Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு நோக்கிய பயணம் ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளவே!

Featured Replies

வடக்கு நோக்கிய பயணம் ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளவே!
 
 
வடக்கு நோக்கிய பயணம் ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளவே!
நாட்டின் எதிர்கால நலம் சார்ந்து வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நல்லிணக்கம் நட்புறவினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்ற்பாடுகளினை முன்னெடுத்து வருகின்றார்கள். எங்களுடைய வடக்கு நோக்கிய பயணம் வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளல் ஆகும்.  ஊடக அமைச்சர் என்ற வகையில்  நான் தீர்வு வழங்கவுள்ளேன் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். 
 
தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஊடகலியலாளர்களுக்கு நேற்று சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஊடக செயலமர்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கிறின் கிறாஸ் கொட்லில் இடம்பெற்ற போது அந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சி நெறியில் பங்கு பற்றிய ஊடகவியலாளர்களுக்கு சன்றிதழ் வழங்கி வைத்து உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்.
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நாட்டின் எதிர்கால நலம் சார்ந்து வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நல்லிணக்கம் நட்புறவினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்ற்பாடுகளினை முன்னெடுத்து வருகின்றார்கள். எங்களுடைய வடக்கு நோக்கிய பயணம் வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளல் ஆகும்.  ஊடாக அமைச்சர் என்ற வகையில்  நான் தீர்வு வழங்கவுள்ளேன்.  இதற்காக பிரதேச அரசியல் தலைவர்கள் சமயத்தலைவர்களை சந்தித்து உள்ளேன். ஊடகவியலாளர்கள் மூவருக்கு வீட்டுதிட்ட அடிப்படையில் வீடு கட்டி கொடுக்கவுள்ளோம். ஊடகவியலாளர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதற்காக விண்ணப்பித்தவர்கள் மக்கள் வங்கியுடாக பெற்றுக்கொள்ளலாம். அவ் விண்ணப்பத்தினை தந்தவர்களுக்கு காசோலையினை வழங்கவுள்ளோம். 
 
நல்லிணக்கத்தினை உருவாக்கும் நோக்கில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாழ்ப்பாணத்தில் நடாத்துகின்ற கலைச்சங்கம  நிகழ்வில் கலந்து கொள்கின்றேன். கடந்தகால அரச ஆட்சியில் இல்லாத ஊடக சுதந்ரிரத்தினை நாம் வழங்குகின்றோம்.  அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக சுதந்திரத்தினை வழங்கியுள்ளோம்.  இதனை தனிப்பட்ட தேவைகளுக்கு அப்பால் சென்று தரப்பட்ட சுததந்திரத்தினை பயன்படுத்துங்கள்.  ஜனாதிபதி தேர்தலின் போதும்  நாடாளுமன்ற தேர்தலின் போதும்  நாம் கொடுத்த வாக்குறுதியில் மக்களுக்கு தகவல் அறியும் உரிமை வழங்கப்படும் என்றோம்.  இதனை நாடாளுமன்றில் கொண்டு வந்துள்ளோம்.
 
நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி வழங்க கல்வி நிறுவனம் தொடங்க கலந்தாலோசித்துள்ளோம்.  இச் செயற்பாட்டிற்க்கு ஜனாதிபதி பிரதமர் ஆலோசனை செயற்பாட்டின் படி வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடவுள்ளோம். ஊடகவியலாளர் பயிற்சி வழங்கும் நிறுவனம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
 ஊடகவியலாளர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக உதவிகளினை வழங்கவுள்ளோம்.  இலகு கடன்திட்ட மோட்டார் சைக்கிள் இலகு கடன்திட்ட வீட்டுத்திட்டம் என்பவற்றினை வழங்க யோசித்துள்ளோம்.  இதற்கு காணிகள் தேவையாக உள்ளது.  இதங்காக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் உதவியினை கோரியுள்ளோம்.  ஊடகவியலாளர்கயளுக்கு சலுகை வழங்கும் போது அரசியல் இலாபங்களுக்கு நாம் முயற்சிப்பதில்லை.  ஊடக சுதந்திரம் அனைவருக்கம் சமன் என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.