Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் யாப்பு திருத்தம் ஊடாக அதிகார பகிர்வு கிடைக்கும். சி.வி.நம்பிக்கை

Featured Replies

அரசியல் யாப்பு திருத்தம் ஊடாக அதிகார பகிர்வு கிடைக்கும். சி.வி.நம்பிக்கை


அரசியல் யாப்பு திருத்தம் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். அதனால் இரண்டு மாகாணங்களிலும் குடியேற்றங்களை மேற்கொள்ள கூடாது என மத்திய அரசாங்கத்தை கோருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 48 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ள இராணுவ குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபையில் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இராணுவக் குடியிருப்பு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள நிகழ்ச்சி தொடர்பில் எனக்குத் தெரியாது. அவ்வாறு நடந்தால், அதனை நானும் எதிர்க்கின்றேன்.

இதுபோன்ற விடயங்கள் நடைபெறாமல் இருக்க அரசியல் யாப்பு திருத்தங்களில் எங்களுடைய கருத்துக்களையும் அரசாங்கம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளால் பாதக விளைவு ஏற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.


காணி சுவீகரிப்பதற்கும், காணி கையகப்படுத்தும் சட்டம் உள்ளது. சட்டத்துக்கமைய எடுக்க வேண்டும். சுவீகரிக்கின்ற காணி தொடர்பில் 14 நாட்களுக்கு முன்னர் உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி, அதன்பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும்.

எவ்வித அறிவித்தல்களையும் கொடுக்காமல் கையகப்படுத்தல் நடத்தியமை, சட்டத்துக்கு புறம்பான செயல்.அதே போன்றே அநுராதபுரத்திலிருந்து வடமாகாணத்தில் எல்லைப் பகுதிகள் ஊடாக சுண்டிக்குளத்தக்கு தண்ணீர் கொண்டு வரும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த சிலர் முயன்று வருகின்றனர். இவ்வாறன செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.


இராணுவ குடியிருப்பை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குங்கள். - சர்வேஸ்வரன்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ குடியிருப்புக்களை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்க வேண்டும்.புதிதாக அமைக்கப்பட்ட இராணுவ குடியிருப்பை ஜனாதிபதி திறந்து வைக்க கூடாது.வடக்கை இவ்வாறன சிங்கள மயமாக்கும் செயற்பாடுகள் இனப்பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்கத்தை கேள்விக்கூத்தாக்கும் செய்யப்பாடு என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளர்.


கைதடியிலும் இராணுவ குடியிருப்பு அமைக்கப்படவுள்ளது. - சிவாஜிலிங்கம்.


வவுனியாவில் மாத்திரமின்றி கைதடியிலும் இராணுவக் குடியிருப்பை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.


கைதடியில் உள்ள வீடமைப்பு அதிகார  சபைக்கு சொந்தமான காணியில் தமிழ் மக்கள் குடியேறினர். கடந்த மஹிந்த ராஜபகஷ காலத்தில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு  அந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. மேலும் காணிகள் பொலிஸ் திணைக்களத்துக்கும் காணி  வழங்கப்பட்டன. அத்துடன்  விசேட அதிரடிப் படையினரின் வடமாகாண தலைமை அலுவலகம் அமைக்க எனவும் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்த தமிழ் மக்களை இராணுவம் பலவந்தமாக வெளியேற்ற முனைந்தது. விடயமறிந்து நாங்கள் அங்குச் சென்று வீடமைப்பு அதிகார சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளரிடம், இராணுவத்தைக் கொண்டு வந்து மக்களை வெளியேற்றுவது எந்தச் சட்டத்தில் உள்ளது. எவ்வாறு அப்படிச் செய்தீர்கள்? எனக்கேட்டபோது,

 இராணுவம் இல்லாவிட்டால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என அவர் பதிலளித்தார்.

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான இந்தக் காணிகள், இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு நிலஅளவை செய்யப்பட்டதை நன்கு அறிவேன். அப்போது, இராணுவ அதிகாரி வைத்திருந்த நிலஅளவை பதிவேட்டின்படி அதனை நான் உறுதி செய்திருந்தேன். வீடமைப்பு அதிகார சபையின் காணியென்றால் நீதிமன்ற நடவடிக்கை மூலம் நடவடிக்கை எடுத்து இருக்கலாம் . அதனை விடுத்து ஏன் இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130392/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.