Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிசாரின் தவறும், நீதிமன்றின் தீர்ப்பும், பிணையாளியின் சிறைவாசமும்..

Featured Replies

பொலிசாரின் தவறும், நீதிமன்றின் தீர்ப்பும், பிணையாளியின் சிறைவாசமும்..

 

சிறை கைதி வழக்கு தவணைகளுக்கு சமூகம் அளிக்கவில்லை எனக் கூறி  பிணையாளியை சிறைக்கு  அனுப்பிய கிளிநொச்சி பொலீஸார்:

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்  ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட, முசுறன்பிட்டியில்  வசிக்கும் ஜெகன் என்பவரை தருமதபுரம் பொலீஸார் கைது செய்தனர்.  அதே இடத்தில் வசிக்கும் மு.சிவா என்பவர் இவருக்கு பிணை கையெழுத்திட்டு,  பொலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார்.

வெளியில் சென்ற ஜெகன் பதினைந்து நாட்களில் மீண்டும் சகிப்புடன் பிடிப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஆறு மாதம் சிறையும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டு தற்போது அநுராதபுரம் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே ஒருவரை தாக்கிய சம்பவம்  தொடர்பில் ஜெகன் மீது பொலீஸாரினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது தொடர்ச்சியாக மூன்று தவணைகளுக்கு சந்தேக நபரான அநுராதபுரம் சிறையில் கசிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள ஜெகன் சமூகமளிக்காத காரணத்தினால் நீதி மன்றம் பிணை வைத்தவரான மு.சிவா என்பருக்கு பிடிவிராந்து பிறப்பித்தது.

குறித்த சந்தேக நபர் கசிப்பு வழக்கில் குற்றவாளியாக அநுராதபுரம் சிறையில் ஆறு மாதம் சிறை தண்டணை பெற்று கைதியாக உள்ளார் என்பதனை நீதி மன்றுக்கு பொலீஸார் தெரிவிக்கவில்லை இதனால் குறித்த நபர் மன்றுக்கு வழக்கு தவணைகளில் சமூகமளிக்காமல் உள்ளார் எனக்கருதி நீதி மன்றம் பிணையாளியை கைது செய்ய உத்தரவு பிறபித்தது.

அதனடிப்படையில் பிணையாளியான சிவா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு இரண்டு இலட்சம் மற்றும் இரண்டு சரீர பிணையில் செல்லுமாறு நீதி மன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது பிணையாளியான சிவா வவுனியா சிறையில் விளக்க மறியலில் உள்ளார்.

அநுராதபுரம் சிறையில் கைதியாக உள்ளவர் நீதி மன்ற வழக்குத் தவணைகளுக்கு  அழைத்துக்கொண்டு வராமை பொலீஸாரின் தவறு எனவும், அதனை மன்றுக்கு தெரிவிக்காது பிணையாளியை விளக்க மறியலுக்கு அனுப்பியது தொடர்பிலும் பொலீஸார் தொடர் தவறு இழைத்துவிட்டதாகவும் சிவாவின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130305/language/ta-IN/article.aspx

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.