Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் மாநகரில் நடைபெற்ற யேசுதாஸ் Golden Night தமிழர் விழாவா? தற்பெருமை விழாவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
28 SHARES
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
 
 

சென்ற சனிக்கிழமை 21 May பழைய மாணவர் சங்கம் ஒன்றால் ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி தெளிவுகள் இல்லாமையால் அந்த கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் தமிழ்வின் இணையத்தை தொடர்பு கொண்டிருந்தார். அவருடைய கேள்விகள் முறைப்படி அமைந்தமையால், அக்கேள்விகளை மக்களிடத்தே கொண்டு செல்வது ஒரு ஊடகத்தின் பொறுப்பு என்பதை அறிகிறோம். அதனால் அவருடைய கேள்விகளையும் கருத்துக்களையும் பிரசுக்கின்றோம்.

லண்டனில் உள்ள Hartley கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் யேசுதாஸ் Golden Night என்ற நிகழ்ச்சியை லண்டன் மாநகரில் இருக்கக் கூடிய ஒரு பிரமாண்டமான மண்டபத்தில் நடத்தி இருந்த்தது, இதுவே ஈழத் தமிழர்கள் மத்தியில் முதன் முறையாக இந்த மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி என்றும் அறிவித்திருந்தார்கள், இது பெருமைக்குரிய விடயம் தான்.

ஆனால், இந்த நிகழ்ச்சி உண்மையாகவே இலங்கையில் உள்ள Hartley கல்லூரியின் அபிவிருத்திக்காகத்தான் நடைபெற்றதா? அப்படியானால் ஏன் இவளவு பணச் செலவில் இந்த நிகழ்வை நடத்த வேண்டும்? விலை குறைந்த மண்டபத்திலும் இதே பிரமாண்டத்தை கொண்டு வந்து அதிக லாபத்தின் மூலம், அந்த நிதியை கல்லூரியின் அபிவிருத்திக் கொடுத்திருக்கலாம்!

Hartley கல்லூரி பழைய மாணவர் சங்கம் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது. பிரச்சார விளம்பரங்களில் Hartley கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினர் Darbar நிறுவனத்துடன் இணைந்து இந்நிகழ்வை நடாத்துவதாக எழுதப் பட்டிருந்த்தது, Darbar நிறுவனம் என்னவென்று எமக்கு தெரியாது, அதனால் நிகழ்ச்சி நடக்கும் வரை இது ஒரு இலங்கை கல்லூரியின் பழைய மாணவர்கள் தமிழர்களுக்காய் நடாத்தும் நிகழ்வாகத் தான் கருதப் பட்டிருந்தது, ஏனென்றால் பிரசுரங்கள் அனைத்தும் அப்படி தவறான வழிநடத்தலை தரும் வண்ணம் தான் இருந்தது.

நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் தான் அறிய வந்தோம், இது தமிழர்களுக்காக மட்டும் நடந்த நிகழ்வு போல் இருக்கவில்லை. அங்கே மலையாளம், கன்னட, ஹிந்தி போன்ற மொழிகளிலுள்ள பாடல்களையும் பாடகர் யேசுதாஸ் பாடியிருந்தார். இசைக்கு மொழி இல்லை, நாங்கள் அனைத்து விதமான பாடல்களையும் ரசிப்பவர்கள் தான், ஆனால் ஒரு சில பாடல்களை மாத்திரம் இந்த மொழிகளில் பாடியிருந்தால் பறவாயில்லை, ஏறக்குறைய 60 வீதமான பாடல்கள் ஏனைய மொழிகளில் பாடப்பட்டது பலரையும் மனம் வருந்த வைத்ததை அன்றைய நிகழ்வில் காணக் கூடியதாக இருந்தது.

அவருடைய பாடல் வல்லமைக்கு அனைத்து மொழிகளிலும் பாடுவது தவறில்லை, ஆனால் ஒரு தமிழ் நிகழ்வு எனும் செய்தியையும், Hartley கல்லூரியின் அபிவிருத்திக்காக நடக்கும் நிகழ்வு எனும் விடையத்தையும் சித்தரித்து, Hartley கல்லூரியின் நற்பெயரை பயன் படுத்தி, சுய லாபம் கருதி, லண்டன் வாழ் மக்களையும் Hartley கல்லூரயின் அபிவிருத்திக்கு உதவ வந்த பழைய மாணவர்களை இழிவு செய்ததாகவே இந்த நிகழ்வு நடந்திருந்த்தது. இந்த நிகழ்வை வேறு நிறுவனத்தின் பெயரில் நடத்தி இருந்தால் கூட பறவாயில்லை.

பன் மொழியில் பாடுவது பற்றி பாடகர் முன்வைத்த கோரிக்கை என்றாலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அதை சரியாக மக்களுக்கு அறிவிக்கவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகிறது.

இவற்றை வைத்து பார்க்கும் பொழுது அங்கிருந்தது போலவே, இங்கும் தமது தற்பெருமைக்கும் சுய கெளரவத்திற்கும், மற்றைய பழைய மாணவர் சங்கங்களை விட நாங்கள் பெரிதாக செய்திருக்கின்றோம் என்று சுய நன்மைக்குமாகவே இவர்கள் Hartley கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

தென் இந்திய தமிழ் கலைஞர்களை அழைத்து வந்து அவர்களுடைய அதிகமான கோரிக்கைகளை நிறைவேற்றும் தமிழ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், இப்படியான விடயங்களில் தெளிவாக இருப்பது சிறப்பாக இருக்கும்.

அதே சமயம் எவ்வளவு நிகழ்வுகள் தென் இந்திய தமிழ் கலைஞர்களுக்குகா ஒருங்கமைக்கப் படுகிறதோ அதே அளவு நிகழ்வுகளை இந்த நிறுவனங்கள் ஒரே மேடயில் இல்லாவிட்டாலும், வேறு நிகழ்ச்சியில் ஈழத் தமிழ் கலைஞர்களுக்கும், ஏனைய நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் கலைஞர்களுக்கும் வழங்குவது ஏற்றதாக இருக்கும்.


  • கருத்துக்கள உறவுகள்

நானும் போயிருந்தேன். ஜேசுதாஸ் இசைக் கச்சேரி  ஆரம்பிக்கும்போது தமிழ், மலையாளம், ஹிந்தி பேசுவோர் எத்தனை பேர் என்று கேட்டு அதன்படி அதிகம் தமிழில்தான் பாடினார். 60 வீதம் பிறமொழி என்று பேட்டி கொடுத்தவர் தமிழ் பாடல்களையும் அதற்குள் அடக்கிவிட்டார் போலிருக்கு. உண்மையில் மலையாளிகள்தான் விசனப்பட்டிருக்கவேண்டும். மலையாளத்தில் பாடச் சொல்லி வேண்டுகோள் விடுத்தும் தமிழர்கள் அதிகம் இருந்ததனால் தமிழில்தான் ஜேசுதாஸ் அதிகம் பாடினார்.

தமிழர்கள் குறைபட்டுக்கொண்டமாதிரி தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் கச்சேரியைக் கேட்ட திருப்தியுடனே வெளியேறினர்.

80% தமிழில்தான் பாடினார்........

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா விடுங்கப்பா லங்கசிறி தனது இணையத்தள ...............தை இங்கையும் காட்டுது. பிரபாகரனின் கவிதை என என்னத்தையோ வெட்டி ஒட்டியிருக்கு அதையும் லங்கசிறியின் அடிப்பொடிகள் இங்க கொண்டுவந்து வெட்டி ஒட்டுங்கோ. முடிஞ்சால் லண்டன் சிதறுது, வடதுருவத்தில ஓட்டை இவைகளையும் இணையுங்கோ யாழ் இணையத்தையும் யாழ்சிறி எனப் பெயர்மாத்திவிடுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.