Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏஜியன் கடலை கடக்க முயன்ற குடியேறிகள் 33 பேர் பலி

Featured Replies

ஏஜியன் கடலை கடக்க முயன்ற குடியேறிகள் 33 பேர் பலி

ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த குடியேறிகளில் குறைந்தது பத்து பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர்

ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த குடியேறிகளில் குழந்தைகள் அடங்கலாக குறைந்தது 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அவர்கள் லெஸ்போஸ் தீவுக்கு வரமுயற்சித்ததாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். 75 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பிய ஒருவர் கூறியுள்ளார்.

வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global/2016/01/160130_migrants_death_turkey

 

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு விபத்து ; 40 பேர் பலி

[ Sunday,31 January 2016, 06:16:52 ] 
thuriki%20bort.jpg

துருக்கியின் மேற்கு கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று மூழ்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 75 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஏசியன் கடலை கடந்து கிரேக்கத்திற்கு பிரவேசிக்க முயற்சித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

17 மீற்றர் நீளமுள்ள படகில் 120 பேர் பயணித்ததாகவும் இவர்கள் லெஸ்போஸ் தீவுக்குசெல்ல முயற்சித்தாக துருக்கிய  கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் சிரியா, மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள்  லெஸ்போஸ் தீவுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, கடந்த இரு வாரங்களில் பலர் உயிரிழந்துள்ளதுடன் அத்துடன்  ஒரு மில்லியனிற்கும் அதிகமானவர்கள் கடந்த ஆண்டு ஐரோப்பாவிற்குள் அகதிகளாக பிரவேசித்துள்ளதுடன் 3 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையினால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதுடன் புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://ibctamil.com/news/index/17877

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.