Jump to content

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா! Top News 
[Saturday 2016-04-09 18:00]
தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல்  2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து  கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து  விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

   

இவ்விழாவில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகிகள் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் சிறப்பு விருந்தினராக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி ந. அரியரட்ணம் கலந்து கொண்டிருந்தார். மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களின் நடனங்கள், நாடகம், கவியரங்கம், உரை, கவிதை போன்றவை மிகவும் பாராட்டக்கூடியதாக அமைந்திருந்தது.

விழாவிற்கு சிகரம் வைத்தாற் போல் மதிப்பளிப்புகள் நடைபெற்றன. 5, 10, 15 வருட பூர்த்தி செய்த ஆசிரியருக்கானது, 20 வருட பூர்த்தி செய்த தமிழ்வாரிதி (பட்டமளிப்பு) 25 வருட பூர்த்தி செய்த தமிழ்மாணி (பட்டமளிப்பு) ஆகியனவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் 12ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு சிறப்பான மதிப்பளிப்பும், யேர்மன் மட்டத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் தமிழ்த்திறன் யேர்மன் மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்படடது.

பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இவ் 26வது அகவை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்று இனிதே நிறைவேறியது.

அடுத்து வரும் 09.04.2016 சனிக்கிழமை தென்மேற்கு தமிழாலயங்களை இணைத்து புட்லிங்கன் (Püttlingen) நகரிலும், 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை தென்மாநில தமிழலாயங்களை இணைத்து ஸ்ருற்காட்(Stuttgart) நகரிலும் 16.04.2016 சனிக்கிழமை மத்திய மாநில தமிழாலயங்களை இணைத்து Bergeim நகரிலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

 

germany-tamil-090416-seithy%20(1).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(3).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(4).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(5).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(6).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(7).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(8).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(9).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(10).jpg

 

 

germany-tamil-090416-seithy%20(2).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=155170&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.