Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் வி.நவரத்தினம் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் வி.நவரத்தினம் காலமானார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான வி.நவரத்தினம் (வயது 97) காலமானார்.

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில் வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணி அளவில் அவர் காலமானார்.

யாழ். கரம்பனில் கடந்த 1910 ஒக்ரோபர் 18 ஆம் நாள் பிறந்த நவரத்தினம், இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்றார். 58 ஆண்டுகாலம் சட்டத்தரணியாக அவர் பணியாற்றினார்.

இலங்கைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது என்ற நூலை 1956 ஆம் ஆண்டு அவர் எழுதினார்.

தமிழ்த் தேசியத்தின் எழுச்சி தொடர்பாக கடந்த 1995 ஆம் ஆண்டு மற்றொரு நூலை அவர் எழுதியிருந்தார்.

யாழ். ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பதவி வகித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்குப் பின்னர் கூட்டரசுக் கட்சியிலிருந்து வெளியேறிய நவரத்தினம், 1969 ஆம் ஆண்டு தனித் தமிழ் அரசு அமைக்க இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர்

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒக்ரோபர் மாதம் 97 ஆவது வயதினை அடைந்திருந்த நவரட்ணம், தமிழ் அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1957 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முறிவடைந்ததையடுத்து, சிங்கள அரசாங்கள் ஒருபோதும் தமிழருக்கான உரிமைகளை கொடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்து, தமிழரசுக் கட்சியில் இருந்து ஒதுங்கியவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதன் மூலம், தன்னாட்சியொன்றை நிறுவி, தமிழ் மக்களை கௌரமாக வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என்று 1969 ஆம் ஆண்டிலேயே அமரர் வி.நவரட்ணம் கூறியிருந்தார்.

Ceylon Faces Crisis என்ற நூலை 1955 இலும், The Fall and Rise of Tamil Eelam உன்ற நூலை 1995 ஆம் ஆண்டிலும் இவர் எழுதியிருந்தார்.

இந்த நூல்களில் தமிழ் தலைவர்களுக்கும் ஸ்ரீங்களத் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற ஒப்பந்தங்கள் குறித்து தமிழர்கள் கொண்ட அனுபவங்களை மிகத் தெளிவாகவும் நுணுக்கமாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கரம்பொன் - ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகக்பொண்ட நவரட்ணம், இந்தத் தொகுதியின் பாராளுமன்ற அங்கத்தவராகவும் பணிபுரிந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

வி.நவரத்தினம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் கௌரவம்

- பண்டார வன்னியன் Sunday, 24 December 2006 13:40

தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார்.

தனது மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப் பணிபுரிந்தார். ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.