Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலை. திருமலை வளாகத்தில் சிங்கள மாணவர்களின் தாக்குதலில் 9 தமிழ் மாணவர்கள் படுகாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் 9 பேர் நேற்றிரவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கடும் காயங்களுடன் நிலாவெளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 50 இற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மைத் தாக்கினர் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் 9 பேர் நேற்றிரவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கடும் காயங்களுடன் நிலாவெளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 50 இற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மைத் தாக்கினர் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர்.

   

திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும், நீலாவணையைச் சேர்ந்த ஒரு மாணவனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும், நாவலப்பிட்டியவைச் சேர்ந்த ஒரு மாணவனுமே தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கிடையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பகை முற்றியதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்று காயமடைந்த மாணவர் ஒருவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நிலாவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=153233&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
trinko_1232016_100.jpg
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் ஒன்பது பேர் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளான நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மை தாக்கியதாக தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் நீலாவணையைச் சேர்ந்த ஒரு மாணவனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும் நாவலப்பிட்டியவைச் சேர்ந்த ஒரு மாணவனுமே தாக்குதலுள்ளானார்கள்.

தங்களுக்கிடையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பகை முற்றியதில் திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் 
தெரிவித்தார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

trinko_1232016_1.jpg

trinko_1232016_2.jpg

trinko_1232016_3.jpg

trinko_1232016_4.jpg

trinko_1232016_5.jpg

trinko_1232016_6.jpg

trinko_1232016_7.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணக்க அரசியலில் இதுவெல்லாம் சகஜமாக இருக்கும்போல ...... tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.