Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த 32 விளம்பரங்களையும் அதிர்ச்சி தகவல்களையும் பார்த்தால் ஒரு வேளை புகைப்பதை விட்டு விடுவீர்கள்

Featured Replies

இந்த 32 விளம்பரங்களையும் அதிர்ச்சி தகவல்களையும் பார்த்தால் ஒரு வேளை புகைப்பதை விட்டு விடுவீர்கள்

 

உலக சுகா­தார ஸ்தாப­னத்­தினால் வரு­டாந்தம் மே 31ஆம் திகதி சர்­வ­தேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. புகைத்தல் பாவ­னையை கட்­டுக்­கோப்­பிற்குள் கொண்டு வரு­வ­தனை நோக்­க­மாகக் கொண்டு உலக சுகா­தார ஸ்தாப­ன­மா­னது, வரு­டாந்தம் ஒரு தொனிப் பொருளை முன் வைத்து மக்­களை விழிப்­பு­ணர்வூட்­டு­வது குறிப்­பி­டத்­தக்­கது. அந்த வகையில் இம்­முறை தொனிப்­பொ­ரு­ளாக உரு­வ­மற்ற சிகரட் பெட்­டி­களை அமுல்­ப­டுத்தல் அமைந்­துள்­ளது. (எந்த வித விளம்­ப­ரங்­க­ளு­மில்­லாத மங்­க­லான நிறத்தில் அமைக்­கப்­பட்ட சிகரட் பெட்டி), அவுஸ்­தி­ரே­லியா, அயர்­லாந்து போன்ற நாடுகள் ஏற்­க­னவே இதனை நடை­முறைப் படுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.world-no-tobacco-day-2.jpg

இன்றைய தினத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்டுரைகளும் புகைப்படங்களும், சுவரொட்டிகளும் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் கீழே பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் அதிர்ச்சி தகவல்களை பார்வையிடும் போது ஒரு வேளை நீங்கள் புகைப்பிடிப்பதை இன்றே விட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கொடிய நோய்

இன்றைய நவீன உலகில் நாடு, மொழி, இன, மத பாகுபாடின்றி ஆண்கள், பெண்கள் என அனைவரையும் வாட்டி வதைக்கும் மிகப் பெரியதொரு கொடிய நோயாக புகையிலை பாவனை காணப்படுகின்றது.

 8 விநாடிகளில் உலகில் ஒருவர்

புகையிலை பாவனையால் ஒவ்வொரு 8 விநாடிகளில் உலகில் ஒருவரின் உயிரை திறக்கின்றார் என்பது பலரும் அறியாத உண்மையாகும்.

தொற்று நோய் அல்லாத இதர நோய்களில் முதலிடத்தை வகிக்கிறது இந்த ‘புகையிலை’. 0bKQmQC.jpg

மனிதர்களுக்கு புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்க எளிதான வழியாக இந்த புகையிலை மாறியுள்ளது. 

 ஆனால், அதன் விபரீதங்களை தெரிந்து கொள்ளவோ, புகையிலையை ஏன் ஒழிக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவோ நாம் தயாராக இல்லை. 

“புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைக்க கடந்த 1987ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

5 நிமிடங்களை இழக்கிறான்

ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும் மனிதன் தன் வாழ்நாளில் 5 நிமிடங்களை இழக்கிறான். 

அதேபோல் ஒவ்வொரு 8 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். 0YhpX4z.jpg

ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலைகள் மற்றும் சிகரெட் பாவனையால் இறக்கின்றனர். 

2030 க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. 

சிகரெட்டுகளில் 4000 க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்களும், புற்றுநோயை உருவாக்கும் 60 ரசாயன பொருட்களும் அடங்கியுள்ளன. 

மேலும் மென்று சுவைக்கக்கூடிய புகையிலைகளும் ஆபத்தை உருவாக்குகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் ஆஸ்துமா, காசநோய் நுரையீரல் புற்றுநோய் உள்பட பல வியாதிகள் ஏற்படுகிறன.1lWFIQb.jpg

அதேபோல் பெண்களுக்கு குழந்தை கருத்தரிப்பு குறையும். தானாகவே கருச்சிதைவுகள் ஏற்படலாம். கர்பப்பை வாய் புற்றுநோய்கள் ஏற்படும்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிப்பு

புகை பிடித்தவர் வெளியிடும் புகையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 

புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் சகல விதமான நோய்களும் இவர்களுக்கு ஏற்படும்.

 புகையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு நம் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களை அழித்து விடுகிறது. அதனால் இரத்தம் ஒக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை இழந்துவிடுகிறது.

 இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகைப்பதனால் நரம்பு மண்டலம் செயற்கையாக தூண்டப்படுகிறது. 

இதன் விளைவாக அதன் இயற்கையான தூண்டல் சக்தியை இழக்கிறது. எனவே புகை பிடிக்காத நேரத்தில் மிக மந்தமாக உணருவோம். விழிப்புணர்வு, ஞாபக சக்தி குறைந்து விடும். 4gl9uSA.jpg

எனவே  புகையிலையை நாடி செல்வது மேலும் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கபட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்படலாம். புகைப்பது நம் நரம்பு சம்பந்தமான செயல் என்பதால் அது சுரப்பிகளை பாதிக்கிறது.

ஆண்கள் ஆண்மையை இழக்க நேரிடலாம்

 இதன் மூலம், ஆண்கள் ஆண்மையை இழக்க நேரிடலாம். புகைப் பழக்கத்தை கைவிட்டால் சுகமாக இருப்பதையும், உணவு சுவையாக இருப்பதையும் உணர முடியும்.

 புகைப்பழக்கத்தை கைவிட்டபிறகு உடலில் இருந்து நிகோட்டின், கார்பன் மொனாக்சைடு போன்றவை வெளியேறும். 

இதைதொடர்ந்து உடலின் செயல்பாடுகள் எளிதாகும். மேலும் நுரையீரல்களுக்குள் உள்ளே காற்று அதிக அளவில் செல்லும். நுரையீரல்கள் அதிக திறனுடன் வேலை செய்யும். உள்ளிருக்கும் சளியை வெளியே உந்தித் தள்ள முடியும். 2-smoking-advertisement-by-ayalmeir.jpg

உடலின் கை, கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் நன்கு ஏற்படும். தொடர் புகைப்பழக்கம் உள்ளவராக இருந்தால் கூட இருதய நோய்கள் தாக்கும் அபாயம் பாதியாக குறைந்துவிடும். 

நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயம் பாதியாகக் குறைந்துவிடும். 

பல்வேறு இடங்களில் மறைமுகமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடத்துகொண்டேதான் இருக்கிறது. புகையிலையை பல்வேறு வகைகளில் பயன்படுத்தும் கொடிய பழக்கத்தில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கவும், அந்த பழக்கத்தை யாரும் புதிதாக கற்றுக்கொள்ளாதபடி அரசாங்கங்கள் இன்னும் தீவிர நடவடிக்கை எடுத்து மனித சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும். 

இதுவே இந்த தினத்தில் நம் சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாகும். 4nByOLC.jpg

 

சர்­வ­தேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்­டிக்கப் படு­வதன் முக்­கி­யத்­துவம்

இலங்­கையில் 2013ஆம் ஆண்டு கணிப்­பின்­படி டெங்கு நோயினால் மர­ணித்­தோரின் தொகை 89, எயிட்ஸ் நோயினால் 29 பேர் மர­ணித்­தனர், வீதி விபத்­தினால் அதே ஆண்டு ஜன­வரி மாதம் தொடக்கம் ஜுன் மாதம் வரை மர­ணித்­தோரின் தொகை 500 ஆகும். ஆனால் ஒவ்­வொரு வரு­டமும் சிகரட் புகைப்­ப­தனால் இலங்­கையில் நாளொன்­றிற்கு 60 பேர் மர­ணிக்­கின்­றனர். அதா­வது சிகரட் புகைப்­ப­தனால் வரு­டாந்தம் மர­ணிப்­போரின் தொகை சரா­ச­ரி­யாக 20000 பேர் ஆகும். சர்­வ­தேச ரீதி­யாக வரு­டாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைத்­த­லினால் உயி­ரி­ழக்­கின்­றனர். மேலும் இரண்டாம் நிலை புகைத்­தலின் கார­ண­மாக (புகைக்­காதோர்) 6 இலட்சம் பேர் உயி­ரி­ழக்­கின்­றனர். சிகரட் புகைப்­ப­வர்­களில் இரு­வரில் ஒருவர் மர­ணிப்­ப­தற்கு நேரடி கார­ண­மாக புகைத்தல் அமை­கின்­றது. அதா­வது இருவர் சிகரட் புகைத்தால் அதில் ஒருவர் மர­ணிப்­ப­தற்குப் பிர­தான கார­ண­மாக சிகரட் பாவனை அமை­கின்­றது.

ஆசிய நாடு­களில் தொற்­றாத நோய்கள் அதி­க­ரித்து வரு­கின்­றமை சுகா­தா­ரத்­திற்குப் பெரும் சவா­லாகும். தொற்­றாத நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்கு பிர­தா­ன­மாக 04 கார­ணிகள் இனங்­காணப் பட்­டுள்­ளன, அதில் சிகரட் பாவனை முதற் கார­ணி­யாக அமைந்­துள்­ளமை குறிப்­பிடத் தக்­கது. அதா­வது புற்று நோய், மார­டைப்பு, பாரி­ச­வாதம், சுவாச நோய்கள், குருதி அழுத்தம் போன்ற அனைத்து வித­மான தொற்­றாத நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்கும் பிர­தான கார­ண­மாக அமை­வது சிகரட் பாவனை ஆகும்.5-best-anti-smoking-ads.jpg

இலங்கை போன்று அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­களில் அதி­க­மானோர் கஷ்­டப்­பட்டு உழைக்கும் தனது சம்­ப­ளத்தில் பெரும் பகு­தியை சிகரட் புகைப்­ப­தற்கு செல­வ­ழிக்­கின்­றனர். இதனால் தனி மனித பொரு­ளா­தார பிரச்­சினை ஏற்­ப­டு­வது மட்­டு­மின்றி நாட்டின் பொரு­ளா­தா­ரமும் பாதிப்­ப­டை­கின்­றது. சிகரட் கம்­ப­னியின் 92வீத மான பங்­குகள் பிரித்­தா­னியாவுக்கு அமெ­ரிக்­கா­வுக்கு சொந்­த­மானது. சிகரட் புகைப்­ப­தனால் ஒரு நாளைக்கு சிகரட் கம்­பனி 29 கோடி ரூபா இலாபம் ஈட்­டு­கின்­றது, அதில் 92வீதமான தொகை பிரித்­தா­னியாவுக்கும், அமெ­ரிக்­கா­வுக்கும் சென்­ற­டை­கின்ற அதே வேளை இலங்கை அர­சாங்கம் வரு­டத்­திற்கு 222 பில்­லியன் சுகா­தாரத் துறைக்கு செல­வ­ழிக்­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. 

சிகரட் புகைப்­ப­வ­ருக்கு மட்­டு­மின்றி கர்ப்­பிணித் தாய்­மார்கள், பிள்­ளைகள் என சிகரட் புகைக்­காத பலரும் பெரி­த­ளவில் இதனால் பாதிப்­ப­டை­கின்­றனர்.5kiPB1i.jpg

நாடு என்­கின்ற ரீதியில் சிகரட் பாவ­னையை குறைக்கும் நோக்­கிலும்,மேற்­கு­றிப்­பிட்ட பாதிப்­புக்­களை குறைப்­ப­தற்­கா­கவும் மக்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்வூட்டும் நோக்­கிலும் சர்­வ­தேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்­டிக்கப் படு­கின்­றது.

இலங்­கையில் சிகரட் பாவனை 

மது­பானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலை­யத்­தினால் 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியி­டப்­பட்ட ஆய்­வ­றிக்­கையின் படி 15 வய­திற்கு மேற்­பட்ட ஆண்­களில் 31வீதமானோர் சிகரட் புகைக்­கின்­றனர். 

தேசிய அபா­ய­கர ஒளட­தங்கள் கட்­டுப்­பாட்டு சபை­யினால் வெளி­யி­டப்­பட்ட வரு­டாந்த அறிக்­கைக்­கேற்ப 2014ஆம் ஆண்டில் 4 பில்­லியன் சிக­ரட்­டுக்கள் உற்­பத்தி செய்யப் பட்­டுள்­ளன.

கடந்த 10 வரு­டத்­துடன் ஒப்­பி­டு­கையில் 14வீதமான வீழ்ச்சி காணப்­ப­டு­வ­துடன், 25 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களின் சிகரட் பாவனை 35.5வீதமாக இருக்கும் அதே வேளை, 15 தொடக்கம் 24 வய­திற்­குட்­பட்ட இளை­ஞர்­களின் சிகரட் பாவனை 25.1வீதமாகவும் காணப்­ப­டு­கி­றது. அதா­வது இளை­ஞர்­களின் பாவனை குறைந்து வரு­வ­தா­னது மகிழ்ச்­சி­ய­டையக் கூடிய ஒரு விட­ய­மாகும்.6Rbcjof.jpg

கம்­ப­னி­களின் நேரடித் தந்­தி­ரோ­பா­யங்கள்

இருவர் சிகரட் புகைத்தால் ஒருவர் மர­ணிக்க நேரடி கார­ண­மாக அமை­வது சிகரட் பாவ­னை­யாகும். ஆனால் சிகரட் உற்­பத்தி செய்யும் கம்­ப­னி­களின் பிர­தான நோக்­க­மாக அமை­வது அவர்­க­ளு­டைய விற்­ப­னையை மேம்­ப­டுத்தி இலா­பத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­துமே ஆகும். இதற்­காக இவர்கள் பல்­வேறு தந்­தி­ரோ­பா­யங்­களை மேற் கொள்­வது குறிப்­பி­டத்­தக்­கது.

அழ­கான இளைஞர், யுவ­தி­களைக் கொண்டு பொது இடங்­களில் சிகரட் புகைக்க வைக்­கின்­றனர். இதன் பிர­தான நோக்கம் இளை­ஞர்­களை ஈர்ப்­ப­தாகும்.

சிகரட் விற்­பனை செய்யும் கடை­களில் மிகக் கவர்ச்­சி­க­ர­மான முறையில் சிகரட் பெட்­டி­களைக் காட்சிப் படுத்தி வைத்­தி­ருத்தல், மேலும் கூடு­த­லாக சிகரட் விற்­பனை செய்யும் கடை­க­ளுக்கு அபிே‘கம் என்ற குறி­யீட்டை வழங்கி அவர்­க­ளுக்கு சன்­மா­னங்கள் கொடுத்து ஊக்­கு­விக்கப் படு­கின்­றன.5poh2Kw.jpg

மேலும் சிகரட் விற்­பனை செய்யும் கடை­களில் 21 வய­திற்கு குறைந்­த­வர்­க­ளுக்கு சிகரட் விற்­பனை தடை என்ற வாச­கத்­தினை காட்­சிப்­ப­டுத்தி சிறு­வர்­களை ஏமாற்ற முயற்­சிக்­கின்­றனர்.

அனு­ச­ர­ணை  வழங்­குதல்

சிகரட் கம்­ப­னி­யா­னது பல பொது நிகழ்ச்­சி­க­ளுக்கு தங்­களின் அனு­ச­ரணை­களை வழங்கி நன்­ம­திப்பை ஏற்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிப்­ப­துடன் குறிப்­பிட்ட நிகழ்ச்­சி­க­ளி­னூ­டாக விளம்­ப­ரங்­க­ளையும் மேற்­கொள்­கின்­றது.

CSR செயற்­றிட்­டங்­களை மேற்­கொள்­ளுதல் 

2015ஆம் ஆண்டு கிளி­நொச்சி மாவட்­டத்தில் நிலை­யான விவ­சாய அபி­வி­ருத்தி செயற்­றிட்­டத்தை (Sastainable Agriculture Development Project SADP) நடை­முறைப்படுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பிடத் தக்­கது. 8DP1LFx.jpg

திரைப்­ப­டங்கள் 

இளை­ஞர்கள் விரும்பிப் பார்க்­கின்ற திரைப்­ப­டங்­களில் நடிக்கும் நடிகர் நடி­கை­க­ளுக்கு பணம் கொடுத்து பாடல், வசனம், காட்சி, நகைச்­சுவை போன்ற அனைத்து அம்­சங்­க­ளிலும் சிகரட் விளம்­ப­ரங்­களை திணித்­தி­ருத்தல்.

  மது­பானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலை­ய­மா­னது 2015 ஜுன் மாதம் தொடக்கம் செப்­டெம்பர் மாதம் வரை­யி­லான காலப் பகு­தியில் இலங்­கையில் திரை­யி­டப்­பட்ட 18 தமிழ்த் திரைப்­ப­டங்­களில் மேற்­கொண்ட   ஆய்­வுக்­க­மைய மொத்­த­மாக 01 மணித்­தி­யா­லம் 15 நிமி­டங்கள் சிகரட் விளம்­ப­ரங்கள் திரைப்­ப­டங்­களில் உள்­ள­டக்கப்பட்­டி­ருந்­தமைக் குறிப்­பி­டத்­தக்­கது.

ஊடக விளம்­ப­ரங்கள்

பத்­தி­ரிகை, வானொலி, தொலைக்­காட்சி, இணை­யத்­த­ளங்கள் போன்ற அனைத்து ஊட­கங்­க­ளையும் பயன்­ப­டுத்தி மிக நுட்­ப­மாக தங்­க­ளு­டைய விளம்­ப­ரங்­களை மேற்­கொள்­ளுதல்.8tN5DRF.jpg

போலி­யான ஆய்­வு­களை மேற்­கொள்ளல் 

பொது இடங்­களில் இளை­ஞர்கள் மத்­தியில் சிகரட் பாவ­னையை தூண்­டு­கின்ற விதத்தில் வினாக்­களை கேட்டு சிகரட் பாவ­னையை தூண்ட முயற்­சித்தல். 

சிகரட் விலை அதி­க­ரிப்பைக் கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருத்தல்

கொழும்பு பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் கலா­நிதி நிஷாந்த டி மெல் 2010ஆம் ஆண்டில் மேற்­கொண்ட ஆய்­வுக்­கேற்ப அரிசி, மா, சீனி, தேங்காய் போன்ற பொருட்­க­ளுக்கு விலை­யேற்றம் நடந்­தாற்போல் சிக­ரட்­டிற்­கான விலை அதி­க­ரிப்பு ஏற்­ப­ட­வில்லை. மேலும் சிக­ரட்டின் விலையின் 70வீத வரி­யாகக் காணப்­ப­டு­வதால் அர­சாங்­கத்­திற்கு கொடுக்க வேண்­டிய வரித் தொகையும் இழக்கப்பட்­டி­ருக்­கின்­றன, அதா­வ­து கடந்த 10 வரு­டங்­களில் 100 பில்­லியன் ரூபா அர­சாங்கம் இழந்­தி­ருக்­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது, ஆய்வின் படி 2010ஆம் ஆண்டில் சிகரட் ஒன்றின் விலை ரூபா 45.00 ஆக இருந்­தி­ருக்க வேண்டும் ஆனால் 2016ஆம் ஆண்­டிலும் சிகரட் ஒன்றின் விலை ரூபா 35.00 ஆகவே இருக்­கின்­றது. 

இந்­நி­லையில் இம்­முறை வரி அதி­க­ரிப்பின் போதும் சிக­ரட்­டிற்­கான வரி அதி­க­ரிக்கப் பட­வில்லை என்­பதும் சிந்­திக்க வேண்­டிய ஒரு விட­ய­மாகும்.

புகை­யிலை உற்­பத்­தி­யா­ளர்­களை ஊக்கப் படுத்தல் 

இலங்­கையின் வட, கிழக்கு பகுதி உட்­பட, மொன­ரா­கலை, மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களில் சூழ­லுக்குப் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்ற புகை­யிலை உற்­பத்­தியை ஊக்­கு­வித்து வரு­கின்­றனர். 

2011ஆம் ஆண்டு சப்­ர­க­முவ பல்­கலைக் கழ­கத்தின் பொரு­ளியற் துறை­யி­னரால் ஹங்­கு­ராங்­கெத்த, வலப்­பனை, புத்­தளம் ஆகிய மாவட்­டங்கள் உட்­பட ஊவா மாகா­ணத்­திலும் மேற்­கொள்­ளப்­பட்ட புகை­யிலை உற்­பத்தி தொடர்­பான ஆய்வின் போது சில கணிப்­புக்கள் பெறப்­பட்­டுள்­ளன.

ஏனைய பயிர்ச்­செய்­கையை விட புகை­யிலைப் பயிர்ச் செய்­கை­க்­கான செலவு அதி கம், கூடு­த­லான இர­சா­யன வகை­க­ளையும், பூச்சிக் கொல்­லி­க­ளையும் பாவிக்க வேண்டும்.

புகை­யிலை உற்­பத்தி செய்­யப்­பட்ட மண் ணில் ஏனைய பயிர்ச்­செய்கை மேற்­கொள்­வது கடினம்.

 புகை­யிலை உற்­பத்­தி­யி­லி­ருந்து ஏனைய பயிர்ச் செய்­கைக்கு மாறிய கமக்­கா­ரர்கள் நிலை­யா­னதும், திருப்­தி­யா­ன­து­மான இலா­பத்தை ஈட்­டி­யி­ருந்­தனர். அத்­தோடு ஏனைய பயிர்­க­ளுக்கு சந்­தையில் பொது இடமும் பேரம் பேரும் வாய்ப்பும் கிடைத்­த­தாக கமக்­கா­ரர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

 புகை­யிலை உற்­பத்­தி­யி­லி­ருந்து ஏனைய உற்­பத்­தி­க­ளுக்கு மாறிய கமக்­கா­ரர்­களின் குடும்ப நிலை மற்றும் பிள்­ளை­களின் கல்வி நிலை­யிலும் அபி­வி­ருத்தி ஏற்­பட்­டி­ருந்­தது.

ஆயினும் இலங்­கையின் தற்­போ­தைய ஜனா­தி­பதி 2020ஆம் ஆண்டு புகை­யிலை உற்­­பத்­தியை முற்­றாக தடை செய்­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.சிகரட் பாவ­னையை தடுக்கும் முறைகள் 

சிகரட் பாவ­னையை தடுப்­ப­தற்கு பிர­தான மூன்று முறைகள் காணப்­ப­டு­கின்­றன.

01. பயன் தகு கொள்­கை­களை உரு­வாக்­கு தல் (Effective policies)

02. பழகும் முன் காத்தல் (Prevention)  

03. உள­வியல் சிகிச்சை முறை (Counseling) 

பயன் தகு கொள்­கை­களை உரு­வாக்­குதல் (Effective policies)

சிகரட் பாவ­னையைக் கட்டுப் படுத்­து­வ­தற்கு சட்ட ரீதி­யான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவே இம்­முறை பாவிக்கப் படு­கின்­றது. 

சரி­யான முறையில் சிக­ரட்டின் விலையை அதி­க­ரித்தல் மற்றும் வரி அற­வீடு செய்தல்.

சிக­ரட்­டிற்­கான வரியை உரிய முறையில் அதி­க­ரித்தல்

சிகரட் பெட்­டி­களில் எச்­ச­ரிக்கை படங்­களை பொறித்தல் மற்றும் சிகரட் பெட்­டி­களின் கவர்ச்­சியைக் குறைக்க உரு­வ­மற்ற, விளம்­ப­ர­மற்ற சிகரட் பெட்­டி­களை அமு­லாக்கல் (Plain packaging)

சிக­ரட்டை கொள்­வ­னவு செய்யக் கூடிய வய­தெல்­லையை தீர்­மா­னித்தல்.  

பழகும் முன் காத்தல்  (Prevention)

சிகரட் பாவ­னையை பழ­கு­வ­தற்கு முன்­னரே அது பற்­றிய விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்தி தடுத்­த­லா­னது மிகப் பயன் கூடி­யதும், இல­கு­வா­ன­து­மான முறை­யாகும்.

சிகரட் பாவ­னை­யினால் ஏற்­படும் இனங்­காணக் கூடிய தாக்­கங்­களை சிறுவர், இளை­ஞர்­க­ளுக்கு புரி­ய­வைத்தல். 

இளை­ஞர்கள், சிறு­வர்­களை ஏமாற்­று­வ­தற்கு கம்­ப­னி­க­ளினால் மேற்­கொள்ளப் படு­கின்ற தந்­தி­ரோ­பா­யங்கள் தொடர்­பாக தெரியப் படுத்தல். அவ்­வா­றான விளம்­ப­ரங்­க­ளுக்கு ஏமா­றா­ம­லி­ருப்­ப­தற்­கு­ரிய உத்­தி­களை தெளிவுபடுத்தி வழி­காட்­டுதல்.

சிகரட் பாவனை தொடர்­பான மூட­நம்­பிக்­கை­க­ளையும் அதன் உண்­மை­க­ளையும் அறியப் படுத்தல்.

உள­வியல் சிகிச்சை முறை (Counseling) 

சிக­ரட்டை தற்­போது பாவித்து வரு­ப­வர்­களை அதி­லி­ருந்து விடு­பட வைப்­ப­தற்­காக உள­வியல் சிகிச்சை முறை பாவிக்கப் படுகின்றது.

உள நல வைத்திய ஆலோசனையின் படி பாவனையாளர்கள் அதிலிருந்து விடுபட பின்வரும் விடயங்களை மேற் கொள்ளலாம். 

01. சிகரட் பாவனையை நிறுத்துவதற்கான நாளொன்றை தீர்மானிக்கவும்

02. இது தொடர்பில் ஏனையோருடன் கலந்துரையாடவும் (மனைவியிடம், பிள்ளை களிடம், நண்பர்களுடன், அயலவர் களுடன்)

03.    இறுதியில் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி சிந்திக்கவும் (சிகரட் பாவனையை நிறுத்தியவுடன் நண்பர்களி டமிருந்து கிடைக் கவிருக்கும் தாக்கங்கள், விேசட தினங்களின் போது நீங்கள் நடந்துக் கொள்ள வேண்டிய முறை பற்றி திட்டமிடுங்கள்

04. சிகரட் பாவனையை நிறுத்த வேண்டு மென்ற தீர்மானத்தை முறியடிக்கவும் சிகரட் பாவனையை தூண்டுவதற்கும் காத்திருக்கும் குழுவிற்கு பதில் கூற தயாராகுங்கள் (உதாரணமாக நான் சிகரட் புகைப்பதை நிறுத்திவிட்டேன் என்னை பலவந்தப் படுத்த வேண்டாம் எனக் கூறுங்கள்)

05. சிகரட் பாவனையை நிறுத்திய பின்ன ரும் புகைக்க வேண்டுமென்று மீண்டும் மீண் டும் வரும் ஆசை பற்றியும் சிந்தியுங்கள் (சிகரட் புகைக் காமல் இருப்பது உங்களுக்கு பெரும் அசௌகரியத்தை தருமானால் அதனைப் பற்றி அதிருப்தியாக உணராதீர்கள், மீண்டும் நிறுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்)

06. சிகரட்டிலிருந்து விடுதலையான பின்னருள்ள சந்தோஷத்தை அனுபவியுங்கள் அது பற்றி பேசுங்கள்.

http://www.virakesari.lk/article/6986

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.