Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாபவன் மணியின் மரணத்தில் திடீர் சந்தேகம்: உடலில் விஷம்? - மேலாளர் உள்பட 5 பேரிடம் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kaljan.jpg
மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மறுமலர்ச்சி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று திடீரென மோசமாகி மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கலாபவன் மணி உயிர் பிரிந்தது.

இந்நிலையில், கலாபவன் மணி தனது இல்லத்தில் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மரணமடைந்த கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு, இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து, காலை 11 மணிமுதல் பொதுமக்கள் அஞ்சலிகாக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

அவரது உடலுக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மலையாள திரைப்பட நட்சத்திரங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை 5 மணியளவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மறைந்த கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவல் துறையிடம் கூறி இருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல் துறை, பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின் தான் எதையும் உறுதியாக கூற முடியும் என்கின்றனர்.

நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம் மேலாளர் உள்பட 5 பேரிடம் விசாரணை

பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45).  இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே  சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட் டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன்மணியை சாலக் குடியில் உள்ள ஒரு தனி யார் ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர்.

அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் அறிவுரை படி கொச்சி திடப்பள்ளியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரிக்கு கலாபவன்மணி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனா லும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் கலாபவன்மணி மரணம் அடைந்தார். டாக்டர்கள் செய்த பரிசோதனையில் கலாபவன்மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் கலாபவன்மணி மரணம் பற்றி சேரநல்லூர் போலீசுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.கள்ளச்சாராயத்தில் உள்ள மெத்தனால் என்ற நச்சுத்தன்மையுள்ள அமிலம் அவருடைய உடலில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறப்படுகின்றன.

இதைதொடர்ந்து  போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடை யில் கலாபவன்மணியின் தம்பி ராதாகிருஷ்ணன்  போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது அண்ணன் கலாபவன்மணி சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதைதொடர்ந்து கலாபவன்மணி உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித் துள்ளனர்.கலாபவன்மணி உடலில் விஷம் கலந்திருப்பதாக கூறப்படுவதால் அவர் தற்கொலை செய்து இருக்க லாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு கலாபவன்மணி உடல் திருச்சூர் மற்றும் சாலக்குடியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு இன்று மாலை 5 மணி அளவில்  அவரது உடல் சேனத்துநாட்டில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

நடிகர் கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ளதால் அவர் மயங்கி விழுந்த பண்ணை வீட்டுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நேற்று பண்ணை வீட்டில் கலாபவன் மணியுடன் தங்கியிருந்த ஒரு நடிகர் உள்ளிட்ட 5 நபர்களை காவல்துறை விசாரித்துள்ளது. 

http://www.tamilwin.com/show-RUmuyDTbSXnq0C.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.