Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைக்கு இலக்கிய வாசிப்புப் பழக்கம் இளம் தலைமுறையிடையே அருகிவிட்டதா?

Featured Replies

டேய் ஜேகே,


இன்றைக்கு இலக்கிய வாசிப்புப் பழக்கம் இளம் தலைமுறையிடையே அருகிவிட்டதா?
இதற்குச் சரியாகப் பதில் சொல்லாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கல் நூறாகிவிடும்..
அன்புடன்,
வேதாளம்.

டியர் வேதாளம்,
இலக்கிய வாசிப்புப் பழக்கம் எது என்பதில் எனக்கு எப்போதுமே குழப்பம் வந்திருக்கிறது. எப்போதாவது இதுதான் இலக்கியம் என்று தெளிவடையும் சந்தர்ப்பத்தில் ஒரு பயங்கரவாதி அதனைக் குண்டுவைத்து தகர்த்துவிடுகிறான். “ஜே ஜே சில குறிப்புகள்” வாசித்துவிட்டு அட என்று நிமிர்ந்தால் அது ஒரு மட்டமான புத்தகம் என்கிறது ஒரு உயிரி. “என் மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்றவனை கவிஞனே இல்லை என்கிறார்கள். ஒரு கறாரான மதிப்பீட்டின்படி பார்த்தால் தமிழில் இலக்கிய வாசிப்பை ஒரேயொருவர் மாத்திரமே நிகழ்த்தியிருக்கிறார் போன்றே தெரிகிறது. ஆகவே இதை ஒரு குத்து மதிப்பாகவே பார்க்கவேண்டும்.

இலக்கிய வாசிப்பு இளம் தலைமுறையிடம் அருகிவிட்டது என்றால் ஏதோ முன்னைய தலைமுறையிடம் வாசிப்பு மெத்திப்போய்க்கிடக்கிறது என்று பொருள் வருகிறது. இன்றைக்கு முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இருப்பவர்களில் எத்தனைபேர் வாசிக்கிறார்கள்? அவர்களில் அனேகமானோர் வாசிப்பது தம் பிள்ளைகளின் பாடசாலைப்புத்தகங்களைத்தான். சரி அவர்கள் இளையோர்களாக இருந்தபோதாவது வாசித்தார்களா என்றால் ஐ டோண்ட் திங் சோ. நான் படிக்கும் காலத்தில் நிறைய ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, ஆனந்தவிகடன், அறிவுக்களஞ்சியம், கோகுலம் புத்தகங்கள் ரவுண்டு வரும். ஒரு பத்தாம் வகுப்பு வரைக்கும் அது தொடரும். ஆனந்தவிகடன், குமுதம் எல்லாம் பேஸ்புக் நியூஸ்பீட் போன்றவை. அவை வாசிப்பு அல்ல. ஆனால் எம் பள்ளிக்காலத்தில் புதுமைப்பித்தனையோ, ஜெயகாந்தனையோ, ஜானகிராமனையோ வாசித்தவர்கள் மிகச்சொற்பமே. பாடசாலை நூலகங்களிலும் இவர்கள் இருந்ததாக ஞாபகம் இல்லை. எஸ்.பொ என்றால் எனக்கு அப்போது யார் என்றே தெரியாது. இதிலே சு.ரா, கீ.ரா, மாதவன் எல்லாம் சான்சே இல்லை. ஈழத்தின் பெஸ்ட் செல்லர் வாடைக்காற்று நாற்பது வருடங்களில் ஆறாயிரம் பிரதிகளே விற்பனையாகியிருக்கிறது. ஒரு சிலர், பொம்மர் அடி, ஊரடங்கு, வீட்டுக்கு வெளியே போகமுடியாது என்ற சூழ்நிலைகள் காரணமாக மழைக்கு ஒதுங்கியிருக்கலாம். மற்றும்படி வாசிப்பையே ஒரு பொழுதுபோக்காக வாழ்நாள் முழுதும் கொண்டுசென்றவர்கள் மிகச்சிலரே. அவர்கள் எந்தக்காலத்திலும் மிகச்சிலராகவே இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.

வாசகர்கள் எந்தக்காலத்திலுமே endangered speciesதான். ஆனால் அவர்களுக்கு ஆபத்து இப்போது மேலும் அதிகரித்திருக்கிறது. எண்பது பக்கப்புத்தகத்துக்கு விமர்சனமாக இங்கே இருநூறு பக்கங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வாசகர் தன்னுடைய வெளியை விரிவாக்க முடியாமல் தம்முடைய பார்வைகளை விமர்சனங்கள் திணிக்கின்றன. அனேகமானவை வெட்டு, குத்து என்ற வன்முறை விமர்சனங்கள்தான். நாலு எழுத்து எழுதவந்தால் கூடவே ஒரு சில எழுத்தாளர்களின் பரிச்சயமும் கிடைக்கிறது. எழுத்துலகத்தின் காழ்ப்புணர்ச்சியும் தெரியவருகிறது. பல எழுத்தாளர்களின் அரசியல் கரைவேட்டிகளின் அரசியலைவிடக் கேவலமானது. அம்மா மாதிரி ஒரு பெரிய எழுத்தாளர் நடுக்கதிரையில் அமர்ந்திருந்தால் முன்னாலே நூறு மண்டியிட்டு கும்பிட்டுக்கொண்டு நிற்கும். அந்த நூறுக்கும் ஒரு வட்டச்செயலகமோ, பஞ்சாயத்தோ இருக்கும். நூறு புத்தகங்களின் விற்பனையை நூற்றுப்பத்து ஆக்க எழுத்தாளர் என்னென்ன தில்லுமுல்லுகள் எல்லாம் செய்யவேண்டியிருக்கிறது. சிம்பன்சிகள் பேன் பார்ப்பதுபோல லைனுக்கு உட்கார்ந்து முன்னே இருக்கும் குரங்குக்கு பேன் பார்ப்பதுதான் இங்கே நடக்கிறது.

இங்கே மெல்பேர்னில் ஒரு ரயிலில் ஏறினால், பெட்டியில் குறைந்தது இருபதுபேர் புத்தகங்களோடு இருப்பார்கள். அதில் தெற்காசிய முகங்கள் எதுவுமே இராது. நமக்கு வாசிப்புப்பழக்கம் பெரிதாக ஊறாமல்போனமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். வாழ்க்கை எப்போதுமே பிழைப்பதை அடிப்படையாகக்கொண்டு அமைந்துவிட்டது ஒரு காரணம். இரவு வேலை செய்துவிட்டு ரயிலில் செல்பவர் புத்தகம் வாசிக்கமுடியாது. பின்னேரம் சீட்டுக்காசு கட்டவேண்டும் என்ற கவலையோடு வாசிக்கமுடியாது. சஞ்சலம் நிறைந்த வாழ்க்கையில் தொடர்ச்சியான வாசிப்புக்கு இடமில்லை. முன்னூறு வருட அடிமைத்தனமான வரிகட்டல் வாழ்க்கைக்குப் பழகியதால் பணம் சேர்த்துப் பெரியாள் ஆவது நம்முடைய ஜெனடிக்கில் சேர்ந்துவிட்டது. எம்மால் நிம்மதியாக உட்கார்ந்து அகவெழுச்சிகளையும் அழகியல்களையும் அனுபவிப்பது கடினம் என்று தோன்றுகிறது. வாழும் கணத்தைக் கொண்டாடாமல் வாழப்போகும் கணத்துக்கு கணக்குப்போடுவதே நம் வாழ்க்கையாகிவிட்டது. எண்பது வயதில் இருக்கும் வீட்டை விற்று பணத்தை செலவழிக்க யோசிக்காமல் இன்னொரு வீட்டை வாங்கிப்போடும் புத்தியிலேயே மாய்ந்துபோனோம். கிடைக்கும் சொற்பநேரத்தையும் தெறிகளில் செலவிடவே விரும்புகிறோம். நம் பிள்ளைகளுக்கும் அவற்றையே கடத்துகிறோம். இந்தச்சங்கிலி இப்போதைக்கு உடையும்போலத் தெரியவில்லை. Ironically வாசிப்பு இப்படியான எம்மைப்போன்ற சமூகத்துக்குத்தான் இன்றியமையாதது.
I think that answered your question!
அன்புடன்,
ஜேகே

FBJeyakumaran Chandrasegaram

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.