Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமி கொன்றதும் கொல்லாததும்.

Featured Replies

கொடியுயர்த்தி வாழ்ந்தவொரு

குடிவாழ்க்கை

இடிவிழுந்து எல்லாமிழந்து

இருக்கிறது சூனியமாய்

நாளையிது மீண்டும் நிமிரும்

மீள அழகொழிரும்

-புதுவை இரத்தினதுரை –

1.

அமெரிக்க சிந்தனையாளரும் வெள்ளைமாளிகையின் ஆலோசகர்களில் ஒருவருமான பிரான்ஷிஸ் புக்குயாமா வரலாற்றின் முடிவு பற்றிப் பேசினார். 'வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்' (The end of history and the last man) என்ற தனது நூலின் மூலம் மனித வரலாற்றின் முடிவை பிரகடனம் செய்தார். புக்குயாமாவின் கருத்து நிலை ஐரோப்பிய புத்திஜீவித்துவ உலகில் பெரும் சர்ச்சைகளையும் எதிர்வினைகளையும் உருவாக்கியது. எனினும் அவர் தனது வெளிப்பாடு குறித்த விமர்சனங்களை பெரியளவில் பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகின்றது. ஆனால் 2001 செப்டம்பர் 11ல் இடம்பெற்ற அமெரிக்காவின் மீதான அல்கய்டாவின் தாக்குதல் புக்குயாமாவின் கருத்துநிலையை அடியோடு தகர்த்தது. இறுதியில் அவரது வரலாற்றின் முடிவு பற்றிய கனவு கனவாகவே போனது. ஒடுக்குமுறை அரசியலும் எதேச்சாதிகாரங்களும் இருக்கும்வரை வரலாறு ஒருபோதும் முடிந்துவிடப் போவதில்லை என்ற உண்மையை செப்டம்பர் 11, தாக்குதல் மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்தியது. உண்மையில் செப்டம்பர் 11 தாக்குதல் ஒரு ஒற்றையொழுங்கு உலக அரசில் போக்கினை கேள்விக்குள்ளாக்கியது. ஒரு வகையில் இதே போன்றதுதான் 2004 டிசெம்பர் 26இல் இடம்பெற்ற சுனாமி அனர்த்தமும். செப்டம்பர் 11 ஒரு ஒற்றையொழுங்கு அரசியல் போக்கை தகர்த்தது போல் டிசெம்பர் 26 சுனாமி ஆசிய அறிவியலாளர்களின் அறிவியல் கனவுகளை கலைத்தது எனலாம். வல்லசுப் பிரகடனங்களை செய்து கொண்டிருந்த இந்தியா ஒரு இயற்கை அனர்த்த்திலிருந்து தனது மக்களை பாதுகாப்பதற்கான உபாயங்களற்றிருந்தது. இதனை பிறிதொருவகையில் சொல்வதானால் டிசெம்பர் 26இன் சுனாமி நமது ஆசிய அறிவியல் உலகிற்கு விடப்பட்டிருக்கும் சவால், நமது அறிவியலின் தோல்வியை பறைசாற்றும் ஒரு பதிவு என்றும் கொள்ளலாம். அதேவேளை சுனாமி அனர்த்தம் மக்கள் மத்தியில் பிறிதொரு உணர்வலையையும் தோற்றிவிருக்கக்கூடும். சுனாமி கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் நிகழ்ந்தது. முதல் நாள் கிறிஸ்துவை நினைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் பலர் மறுதினம் கடலால் அள்ளிச் செல்லப்பட்டனர். இது ஒரு வகையில் கடவுள் குறித்த கேள்விகளை உருவாக்கியிருக்கக் கூடும். நமது தமிழ் சமூகத்தைப் பொருத்தவரையில் வெறுமனே சடங்குகளில் மட்டுமே அவ்வப்போது உயிர்பெற்றுவந்த கடவுள்வாதம் உணர்வுபூர்வமாக உயிர்பெற்றிருக்கவும் கூடும். இதனை எதிர்மறையாகப் பார்ப்பதற்கும் இடமுன்டு. இவை சுனாமி பற்றிய சில பொதுநிலைக் குறிப்புக்கள்.

2.

தழிழ் தேசிய அரசியலைப் பொறுத்தரையிலும் ஒட்டுமொத்த இலங்கை அரசியலை பொறுத்தவரையிலும் சுனாமி ஒரு தீர்க்கமான அரசியல் மாறுநிலை காலகட்டத்தில் நிகழ்ந்தது. அது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களையும், பலகோடிக்கணக்கான சொத்துக்களையும் அழித்து ஓய்ந்தது. ஆனால் சுனாமி அழித்தொழித்திருக்கவேண்டிய ஆயினும் சுனாமியால் அருகில் கூடச் செல்ல முடியாத ஒரு விடயமும் இருந்தது. அது என்ன என்பதை இறுதியில் பார்ப்போம்.

ஆரம்பத்திலிருந்தே சுனாமி அனர்த்தம் ஒரு மனிதாபினப் பிரச்சனையாகப் பார்க்கப்படவில்லை. ஓவ்வொருவரும் தங்களது அரசியல் நலன்களில் நின்றே சுனாமியை அனுகினர். தெற்காசியாவில் தனது ஏகாதிபத்திய நலன்களுக்கான இடைவெளிகளை தேடிக் கொண்டிருந்த அமெரிக்கா சுனாமியை தனக்கான இடைவெளியாக்கிக் கொண்டது. குறிப்பாக அமெரிக்கா, படைகள் சகிதம் இலங்கை வந்தது அந்தச் சூழலில் பல்வேறு சந்தேகங்களையும் எதிர்வினைகளையும் உருவாக்கியது. இந்தியாவும் தனது புவிசார் அரசியல் நலன்களில் நின்றே சுனாமி அனர்த்தத்தை அணுகியது. எனினும் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்ததைத் தொடர்ந்து அது தனது தலையை உள்ளிளுத்துக் கொண்டது எனலாம்.

இந்த இடத்தில் தென்பகுதி பற்றி சொல்லவே தேவையில்லை அந்தளவிற்கு அது தனது கீழ்த்தரமான அரசியல் முகத்தைக் காட்டியது. தமிழர்விரோத அரசியலூடாக தனது பெருந்தேசியவாத நலன்களைப் பேனிக் கொள்ளும் வழமையான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே தமிழர் தேசத்தின் சுனாமி அழிவுகளையும் பார்த்தது. சுருங்கக்கூறின் சிங்களம் சுனாமி அனர்த்தத்தை முழுமையாக மனிதாபிமான நீக்கத்திற்குள்ளாக்கியது (Dihumanised). இந்நிலைமைகள் தவிர்க்கமுடியாமல் தமிழர்தேசத்தையும் சுனாமியை அனர்த்தத்தை, அரசியலால் அளவிடும் நிலைக்குத் தள்ளியது. இதில் சுவையானதும் முக்கியமானதுமான ஒரு விடம் இருக்கின்றது. இன்று பொதுக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்தப் போவதாக பேசிவரும் திருமதி. சந்திரிக்கா குமாரதுங்கா அவர்கள்தான் சுனாமியை மையப்படுத்திய அசியலுக்கான தொடக்கப் புள்ளியை இட்டவராவார். இது பலரும் பார்க்க தவறியதொரு விடயமாகும். சுனாமி தாக்கிய மறுதினம் இத்தீவு முழுவதும் மக்களின் ஒப்பாரிகளால் நிரம்பியிருந்தது. அந்த வேளையில் சந்திரிக்கா குமாரதுங்கா அவர்கள் கூறினார் “விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது எனவே இப்போதைக்கு அவர்களால் யுத்தத்திற்கு வரமுடியாது” அவர் இதனை மிகவும் பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஒரு கட்சி சார்ந்த அரசியல் பார்வையாளர் இதனை ஜனாதிபதியின் பொறுப்பற்றதனம் என வர்ணிக்கக்கூடும். நமது நிலையில் இது வேறுவிதமான அரசியல் பகுப்புக்குரியதாகும். உண்மையில் இக்கருத்து வெளிப்பாடானது சந்திரிக்கா குமாரதுங்க என்னும் ஒரு தனிநபரின் குரலல்ல. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் கருத்து பேதமற்று கைகோர்த்து நிற்கும் சிங்கள இனவாதிகளின் ஒட்டு மொத்த வெளிப்பாடாகும். திருமதி. சந்திரிக்கா குமாரதுங்கா அவர்கள் தனது வெளிப்பாட்டின் மூலம் மறைமுகமாக ஒரு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த செய்தியையும் எங்களுக்கு சொல்லியிருக்கிறார். அதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்லலாம். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் புரிந்துனர்வு ஒப்பந்தக் காலத்திலும் விடுதலைப்புலிகளின்; இராணுவ வலுச்சமநிலையை சிதைக்கும்; முயற்சியில் சிங்கள அரசும், அரச எந்திரங்களும் (Gevrnment Mesenaris) தொடர்ந்தும் முயன்று வந்திருக்கின்றன என்பதுதான் அந்தச் செய்தி. அரசியல் சொல்லாடல்களை கட்டுடைத்துப் பார்க்கும் பகுப்பாளர்களுக்கு இது ஒன்றும் புதிய தகவலல்ல. தனது தொடர் முயற்சியில் தோல்வி கண்ட சிங்களம் தனது எதிர்பார்ப்பிற்கான ஈடேற்றத்தை சுனாமியின் முலம் எதிர்பார்த்தது. சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து சில தினங்களாக சிங்கள, ஆங்கில இனவாத ஊடகங்களின் வெளிப்பாடுகளை அவதானித்தோர் இதனை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். இதேவேளை இந்திய பார்ப்பனிய அரசியல் ஆய்வு வட்டாரங்களிலும் சிங்களக் கருத்துக்களுக்கு நிகரான கருத்துக்களே வெளியாகின இந்தியாடுடேயின் தற்போதைய ஆசிரியரும் பார்ப்பனிய அரசியல் ஆய்வாளருமான பிரபுசாவ்லா விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு 75வீதம் அழிந்துவிட்டதாக தனது கற்பனாவாத ஆய்வை அவசரமாக வெளியிட்டிருந்தார். எப்பொழுதுமே விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்பதில் சிங்கள இனவாதமும் தமிழக பார்பனியமும் ஒரு நோர் கோட்டில் சந்தித்து வருவதுண்டு சுனாமியை மையப்படுத்திய அரசியலிலும் அந்த சந்திப்பு நிகழத் தவறவில்லை.

3.

இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது பொது கட்டமைப்பு கைச்சாத்தாகி விட்டது. திருமதி. சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் தனது பங்காளிக் கட்சியான J.V.P.யினதும், தீவிர சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளினதும் பாரிய எதிர்ப்பையும் மீறித்தான் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.