Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 பெரும்பான்மையின மருத்துவர்களில் தங்கியிருக்கும் முல்லை மாஞ்சோலை வைத்தியசாலை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 பெரும்பான்மையின மருத்துவர்களில் தங்கியிருக்கும் முல்லை மாஞ்சோலை வைத்தியசாலை:

03 பெப்ரவரி 2016
30 பெரும்பான்மையின மருத்துவர்களில் தங்கியிருக்கும் முல்லை மாஞ்சோலை வைத்தியசாலை:

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை 30 பெரும்பான்மையின மருத்துவர்களில்தான் தங்கியிருக்கிறது. முல்லைத்தீவு நகரத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் முல்லை - மாங்குளம் வீதியில் முள்ளியவளையை அண்டி அமைந்திருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலை மாஞ்சோலை வைத்தியசாலை என்று அழைக்கபடுகிறது. பல்வேறு அடிப்படை பிரச்சினைகள், தேவைகள் மத்தியில்தான் இந்த வைத்தியசாலை இயங்குகின்றது. 

போரால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு. இறுதி யுத்தமே இந்த மாவட்டத்தில்தான் நடந்தது. யுத்த பாதிப்புக்களுக்கு உள்ளான பலர் வைத்தியசாலைக்கு வந்து செல்லும் காட்சியே இன்றும் பார்வையிடலாம். அப்படியான மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில்  அடிப்படை தேவைகளை ஏற்படுத்துவது முக்கியமானது. எப்படியான பிரதேசத்திலும் மருத்துதேவை மிக மிக அடிப்படையானது. 

முக்கியமாக இந்த வைத்தியசாலையில் நான்கு தமிழ் மருத்துவர்களே பணி புரிகிறார்கள். முப்பது பெரும்பான்மையின மருத்துவர்கள் பணி புரிகிறார்கள். தமிழ் மருத்துவர்கள் எவரும் பணி புரிய முன்வராத நிலையில் முப்பது மருத்துவர்கள் தெற்கிலிருந்து வந்து பணியாற்றுவதாகவே வைத்தியசாலையில் பணிபுரியும் தமிழ் வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டார். 

முல்லைத்தீவில் பள்ளிப் படிப்பை முடித்து மருத்துபீடம் சென்ற வைத்தியர் ஒருவர், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வைத்தியர் ஒருவர் உட்பட தமிழ் வைத்தியர்கள் நான்கு பேரும் பொறுப்பு வைத்தியர் ஒருவருமாக ஐந்து பேரே இந்த வைத்தியசாலையில் பணி புரிகிறார்கள். வெளி நோயாளர் பிரிவை பார்வையிடச் சென்றபோது அங்கிருந்த இரு வைத்தியர்களுமே பெரும்பான்மையின வைத்தியர்கள்  என்று கூறுகிறார் எமது செய்தியாளர்.

எங்களுடைய பிரதேசத்தில் வடக்குக் கிழக்கிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நிலை கொள்ளவே விரும்புவதாகவும் முல்லைத்தீவு போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்கு பணியாற்ற அவர்கள் முன்வருவதில்லை என்றும் இதனாலேயே தெற்கிலிருந்து வைத்தியர்கள் அழைத்து வரப்படுவதாகவும் வைத்திய ஊழியர் ஒருவர் கூறினார். 

அங்கிருக்கும் பெரும்பான்மையின வைத்தியர்கள் கொச்சை தமிழிலில் பேசி மிகுந்த சிரமத்தின் மத்தியில் அதேநேரம் ஈடுபாட்டுடன் பணி செய்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தன் பதிவில் குறிப்பிடுகிறார். ஒரே மொழியை சேர்ந்த மருத்துவரும் நோயாளரும் உரையாடினாலேயே நோயை கண்டுபிடிக்க முடியாத நிலமை காணப்படும். மருத்துவத்தில் தொடர்பாடல் மிகவும் முக்கியமானது. அவ்வாறு அமையாத மருத்துவம் விபரீத விளைவுகளையும் தரக்கூடும். 

பெரும்பான்மையின வைத்தியர்கள் இப்போதுதான் தமிழை பேச கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களிடம் சில நோய்களை சொல்லும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் தவறான மருந்தை தந்துவிடுவார்களோ என்ற அச்சம் தமக்கு ஏற்படுவதாகவும் நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் அவர்கள் அன்பாக கவனிப்பதாகவும் நோயாளர்கள் சொல்கிறார்கள். 

கொக்கிளாயிலிருந்து வைத்தியசாலைக்கு வந்தார் ஒரு பள்ளி மாணவி. அவரது மூக்கால் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அவரை பரிசோதித் பெரும்பான்மையின இளம் வைத்திய பெண்மணி, உடனடியாக அவரை வவுனியாவுக்கு அனுப்பினார். “வவுனியா போறது. மூக்கு சம்பந்தம் டொக்டர் பாக்கிறது. மருந்து எடுக்கிறது.” என்றார் பெரும்பான்மையின இளம் வைத்திய பெண்மணி. இவ்வாறான ஒரு தொடர்பாடல் ஊடாகவே இங்கு மருத்துவத்தை மக்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 

அரச நியமனங்களில் - பதவியில் - பணியில் எமக்கான பங்கை கோரும் அடிப்படையைக் கொண்டதுதான் தமிழரின் போராட்டம். நாம் தாயக பிரதேசம் எங்கும் எந்தப் பணியையும் புரியும் ஆட்களாக இல்லாமல் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை முல்லை மாஞ்சோலை வைத்தியசாலை ஏற்படுத்துகிறது. தென்னிலங்கையிலிருந்து 30 வைத்தியர்கள் இங்கு வந்து பணி புரிவதையும் சேர்த்து இந்த விடயத்தை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். 

இங்கு பணியாற்ற தமிழ் வைத்தியர்கள் அவசியமாக தேவைப்படுவதை பலதரப்பட்டவர்களுடனும் உரையாடியதில் தெரிய வருகின்றது? நில அபகரிப்பால், சிங்கள மயப்படுத்தப்படுதலால், யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட, யுத்தத்தை சுமந்த மாவட்டத்தில் தமிழ் வைத்தியர்கள் போதியளவில் இல்லை என்பது எதற்கான வெளிப்பாடு? நியமிக்கப்படவில்லையா? அல்லது நியமித்தும் பணியாற்றவில்லையா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். வெளிப்படுத்த வேண்டும். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128548/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.