Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"""" ஏய் சிங்களா ஏனழுதாய்.??? எங்கே இப்போ சிரி.....""""

Featured Replies

"""" ஏய் சிங்களா ஏனழுதாய்.??? எங்கே இப்போ சிரி.....""""

ஏய் சிங்களா

இப்போ நீ சிரி

ஏன் அழுதாய்...???

உன் நெஞ்சில்

என்ன வலி..??

இது யார்

போட்ட பழி...???

எத்தனை நாள்

நாம் அழுதோம்

எம் விழிகள்

யார் துடைத்தார்...???

கண்ணீர் கொட்டி நாமன்று

கதறியன்று அழுகையிலே

கை தட்டி நீ சிரித்தாய்....

தெருக்கிளிலே

எம் இனங்கள்

பிணங்களாகி வீழ்கையிலே

கை தட்டி நீ சிரித்தாய்...

எங்கே

இப்போ நீ சிரி

ஏன் அழுகிpறாய்...???

உன்னவரை நீ ஏவி

உறவு உயிர் பறிக்கையிலே

எங்கள் நெஞ்சம் பதைத்தடா

விழிகளது நனைந்ததடா...

வெய்யிலில் எரிந்து

மழையில் விறைத்து

மர நிழலில் நாமன்று வாழையிலே

உன் விழிகள் கலங்கலயே

உன் நெஞ்சம் பதறலயே....

ஏன் இப்போ அழுதாய்

சொல்

ஏனிப்போ அழுதாய்...???

என்ன

இப்போ - உன்

நெஞ்சு வலிக்கிறதா...???

உன் நினைவு விறைக்கிறதா...???

எங்கள் மண்ணை நீ பறித்து

எங்கள் குடி தான் கலைத்து

உந்தன் குடி தான் இருத்தி

ஏறியன்று ஆட்டம் போட்டாய்....

எத்தனையோ இன்னல்களை

எண்கணக்கில் நீ அளித்தாய்

வஞ்சகங்கள் தான் தாங்கி

வஞ்சகங்கள் நீ புரிந்தாய்...

அத்தனையும் மறந்து விட்டா

அட பாவி நீ அழுதாய்...???

எதனை நாள் நாமழுதோம்

எம்விழிகள் யார் துடைத்தார்..

சிதறிய உடல்களை

பொறுக்கி எடு

இன்று

சிரித்தே கொண்டதை நீயே சுடு...

எங்கே கை தட்டு

புன்னகை கொட்டு

போ.....போ..அழாதே....

ஏனிப்போ நீயழுதாய்

எங்கே சிரி.....!!!

[/color]

-வன்னி மைந்தன் -

post-2712-1168124831_thumb.jpg

post-2712-1168124847_thumb.jpg

post-2712-1168124862_thumb.jpg

post-2712-1168124879_thumb.jpg

Edited by vanni mainthan

நல்ல கவிதை.

ஆனால் சிங்களவன் வசைபாடுவானே ஒழிய சிந்திக்க மாட்டான்.

வன்னி மைந்தன் - நீங்க என்ன ஒரு முடிவோடதான் எழுதுறீங்களா

அண்ணா?

கவிதை என்ற பேரில - கண்டபடி நீங்க எழுது(உளறு)றதெல்லாம் -

நல்லா இல்ல - அண்ணா!

ஓகோ இது தமிழனின் சிறந்த சிந்தனை அருமையான கவிதை வடிவில் வடிந்து ஓடுது ரசித்து மகிழ்வம்.

ஆனால் சிங்களவன் என்னவே சிந்திக்காமல் வசைபாடுகிறான்.

இந்தப் பெண்ணைப் பார்த்து ஒரு சிங்களவன் கவிதை எழுதியிருப்பானா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=17493&hl=

அரசியல் நலன்களிற்காக பிரச்சாரம் செய்கிறார்கள் பத்திரிகைகள் பேச்சாளர்கள். ஆனால் சாதாரண சிங்கள இனத்தவர் இப்படி நடந்து கொள்கிறார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன்- உங்கடை கவிதைகள் உணர்வின் பிரதிபலிப்பாக உள்ளது...

நிகழ்கால நிகழ்வின் நிகழ்வுகளை தாங்கி வரும்...

படைப்பாகவும்..அதன் உணர்வின் வெளிப்படையாகவும்...

உங்கள் மனது...

சிலர் அவ்வப்போது வந்து தங்களை சீண்டி உங்கள் எண்ணங்களை திசை திருப்பும் நோக்கோடு செயல்படுவதை காண

முடிகிறது...எனவே அவர்களின் கருத்துகளை செவி மடுங்கள் ஆனால்

படைப்புகளை ஆக்குவதை நிறுத்தாதீர்கள்....

தொடர்ந்து படைக்க என் வாழ்த்துக்கள்...

தவறாய் எழுதியிருப்பின் மன்னிக்கவும்...

ஒப்பந்தம் செய்தோமே

போரை நிறுத்திடவே

சிங்களவன் தன் வீட்டைச்

சொர்க்கமாய் ஆக்கினனே.

மகிந்தன் தரமாட்டான்

ரணிலும் விடமாட்டான்

தமிழர் தம் உரிமைக்குத்

தீர்வு நாம் கேட்டிடவே

ஐந்தாண்டு காலந்தான்

உருண்டோடிப் போயாச்சு

பல நூறு உயிர்களையும்

பலியாகக் கொடுத்தாச்சு

கூலிக் கூட்டமங்கு

கும்மாளம் அடிச்சாச்சு

கேலிக் கூத்தென்று

காகிதமும் கிழிச்சாச்சு

எதிரியவன் எங்கள் உயிர்

எடுப்பதற்குத் தவறவில்லை

எறிகணைகள் சுட்டபடி

எமையழிக்கத் தயங்கவில்லை

இட்ட எல்லை தாண்டிவந்து

எமது நிலம் பறித்தவன்

வானில் நிதமும் பறந்துவந்து

குண்டு தூவி மகிழ்ந்தனன்

எனது வீட்டின் கோலத்தையா

நீ மிதித்து அழிக்கிறாய்

எனது வாசல் படியிலையா

குப்பை பார்த்துக் கொட்டுறாய்

ஒரு கன்னம் அடித்தவர்க்கு

மறு கன்னம் அறையென்பார்

கண்ணுக்குக் கண்ணெடுத்தால்

சரியான பதிலென்றார்

ஈழத் தாய் தன் நிலமும்

என் உறவாம் தமிழினமும்

வதைப்பவன் நீ கொலைஞன்

சிதைப்பேன் உன் வம்சம்.

வியூகம் வகுப்பதற்கும்

படையெடுத்து அழிப்பதற்கும்

எமக்கும் தெரியும்தான்

கணக்கும் புரியும்தான்

பெற்றெடுத்தீர் போர் மகவை

வளர்த்தெடுப்போம் நாம் அதனை

பட்டுணர மறுக்கின்றீர்

பாதகரே கேளுமிங்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.