Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கு வைக்கப்படும் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கு வைக்கப்படும் மக்கள்

புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் தினமும் அப்பாவித் தமிழர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர். விமானத் தாக்குதல், ஷெல் தாக்குதல், துப்பாக்கிச்சூடு, ஆட்கடத்தல், காணாமல் போதலென இது தொடர் கதையாகிவிட்டது.

வடக்கு - கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில் அப்பகுதிகளிலிருந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வெளியேறிவிட்டது. யுத்தம் முடிவுக்கு வரும்வரை அவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்குத் திரும்பும் சாத்தியமில்லை. வெறுமனே எழுதப்பட்டதொரு ஆவணமாக மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கையிருந்த நிலையில் வடக்கு - கிழக்கிலிருந்து கண்காணிப்புக் குழு விலகியதன் மூலம் நாட்டில் போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும், முழு அளவிலான தாக்குதல்களை நடத்திவரும் அரசோ, கண்காணிப்புக் குழு வடக்கு - கிழக்கிலிருந்து வெளியேறியதால் கடும் விசனமடைந்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருப்பதாகவும் அதனை சர்வதேச கண்காணிப்பாளர்கள் மேற்பார்வை செய்வதாகவும் வெளியுலகுக்குக் காட்ட அரசு முற்படும் நிலையிலேயே கண்காணிப்புக் குழுவினரது வெளியேற்றம் அரசுக்கு நெருக்கடியாகியுள்ளது.

அதேநேரம், வடக்கு - கிழக்கு நிலைமைகள் மிகவும் மோசமடைந்து எவ்வேளையிலும் பெரும் போர் வெடிக்கும் சூழ்நிலையில் அதற்குள் தாங்கள் சிக்கிவிடுவோமென கண்காணிப்புக்குழு அஞ்சுகிறது. அத்துடன், கண்காணிப்புக் குழுவின் இந்த வெளியேற்றமானது, போர் நிறுத்த உடன்படிக்கை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

வடக்கு - கிழக்கு இணைந்திருந்த நிலையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடானது, வடக்கு - கிழக்கு பிரிப்பின் மூலம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. இவ்விரு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதன் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையே ஆட்டம் கண்ட நிலையில், இனி இந்த உடன்பாட்டின் மூலம் சமாதானச் சூழ்நிலையை உருவாக்கவோ அல்லது சமாதான முயற்சிகளை மேற்கொள்ளவோ முடியாதென்பதை கண்காணிப்புக் குழுவும் உணர்ந்துள்ளது.

வடக்கு - கிழக்கில் கண்காணிப்புக் குழு இருந்த போதே மோசமடைந்திருந்த யுத்த நிலைமை தற்போது மேலும் மோசமடைந்துள்ளது. ஆனாலும், கண்காணிப்புக் குழுவின் வெளியேற்றமானது புலிகளுக்கு வாய்ப்பாகி விடுமென்றும் படையணிகளுக்கு புலிகள் இனிமேல் சிறுவர்களை பலவந்தமாகச் சேர்ப்பது அதிகரிக்கப் போகின்றதெனவும் அரசு கூறிக் கொண்டு வடக்கு - கிழக்கில் விமானத் தாக்குதல் மூலம் பல சிறுவர்களை கொன்றொழித்துள்ளது.

விமானப் படையினரால் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது இன்றும் நேற்றும் நடைபெற்ற நிகழ்வுகளல்ல. ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை விமானப் படையினர் கொன்றுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் இந்த வான் வழித் தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு விமானத் தாக்குதலின் போதும் புலிகளின் இலக்குகளே தாக்கப்பட்டதாக அரசும் படைத்தரப்பும் கூறி முழு உலகையும் ஏமாற்றியே வருகின்றன. மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் முற்று முழுதாக அப்பாவிப் பொதுமக்களே, அதிலும் பல சிறுவர்கள் கொல்லப்பட்ட போதும் அப்பட்டமாக பொய்கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறது.

ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அது கடற்புலிகளின் முக்கிய தளம் என்பது கண்டறியப்பட்ட பின்னர் விமானப் படையினர் துல்லியமாக மேற்கொண்ட தாக்குதலில் கடற்புலிகளின் தளம் அழிக்கப்பட்டதாக அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. ஆனால், கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவிப் பொதுமக்களென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து எல்லாப் பக்கங்களிலும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் கூட புலிகளின் முகாம்கள் எதுவுமில்லையென, இந்தக் கொடூரத் தாக்குதலை நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் ஆயர் வண.இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். அத்துடன், இது குறித்து ஜனாதிபதிக்கு விரிவான கடிதமொன்றை அனுப்பியும், இதுவரை அதுகுறித்து அரசு மௌனம் சாதிப்பதுடன் கடற்புலிகளின் தளமே தாக்குதலுக்கிலக்கானதாகவும் பொதுமக்களின் குடியிருப்புகள் தாக்கப்படவில்லையென்றும் கூறி வருகின்றது.

இதைவிட, இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படவில்லையென்றும் படுகாயமடைந்தவர்கள் மன்னார் ஆஸ்பத்திரிக்கோ அல்லது அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கோ கொண்டு செல்லப்படாது ஏன் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்களென்றும் கேள்வியெழுப்பும் அரசு, அதற்காகக் கூறிய காரணங்களை சர்வதேச சமூகமும் ஏற்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத் தாக்குதல் நடைபெற்ற இலுப்பைக்கடவை படகுத்துறை மீனவக் கிராமத்திலிருந்து மன்னார் ஆஸ்பத்திரி சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. கிளிநொச்சி ஆஸ்பத்திரி சுமார் 39 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. அநுராதபுரம் ஆஸ்பத்திரி சுமார் 115 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது.

இவையெல்லாம் அரசும் படைத்தரப்பும் நன்கறிந்த விடயங்கள். ஆனால், இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களை, மிக அருகிலுள்ள மன்னார் வைத்தியசாலைக்கோ அல்லது அதற்கடுத்தபடியாக அருகிலுள்ள அநுராதபுரம் வைத்தியசாலைக்கோ கொண்டு செல்லாது மிகத் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு ஏன் கொண்டு செல்லப்பட்டனர் என அரசு புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியுள்ளது.

படுகாயமடைந்த அனைவரும் இலுப்பைக்கடவைக்கு அருகிலுள்ள பள்ளமடு மற்றும் முழங்காவில் கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் உயிலங்குளம் இராணுவச் சோதனை நிலையத்தில் இதற்கான அனுமதியை படையினர் முற்றாக நிராகரித்து விட்டனர்.

மன்னாரிலிருந்து சென்ற அம்புலன்ஸ்கள் உயிலங்குளம் சோதனை நிலையத்தில் வைத்து திருப்பியனுப்பப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இதையடுத்தே சுமார் 39 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு பல்வேறு வாகனங்கள் மூலம், படுகாயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த உண்மைகளை மறைத்ததுடன் மட்டுமல்லாது அரசு வெளியிட்ட அறிக்கையில், அநுராதபுரம் ஆஸ்பத்திரி இலுப்பைக்கடவையிலிருந்து 112 கிலோமீற்றர் தூரமென்றும், அங்கு இவர்களைக் கொண்டு செல்லாது, 140 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு இவர்களை ஏன் கொண்டு சென்றார்களென்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டன. இதன்மூலம் உண்மைநிலை மறைக்கப்பட்டு பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டதுடன், படுகாயமடைந்தவர்கள் எல்லோரும் புலிகளென்பதாலேயே அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படாது மிகத் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவைக்கும் கிளிநொச்சிக்குமிடையேயான தூரத்தை, இலுப்பைக்கடவைக்கும் அநுராதபுரத்துக்குமிடையிலான தூரத்தைவிட அதிகமெனக் காட்டுவதன் மூலம், படுகாயமடைந்தவர்கள் தொடர்பாக புலிகள் பொய் கூறுவதுபோன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

கடைசியாக புதுடில்லிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜயம் செய்திருந்தபோது, புதுடில்லியில் `இந்து' பத்திரிகையின் செய்தியாளர் மகிந்தவிடம் பிரத்தியேக பேட்டியெடுத்தார். அதன்போது, வடக்கில் ஆட்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும், படுகொலை செய்யப்படுவதும் மிகப் பெருமளவில் அதிகரித்திருப்பதாகக் கூறியதுடன் இதுபற்றி ஜனாதிபதி மகிந்தவின் கருத்தையும் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த மகிந்த, எதுவித தயக்கமுமின்றி அப்பட்டமாக பொய் கூறினார். யாழ். குடாநாட்டின் இராணுவத் தளபதி ஒரு தமிழர் என்றும் அதுவும் அவர் யாழ்ப்பாணத் தமிழர் என்றும் கூறியதுடன், இவ்வாறானதொரு நிலையில் அங்கு எப்படி படையினர் இவ்வாறான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவரென அந்தச் செய்தியாளரிடம் பதில் கேள்வியெழுப்பினார்.

இதில் மிக முக்கிய விடயமென்னவென்றால், மகிந்தவை பேட்டி கண்ட அந்தச் செய்தியாளருக்கு இலங்கை நிலைமை பற்றி போதிய அறிவில்லை. அதனால், இதுபற்றி வேறு கேள்வி எழுப்பவில்லை. இல்லையேல், இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் எவருமே இல்லாத நிலையில் யாழ்.குடாநாட்டின் தளபதியாக ஒரு தமிழர் இருக்கிறார் என எப்படிக் கூறுவீர்களென்று திருப்பிக் கேட்டிருந்தால், அந்தப் பேட்டியில் மகிந்த கூறியவை எல்லாவற்றினதும் நம்பகத்தன்மை குறித்து பலகோடி இந்திய மக்கள் கூட அறிந்திருப்பர்.

இவ்வாறானதொரு பிரசாரமே இலுப்பைக்கடவை சம்பவம் குறித்தும் அரசு வெளியிட்ட அறிக்கை மூலம் முன்னெக்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான தூரம் குறித்தோ இலுப்பைக்கடவைக்கும் அநுராதபுரத்திற்குமிடையிலான தூரம் குறித்தோ வெளிநாட்டுத் தூதர்களும் சர்வதேச சமூகமும் தென்பகுதிச் சிங்களவர்களும் பார்க்க மாட்டார்கள். அருகிலுள்ள அநுராதபுரம் ஆஸ்பத்திரியை விடுத்து 140 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு காயமடைந்தவர்களை கொண்டு சென்றதில் மர்மமிருப்பதாகவே கருதுவர்.

இதைவிட அரசு வெளியிட்ட அந்த அறிக்கையில் வேறொரு விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.