Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் மீண்டும் மக்களை வெயிலில் வாட்டும் மக்களின் முதல்வர் பிரசாரம்! - இது சேலம் சோதனை! (படங்கள்)

Featured Replies

மீண்டும் மீண்டும் மக்களை வெயிலில் வாட்டும் மக்களின் முதல்வர் பிரசாரம்! - இது சேலம் சோதனை! (படங்கள்)

 

salemmeeting.jpg

சேலத்தில் நடைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டத்தில்,  லட்சக்கணக்கானவர்கள் கொளுத்தும் வெயில் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டத்தில் இருந்து வெளியே செல்பவர்களை காவல்துறையினர் தடுத்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

salemmeeting1.jpg

சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 46 வேட்பாளர்களை ஆதரித்து,  அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று  பிரசாரம் மேற்கொண்டார்.

salemmeeting1a.jpg

சேலத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகுடஞ்சாவடியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. காட்டுப்பகுதியான இந்த பகுதியில் கூட்டம் நடைபெறுவதால் லட்சக்கணக்கானோர் ரிப்பர் லாரிகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலில் அவதிப்படும் அவர்களுக்கு தொப்பி, தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் கடுமையான வெயில் காரணமாக தண்ணீர் பாக்கெட்டுகளும் உருகிப் போவதால் கூட்டத்திற்கு வந்தவர்கள், கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/politics/62789-jayalalithaas-election-campaign-in-salem.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் 'அனல்' பிரசாரத்தில் மீண்டும் ஒரு பலி! இதற்கு ஒரு முடிவே இல்லையா?!

 

 

jayasalemcampaign.jpg

சேலத்தில் இன்று நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் வெயில் காரணமாக ஒருவர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 9ம் தேதி சென்னையில் கொளுத்தும் வெயிலில் பிரசாரத்தை தொடங்கினார். இந்த கூட்டத்திற்கு லாரிகளில் மக்களை அழைத்து வரும் அதிமுகவினர், அவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டும், தொப்பியும் கொடுக்கின்றனர். ஆனாலும், கூட்டத்திற்கு வருபவர்கள் வெயில் கொடுமையால் தவித்து வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி விருத்தாசலத்தில் பிற்பகல் 3 மணி அளவில் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. அப்போது, லாரிகளில் அழைத்து வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் வெயிலின் கொடுமையால் தவித்தனர். வெயில் கொடுமையை தாங்க முடியாமல் இரண்டு பேர் உயிரிழந்தனர். முதல்வரின் இந்த மதிய நேர பிரசாரத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ஜெயலலிதா தனது பிரசார நேரத்தை மாலையில் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பிரசாரம் கொளுத்தும் வெயிலிலேயே நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் நேற்று  முன்தினம் நடைபெற்ற பிரசாரம் மட்டும் மாலை 6 மணிக்கு தொடங்கியது. ஆனாலும் அந்த கூட்டத்திற்கும் மதியம் முதலே மக்கள் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டனர். அடிக்கும் வெயிலில் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டே உருகி போய்விட்டதாம். அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த வெயிலின் கொடுமையை தாக்குபிடிக்க முடியாமல் கூட்டத்திற்கு வந்திருந்த குப்பான்டபாளையம் கிராமத்தை சேர்ந்த பச்சியண்ணன் என்ற 53 வயதுடையவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சேலத்தில் முதல்வர் பிரசார கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/62804-one-person-died-in-jayalalithaas-salem-election.art

  • தொடங்கியவர்

சேலத்தில் 107 டிகிரி சுட்டெரித்த வெயில்: ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் 2 பேர் மரணம் - பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கம்

 
 
வெயிலால் மயக்கம் அடைந்து சேலம் மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் பெண்
வெயிலால் மயக்கம் அடைந்து சேலம் மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் பெண்

சேலத்தில் நேற்று நடந்த ஜெயலலிதா பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள் 2 பேர் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேலும் பெண் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் மயக்கமடைந்தனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங் களைச் சேர்ந்த அதிமுக வேட்பா ளர்களை ஆதரித்து சேலம் மகுடஞ் சாவடி அடுத்த கூத்தாடிபாளை யத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்க நூற்றுக் கணக்கான லாரிகளில் அதிமுக தொண்டர்கள் அழைத்து வரப்பட்டி ருந்தனர். காலை 11 மணி முதலே பொதுக்கூட்ட திடலில் தொண் டர்கள் திரண்டனர்.

சேலத்தில் வெயில் நேற்று 107.3 டிகிரியாக இருந்தது. இதனால், பொதுக்கூட்ட திடலில் சிக்கிய தொண்டர்கள் பெரும் அவதிக் குள்ளாகினர். மேலும் குடிநீர் வசதி இல்லாததால் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்த சேலம் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர் வெயி லுக்கு சுருண்டு விழுந்து சம்பவ இடத் திலும், பச்சியண்ணன் என்பவர் சிறுநீர் கழிக்க சென்ற இடத்திலும் உயிரிழந்தனர். மேலும் அய்யண் ணன்(55), நீலாவதி(53), பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பொள்ளாச் சியைச் சேர்ந்த எஸ்ஐ கற்பகம் ஆகியோர் மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மேலும் லாரிகள் மூலமாக வந்த இளம்பிள்ளை அங்கையர்கண்ணி, சுப்பிரமணி, நாமக்கல் புளியங்காடு லட்சுமி, அன்பழகன் ஆகிய 4 பேர் ஆங்காங்கே சிறுசிறு விபத்துகளில் சிக்கி காயமடைந்தனர்.

பொதுக்கூட்டத்துக்கு நூற்றுக் கணக்கான வாகனங்கள் வந்ததால், சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் ஏற்பட்டு 4 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-107-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8502396.ece?homepage=true

மக்களின் ஏழ்மையைபடுத்தி இப்படியொரு பிரச்சாரம் தேவைதானா? மக்கள் நல்லதொரு பாடம் புகட்டினால்தான் சரி இவாவுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.