Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு- கிழக்கை மீண்டும் இணைக்க இந்தியா முயன்றால் அதற்கெதிராக சிங்களவர்கள் ஆயுதமேந்திப் போராடுவர்

Featured Replies

ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

இந்தியாஇ இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சித்தால் கடந்த காலங்களைப் போன்று பார்த்துக் கொண்டிராமல் இம்முறை சிங்களவர்கள் ஆயுதமேந்தி போராடுவார்களென ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை இனப் பிரச்சனையானது வடக்கு- கிழக்கு பிரிக்கப்படாமல் அரசியல் தீர்வொன்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடென சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பாக கேட்கப்பட்டபோதே ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரான சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

'இதை மன்மோகன் சிங் கூறினாலும் சரி, அமெரிக்க ஜனாதிபதி புஷ் கூறினாலும் சரி வெளிநாட்டவர்கள் எவருக்கும் இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடும் உரிமை கிடையாது.

இலங்கையின் வடக்கு- கிழக்கை ஒன்றாக இணைக்க இந்தியா வலியுறுத்துமென்றால் அது காஷ்மீரையும் ஒன்றாக இணைத்துக் கொடுக்க முன்வர வேண்டும்.

இதற்கு முன்னர் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்த இந்தியா இறுதியில் வடக்கிலும், தெற்கிலும் பலர் கொல்லப்பட காரணமானதுடன் அவர்களது படையினர் பலரையும் இழந்தது. எனவே, இதை செய்ய முடியாதென நிரூபித்ததும் இந்தியா தான்.

இதேவேளை, வடக்குடனான இணைப்பிலிருந்து கிழக்கை பிரித்ததன் மூலம் கிழக்கிலிருந்து பதுளை வழியாக முன்னேறி மலையகத்தையும் கைப்பற்றி 'மா ஈழம்" உருவாக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியா சிறந்த கொள்கையை கடைப்பிடித்து வந்தது. எனினும், அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்பவே புலிகள் தோற்பதை விரும்பாத இந்தியா இவ்வாறான கருத்துகளை தெரிவிக்கிறது.

கடந்த காலத்தில் இந்தியா வடக்கு- கிழக்கை பலவந்தமாக ஒன்றிணைத்து வைத்தது. ஆனால், இம்முறை சிங்கள மக்களை வெளிநாட்டு சக்திகளால் ஆட்ட முடியாது. அவ்வாறு மீண்டும் இரு மாகாணங்களையும் இணைக்க முயற்சித்தால் இம்முறை சிங்களவர்கள் ஆயுதமேந்தி போராடுவார்கள். இந்தியாவும், அமெரிக்காவும் உதவாவிட்டால் நாம் தனிமைப்பட்டு விடமாட்டோம். எமக்கு உதவ பலர் இருக்கின்றனர்" என்றார்.

நன்றி : தினக்குரல் 25டிசம்2006

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவ் அருமையான கருத்து என்ன செய்யப்போகுது இந்தியா ???

அண்னாத்தை சொன்னது ஆயிரத்தில் ஒரு வார்த்தை

இந்தியா வராது தமிழீழதலைவர் கொடுக்கிர அடியில எல்லாம் ஒட்டும்

அதுதான் பயத்தில 400 மில்லியணுக்கு பங்கர் கட்டுறார் மகிந்த உங்களின் வசதியை பார்த்து நீங்கலும் கட்டுங்க

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இந்த மொட்டையங்களுக்கு ஏ.கே 47 னும் கொடுத்து விடனும் FDL அ போய் நிக்க சொல்லி..

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி, ஹெல உறுமய போன்ற கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளுவதற்காக மகிந்த வடகிழக்கை ஒருபோதும் மீண்டும் இணைக்க முயலமாட்டார். எனவே பிக்குகள் போரிடத் தேவையில்லை. இந்தியாதான் பிரிப்பினால் மூக்குடை பட்டுப்போயுள்ளது.

சிங்களவர்கள் ஏற்கனவே ஆயுதமேந்தித்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு பிரிவதால் அப்படி என்னதான் கிடைக்கப் போகிறது இவர்களுக்கு ?

முழு இலங்கையும் சிங்களவருக்கே சொந்தமாகும்.. பாரம்பரியத் தமிழர் பூமியெங்கும் விகாரைகள் கட்டுவது எதற்காக என்று நினைக்கின்றீர்கள்?

எல்லா கூத்தையும் விட்டுட்டு...... எங்கேயாவது சீப்பா அணுகுண்டு வாங்க ட்ரை பண்ணுவது நல்லது!

evil.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழும் காவோலைச் சத்தத்துக்கே மூத்திரம் போகும் குஞ்சுகளுக்கு, பேச்சுக்கு வீரத்துக்கு பஞ்சமே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.