Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு?

Featured Replies

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு?

tasmacsixhund.jpg

சென்னை: 6 வது முறையாகத் தமிழக முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா அமர்ந்தவுடன்,தேர்தல் நேரத்தில் அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணியைத் தொடங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தில் 2 மணி நேரத்தைக் குறைக்கவும், மொத்தமுள்ள 6826 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகளை மூடவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் இலவசத் திட்டங்களுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமே ஆதாரமாக இருக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில்,500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் தமிழக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,   

" தமிழகத்தில் 6 ஆயிரத்து 826டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள கடைகளின் மூலம் நாளொன்றுக்கு ரூ.30 ஆயிரம் தொடங்கி, நகர்ப்புறங்களில் உள்ள கடைகளில் அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதனால், டாஸ்மாக்கின் மூலம் ஓர் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக 12 மணிக்கு திறப்பதாலும், 500 கடைகளை மூடுவதாலும், அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. ஏனென்றால், டாஸ்மாக் கடைகளால் ஒரு நாளில் கிடைக்கும் வருவாயில், 5 சத வீதம் கூட காலை 10 முதல் 12 மணி வரை கிடைக்காது. மாலை நேரத்தில்தான்  விற்பனைதான் அதிகமாக இருக்கும்.

இதனால், அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையே இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன்படி பார்த்தால், ஓர் ஆண்டுக்கு 300 கோடி வரை மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும். இந்தத்  தொகை மூடப்படுகிற கடைகளின் வருவாயை பொறுத்து மாறுபடவும் செய்யும்" என்று தெரிவித்தனர்.

வருமான இழப்பு குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில், டாஸ்மாக் கடைகளை  மூடும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேலும் தொடரவேண்டும் என்றும்  வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளை  அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/64516-howmuch-govt-get-loss-from-500-liquor-shops.art

  • கருத்துக்கள உறவுகள்

இதனிடையே 12:00 மணிக்கு கடையைத் திறந்தபோது.. :D:

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, இசைக்கலைஞன் said:

இதனிடையே 12:00 மணிக்கு கடையைத் திறந்தபோது.. :D:

 

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தமக்கு வாக்குப் போட உருவாக்கியுள்ள வாக்களக் குடிமக்கள் இவை தான்.. (இப்ப சிங்களவனும் இதே யுக்தியை தான் எம்மவர்கள் மத்தியில் புகுத்திறான். எங்கட சம் சும் கும்பல் உட்பட பல அதனை மெளனமாக இருந்து ஆதரிக்கக் காரணம்.. இப்படி ஒரு கூட்டம் தமக்காகவும் உருவாகும் என்று... நிரந்தரமாக.). எப்படி உருப்படும் இந்த நாடும்.. இனமும். நாம் தமிழர் இயக்கங்கள் செய்ய வேண்டிய புரட்சி என்பது தொலைதூரப் பயணம் என்று மட்டும் விளங்குது. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

இதனிடையே 12:00 மணிக்கு கடையைத் திறந்தபோது.. :D:

 

இது கேரளாவில் நடந்த சம்பவம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் சாலையில் செல்லும் ஆட்டோக்கள் எல்லாம் கருப்பு நிறத்தில் உள்ளது. தமிழ் நாட்டில் எல்லாம் மஞ்சள் நிற ஆடோக்களே உள்ளன. எனவே ஒரு தவறான விடியோவை வைத்து தமிழனே தன்னை அவமான படுத்தி கொள்கிறான்.

இந்த விடியோவையும் பாருங்கள் கேரளாவிலிருந்து 

 

Edited by kanna123

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, kanna123 said:

இது கேரளாவில் நடந்த சம்பவம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் சாலையில் செல்லும் ஆட்டோக்கள் எல்லாம் கருப்பு நிறத்தில் உள்ளது. தமிழ் நாட்டில் எல்லாம் மஞ்சள் நிற ஆடோக்களே உள்ளன. எனவே ஒரு தவறான விடியோவை வைத்து தமிழனே தன்னை அவமான படுத்தி கொள்கிறான்.

இருக்கலாம். ஆனால் தமிழ்நாடு இந்த திறந்த சாராயத்தால் பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நான் படித்த காலங்களில் கள்ளச்சாராய சாவுகள் நிகழும். ஆனால் மாணவர் அளவில் சாராயம் குடித்து அழிந்துபோன நிகழ்வுகள் குறைவு. அடுத்த தலைமுறையாவது மதுவுக்கு அடிமையாகாத ஒன்றாக வளரவேண்டும் என்பதே அவா.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.