Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக மேம்பாட்டில் புலம்பெயர்ந்தோரை இணைக்கத் தலைவர்கள் தயாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மேம்பாட்டில் புலம்பெயர்ந்தோரை இணைக்கத் தலைவர்கள் தயாரா?

கலாநிதி சர்வேந்திரா

<p>தாயக மேம்பாட்டில் புலம்பெயர்ந்தோரை இணைக்கத் தலைவர்கள் தயாரா?</p>
கலாநிதி சர்வேந்திரா

 

வடக்குக் கிழக்குப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பங்களிப்பு வழங்கவேண்டும் என்றும் இவ்வாறு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை முதலீடுகளைச் செய்ய முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டமைப்பின் தலைவரிடம் இருந்து இத்தகையதொரு அழைப்பு வருவது நல்லதொரு விடயமே. இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான வகையில் தமிழர் தாயகப்பகுதிகளின் மேம்பாட்டுக்கு பங்களிப்பதில் உள்ள தடைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதில் ஆற்ற வேண்டிய பணிகள் கடந்த ஏழு வருடங்களில் தாயகத் தலைவர்களால் உரிய முறையில் ஆற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி கூடவே எழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

புலம்பெயர்ந்தவர்களின் தாயக மேம்பாட்டுக்கான பங்களிப்பு அவர்களின் அரசுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்புகளிலும் தங்கியிருக்கிறது என புலம்பெயர் மக்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அரசுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் தாயகத்தின் மேம்பாட்டுக்கு கூடுதலான பங்களிப்பை வழங்குவது ஒப்பீட்டுளவில் இலகுவாக இருக்கும் என்பது இவ் ஆய்வாளர்களின் கருத்து. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலானோர் சிறிலங்கா அரசின் கீழ் வாழ்கிறார்களேயன்றி அதனை தமது அரசாகப் பார்க்கவில்லை. சிங்கள அரசாகவே பார்க்கிறார்கள். புலம்பெயர் தமிழ் மக்களும் சிறிலங்கா அரசைத் தமது அரசாகப் பார்க்கவில்லை. பலர் சிறிலங்கா அரசினைத் தமிழ் மக்களை இனவழிப்பு செய்யும் அரசாகப் பார்க்கிறார்கள். இதனால் சிறிலங்கா அரசுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இடையே நம்பகத்தன்மையான உறவு இல்லை. சிறிலங்கா அரசு புலம்பெயர் தமிழ் மக்களை ஒருவகைச் சந்தேகத்துடன்தான் பார்க்கிறது. புலம்பெயர் தமிழர்களும் சிறிலங்கா அரசை எப்போதும் சந்தேகத்துடன்தான் அணுகுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த நிலமை வேறானது. மே 2009 க்கு முந்தைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இடையே இருந்த நேரடியான தொடர்புகள் காரணமாக தாயகப் பகுதிகளில், குறிப்பாக யுத்த நிறுத்த காலத்தில் அரசியல் கருத்துவேறுபாடுகளைக் கடந்து பல தமிழ் மக்கள் தாயக மேம்பாட்டுக்கு பங்களிக்க முன்வந்தார்கள். புலம்பெயர் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகள் அமைப்பையும் அவர்கள் உருவாக்கியிருந்த கட்டமைப்புக்களையும் தமிழ் மக்களுக்கான அரச கட்டமைப்பாகவே பார்த்தார்கள். அவற்றைத் தம்முடையதாக உணர்ந்தார்கள். இக் கட்டமைப்புகளும் தமிழர் தாயகத்தின் மேம்பாட்டுக்காக பல்வேறு வகையான திட்டங்களை வகுத்தன. பல்வேறு வகையான நடைமுறைப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதும் தமது தாயகத்தின் மேம்பாட்டுக்குப் பங்களிக்கிறோம் என்ற உணர்வில் பல புலம்பெயர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் அமைந்திருந்த கிளிநொச்சியை நோக்கிப் போனர்கள். இவர்களில் பலர் அரசியலில் ஈடுபாடு குறைந்தவர்கள். விடுதலைப்புலிகள் அமைப்போடு கருத்து முரண்பாடு கொண்டிருந்தவர்கள் கூட அவற்றை மறந்துவிட்டு இணைந்து செயற்பட்டார்கள்.

மே 2009 இல் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலம்பெயர் தமிழ் மக்கள் தாயகத்தின் மேம்பாட்டுக்கு பங்களிப்பதில் பலவகையான தடைக் காரணிககள் ஏற்பட்டன. இவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின்பின் மேம்பாட்டுக்காகச் செயற்படுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் மத்தியில் நம்பகத்தன்மையினைப் பெறக்கூடிய நிறுவனக் கட்டமைப்பு வளர்ச்சியடையாதமை முதலாவது காரணம். தாயகத்தின் மேம்பாடு தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கானதோர் அமைப்பு தமிழர் தாயகத்தில் உருவாக்கபட்டிருக்க வேண்டும். இவ் அமைப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை வகுத்து இத் திட்டங்களுடன் புலம்பெயர் தமிழ் மக்களை இணைக்கும் பணியினை மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். தமிழ் மக்களால் தமது அரசியற் பிரதிநிதிகள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அத் தார்மீகப் பொறுப்பு இருந்தது.

2012 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை நோர்வேக்கு அழைத்து புலம்பெயர் தமிழ் மக்களுடன் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் இத்தகையதொரு மேம்பாட்டு அமைப்புக்கான தேவை பற்றி வலியுறுத்தியிருந்தோம். இக் கட்டுரையாளருக்கு கிடைக்கும் தகவல்களின்படி இத்தகையதோர் அமைப்பின் தேவை பற்றி கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உட்பட பல கூட்டமைப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இக் கோரிக்கை பல்வேறு நாடுகளில் உள்ளவர்களால் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை இத்தகையதொரு அமைப்பு உருவாக்கப்படவில்லை. மகிந்த இராஜபக்ச காலம் முடிந்து 15 மாதங்கள் கடந்தும் இது நடைபெறவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் பரந்துபட்டு நம்பிக்கை கொள்ளக்கூடிய அமைப்பு இதுவரை கட்டியெழுப்பப்படவில்லை.

இரண்டாவது, தமிழர் தாயகப்பகுதியில் சிறிலங்கா இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் சூழலும் முதலீடுகளைச் செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. மூன்றாவது மேம்பாட்டின் அரசியல் தொடர்பாக கரிசனை பற்றியது. தாம் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறிலங்கா அரசினை அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்குப் பாதகமாக அமையும் என்ற கருத்து நிலவியமை. இக் கருத்து மே 2009 க்கு அண்டிய காலங்களில் கூடுதல் வலுவுள்ளதாக இருந்தது. பின்னர் இக் கருத்துக்கு மெல்ல மெல்ல வீச்சுக் குறைந்து போகத் தொடங்கியது. நான்காவது, தமிழர் தாயகப்பகுதிகளை மேம்பாடடையச் செய்வதற்கான செயற்பாட்டியக்கங்கள் வீச்சுடன் செயற்படாமை. இதற்கும் இங்கு முதலாவது காரணமாகக் குறிப்பிட்ட விடயத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இத்தகைய இடையூறுகள் இருந்தாலும் ஏராளமான புலம்பெயர் தமிழ் மக்கள் தமது பங்களிப்பை மேம்பாடு சார்ந்து வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், நண்பர்களின் ஊடாக, தமது கிராமங்களின் ஊடாக, தமது பாடசாலையின் ஊடாக, தமது பிரதேசத்தின் மேம்பாட்டுக்காகச் செயற்படும் அமைப்புக்களின் ஊடாக, தமக்கு நம்பகத்தன்மை கொண்ட சிறிய அமைப்புகள் ஊடாகத் தாயகத்தின் மேம்பாட்டுக்காகவும், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட போராளிகளின், மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் ஏராளமானோர் அக்கறையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படாமல் சிறு சிறு வட்டத்திலேயே சுருங்கிப் போய்க் கிடக்கிறது.

<p>தாயக மேம்பாட்டில் புலம்பெயர்ந்தோரை இணைக்கத் தலைவர்கள் தயாரா?</p>

தமிழர் தாயகப் பகுதியின் மேம்பாட்டுக்கு தமிழ் மக்களின் தேசிய பொருளதார வாழ்வைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளலும் மிக அடிப்படையான தேவையாகும். இம்முயற்சி தாயகத்தில் இருந்துதான் உருவாக வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இத்தகையதொரு திட்டத்தை வரைந்து அதனை செயற்படுத்துவது குறித்து மார்க்கங்களை கண்டறிந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை உண்டு. புலம்பெயர் தமிழ் மக்களின் கடமையினைச் சுட்டிக்காட்டும் அதேவேளை தாயக மேம்பாட்டுக்குத் தாம் ஆற்றவேண்டிய பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா. சம்பந்தனும் ஆற்ற வேண்டும். தமிழ் மக்களின் மேம்பாடு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஏனைய தமிழ் அமைப்புகளதும் செயற்திட்டம் என்ன என்பது தெளிவாகத் தெரியாத வகையில்தான் புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சுருங்கக்கூறின், புலம்பெயர் தமிழ் மக்கள் தாயக மேம்பாட்டுக்குப் பங்களித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் பங்களிப்பு வழங்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். தாயக மேம்பாட்டு நடடிவடிக்கைகள் தொடர்பாக இதய சுத்தியுடன், அர்ப்பணிப்புடன் இயங்கி புலம்பெயர் மக்களின் நம்பிக்கையினைப் பெறக்கூடிய வகையில் கட்டமைப்புக்களை உருவாக்கிச் செயற்படுவதற்கு தாயகத் தலைவர்கள் தயாராக உள்ளார்களா?

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=9346aa29-ff2a-4961-97c9-e2a561b5d3fb

இது விடயமாக சுமந்திரனுடன் தொடர்பு கொண்டபோது ,சட்டத்தரணி கனகேஸ்வரனை தலைவராகவும் ,கந்தையா நீலகண்டனை செயலாளராகவும் கொண்டு Nothern Development Foundation என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் வடக்கில் அதனுடாக தொடர்பை ஏற்படுத்தி செயற்பட முடியும் என்றும் ,கிழக்கில் அமைச்சர்களான தண்டாயுதபாணி ,துரைராசசிங்கத்துடன் தொடர்புகொண்டு செயற்படமுடியும் என்றார் .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைப்புக்களை உருவாக்கினால் மட்டும் அவை செயற்படாது. செயலூக்கத்துடன் முன்னெடுத்தால்தான் பிரயோசனமாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.