தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நாட்டின் ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் போர் விமானம், ஏவுகணைகள், எதிரி நாட்டு ஆயுதங்களைக் கண்டறியும் ராடார் ஆகியவை அணிவகுக்கத் தொடங்கின. அதிநவீன ராணுவ டாங்கிகள், பீரங்கிகள் உள்ளிட்டவையும் பேரணியில் அணிவகுத்து வருகின்றன.

இந்தியப் படையினரின் சாகசங்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து மாநில பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம் ஆகியவை நடந்துகொண்டிருக்கிறது. கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கும் வகையில் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் சார்பிலும் வண்ணமயமான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்று வருகின்றன.

குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article8154515.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் முதன் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அணிவிப்பு! (படங்கள்)

 

இந்திய வரலாற்றில் முதன் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் பங்கேற்றார்.
 

2016%20Republic%20Day%201.jpg

இந்தியாவின் 67வது குயடிரசு தின விழாவையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹாெலாந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
 

2016%20Republic%20Day.jpg

இதைத் தொடர்ந்து, நாட்டுக்காக போராடி உயர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அசோக் சக்ரா விருதுகளை குடியரசு தலைவர் பிரணாப் வழங்கினார். கோஸ்வாமிக்காக அவரது மனைவி பாவ்னா வுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேலும், கீர்த்தி சக்ரா, சோவ்ரியா சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னர், முப்படையினரின் அணிவகுப்பு தொடங்கியது. அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் பிரணாப், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் ஹாெலாந்த் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.
 

2016%20Republic%20Day-%20France%20Army%2

இந்திய வரலாற்றில் முதன் முறையாக பிரான்ஸ் நாட்டின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. மேலும், 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
 

2016%20Republic%20Day%20dog.jpg

மேலும், பீஷ்மா பீரங்கி, பிரமோஸ் ஏவுகணை, ஆகாஸ் ஏவுகணை, பாராசூட் ரெஜிமெண்ட் அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு

தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா இன்று நடைபெற்றது. போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து தமிழக ஆளுநர் ரோசய்யா மரியாதை செலுத்தினார். முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். பின்னர் மெரினா கடற்கரையில் ஆளுநர் ரோசய்யா தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் ஆளுநர், முதல்வர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து முப்படை அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடந்தது. முப்படை வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார்.

jaya26.jpg



முப்படையை தொடர்ந்து போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்–பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி–கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண–சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

2016%20Republic%20day-%20jaya.jpg

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். வேளாண்துறை சிறப்பு விருது மதுரையைச் சேர்ந்த பெண் பிரசன்னாவிற்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகள் வண்ண வண்ண உடையணிந்து நடனம் ஆடி திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய பள்ளி, கல்லூரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/india/58128-indias-military-might-on-display-on-67th-republic.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.