Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன நெருக்கடி இன்னும் சர்வதேச மயமாகவில்லையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[06 - January - 2007] [Font Size - A - A - A]

முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசெய்ன் கடந்த சனிக்கிழமை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து 13 அரசியல் கட்சிகள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியிருந்தன. மருதானை முஸ்லிம் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்குப் பிறகு சதாம் ஹுசெய்னுக்கான ஜனாசா தொழுகை நடத்தப்பட்டதையடுத்து ஆரம்பித்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்கத் தூதரகம் வரை ஆக்ரோஷமாகக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்றனர். இறுதியில் பேரணியை ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகளின் சார்பில் அமெரிக்கத் தூதரகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அறவிப்பதற்காக கடந்த புதன்கிழமை அசாத் சாலி பவுண்டேசனில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதிக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனையைக் கடுமையாகக் கண்டனம் செய்து கருத்துகளைத் தெரிவித்தனர். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, உலக மேலாதிக்கத்துக்காக மேற்கொண்டு வருகின்ற அடாத்தான நடவடிக்கைகளையும் அந்தத் தலைவர்கள் காரசாரமாக விமர்சித்திருந்தனர். அவர்களில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு விவகார, தேசிய நல்லிணக்க அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்திருந்த கருத்தொன்று எமது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அது குறித்து எமது கருத்துகளை வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

`ஈராக்கில் தலையீடு செய்த அமெரிக்கா, இலங்கை இனப் பிரச்சினையையும் சர்வதேச மயப்படுத்தக் கூடும். இலங்கையில் தலையிட முயற்சி செய்து சர்வதேச ரீதியான நெருக்குதல்களை அமெரிக்கா பிரயோகிக்கும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. அமெரிக்கா இலங்கையில் அத்தகைய போக்கைக் கடைப்பிடிக்கும்போது அது பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கும். சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்டமை நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட ஒரு கொலையாகும். எமது பிரச்சினையும் சர்வதேசமயமானால், சதாம் ஹுசெய்னுக்குச் செய்ததை எமது தலைவர்களுக்கும் அமெரிக்கா செய்யுமோ என்று நாம் சந்தேகப்படுகின்றோம்' என்று அமைச்சர் குணசேகர கூறியிருந்தார்.

உண்மையிலேயே, எமது இன நெருக்கடி குறித்து அமைச்சர் குணசேகர கொண்டிருக்கும் கருத்துக் குறித்து எமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. இலங்கை இனநெருக்கடி இன்னும் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை என்று அவர் நம்பிக்கை கொண்டிருக்கின்றாரா? அவ்வாறான ஒரு நம்பிக்கை அவரிடம் இருக்குமானால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிறுபிள்ளைத்தனமான அரசியல் பேசுகிறார் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இலங்கை இன நெருக்கடிக்கான எந்தவொரு தீர்வு முயற்சியுமே (அது போராக இருந்தாலென்ன, சமாதானமாக இருந்தாலென்ன) இன்று எமது பிராந்தியத்தினதும் உலகினதும் வல்லாதிக்க சக்திகளின் மேலாதிக்க நோக்கங்களின் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை குணசேகர புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இன நெருக்கடியை அமெரிக்கா சர்வதேச மயப்படுத்தக் கூடும் என்ற அச்சம் தனக்கு இருப்பதாகக் கூறும் அமைச்சர் குணசேகர, எமது நெருக்கடியின் இன்றைய நிலைமையை எத்தகையதாகக் கருதுகிறார்? சர்வதேச மயம் என்பதை அவர் எத்தகைய வியாக்கியானத்துக்கு உட்படுத்த விரும்புகிறார்? அவரின் கருத்துப்படி இலங்கை இன நெருக்கடி இன்னும் சர்வதேச மயமாகவில்லையானால், அது சர்வதேச மயமாகாமல் தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் துணிச்சலும் தூர நோக்கும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கு இருக்கிறதா? இத்தகைய கேள்விகளுக்கு அமைச்சர் என்ற வகையில் அல்ல ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையில் குணசேகர எமக்குப் பதில் அளிக்க வேண்டாம். தனக்குள்தானே சிந்தித்துப் பார்க்கவாவது முயற்சிக்கட்டும்.

thinakurral.com

:) இல்லை இல்லைஇல்லை இல்லவே இல்லை.

வெளிநாட்டில வந்திறங்கிய சனத்தால் பெரிதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை. வெளிநாட்டில் மேல்சாதி, கீழ்சாதி என இப்ப காசு கவுன்ட் பண்ணிக்கொண்டு பிறந்தநாள், பூப்பாட்ட நீராட்டுவிழா, இந்தியாவில கல்யாணம் என்று இப்ப இதுகளில போட்டி. இதுக்குமேல இடக்கிட ஏதேனும் இசைவிழா என்றால் 200- 300 எண்டாலும் கொடுக்க ரெடி. வெளிநாட்டில இப்படியான நிலையில யார் போய் தன்மையாய் கேட்டாலும். இப்ப வசதியில்லை எண்டு BMW வில ஏறிக்கொண்டு வாய்கூசாம சொல்லுவவை கனபேர்.

விடிய காலயில வேலைக்குப் போய் கஸ்டப்பட்டாத்தான் வழியுண்டு என்று வாழ்பவர்கள் தான் பலர். இப்படி இதுக்கே வித்தியாசம் இருக்கும் போது பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் முன்பு வந்து குருட்டு அதிஸ்டத்தில் வீட்டினூடாக பெரிய பணக்காரராக வந்த பெரிய மனிதர்கள் இவ் வெளிநாடுகளில்...முன்னுக்கு போய் நான் இன்னார் என்னுடைய நாட்டில உவன் கொல்லுரான் ஒருக்கா பார்ப்பியலே என்டு கேட்க மனது அவர்களுக்கு இல்லை....சப்போட் பண்ணிய பெரிய மனிதர்களின் ஆஸ்பத்திரியிலேயே...வேற ஆளட்ட மருந்து எடுத்து அந்தாளை எனக்குத்தெரியாது எண்டு சொல்லும் நிலைமைகள் இங்கு உண்டு. இப்படியிருக்க...நாம் சின்ன மனிதர்கள் போய் சொன்னால் கேட்பார்களா....ஆகவே ஒற்றுமை அதுவும் தமிழின உணர்வு ஒற்றுமை எல்லாருக்கும் வர வேண்டும். அணிதிரளவேண்டும். அப்ப முடியும். அதுக்குத்தான் வழிபார்க்கவேண்டும்.

அதுவரை...என்னதான் நாம் பொறுமைகாத்தாலும் எம்மை எல்லோரும் இளிச்சவாயர் எண்டு சும்மா விட்டுடுடுவீனம். கண்டுக்கவேமாட்டீனம். :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.