Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலால் உண்ணாதவர்கள் சக மனிதனின் துயரங்களை கண்டு கொள்ளாத போது அகிம்சை என்னவாகிறது?- கமல்

Featured Replies

புலால் உண்ணாதவர்கள் சக மனிதனின் துயரங்களை கண்டு கொள்ளாத போது அகிம்சை என்னவாகிறது?- கமல்

 

மெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார்.

kamal%20.jpg

''இந்தியாவில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது . அதற்காக எதை வேண்டுமென்றாம் பேசி விட வாய்ப்பில்லையென்பதால் இங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி  சில விஷயங்களை பதிவு செய்கிறேன். ஆனால் ஜனநாயகம் என்றாலே பேச்சு சுதந்திரம் என்பதுதான் என்ற அர்த்தம் தாமாகவே வருகிறது.

இப்படி பேசுவதால் இந்திய ஜனநாயகத்தை நான் விமர்சிப்பதாக அர்த்தம் கொண்டு விடக் கூடாது.  நான் இந்திய ஜனநாயகத்தை விமர்சிக்கவில்லை. மாறாக, இந்திய ஜனநாயகத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஏன் இந்த  உலகத்துக்கே முன்னுதாரணமான ஜனநாயக நாடாக இந்திய விளங்க வேண்டுமென விரும்புகிறேன்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மாற்றங்கள் நிகழ்கின்றன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் புதிய சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது.  புதிய புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.  இந்தியா போதுமென்று மனநிறைவு அடைந்துவிடக் கூடாது.

''வேற்றுமையில் ஒற்றுமை ''என ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் இன்றைக்கு அதனை மிகவேகமாகவே இழந்து விட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.  இன்றைய நாட்களில் ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள், ஜனநாயகம் என்பது பேச்சு சுதந்திரத்துக்கான நம்பிக்கை என்று  நம்ப செய்வதில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒரு கலைஞனாக பேச்சு சுதந்திரம் என்பது ஆளும் அரசியல் நிலையில் இருந்து மாறுபட்டது என்று நான் நம்புகிறேன்.

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும் . என்னை பொறுத்தவரை, நுட்பமான முறையில் நம்மைக் கட்டுப்படுத்தும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக எப்போதும் காவல் நிற்கும் மிகப்பெரிய ஒரு சமூகத்தின் உறுப்பினன் என்றே கருதுகிறேன்.

இந்திய அரசியல் வரலாற்றில்கூட அவசர  நிலைச் சட்டம் பிரகடனப்படுத்துள்ளது.  அதே வேளையில்,  அதிகார துஷ்பிரயோகத்திற்கு எத்தனையோ முயற்சிகள் செய்யப்பட்ட போதும்  நடைமுறையில் வெற்றி கண்டிருக்கும்  இந்திய ஜனநாயகம் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

காந்தியின் கொள்கையான அகிம்சை மிகக் கடினமான லட்சியம். அசைவ உணவு மறுப்பு மூலம் மட்டும் அடையப்படும் விஷயம் அதுவல்ல. அசைவ உணவை   தவிர்க்கும் ஒருவர் சக மனிதனின் துயரங்களைக் கண்டு கொள்ளாதபோது அகிம்சையின் நோக்கம் என்னவாகிறது.'' என்றார்

http://www.vikatan.com/news/world/58691-kamal-haasans-address-at-harvard.art

 

  • தொடங்கியவர்

கமல்ஹாசன் சொன்னபடி திரைப்பட தணிக்கைத் துறை மாறுமா?

 

"இந்தியாவில் படங்களுக்கு கண்டபடி 'கத்திரி' போடும் தணிக்கைத் துறைப் பற்றி அமெரிக்காவிற்கு வந்துதான் என்னால் பேச முடிகிறது"  என்று கூறியுள்ளார் கமல்ஹாசன். தணிக்கைத் துறை, சான்றிதழ் வழங்கும் துறையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் சொன்னபடி தணிக்கத்துறை மாறுமா?

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்,  "இந்தியாவில் சவால்களும் வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் உரை ஆற்றியது எல்லோருக்குமே தெரியும். அதில் அவர் பேசியது என்ன என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை நடைமுறையில் சாத்தியமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

கமல்ஹாசனைப் பொறுத்தவரை எப்போதுமே அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து,  பின்னர் நான் அப்படி சொல்லவில்லை என்று ஜகா வாங்குகிற டைப் என்ற குற்றச்சாட்டு உண்டு.  அப்படி இருக்கையில் இப்போது அவர் அமெரிக்காவில் பேசியுள்ள விஷயங்கள் நியாயமானவை என்கிறபோதிலும்,  அது அவர் நினைக்கும் அளவுக்கு சாதாரணமாக மாறிவிடக் கூடியவை அல்ல.

kamal1.jpg

அது அவருக்கே தெரியும் என்பதால்தான் "இந்தியாவில் பேச்சு சுதந்திரம் இருப்பதாலேயே, நினைத்ததையெல்லாம் பேசிவிட முடியாது. அதனால் இங்கு கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுத்தான் பேசவே தொடங்கினார். சென்னை வெள்ளத்தின்போது அரசிடம் நான் செலுத்திய வரி என்ன ஆச்சு?  என்று கேட்டது இதற்கு சிறந்த உதாரணம்.

இங்கேயே வாயை விட்டு அடிக்கடி பிரச்னைக்குள் சிக்கிக்கொள்ளும் கமல்,  அமெரிக்காவின் மிகப்பெரிய  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேச வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவாரா? அவரது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குள் சிக்குபவை. படங்களில் கூட சில சமயம் யாருக்கும் புரியாத மாதிரி பேசும் கமல்,  இது போன்ற பொது சபைகளில் தெளிவாக பேசுவதால் சிக்கிக்கொள்வதுண்டு.

கருத்து சுதந்திரம், புலால் உண்பவர்களின் அகிம்சை கொள்கை, திரைப்படத் தணிக்கைத் துறை ஆகியவற்றைக் குறித்து அவர் பேசியுள்ளார்.

'திரைப்படத் தணிக்கைத் துறையின் வெட்டுகளால்தான்,  பெரும்பாலான படங்களின் தரம் குறைகிறது' என்கிற குற்றச்சாட்டு,  இந்திய திரைப்படத் துறையினர் மத்தியில் பரவலாக உண்டு. எவ்வளவோ படங்கள் சென்சார்  கட்டினால் அதனுடைய உண்மையான வடிவத்தை அடையாமல் போயிருக்கலாம். அதே நேரத்தில் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சில நாட்களுக்கு முன்னர் நாடே கொண்டாடியது. ஆனால் இந்த நூறாண்டுகளில் வெளியான எவ்வளவோ படங்கள், திரைப்படத் தணிக்கைத் துறையினாலும், அரசுகளாலும், அரசியல் கட்சிகளாலும் வெளியிட முடியாமல் முடக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஈழம் குறித்த படங்கள், தெய்வ நம்பிக்கையைப் பகடி செய்யும் படங்கள், தீவிரவாதம் குறித்த படங்கள், குஜராத் கலவரம் குறித்த படங்கள், சாதி சார்ந்த படங்கள் போன்றவை அடங்கும். மேலும் திரைப்படத் தணிக்கைத் துறையினால் சான்றிதழ் வழங்கப்படாத நிலையிலும் எவ்வளவோ படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. இந்த நிலையில்தான் நம்முடைய திரைப்படத் தணிக்கைத் துறையின் செயல்பாடு இருக்கிறது.

கமல்ஹாசன் கூறியபடி திரைப்படத் தணிக்கைத் துறை,  சான்றிதழ் மட்டுமே வழங்கும் துறையாக இருக்க வேண்டும் என்பது சரியான விஷயம்தான். ஒரு படத்தை வேண்டும் வேண்டாம் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். ஒரு சினிமா என்ன வகை சினிமா என்பதை மட்டும்தான் தணிக்கைத் துறை தெரிவிக்க வேண்டும். அனைத்து நாடுகளிலும் தணிக்கைத் துறை சான்றிதழ் வழங்கும் வேலையை மட்டுமே பார்த்து வருகின்றன.

 

ஆனால் இந்தியத் திரைப்பட தணிக்கைத் துறை வெறும் சான்றிதழ் மட்டுமே வழங்கும் துறையாக மாறுமா? இதற்கு அரசும், சென்சார் போர்டு அதிகாரிகளும் ஒப்புக்கொள்வார்களா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

எப்போதும் கமல்ஹாசன் சொல்வது 'அடடே...!' என்று ஆச்சர்யத்துடன் பார்க்கப்படும். ஆனால் அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. 

இந்த நிலையில், கமல் இப்படி பேசியதால் இனி வரும் அவரது படங்களுக்குப் புதிது புதிதாக ஏதும் பிரச்னை வருமோ என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/cinema/58787-kamal-hasan-spokes-about-censor-board.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.