Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை

Featured Replies

தென்பகுதி  மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்  வழங்கிய  அதிகாரிகளுக்கு  கடுமையான  ஒழுக்காற்று  நடவடிக்கை  

 

 

வடக்கில் மீன்பிடிப்பதற்கு  “தடையுத்தரவை”  மீறி  தென்பகுதி  மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்  வழங்கிய  அதிகாரிகளுக்கு எதிராக  கடுமையான  ஒழுக்காற்று  நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என  அமைச்சர்  மஹிந்த  அமரவீர  தெரிவித்துள்ளார்.

வட கடலில் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும்  எவராக  இருந்தாலும்   தராதரம் பார்க்காமல் கைதுசெய்யுமாறு கடற்படையினருக்கும், ரோந்து  பிரிவினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்   அமைச்சர்  தெரிவித்தார். 

கடந்த வெள்ளிக்கிழமை  கடற்தொழில் நீரியல் வளத்துறை  அமைச்சில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும்  வடமாகாண  ஆளுனர் மற்றும் வடக்கின் மீனவர் சங்க  பிரதிநிதிகளுக்கும்  இடையிலான   பேச்சுவார்த்தைகளின் போதே  அமைச்சர்  மஹிந்த  அமரவீர இந்த  உத்தரவுகளை  பிறப்பித்துள்ளார். Stick_fishermen_of_Sri_Lanka.jpg

தெற்கிலிருந்து சம்பிரதாயபூர்வமாக  வடக்கிற்கு சென்று  அனுமதிப்பத்திரம்  பெற்று  மீன்பிடிப்பவர்கள் அத்தோடு வடகடலில்  சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்கள்,  இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இப்பேச்சுக்களின் போது  கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது  புதிதாக தென்பகுதி  மீனவர்களுக்கு  அனுமதிப்பத்திரம்  வழங்க  வேண்டாமென  அமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்  அதனை மீறி புதிய  அனுமதிப்பத்திரங்கள்  வழங்கியிருப்பது தொடர்பில் இப்பேச்சுக்களின் போது  அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன்போது அவ்வாறு  அனுமதிப்பத்திரங்கள் வழங்கிய  அதிகாரிகளுக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த  அமைச்சர், வடபகுதி  மக்கள் நாம் அங்கு  செல்லும் போது  மலர் மாலைகள் அணிவித்து  வரவேற்கின்றனர். நாமும் அம்மீனவர்களின்  பிரச்சினைகளை  தீர்ப்பதற்கு  உறுதிமொழிகளை வழங்குகின்றோம்.  

அவை  நிறைவேற்றப்படாத போது அம்மக்கள்   நாம் பொய்களை கூறுவதாகவே நினைப்பார்கள். 

எனவே வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கும் விதத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

சம்பிரதாயபூர்வமாக  தெற்கிலிருந்து வடக்கு  சென்று மீன் பிடிக்கும் மீனவர்களை விடுத்து புதிய அனுமதிகளை வழங்குவதற்கு  இடமளிக்க முடியாது என்றும்  இப்பேச்சுக்களின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்தார். 

http://www.virakesari.lk/article/7519

15 hours ago, நவீனன் said:

அவை  நிறைவேற்றப்படாத போது அம்மக்கள்   நாம் பொய்களை கூறுவதாகவே நினைப்பார்கள். 

எனவே வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கும் விதத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

இவர்களின் ("மகா பொறு வம்ச"க்காரர்களின் ) நடிப்புக்களையும், பொய்களையும் தமிழ் மக்கள் 68 வருடங்களாக பார்த்து வருகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.