Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள்.

Featured Replies

ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு.

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள்.

யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.

ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

பலர் அமைச்சர்களாக பதவிக்கு வருமுன் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள். பின் பதவிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை பொருட்படுத்தாது விட்டுவிடுவார்கள். பதவியில் இருக்கும் பல தமிழ் அரசியல் அதிகாரிகளும் பல தமிழ் கல்வித்துறைகளில் உள்ள அதிகாரிகளும் இவையாவற்றிலும் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை.

இன்று யாழ்ப்பாண வட்டாரத்து சைவ கோவில்கள் நீதிமன்றத்தில் பல வழக்குகள் சம்பந்தமாக பதிவாகியுள்ளது. இவையாவும் சீக்கிரத்தில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். எல்லா சைவ கோவில்களும் தங்கள் பழைய அனுதின நிலைக்கு திரும்பி தமது முக்கிய இடத்தை சிவத்திற்கு கொடுக்க வேண்டும். நீங்கள் யாவரும் யாழ்ப்பாணத்து அரசர் ஆரிய சக்கரவர்த்திகளின் காலங்களில் எவ்வண்ணம் இயங்கி வந்தீர்களோ அவ்வண்ணம் சிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே என் ராஜ உத்தரவு!
நம் தமிழ் வரலாற்று வளத்தைக் குறித்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். யாழ்ப்பாணத்திற்கூட அனேகர் தங்கள் சொந்த வரலாற்றினை அறியாது உள்ளனர். கல்வி சாலைகளிலும் 1948ம் ஆண்டிற்கு பின்னர் நிகழ்ந்தவற்றையே கற்றுக்கொடுக்கின்றனர். அவற்றிற்கு முன் நிகழ்ந்த தமிழ் வரலாற்றுக்களை அவர்கள் கற்றுக்கொடுக்க அலட்சியமாக உள்ளனர்.

அதுமட்டுமல்லாது இன்று வாழும் நம் இளைய சமுதாயத்தினரும் தங்கள் சொந்த வரலாற்றினை அறியாது தங்கள் சொந்த தாய் மொழியையும் பேசாது உள்ளனர். இதற்கு பல வகையில் அவர்களது பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். ஏனெனில் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் தமிழ் வரலாற்றில் உள்ள பெருமைகளை சொல்லிக்கொடுக்க தவறிவிட்டார்கள். நாம் இவ்வண்ணம் கவனக் குறைவின்றி இருப்போமேயானால் தமிழ்மொழியும் அதிகம் பேசப்படாது தமிழ்மொழி அமிந்துபோகும் அபாயம் உள்ளது. மேலும் பல மக்கள் சமூச வலைத்தளங்களில் தமிழ் அரசியல்வாதிகளை குறித்து குறைகூறி எழுதுவதும் பதிவதுமாக உள்ளனர். இவ்வாறாக செய்வதைக் காட்டிலும் யாழ்ப்பாணத்தைக் குறித்த வளமான சரித்திரங்களை மற்றும் யாழ்ப்பாணத்து கலாசாரங்களை பண்பாடுகளை என நல்ல அறிவுபூர்வமான தகவல்களை போட்டால் அவை அனேகர்களுக்கு பயனுடையதாக இருக்கும்.

எமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்க தவறுவோமேயானால் இவையாவும் பிற்காலங்களில் ஆதாரங்கள் இல்லாது இன்றைய நாட்களில் எவ்வண்ணம் பல இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறதோ அவ்வண்ணம் யாழ்ப்பாணமும் பெயர் மாற்றப்பட்டு ஒரு சிங்கள பட்டணடமாக மாறுவதற்கு வாய்ப்புண்டு. நாம் எக்காலமும் நடந்த யுத்தத்தை குறித்து இனி பேசாது வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஓர் அழகான சுற்றுலா தளங்களாக மாற்றியமைப்பது நன்மையாக அமையும்.

எம் முன்னோர்களான யாழ்ப்பாணத்து அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் நாட்டு நட்பை ஆராய்ந்து அறிந்து செயற்படுவதைப் போன்று இம் முறை நான் என் அரச குடும்பத்திலிருத்து எனது பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்த நாட்களில் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகள் யாவையும் அவர்கள் பார்வையிட்டு எனக்கு அறிவித்தார்கள். எனவே நான் யாழ்ப்பாணத்து தற்போதைய நிலையைக் குறித்து நன்கு அறிந்திருக்கின்றேன்!

ஆகையால் என் தமிழ் மக்கள் அனைவரிடம் நான் விரும்புவது யாதெனில் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் முன்வந்து தங்கள் கரங்களை இணைத்து நமது வளமான பாராம்பரிய ஆவணங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே.

 
Raja Remigius Kanagarajah Jaffna's photo.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.