Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

6 வருடங்களுக்கு பின் செத்தவீடும், கிரிகைகளும்

Featured Replies

6 வருடங்களுக்கு பின் செத்தவீடும், கிரிகைகளும் – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:-

2016-0519 அன்று கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இருந்து இலக்கம் 105, ஆனந்தபுரம் மேற்கில் இருக்கின்ற நகுலேஸ்வரிக்கு அவரது தங்கையின் மகள் தொலைபேசியில் 'பெரியம்மா சதீஸின் படம் நெட்டில வந்திருக்கு கொஞ்சப் பேர் இறந்து கிடக்கிற படத்தில அவன்ர படமும் இருக்கு போல கிடக்கு ஒரு பாருங்கோ' என்று கூற பதறி அடித்துக்கொண்டு நகுலேஸ்வரி அம்பாள்குளம் விரைக்கின்றார்.

2009 ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்  யோகராசா சதீஸ்ரூபனை பார்த்ததாக பலர் நகுலேஸ்வரியிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் நகுலேஸ்வரியை 2009 ஆண்டு ஏப்ரல் மாதம் வலைஞர்மடத்தில்  மகன் சதீஸ்ரூபன்  சந்தித்து ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு தான் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்  செல்லப் போவதாக கூறிச் சென்றிருக்கின்றார். இதுவே தாய் தனது மகனை சந்தித்த இறுதிச் சந்தர்ப்பம்.

எனவே இந்த ஆறு ஆண்டுகளாக தனது மகன் காணாமல் போய்விட்டான் எங்கோ இருக்கின்றான் என்றோ ஒரு நாள் வருவான் என்ற நம்பிக்கையுடன்  காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள், பதிவுகள், போராட்டங்கள்  என எல்லாவற்றிலும் கலந்துகொண்டு மகனின் நினைவுகளுடன் அவன் திரும்பி வருவான் என்ற ஏக்கத்துடன் காத்திருந்தவருக்கு அவரது பெறா மகளின் தொலைபேசி அழைப்பு முற்றிப்புள்ளி வைத்திருக்கிறது.

அம்பாள்குளம் விரைந்த நகுலேஸ்வரியிடம் இணையத்தளத்தில் முள்ளிவாய்க்கால் ஆறாம் ஆண்டு நிறைவுக்கு பதிவேற்றப்பட்டிருந்த  படம் காட்டப்படுகிறது, அந்தப்படத்தில் ஆறு நபர்களின் இறந்த உடல்கள் அடுக்கப்பட்டிருக்கிறது அதில் நடுவில் உள்ள தனது மகனை தாய் அடையாளம் காண்கின்றார்.

இப்பொழுது இலக்கம் 105,ஆனந்தபுரம மேற்கில் அழுகுரல், தகவல் இப்பொழுது உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசிகள் மிக வேகமாக எடுத்துச் செல்கின்றன. உறவினர்கள்,அயலவர்கள் என பலரும் வருகின்றார்கள் துக்கம் விசாரிக்கின்றார்கள் சேர்ந்து அழுகின்றார்கள், 

யோகராசா சதீஸ்ரூபனின்  படம் வீட்டின் முன் அறையில் பெரிதாக்கப்பட்டு வைக்கப்பட்டடு இருக்கிறது.

ஏழு வருடங்களுக்கு பின் கடந்த 19-05-2016 அன்று இறந்தவீடு நடக்கிறது பேச்சில் வழக்கில் சொன்னால் செத்தவீடு நடக்கிறது கிரிகைகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்வும் அதனை தொடர்ந்து கடந்த புதன் கிழமை 25-05-2016 எட்டாம் நாள் நிகழ்வு (எட்டுச்செலவு) இடம்பெற்றது.

1987 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பிறந்த யோகராசா சதீஸ்ரூபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் வழங்கல் பகுதியில் சாரதியாக சம்பளத்திற்கு பணியாற்றியிருந்தார் என  தாயரால் தெரிவிக்கப்படுகிறது. நகுலேஸ்வரியின் கணவர் ஆதாவது சதீஸ்ரூபனின் தந்தையும்  ஒரு சாரதி என்றும் அவரும் 2008 ஆம் ஆண்டு கொன்வேயில் ஓமந்தை நோக்கி   பாரவூர்தியில்  சென்ற போது செல் தாக்குதலில் இறந்து விட்டாதாக நகுலேஸ்வரி குறிப்பிட்டார்.

யோகராசா நகுலேஸ்வரி ஒரு வெறுமையாய் காணப்படுகிறார். இருந்த ஒரு நம்பிகையும் இல்லை என்று ஆகிவிட்டது,  

வன்னியில் இவ்வாறு அடுக்கப்பட்டிருக்கும் இறந்த உடல்களை கொண்ட புகைப்படங்களில் தங்களின்  பிள்ளைகளை தேடும் பெற்றோர்களும், கணவர்களை தேடும் மனைவிமாரும் அதிகமதிகம்  காணப்படுகின்றனர்.

இணையத்தளம் பற்றி தெரியாத இன்னும் பல நூற்றுக்கணக்கான காணமல்  போனவர்களின் பெற்றோர்கள் கிராமங்களில் உள்ளனர். இணையத் தளங்களிலும் இன்னும் ஏராளமான  இறந்தவர்களின் படங்களும் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது.


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:-

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132570/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.