Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு

Featured Replies

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு

 
 
முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இந்திய பயிற்சியாளராகத் தேர்வு. படம்: பிடிஐ.
முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இந்திய பயிற்சியாளராகத் தேர்வு. படம்: பிடிஐ.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டுக்கானது. கும்ப்ளேயின் பயிற்சிக்காலம் மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய தொடருடன் தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு 57 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 21 பெயர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பிசிசிஐ-க்கு அனுப்பியது சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய குழு.

பவுலிங், பேட்டிங் மற்றும் உதவிப்பயிற்சியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

ரவிசாஸ்திரி, சந்தீப் பாட்டீல், பிரவீண் ஆம்ரே ஆகியோரும் இந்திய தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களும் நேர்காணல் செய்யப்பட்டனர்.

இறுதியில் அனில் கும்ப்ளேயை தலைமைப் பயிற்சியாளராக பிசிசிஐ அறிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/இந்திய-கிரிக்கெட்-அணியின்-தலைமைப்-பயிற்சியாளராக-அனில்-கும்ப்ளே-தேர்வு/article8764935.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம்

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான அனில் கும்ப்ளே, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

160623114320_anil_kumble_640x360_getty_n
 

தரம்சாலாவில் நடந்த நிகழ்ச்சியில், அனில் கும்ப்ளேவை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ள அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது.

இது குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள டிவிட்டர் தகவலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அணில் கும்ப்ளே ஓராண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வரும் ஜுலை மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள நான்கு டெஸ்ட் தொடர் அணில் கும்ப்ளேவின் முதல் பயிற்சியாளர் பணியாக அமையும்.

18 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய அனில் கும்ப்ளே, 619 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில், 74 ரன்கள் விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை எடுத்தது இவரது சிறந்த பந்துவீச்சாகும்.

14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கேப்டனாக அணில் கும்ப்ளே செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

140311164553_anil_kumble_624x351_afp.jpg

 

அணியின் பேட்டிங், பந்துவீச்சு, மற்றும் துணை பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india/2016/06/160623_anilkumble_coach

 

  • தொடங்கியவர்

இரட்டைப் பதவி விவகாரம் குறித்த கேள்விக்கு அதிருப்தியடைந்த அனில் கும்ப்ளே

 

 
அனில் கும்ப்ளே. | கெட்டி இமேஜஸ்.
அனில் கும்ப்ளே. | கெட்டி இமேஜஸ்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அனில் கும்ப்ளேவிடம் ஆதாய நோக்கத்திலான இரட்டைப் பதவி (Conflict of Interest) குறித்து கேட்கப்பட்ட போது அவர் சற்றே எரிச்சலடைந்து பதில் அளித்தார்.

விளையாட்டு மற்றும் ஆலோசனை வர்த்தகத்தில் உள்ள டென்விக் நிறுவனத்தில் அனில் கும்ப்ளேயின் ஈடுபாடு குறித்து அவர் பயிற்சியாளரானவுடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, “பிசிசிஐ-யும் இது பற்றி அக்கறையுடன் உள்ளது, ஏற்கெனவே விவாதித்துள்ளோம் அதிகாரபூர்வமாக பயிற்சியாளர் பொறுப்பு ஏற்கும் முன் இந்த விவகாரத்துக்கு எளிதில் தீர்வு காணப்படும்.” என்றார்.

சிறிது நேரம் சென்ற பிறகு இந்தி நேர்காணலில் கேட்கப்பட்ட போது கும்ப்ளே தனது எரிச்சல் கலந்த அதிருப்தியை வெளியிட்டார், “எப்போது ஆதாயம் தரும் இரட்டைப் பதவி என்ற விவகாரம் எழுப்பப்படுகிறதோ கூடவே என் பெயரும் இழுக்கப்படுகிறது. நான் 18 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியுள்ளேன். நான் ஆடும் போது எனது பெயருக்கு நடுவே ராதாகிருஷ்ணன் என்ற பெயர் இணைக்கப்பட்டது. இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. ஓய்வு பெற்ற பிறகு ‘இரட்டைப் பதவி’என்பது என்னுடன் இணைக்கப்படுகிறது. நான் பிசிசிஐ-யுடன் பேசிவிட்டேன் உரிய நடவடிக்கை அதிகாரபூர்வ பொறுப்பேற்பிற்கு முன் முடிந்து விடும்” என்றார்.

நான் விளையாடிய போது என்னுடன் ஆடிய கிரேட் பிளேயர்களான சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண் ஆகியோருடன் எனக்கு மைதானத்திலும் வெளியிலும் நல்ல உறவுகள் உள்ளன. எனவே நாங்கள் 5 பேரும் அமர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு எது நன்மை விளைவிக்குமோ அதனை ஆலோசித்து திட்டமிடுவோம். ஆர்வமுள்ள பிறரும் பங்கேற்பார்கள். நான் இதனை எதிர்நோக்குகிறேன்.

இது ஒரு பெரிய பொறுப்பு மிகுந்த பணியாகும். பயிற்சியாளர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை நான் அறிவேன். வீரர்கள் ஓய்வறைக்கு மீண்டும் திரும்புவதற்கு இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். வீரர்கள் தயார் செய்து கொள்வதற்கு உதவுவதற்கு இதுவே சரியான நேரம்.

என்னிடம் குறுகிய கால, நீண்ட கால திட்டங்கள் உள்ளன. வரும் தொடர்களுக்கும் போட்டிகளுக்கும் என்னிடம் திட்டங்கள் உள்ளன. ஆனால் நான் தனியாக திட்டமிட முடியாது, ஒட்டுமொத்த அணியுடனும் நான் எனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது யோசனைகளையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்”

என்றார் அனில் கும்ப்ளே.

http://tamil.thehindu.com/sports/இரட்டைப்-பதவி-விவகாரம்-குறித்த-கேள்விக்கு-அதிருப்தியடைந்த-அனில்-கும்ப்ளே/article8765182.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.