Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தவின் கைத்தடி, அனுர சேனநாயக மீது குவியும் புகார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேக்களின் கோர தாண்டவங்களின், வெளியே தெரிந்த கதாநாயகன் கோத்தாவாயின், அவர் வலதுகரமாக இருந்து சகல அட்டகாசங்களையும் நடத்திய ரகசிய கதாநாயகர்கள் இருவர். ஒருவர் வாஸ் குணவர்த்தன, அடுத்தவர் அனுர சேனநாயக்க.

10.11.gif

இருவருமே உயர் போலிஸ் அதிகாரிகள். கப்பம், வெள்ளை வான் கடத்தல், கொலை போன்ற பல விடயங்களில் கோத்தவின் உத்தரவுகளை செயல் படுத்த எந்தவித ஈவு இரக்கம் இன்றி செயல் பட்டவர்கள் இவர்கள்.

Image result for vass gunawardena

இலக்கம் இல்லா கார்கள், போலிஸ் படையில், இவர்கள் சொன்னதை மறு பேச்சு இன்றி செய்து முடிக்கும் ஒரு குழுவை தெரிந்து அவர்களுக்கு சர்வ அதிகாரங்களும், பணமும் தந்து தமது சகல சமூக விரோத செயல்களையும் செய்து உள்ளார்கள். போலீசாருக்கான அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தும் இவர்கள் மீது, தவறி நடவடிக்கை எடுக்க முயன்ற நேர்மையான அதிகாரிகள், கோத்தாவினால் பந்தாடப் பட்டனர்.

இவ்வகையில் 2005 ஆகஸ்ட் முதல் 2015 ஜனவரி வரை இவர்கள் இலங்கையில் செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை.

ஒரு ஆரம்பம் இருந்தால் முடிவு இருக்கத் தானே வேண்டும்.

இவர்களில், வாஸ் குணவர்த்தன, சைடு பிசினஸ் பார்க்க கிளம்பி, தனக்காக இன்னுமொரு போலிஸ் குழுவை உருவாக்கி, பெரும் வர்த்தகர்களைக் கடத்தி பணம் பார்த்துள்ளார். ஒரு முறை, ஒரு முஸ்லிம் வர்த்தகரை, கடத்த அவர் கடத்தியவர்களுடன் ஒத்துழையாமல் மோத, கொலையில் முடிய, அதை புதைக்க முயலுகையில், கிராம மக்களிடம் பிடிபட்ட இவரது குழு ஆட்கள், தாம் பொலிசார் என சொல்லி தப்ப முயல, பொலிசார் எவ்வாறு இரகசியமாக புதைக்க முடியும் என விசயம், மீடியாவில் கிளம்ப, இவரது சைடு ட்ரக் வெளியே தெரிய வர, கோபமடைந்த கோத்தா, இவரைக் கைவிட இவர் இன்று மரண தண்டனை கொடுக்கப் பட்ட கைதி.

Image result for vass gunawardena

மறு புறம் அனுர சேனநாயக்க, நாமல் கோரிக்கை மீது, கோத்தா பரிந்துரைப்பில், விளையாட்டு வீரர் தசிம் இணைக் கொலை செய்த விவகாரத்தில் சிக்கி கம்பி எண்ணுகிறார்.

இவர் மீது வரிசயாக பல புகார்கள் குவிந்து வருகின்றன. வெலிக்கடையில் சிறை கைதிகள் கலவரம் செய்த போது, அங்க இவரது படைகள் புகுந்து, நடத்திய கொலைகள் 80 வரை... இது குறித்து விசாரணையே நடத்தப் பட வில்லை. பொலிசாரின் ஆயுதங்களப் பறித்து அவர்கள் எம்மேல் சுட்டார்கள். பதில் சூட்டில் அவர்கள் இறந்தார்கள் என்று சொன்னார் அனுர. ஆனால். கொல்லப் பட்டவர்கள் அனைவரும், முழங்காலில் நிற்க வைத்து, தலையின் பின்புறமாக சுடப்பட்டனர் என்கிறது மருத்துவ அறிக்கை.

இந்த கொலைகள் நடத்தியவர் அனுர சேனநாயக்க.

பம்பலபிட்டியில் வியாபாரியான பிரபாகரன் என்பவர் கேட்கப்பட்ட கப்பம் கொடுக்க மறுத்ததால், புலிகளுடன் தொடர்புடையவர் என கைதாகி உள்ளே வைக்கப் பட்டார். கைது செய்தவர் அனுர. தடுப்புக்காவல் உததரவு பிறப்பித்தவர் பாதுகாப்புச் செயலர் கோத்தா. 28 மாதம் சித்திரவதை சிறைக்குப் பின் வெளியே வந்த அவரோ, சும்மா இராமல், உயர் நீதிமன்றில் தனக்கு நடந்த அவலத்துக்கு நஷ்ட ஈடு கோரி கோத்த, அனுர மீது வழக்கு தொடுத்து இருந்தார்.

விசாரணைக்கு இரு நாட்கள் இருக்கையில் அவர் வெள்ளை வானில் கடத்தப் பட்டார். இன்று வரை கதையே இல்லை.

இவரது கடத்தல், கொலையுடன் தொடர்பானவர் இந்த அனுர என, மலையக தமிழரான பிரபாகரனினின் சிங்கள மனைவி இப்போது முறைப்பாடு கொடுத்து உள்ளார்.

இதனிடையே, சிறையில் இருக்கும் இந்த அனுரவை, கடந்த வாரம் மகிந்த சந்தித்து உள்ளார். கெஞ்சி கேட்பார்கள், பயமுறுத்தியும் கேட்பார்கள்.... நமலைப் போட்டுக் கொடுத்திடாத என்று சொல்லி இருப்பார் என ஊடகங்கள் எழுது கின்றன.

எவ்வாறு இருப்பினும், கோத்தவின் கைத்தடிகள் ஒவ்வொன்றாக, நின்று அறுக்கப் படுகின்றன.

மறுபுறம், தனக்கு வலை இறுக்குவது தெரிந்ததும், அரசியலுக்குள் புகுந்து தப்பிக் கொள்ள சுதந்திரக் கட்சியின் இணைத்தலைமை பதவியினை பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார் கோத்தா.

*** நம்ம ஆக்கமுங்கோ.   

Edited by Nathamuni

பல உண்மைகள் அடங்கியுள்ள நல்ல ஆக்கம் நாதமுனி!

1 hour ago, Nathamuni said:

பம்பலபிட்டியில் வியாபாரியான பிரபாகரன் என்பவர் கேட்கப்பட்ட கப்பம் கொடுக்க மறுத்ததால், புலிகளுடன் தொடர்புடையவர் என கைதாகி உள்ளே வைக்கப் பட்டார்.

மஜெஸ்டிக் சிட்டியில் கடை வைத்திருந்தவர்.

இவை மட்டுமல்ல இந்த கோத்தபாய பயங்கரவாதக் கும்பலால் கடத்தப்பட்டு பணமும், சொத்துக்களும் பறிக்கப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம் தமிழர்கள்.

கொட்டகதெனிய என்ற சிங்கள-பௌத்த இனமதவெறி நிரம்பிய போலீஸ் ரவுடியும் பல அட்டூழியங்களைச் செய்தவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.