Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கள் கொழும்பில் எடுபடுமா?

Featured Replies

பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கள் கொழும்பில் எடுபடுமா?

போரை முடிவுக்குக் கொண்டுவந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காணவேண்டிய தேவை குறித்தும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் எனவும் இன்று கொழும்பு வரும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்குத் தெரிவித்தாலும், அதனைச் செவிமடுக்கும் நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இல்லையென கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே பிரணாப் முகர்ஜி வருகை தருகின்ற போதிலும், இலங்கையின் இன நெருக்கடி செல்லும் திசை தொடர்பாக இந்தியாவின் அக்கறையை கொழும்பில் தங்கியிருக்கும் போது முகர்ஜி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக பெருந்தொகையான தமிழ் மக்களின் இடப்பெயர்வு மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமை, பொதுமக்கள் இலக்குகள் தாக்கப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் முகர்ஜி அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடத்தும் பேச்சுக்களின் போது, இந்தியாவின் அதிருப்தியைக் கொழும்பின் கவனத்துக்குக் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை, தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியாவில் மேற்கொண்ட சந்திப்புக்கள், தமிழகத்தில் உருவாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு என்பன காரணமாக இந்தியா கடுமையான அழுத்தங்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்தியாவின் அழுத்தம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தபோதிலும், தென்பகுதியில் இடம்பெற்ற பேரூந்து குண்டு வெடிப்புக்கள் மற்றும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்கள் கொழும்புக்கான இந்தியத் தூதுவருடன் கடந்த வாரத்தில் மேற்கொண்ட சந்திப்பு என்பன இந்தியாவின் கடும் போக்கில் மாற்றங்களைக் கொண்டுவருவதாக அமைந்திருக்கும் எனக் கருதப்படுகின்றது.

வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்தியா அழுத்தங்கொடுக்கக் கூடாது என ஹெல உறுமயவினர் தெரிவித்ததை இந்தியத் தூதுவர் ஏற்றுக்கொண்டதுடன், இது தொடர்பிலான முடிவை எடுக்க வேண்டியவர்கள் இலங்கையர்களே எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. என்பவற்றின் அழுத்தங்களுக்கு உட்பட்டுச் செயற்படும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை என்பதே கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களின் கருத்தாகவுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியாவும், கடும்போக்கைத் தவிர்த்து மென்போக்கான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் எதிர்வு கூறுகின்றன.

-Puthinam-

Edited by YARLVINO

  • கருத்துக்கள உறவுகள்

முகர்ஜி கூறுவதை செவிமடுக்கும் மனநிலையில் கொழும்பு இல்லை

[09 - January - 2007] [Font Size - A - A - A] தினக்குரல்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காண வேண்டிய தேவை குறித்து இன்று வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கொழும்புக்கு தெரிவித்தாலும் தென்னிலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற இரு பஸ் குண்டு வெடிப்பு சம்பவங்களால் அரசாங்கத் தலைவர்கள் முகர்ஜியின் கருத்துக்களை செவிமடுக்கும் மன நிலையில் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கவே பிரணாப் முகர்ஜி வருகை தருகின்ற போதும், இலங்கையின் இன நெருக்கடி செல்லும் திசை தொடர்பாக இந்தியாவின் அக்கறையை முகர்ஜி வெளிப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. விசேடமாக பெருந்தொகையான தமிழ் மக்களின் இடம் பெயர்வு மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் குறித்து முகர்ஜி இந்தியாவின் விசனத்தை கொழும்பின் கவனத்திற்கு கொண்டு வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நிட்டம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற இரு பஸ் குண்டு வெடிப்புகளினால், இலங்கை அரசாங்கம் மீது முகர்ஜி அழுத்தங்களை பிரயோகிக்கும் சாத்தியம் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள், தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் அழுத்தங்கள் போன்ற காரணங்களினால் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் இந்தியா சற்று கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்பட்ட போதிலும், தொடர்ச்சியான இரு பஸ் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் போக்கில் தளர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்தியத் தூதரக அதிகாரியொருவர் கூறினார்.

இந்தியா எண்ட ஒரு நாடு பக்கத்திலை இருக்கு... அவை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை தந்தவை.. ஆனால் அதை இலங்கை அரசு இந்தியா ஏற்படுத்துதீர்வை மதிக்காது ஏற்று கொண்டு நடக்காது நாளாவட்டத்தில் இலங்கை அரசியல் யாப்பை காரணம்காட்டி தூக்க்கி எறியப்படும் எண்று சொல்லி புலிகள் அதை எதிர்த்தார்கள்.. ஆயுதங்களை ஒப்படைக்கவும் தயங்கினார்கள்... அதனாலை போரும் நிகழ்ந்தது...

இப்ப இவ்வளவு காலம் கடந்து புலிகள் என்ன காரணம் சொல்லி இந்தியாவின் தீர்வை எதிர்த்தார்களோ அது நடந்து ஒப்பந்தமும் நீக்கப்பட்டு வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு இந்தியாவினால் ஏற்படுத்தப்பட்ட மாகான சபை நீக்கப்பட்டு அதுக்கு பதிலாக வேற ஒண்றை கொண்டு வந்து இருக்கிறார்கள்... இந்த நிலையில மிகவும் பக்குவமாய் அடைகாக்கப்படும் வடக்கு கிழக்கின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளை என்ன செய்யலாம் எண்டு யோசிச்சு இருப்பினம் அப்படி ஒரு பதவியே இல்லை எண்ட அளவு வந்தாப்பிறகு இவ்வளவு கேவலத்துக்கு மத்தியிலையும் பிரணாப் முகர்ஜி வந்து இருக்கிறார்.. வந்தவர் இலங்கைக்கு உவகையான செய்தியை கொன்டு வர மாட்டார்தானே...

moorthylen1.gif

Edited by Subiththiran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.