Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று உலக தண்ணீர் தினம்: - தண்ணீரை போற்ற மனிதனுக்கு தகுதியில்லை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்று உலக தண்ணீர் தினம் - தண்ணீரின் அவசியம் மற்றும் பராமரிப்பு மீதான விழிப்புணர்வுக்காக உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டாலும் தின கொண்டாட்ட எல்லைகளை எல்லாம் கடந்த முக்கியத்துவமுடையது தண்ணீர் என்பதே உண்மை. வாழ்த்த வயதில்லை என்பது போல, தண்ணீரை போற்ற மனிதனுக்கு தகுதியில்லை. உயிர்கள் உட்பட, இயற்கையிலிருந்து திரிக்கப்பட்ட செயற்கையும் சேர்த்து இங்கு எல்லாம் இயற்கையின் மூலதனமே!

இன்று உலக தண்ணீர் தினம் - தண்ணீரின் அவசியம் மற்றும் பராமரிப்பு மீதான விழிப்புணர்வுக்காக உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டாலும் தின கொண்டாட்ட எல்லைகளை எல்லாம் கடந்த முக்கியத்துவமுடையது தண்ணீர் என்பதே உண்மை. வாழ்த்த வயதில்லை என்பது போல, தண்ணீரை போற்ற மனிதனுக்கு தகுதியில்லை. உயிர்கள் உட்பட, இயற்கையிலிருந்து திரிக்கப்பட்ட செயற்கையும் சேர்த்து இங்கு எல்லாம் இயற்கையின் மூலதனமே!

   

பஞ்ச பூதங்கள் பாதிப்பு

இயற்கையின் முக்கிய அங்கங்களாக விளங்குவது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களே. அதற்குப் பிறகுதான் உயிர்கள். மனிதர்கள் பஞ்ச பூதங்களையே பாழ்படுத்துவதை இயற்கை பொறுக்கவே பொறுக்காது. வெப்பம், புயல், புகம்பம் என பேரிடர்களை நமக்கு நாமே தலையில் அள்ளிப் போட்டுக்கொள்கிறோம்.

தண்ணீர் தினத்தின் தாகம்

சர்வதேச அமைப்பு மார்ச் 22 ம் திகதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்து, கொண்டாடி வருவதற்கான நோக்கம் ஒவ்வொரு நாட்டிலும் நன்னீருக்கான நிரந்தர நிலைகள் அதிகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.

ஆனாலும், அரசு, மற்றும் தனியார் அமைப்புகள் மக்களுக்கு நீர் தூய்மையாகவும் மலிவாகவும் கிடைப்பதை உறுதிசெய்வதே இந்த தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதும் ஐ.நா.வால் ஏற்கப்பட்டது.

மேலும், வளர்ச்சி குறைந்த வறுமை நாடுகளில் மக்களிடம் சுகாதார விழிப்புணர்ச்சி குறைந்திருப்பதால் கழுவுதல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும் தண்ணீர் தின நோக்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.

தண்ணீரும் திருவள்ளுவரும்

உயிர்கள் தோன்றுவதற்கும், தோன்றிய உயிர்கள் உண்டு பிழைப்பதற்கான உணவுகள் விளைவதற்கும். அப்படி விளைந்த உணவுகளை உண்டால் வரும் தாகத்தை தீர்ப்பதற்கும், உயிர்களின் செயல்களால் ஏற்படும் மாசுகளை கழுவி சுத்தம் செய்வதற்கும் என எல்லாமுமாக உலக வாழ்க்கையில் நீர் சம்பந்தப்பட்டுள்ளது என தெய்வப்புலவர் திருவள்ளுவரும் வான்சிறப்பு அதிகாரத்தில் மழை பற்றி புகழ்ந்துள்ளார்.

இயற்கையின் நீர் சுத்திகரிப்பு

நீர் சுத்தம் செய்யப்படுவதை இயற்கையே கையில் எடுத்துக்கொண்டது. ஆவியாதலும் மழையுமாக ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வந்துபோவதில் அசுத்தங்களில் இருந்து நீர் புதுப்பிறவியே எடுக்கிறது.

இயற்கையின் இந்த ஒத்தாசையையும் மீறி, நீர்நிலைகளை மாசுபடுத்தும் நம் தீங்குகளின் அளவு குறைய வேண்டும். நீரின் பெரும்பகுதியான கடல் உப்பாக இருப்பதில் கூட, நம் புரிதலுக்கு எட்டாத ஒரு சுழற்சி பொருத்தம் இருக்கவே செய்யும்.

பள்ளங்களே பாத்திரங்கள்

கண்டங்களில் பெய்யும் மழைநீரெல்லாம் விரைவாக ஓடி கடலில் கலந்து உப்பாகிவிடும். அதனால், உயிர்கள் நன்னீர் கிடைக்காமல் அழிந்துவிடக்கூடும் என்பதை அறிந்துதான் இயற்கை நிலப்பரப்பில் நன்னீர் பிடித்து வைத்துக்கொள்ளும் பாத்திரங்கள் போல பெரும்பள்ளங்களை ஏற்படுத்திக்கொண்டது.

அது ஆறுகளாகவும், ஏரிகளாகவும் குளங்களாகவும் குட்டைகளாகவும் ஒரு பருவமழையிலிருந்து அடுத்த பருவமழை வரை மக்களுக்கு நன்னீரை பாதுகாத்து வைத்திருக்கும் மூலங்களாக விளங்கியது. இதை உணர்ந்த முன்னோர்கள் செயற்கையாகவும் நீர் மூலங்களை உருவாக்கினார்கள். ஆறுகளிலும் அணைகளை அமைத்து நீர் மொத்தமும் கடலில் கலந்திடாமல் கட்டுப்படுத்தி, விவசாயம் உட்பட அனைத்திற்கும் பயன்படுத்தினார்கள்.

குழாய்நீரின் குறுக்கீடு

நவீன வசதிகளின் வளர்ச்சி தேவைதான். ஆனால், பல நல்ல பழைய விடயங்களை அழிப்பதுதான் கொடுமையானது. அப்படித்தான் வந்தது இந்த நீர்க்குழாய் பதிப்பு முறையும்.

ஆரம்பத்தில் சில வசதிபடைத்தவர்கள் பூமிக்கடியில் உள்ள நீரை குழாய்கள் மூலம் ஏற்றி வீட்டுக்குள் பயன்படுத்தினார்கள். அந்த சிரமப்படாத வழக்கம் எல்லோருக்கும் பிடித்துப்போகவே, எல்லோரும் அதே வழியை கையாண்டார்கள்.

அதன் விளைவாக, மக்கள் ஆறு, குளங்களில் குளிப்பது, அந்த நீரை குடிப்பது குறைந்தது. முடிவாக நிலத்தின் மேற்பரப்பு நீர்நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளங்கள் பராமரிப்பின்றியும் பயனின்றியும் தூர்ந்தன.

நீர்நிலைகள் குறைவால் அதிக கொசு உற்பத்தி, வெப்பநிலை உயர்வு, காற்றில் மாசு என பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

தினத்தின் உறுதிமொழி

அதனால், மேற்பரப்பு நீர்நிலைகளை அதிகமாக ஏற்படுத்துவோம், இருக்கும் நன்னீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள், மக்காத பொருள்கள் உட்பட குப்பைகள் கலக்காமல் காப்போம். இதற்காக அரசாகவும் அமைப்பாகவும் தனியாகவும் உழைப்போம் என இந்த தினத்தில் உறுதி எடுப்போம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=153969&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.