Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர் - Cineulagam

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த்.

நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.cineulagam.com/tamil/news-tamil/tv/124363/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலைக்கு காரணம் என்ன? போலீஸ் விசாரணை

201603151200496463_ActorSai-PrashanthTo-
பூந்தமல்லி, 

தமிழ் சினிமா நடிகரும், பிரபல சின்னத்திரை நடிகருமான சாய்பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சினிமா நடிகர்

சின்னத்திரையில் நாடகங்கள் மூலம் அறிமுகமானவர் சாய்பிரசாந்த். இவர் நேரம், தெகிடி, வடகறி, ஐந்தாம்படை போன்ற பல தமிழ் சினிமாக்களில் நடித்து உள்ளார். சித்தி, அண்ணாமலை, தாமரை உள்ளிட்ட சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துவந்தார். 

சென்னையை அடுத்த மதுரவாயல், கங்கா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர் வசித்துவந்தார். இவரது மனைவி நிரஞ்சனா. இவர்களுக்கு 8 வயதில் ரட்சிதா என்ற மகள் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு நிரஞ்சனாவை விவாகரத்து செய்துவிட்டார்.

2-வது திருமணம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஜிதா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு சுஜிதா கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். சாய்பிரசாந்த் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

சுஜிதா நேற்று இரவு சாய்பிரசாந்துக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் உரிமையாளருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தார். அவர் மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்தது. 

தற்கொலை

கதவை தட்டியும் நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது சாய்பிரசாந்த் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். சாய்பிரசாந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்¢தனர். அவர் வீட்டை போலீசார் சோதனை செய்தபோது அவர் விஷத்தை மிக்சியில் அரைத்து குடித்து இருப்பது தெரிந்தது. ஆனால் அது என்ன விஷம் என்பது தெரியவில்லை. 

கடிதம் சிக்கியது

எனவே அதை கண்டறிவதற்காக சோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். அவர் தற்கொலைக்கு முன்னர் மனைவி சுஜிதாவுக்கு எழுதிய இரண்டு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாவது:-

நான் உன்னை ரொம்ப விரும்புகிறேன். உன் மேல் அதீத காதல் கொண்டுள்ளேன். என்னுடைய சாவு உன்னுடைய குடும்பத்திற்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது, உன்னிடமிருந்து வாங்கிய 33 சவரன் நகை திருப்பி கொடுக்கப்படும். என்னுடைய காதல் உண்மையானது. எனக்காக நீ அழ வேண்டாம். என்னுடைய பெற்றோர்கள் உன்னிடமும், உன்னை சார்ந்தவர்களிடமும் எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள். உன் சித்தப்பா என் தந்தையிடம் பேசிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்க சொல்லு, 

போலீஸ் விசாரணை

எனக்கு சாவதை தவிர வேறு வழி தெரியவில்லை. என்னுடைய பெற்றோர் ரூ.5 லட்சம் பணத்தையும், நகையையும் கண்டிப்பாக கொடுப்பார்கள். என்னுடைய இறப்புக்கு பிறகாவது உன்னுடைய கோபத்தை குறைத்துக்கொள். ரட்சிதாவுக்கு நல்ல அப்பாவாக இருந்தேன். ரட்சிதா என்னை புரிந்துகொள். கண்டிப்பாக எனது இறப்புக்கு பின் சண்டை போடவோ, அழவோ கூடாது. இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. இதுவரை எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. 

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதி உள்ளார். 

சாய்பிரசாந்த் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

பா.ஜனதா பிரமுகர்

சாய்பிரசாந்தின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர். இவரது தந்தை சுபாஷ். தாய் லலிதா சுபாஷ் பா.ஜனதா கட்சியில் மாநில துணைத் தலைவராக இருந்தவர். சினிமா தணிக்கை வாரியத்திலும் முன்பு உறுப்பினராக இருந்துள்ளார்.

தகவல் கிடைத்து சாய்பிரசாந்தின் மனைவி சுஜிதா சென்னைக்கு விரைந்து வந்தார். அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். ஏராளமான சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

சாய்பிரசாந்தின் திடீர் தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/03/15120049/ActorSai-PrashanthTo-commit-suicideWhat-is-the-reason.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.