Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் கண்கலங்கிய திருமா - ஜுனியர் விகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் கண்கலங்கிய திருமா - ஜுனியர் விகடன்

http://www.tamilnaatham.com/pdf_files/jv20061223.pdf

லண்டனில் கண்கலங்கிய திருமா...

"ஈழ மண்ணுக்காக வாழ்ந்தார்... மருந்து எடுத்துக் கொள்ள மறந்தார்!"

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் ஆன்டன் பாலசிங்கத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் கடந்த 20ம் தேதி லண்டன் நகரில் நடந்தது.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் உலகம் எங்கும் விரவிக் கிடக்கும் தமிழீழ ஆதரவாளர்களும், பாலசிங்கத்தின் சகாக்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் மற்றும் ம.தி.மு.க. சார்பில் சபாபதி மோகன் ஆகியோர் பாலசிங்கத்தின் இறுதிக் காரியங் களில் கலந்துகொண்டனர். லண்டனில் இருந்த திருமாவள வனைத் தொடர்பு கொண்டு இறுதிச் சடங்கு பற்றிய தகவல் களைக் கேட்டோம். மிகவும் நெகிழ்ச்சி யுடன் அங்கு நடந்தவற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் திருமாவளவன். இனி, திருமாவின் வார்த்தைகள்....

"வடக்கு லண்டனில் இருக்கும் 'உட்கிரீன்' என்ற அரங்கத்தில்தான் பாலண்ணாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கம் லண்டனின் புகழ்பெற்ற அலெக்ஸாண்ட்ரா அரண்மனையின் ஒரு பகுதி. லண்டன் நேரப்படி, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை அண்ணனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடல் வைக்கப்படுவதற்கு முன்பே அரங்கத்துக்கு வெளியே கையில் பூக்களுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரிசையில் நிற்க ஆரம் பித்துவிட்டனர்.வழக்கமாக லண்டனில் இதுபோல் பெருங்கூட்டம் சேரும்போது, லண்டன் மாநகர காவல்துறை அதிகப்படியான காவலர்களையும் நியமிக்குமாம். அதே போல் இந்த நிகழ்ச்சிக்கும் பெருமளவு போலீஸ் குவிக்கப் பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மொத்த போலீஸ§ம் அங்கிருந்து கிளம்பி விட்டது. 'ஏன் இப்படி?' என்று லண்டன் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். 'இந்தக் கூட்டத்தால் எந்தவித ஆபத்தும் வராது என் பதை உணர்ந்து அனைவரும் கிளம்பிச் சென்று விட்டார் கள்' என்று அவர் பதில் சொன்னதைக் கேட்டுப் பெருமையாக இருந்தது.

பாலண்ணாவுக்கான அஞ்சலி நிகழ்ச்சி முழுவதையும் விடுதலைப்புலிகள் இயக்கம் தன்பொறுப்பில் எடுத்துக் கொண்டது. ஒரு அஞ்சலி நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தலைவர் பிரபாகரன் வெளி உலகுக்குத் துல்லியமாக சொன்ன நிகழ்ச்சி அது. அண்ணனின் உடல் கிடத்தப்பட்டிருந்த அரங்கத்துக்குள் சரியாக ஆறாயிரம் பேர் மட்டும் இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவர் எத்தனை வினாடிகள் அண்ண னின் உடலுக்கு முன்னால் நிற்க லாம் என்பது முதல் அரங்கத் துக்குள் எந்தவித ஓசையும் இல் லாமல் எப்படி பார்த்துக்கொள்வது என்பது வரை அனைத்தையும் கச்சிதமாக செய்திருந்தனர். அதே சமயம் அந்த அரங்கத்துக்குள் எப்போதும் பாலண்ணாவின் ஒப்பற்ற குணங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும், அது அஞ்சலி செலுத்துவோரின் காதுகளில் விழுந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கும் பிரபாகரன் ஒரு அருமையான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

இலங்கையின் வன்னி காடுகளிலிருந்து புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் ஒருவர்பின் ஒருவராக பாலண்ணா வைப் பற்றியும் அவரது அரசியல் சாணக்கியத்தைப் பற்றியும் உரை நிகழ்த்த... அது அந்த அரங்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல் அஞ்சலி நிகழ்ச்சிகள் முழுக்கவும் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழீழப் பகுதிகளில் பிரமாண்ட திரைகளில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

அஞ்சலி கூட்டத்தில் நான் பேச வாயெடுத்தபோது, வார்த்தைகள் வரவில்லை. கண்களில் கண்ணீர் ததும்பியது. 'வெறும் ஆயுதங்களைத் தாங்கிய போராளிக் குழுக் களாக புலிகள் இயக்கத்தை உலகம் பார்த்ததைத் தடுத்தவர் பாலண்ணா,புலிகளின் லட்சியத்தில் ஒரு விடுதலை வேட்கை இருக்கிறது என்பதை உலகுக்குச் சொன்னவர் அவர். தலைவருக்கான எல்லா குணங்களையும் உள்ளடக்கிய பாலண்ணா, தனது தலைவராக பிரபாகரனைத் தேர்ந்தெடுத்ததற்கான அர்த்தம் விரைவில் தெரியும். அப்போது தமிழ் ஈழம் மலரும்' என்று சிறிய உரை நிகழ்த்தினேன்.

உரை முடிந்தவுடன் அடேல் அம்மையாருக்குப் பக்கத் தில் சென்று அமர்ந்தேன்.அவரே என்னிடம் பேச ஆரம்பித் தார். அப்போதுகூட இந்தியாவில், தமிழகத்தில் ஈழப் பிரச்னையை எப்படிப் பார்க்கிறார்கள் என்றுதான் கேட்டார். அதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, பாலண்ணா வின் கடைசி நாட்கள் எப்படி இருந்தது என்று அவரிடம் கேட்டேன். 'நோய்கள் அவரை முழுமையாகத் தாக்கியிருந்த நிலையிலும் தன்னையும் தனது பழக்கங்களையும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. தனக்குள் எப்போதும் ததும்பிக் கொண்டிருந்த நகைச்சுவையை அவர் கைவிட வேயில்லை.இலங்கைப் பிரச்னையில் இந்தியத் தலை யீடு மிகவும் அவசியம் என்பதை சொல்லிக்கொண்டே இருந்தார். தம்பி பிரபாகரனுடன் தவறாமல் பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் அரசியல் பேசும் அந்தத் தம்பி, 'இனி நீங்கள் அரசியல் பேசக்கூடாது, உங்கள் உடல்நலம் பற்றி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும்' என்று கட்டளையே இட்டிருந்தார். புற்று நோய்க்கான மருந்தை சாப்பிடாமல் தள்ளிப்போட்டுக் கொண்டு வந்தவர், பிரபாகரன் சொன்னதால் ஓரிரு முறை அந்த மருந்தை எடுத்துக் கொண்டார். ஆனால், கடைசி மூன்று மாதங்களில் அவர் எந்தமருந்ததையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுபற்றி பிரபாகரனே கேட்க, 'தம்பி!நார்வே நாட்டோட ஏற்பாட்டுல செஞ்சுகிட்ட சிகிச்சை முறைகள்தான் என்னை இப்போ காப்பாத்திக்கிட்டிருக்கு. அப்போ செஞ்சுகிட்ட கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில, ஒரு கிட்னி செயல்படலை. ஒண்ணுதான் என் உயிரைக் காப்பாத்துது. மூளை ரொம்ப நல்லா இருக்கு. மத்த உறுப்பு களைப் பத்திச் சொல்ல முடியலை'என்று நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்' என்று சற்று நிறுத்திய திருமா,உணர்ச்சிவசப்பட்டவராக

நன்றி இணைப்புக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.