Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலை சிலையாம் காரணமாம் - 1: கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை

Featured Replies

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 24: பொன்னை விட கல்லுக்கே மதிப்பு!

 

silai_2965067f.jpg
 

நாகப்பட்டினம் புத்த விகாரைகளில் அற்புதமான புத்தர் சிலைகள் இருந்தன. அவை அனைத்தும் 1856-ல் இருந்து 1934 வரையிலான கால கட்டத்தில் அங்கிருந்து கடத்தப்பட்டுவிட்டன. அங்கிருந்த சுமார் 350 புத்தர் சிலைகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் சென்னை மியூசியத்தின் பொறுப்பில் உள்ளன. எஞ்சியவை இந்தியாவின் பல பகுதிக ளுக்கும் பாகிஸ்தான், இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டன. இந்தப் புத்தர் சிலைகளை ஜப்பானைச் சேர்ந்த ராக்பெல்லர் உள்ளிட்ட செல் வந்தர்கள் தங்களது காட்சிக் கூடங்களில் வைத்திருப்பதாக பிரபல கல்வெட்டு ஆய்வாளர் வை.சுப்பராயலு 1993-ல் பதிவு செய்திருக்கிறார்.

1992-ல் டோக்கியோவில் ராக்பெல்லர் கலைப் பொருள் கண்காட்சி ஒன்றை நடத்தினார். அதில் பார்வையாளராகக் கலந்துகொண்ட சுப்பராயலு, அங்கே தாமரை பீடத்தில் அமர்ந்த புத்தர் சிலை ஒன்றையும் பார்த்தார். தாமரை பீடத்தில் சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அது நாகை புத்த விகாரையில் இருந்த புத்தர் என்பதற்கு இந்த ஆதாரம் ஒன்றே போதும் என்கிறார் சுப்பராயலு.

பொன்னை விட கல்லுக்கே மதிப்பு

எப்போதாவது, எங்காவது கடத்தல் ஐம்பொன் சிலைகள் பிடிபடும்போது தங்களின் பராக்கிரமத்தைப் பதிவுசெய் வதற்காக ‘விலை மதிப்பெற்ற ஐம்பொன் சிலைகள் பிடிபட்டன’ என்று போலீஸ் விளம்பர வெளிச்சம் பாய்ச்சுகிறது. உண் மையில், ஐம்பொன் சிலைகளை விட கற்சிலைகள்தான் விலை மதிக்க முடி யாதவை. இன்றைக்கு நினைத்தால் ஐம்பொன் சிலைகளை அச்சுகள் மூலம் வார்த்தெடுத்துவிட முடியும்.

கற்சிலைகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலை அம்சத்துடன் செதுக்குவதற்கு சிற்பிகள் இருக்கிறார்களா என்பதே சந்தேகம் தான். ஆனால், ஐம்பொன் சிலைக ளுக்கு தரும் முக்கியத்துவத்தை கற்சிலை களுக்கு போலீஸ் உட்பட யாருமே தருவ தில்லை. ‘கற்சிலை தானே’ என்று உதாசீனப் படுத்துகிறார்கள். அதேசமயம், கடத்தல் சந்தையில் இருப்பவர்கள் கற்சிலை களின் மகத்துவத்தை தெரி ந்துவைத்திருக்கி றார்கள். அதனால்தான் உடைந்த சிலையாக இருந்தாலும் லட்சங்களைக் கொடுத்து கடத்துகிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்லியாக வேண்டும். தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி) பிரிவுக்கு என தனியாக இணையதளம் உள்ளது. கடத்தப்பட்டு பிடிபட்ட சிலைகள் பற்றிய சில விவரங்கள் இந்த இணைய தளத்தில் உள்ளன. ஆனால், அந்தச் சிலைகளைக் கடத்திய கடத்தல் மன்னர் களின் படங்கள் எதுவும் அதில் இடம்பெற்று விடக்கூடாது என்பதில் அதிக சிரத்தை எடுத்திருக்கிறார்கள். தீனதயாள், சுபாஷ் கபூர், லெட்சுமிநரசிம்மன், சஞ்சீவி அசோகன் உள்ளிட்ட யாருடைய புகைப்படமும் அதில் இல்லை.

கடத்தல் புள்ளிகளின் அரசியல் பின்புலம் குறித்து சிலைக்கடத்தல் பிரிவில் பணியாற்றிய காவலர் ஒருவர் நம்மிடம் பேசினார். ‘‘சிலைக் கடத்தல் சந்தையில் இருப்பவர்களுக்கு பலமான அரசியல் பின்னணியும் இருக்கிறது. இது தெரியாமல் கீழ்மட்ட போலீஸ் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், ‘ஏம்பா.. நாங்க நிம்மதியா இருக்க றது பிடிக்கலையா?’ என்று உயரதிகாரிகள் போனைப் போட்டு வசவுவார்கள். எனது அனுபவத்தில் பல சம்பவங்கள் இப்படி நடந்திருக்கின்றன.

கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட பல அரிய சிலைகளை சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் தங்கள் வீட்டு வரவேற்பு அறையில் கலைப் பொருளாக வைத்திருக்கிறார்கள். அதைத் தொட்டால் எங்களுக்கு ’ஷாக்’ அடிக்கும். கலைப் பொருள் வியாபாரிகளான கேரளத்தின் லாரன்ஸ், பெங்களூரு நடேசன் உள்ளிட் டோரிடம் ஏராளமான கோயில் சிலைகள் உள்ளன. விஜய் மல்லையாவின் ஹைதரா பாத் பங்களாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிலைகள் உள்ளன. சென்னையிலேயே பல பிரபலங்களின் வீடுகளில் திருட்டு சிலைகள் கலைப் பொருளாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் யாரும் தொடமுடியாது.

சஞ்சீவியை தப்ப வைத்த போலீஸ்

கபூரின் கூட்டாளி சஞ்சீவி அசோகனை கேரளத்தில் கைது செய்ததாக போலீஸ் பதிவுசெய்திருக்கிறது. ஆனால், உண்மை யில் என்ன நடந்தது தெரியுமா?

சிவபுரந்தான் சிலைகள் திருட்டு நடந்த சில நாட்களிலேயே, அந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட ரத்தினம், சிவகுமார் இருவரை மட்டும் பிடித்துவிட்டது போலீஸ். அதற்குள்ளாக அந்தச் சிலைகள் சஞ்சீவி அசோகன் கைக்கு போய்விட்டன.

ஒரிஜினல் சிலைகளுக்கு பதிலாக போலியான சிலைகளைப் பிடிபட்ட இருவரும் தயார் செய்துவிட்டார்கள். அந்தச் சிலைகளையும் பிடிபட்ட நபர்களின் படத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டது போலீஸ். இதைப் பார்த்துவிட்டு அந்தச் சிலைகளை செய்துகொடுத்த சுவாமிமலை ஸ்தபதி ஒருவர், ‘‘நான் செய்துகொடுத்த சிலையை கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலை என்கிறார்களே’’ என்று பதறிப் போய் போலீஸுக்கு ஓடினார். அவரை அப்படியே சமாதானப்படுத்திவிட்டது போலீஸ்.

அந்த சமயத்தில் சஞ்சீவி அசோகன் போலீஸ் பிடியில் இருந்தார். அவரை தனியார் விடுதியில் தங்கவைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த காவல் துறையினர், அங்கே அவருக்கு வசதிக் குறைவாக இருப்பதாகச் சொல்லி, கோயம்பேடில் உள்ள இன்னொரு சொகுசு விடுதிக்கு இடமாறுதல் செய்து கொடுத் தார்கள். கடைசிவரை, சஞ்சீவியை கைது செய்யாமல் வைத்திருந்த கண்ணியமிக்க காவல்துறை கனவான்கள் கடைசியாக, விசாரணையில் இருந்தபோது விடுதியில் இருந்து சஞ்சீவி அசோகன் தப்பிவிட்டதாக கணக்கை நேர்செய்தார்கள்.

இதற்காக மட்டுமே அப்போது உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 25 லட்ச ரூபாய் கைமாறியதாம். சஞ்சீவி அசோ கனை இப்படி வசதியாக தப்பிக்க வைத்து விட்டு, பிறகு கட்டாயம் ஏற்பட்டதால் ஒன்றரை ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்தார்கள். அதற்குள்ளாக கடத்தல் சிலைகள் அனைத்தையும் பத்திரமாக கபூர் கைக்குக்குக் கொண்டுபோய் காசு பார்த்துவிட்டார் அவர். எல்லா வேலை களையும் செய்து முடித்த பிறகு போன் போட்டு வரச்சொல்லித்தான் சஞ்சீவியை கைதுசெய்துவிட்டு, கேரளத்திற்கு துரத்திப் போய் கைதுசெய்ததாக வழக்கம்போல டைரி எழுதினார்கள்’’ என்று சொன்னார் அந்த காவலர்.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-24-பொன்னை-விட-கல்லுக்கே-மதிப்பு/article8963663.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 25: சிவன்கூடல் சோமாஸ்கந்தர் சிலை!

 

 
சிவன்கூடல் சோமாஸ்கந்தர் சிலை
சிவன்கூடல் சோமாஸ்கந்தர் சிலை

சோமாஸ்கந்தர் ஐம் பொன் சிலை ஒன்றை சிங்கப்பூர் ‘ஏசியன் சிவிலைசேஷன் மியூசியம்’ 2002-ல் சுபாஷ் கபூரிடம் இருந்து விலைக்கு வாங்கியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவன்கூடல் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலுக்குச் சொந்தமானது இந்தச் சிலை. சிதிலமடைந்த நிலையில் இருந்த அந்தக் கோயிலில் இருந்து சிலை திருடுபோனது யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், 1916-ல் வெளி யிடப்பட்ட புத்தகம் ஒன்றில் சிவன் கூடல் சோமாஸ்கந்தர் சிலையும் பிரசுரமாகி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதை, ஆதாரமாக வைத்து அந்தச் சிலை சிவன் கூடல் கோயிலுக்குச் சொந்த மானது என்பதை உறுதிப்படுத் தியது ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பு. பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும் அதை உறுதிப் படுத்தியது. இந்த இடத்தில் புதுச் சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தைப் பற்றி சொல்லி யாக வேண்டும். நமது கோயில் களில் உள்ள சிலைகளைப் பற்றி நமது அரசாங்கங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால், பிரெஞ்சு அரசு நமது தொன்மை யான பாரம்பரிய சின்னங்களை ஆவணப்படுத்தத் தேவையான நிதியை ஒதுக்கி தன்முயற்சியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி, ஒடிஷா, கர்நாடகம், கேர ளம் மாநிலங்களின் தொன் மையான கோயில் களில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங் களைப் புகைப்படத் தொகுப் பாக பாதுகாத்து வைத்திருக் கிறது. தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவரும் இந் தப் புகைப்படத் தொகுப்பில், சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் புகைப் படங்கள் உள்ளன. இதில், தமிழகம் சார்ந்தது மட்டுமே 80 ஆயிரம் படங்கள். தமிழகத்தில் இருந்து சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்டவர்களால் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள் வெளிநாடு களில் பிடிபட்டபோது, அவை தமிழ கத்து சிலைகள்தான் என்பதை உறுதிப்படுத்த பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆவணங்களே பெரிதும் உதவின. இந்நிறு வனம் அளிக்கும் சான்றுகளை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முக்கிய ஆவணமாக எடுத்துக்கொள் கின்றன.

இதுகுறித்துப் பேசும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின், கோயில் களுக்கான ஆராய்ச்சியாளர் முனைவர் முருகேசன், ‘‘1956-ல் இருந்து இந்தப் பணியை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். துறை சார்ந்த வரலாறுகளை எழுது பவர்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது இந்த முயற்சி. நடராஜர் சிலை என்று சொன்னால் அது எத்தனை இடங்களில்? எத் தனை வகைகளில் உள்ளது என் பதை எங்களிடம் உள்ள ஆவணங் களை வைத்துச் சொல்லிவிட முடியும்.

சிலைகள் பற்றிய நுணுக்க மான படங்கள் இருப்பதால் ஒப் பிட்டுப் பார்த்து அசலையும் நகலை யும் துல்லியமாகச் சொல்லி விடுவோம். விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை இருந் ததை 1974-ல் நாங்கள் ஆவணப் படுத்தியிருக்கிறோம். ஆனால், சுபாஷ் சந்திர கபூர் அதை 1970-ல் விலைக்கு வாங்கியதாக போலி யான ரசீது தயார்செய்து வைத்திருந்தார். எங்களது ஆவணம் இல்லாது போயிருந் தால் அர்த்தநாரீஸ்வரர் சிலையை மீட்டுவருவதே சிரமமாகி இருக் கும்’’ என்றார்.

அதிகாரிகளின் அலட்சியம்

ஸ்ரீபுரந்தான் கோயில் விநாய கர் சிலை அமெரிக்காவின் டொலைடோ மியூசியத்தில் இருப் பது 2012-லேயே உறுதிப்படுத் தப்பட்டுவிட்டது. இந்தியாவில் இருந்து கபூரால் கடத்தி வரப்பட்ட சிலைகள் உள்ளிட்ட பழமையான பொருட்கள் அந்த மியூசியத்தில் அதிகளவில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, மியூசியத்தில் இருந்த சில சிலைகளைக் குறிப்பிட்டு அவை யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவியுங்கள்’ என்று அங்குள்ள தன்னார்வலர்கள் 2013 ஜூலையில் மியூசியம் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார்கள்.

இந்த விவகாரம் மீடியாக் களிலும் எதிரொலித்ததை அடுத்து, தங்களது மியூசியத்தில் இருந்த ஸ்ரீபுரந்தான் விநாயகர் சிலையை ஒப்படைக்கவும் இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட சிலை களை அடையாளம் காண்பதற் கும் உதவிடும்படி டொலைடோ மியூசியத்தின் இயக்குநர் பிரைன் பி.கென்னடி, நியூயார்க்கில் உள்ள இந்திய கலாச்சாரப் பேரவைச் செயலர் சுகந்த் ராஜாராமுக்கு 2013 ஜூலை 24-ல் கடிதம் எழுதி னார். ஏழு மாதங்கள் ஆகியும் அதற்கு பதில் வரவே இல்லை.

இதையடுத்து, 2014 பிப்ரவரி 14-ல் இந்திய தூதர் ஜெய்சங் கருக்கு கடிதம் எழுதினார் கென் னடி. இதற்கும் ஆறு மாதங்கள் வரை பதில் இல்லை என்றதும், அந்த இரண்டு கடிதங்களையும் தங்களது இணையத்தில் வெளி யிட்டது மியூசிய நிர்வாகம். அத்துடன், கபூரால் தங்களுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்ட சிலை கள் உள்ளிட்ட 200 பொருட் களையும் 1998-ல் கபூர் தங்களுக்கு விற்ற ‘வராகா’ சிலையையும் 2014 டிசம்பர் 20-ல் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ்வசம் ஒப்படைத்துவிட்டது மியூசியம். இந்நிலையில், கடந்த ஜூனில் நியூயார்க் சென்றிருந்த இந்திய பிரதமர் மோடியிடம் ஸ்ரீபுரந்தான் விநாயகர் சிலை ஒப்படைக் கப்பட்டது.

silai1_2966230a.jpg

இதேபோல், நியூயார்க்கில் தனியார் கலைப் பொருள் டீலர் ஒருவர் ஸ்ரீபுரந்தான் கோயிலுக்குச் சொந்தமான மாணிக்கவாசகர் சிலையை தாமாக முன்வந்து போலீஸில் ஒப்படைத்தார். அரியலூர் மாவட்டம் தீப்பாம்பா புரம் கோயிலுக்குச் சொந்தமான சிவிகை நாயகர் என்ற ஆலிங் கனமூர்த்தி ஐம்பொன் சிலையை அமெரிக்காவில் உள்ள பால்ஸ் டேட் யுனிவர்சிட்டி மியூசியத்துக்கு ஏப்ரல் 2015-ல் விற்ற கபூர், அதை அமெரிக்காவைச் சேர்ந்த லியோ எஸ்.ஃபிகல் என்பவரிடம் இருந்து 1969-ல் வாங்கியதாக போலி ஆவணமும் கொடுத்திருந்தார். கபூரின் வண்டவாளங்கள் வெளியானதுமே, அந்தச் சிலையை சுங்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது பால்ஸ்டேட் மியூசியம்.

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-25-சிவன்கூடல்-சோமாஸ்கந்தர்-சிலை/article8967758.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 26: சிலைக்கடத்தலும் ஐஎஸ் அச்சமும்!

 

சுபாஷ் சந்திர கபூரின் மியூசிய கேட்லாக்கில் இடம்பெற்ற உமா பரமேஸ்வரி சிலை | புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆவணத்தில் உமா பரமேஸ்வரி சிலை. | சிங்கப்பூர் மியூசியத்தில்...
சுபாஷ் சந்திர கபூரின் மியூசிய கேட்லாக்கில் இடம்பெற்ற உமா பரமேஸ்வரி சிலை | புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆவணத்தில் உமா பரமேஸ்வரி சிலை. | சிங்கப்பூர் மியூசியத்தில்...

இந்தியாவில் 1972-ல் ‘பாரம்பரிய கலை மற்றும் புராதனச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட்ட பிறகு 1975-ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஏராளமான சிலைகள் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பெருமளவில் கடத்தப்பட்டுள்ளன. ஆனால், அப்படிக் கடத்தப்பட்ட சிலை கள் எல்லாம் சட்டம் இயற்றப் படுவதற்கு சில ஆண்டுகள் முன்னதாகவே விற்கப்பட்ட தாகவும், வாங்கப்பட்டதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து வைத்திருக் கிறார்கள். குறிப்பாக, கபூர் சம்பந்தப்பட்ட சிலை விவ காரங்களில் பெரும்பாலான வற்றில் 1968-ல் இருந்து 1971 வரையிலான காலகட்டத் தில் வாங்கப்பட்டதாகவே போலி ஆவணங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.

சிங்கப்பூர் மியூசியம்

கபூரால் கடத்தப்பட்ட புரந் தான் நடராஜரை 5.6 மில்லியன் டாலருக்கு ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ வாங்கி இருக்கிறது. புரந்தான் கோயி லின் உமா பரமேஸ்வரி சிலையை சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியம் 6 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு வாங்கி இருக்கிறது. உமா பரமேஸ்வரி சிலை சிங்கப்பூர் மியூசியத்தில் இருப்பதை 2013-ம் ஆண்டிலேயே ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ தன்னார்வலர்கள் கண்டுபிடித்தார்கள். கபூரின் நவடிக்கைகளைக் கவனித்து வந்த இந்த அமைப்பைச் சேர்ந்த அமெரிக்க பெண்மணி ஒருவர், கபூர் தனது ‘ஆர்ட் கேலரி’க்காக 10 ஆண்டுகளில் கொடுத்திருந்த விளம்பரங்களை சேகரித்து, தங்களது அமைப்பின் அமைப்பாளர் விஜய்குமாருக்கு அனுப்பினார்.

அந்த விளம்பரம் ஒன்றில் புரந்தான் உமா பரமேஸ்வரி சிலையும் கபூரின் விற்பனைப் பட்டியலில் இருந்தது. அந்தச் சிலை ‘சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியத்தில் இருப்பதை உறுதிப்படுத்திய விஜய்குமார், அது திருட்டு சிலை என்பதை அப்போதே ஆதா ரத்துடன் சிங்கப்பூர் மியூசியத் துக்குத் தெரியப்படுத்தினார். அதற்கு எந்தச் சலனமும் காட்டவில்லை அந்த மியூசியம். இந்நிலையில், டிசம்பர் 2015-ல் அந்தச் சிலை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டது. இப்போது, அந்தச் சிலை அங்கிருந்ததை தாங்களே கண்டுபிடித்து மீட்டு வந்ததாக பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள் இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறை அதிகாரிகள்.

சீர்காழி சாயாவ னேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, ‘நிற்கும் சம்பந்தர்’ சிலை 1968-ம் ஆண்டிலேயே அங்கிருந்து கடத்தப்பட்டும், அந்த விஷயம் வெளியில் தெரியவில்லை. இந்தச் சிலையை 1968-ல் நியூயார்க் ஆர்ட் டீலர் உல்ஃப் என்பவரிடம் இருந்து வாங்கியதாக நியூ யார்க் மியூசியம் ஆவணம் வைத்திருக்கிறது. சம்பந்தர் சிலை காணாமல் போனதாக சீர்காழியில் இதுவரை எஃப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை.

இந்தச் சிலையும் விருத் தாச்சலம் கோயிலின் சிங்கமுக பிரத்தியங்கரா தேவி சிலையும் ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் இருந்ததும், சிவன்கூடல் சோமாஸ்கந்தர் சிலை ‘சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியத்தில்’ இருந்ததும் உறுதிப்படுத்தப் பட்டது. அதேசமயம், இந்தத் தகவல்கள் வெளியானதுமே சோமாஸ்கந்தர் சிலையை தனது ஆர்ட் கேலரியில் இருந்து எடுத்துவிட்டது சிங்கப் பூர் மியூசியம். இதுபோல், இன்னும் பத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாட்டு மியூசி யங்களில் இருப்பது பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆவணங் களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையை மறைக்கிறதா ஏ.எல்.ஆர்.?

‘ஆர்ட் கேலரி’ மற்றும் மியூசியங்களுக்கு விற்கப்படும் கலைப் பொருட்கள் திருட்டுப் பொருட்கள் அல்ல என்பதை உறுதிசெய்து சான்று அளிப் பதற்காக நியூயார்க்கில் ‘The Art Loss Register’ (ஏ.எல்.ஆர்) என்ற தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இது ‘இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் ஆர்ட் ரிசர்ச்’ (ஐ.எஃப்.ஏ.ஆர்) என்ற கார்ப்பரேட் நிறுவனத்தால் 1969-ல் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச அளவில் திருடு போயுள்ள பழமையான கலைப் பொருட்கள் பற்றிய விவரங்களை ஆவணப் பதிவாக வைத்துள்ள ஏ.எல்.ஆர்., ஆண்டுக்கு 10 முறை தனது அடிப்படை தரவுகளை (Database) நிகழ்நிலை படுத்திவருகிறது. 2002 நிலவரப்படி சுமார் 2 லட்சம் திருட்டுக் கலைப் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தன் னகத்தே வைத்திருந்தது ஏ.எல்.ஆர்.

கடத்தலுக்கு சான்றா?

ஏ.எல்.ஆர். தன்னிடம் உள்ள ஆவணங்களை வைத்து, ஒரு கலைப் பொருள் திருட்டுப் பொருளா, இல்லையா என் பதை ஒப்பிட்டுப் பார்க்கும். அது திருட்டுப் பொருள் இல்லாத பட்சத்தில் உரிய சான்றிதழை வழங்கிவிடும். எனவே, சர்வ தேசக் கலைப் பொருள் சந்தை யில் ஏ.எல்.ஆர். சான்றிதழ் முக்கிய ஆவணமாகக் கருதப் படுகிறது.

கடத்தல் பொருளாக இருந் தால் இந்நிறுவனம் சான்று அளிக் காது என்று சொல்கிறார்கள். ஆனால், கபூரால் கடத்தி விற்கப் பட்ட சிலைகள் அனைத்துக்குமே இந்த நிறுவனம் சான்று அளித் திருக்கிறது. கபூரின் வண்டவாளங் கள் வெளியான பிறகும் இன்னும் ஏ.எல்.ஆர். சான்றுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனத் திடம் சான்றிதழ் கேட்டு விண் ணப்பிக்கப்பட்ட சிலைகளின் விவரங்களைக் கணக்கெடுத் தாலே கடத்தல் சிலைகள் மற்றும் கடத்தல் புள்ளிகளின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

சிலைக் கடத்தலை தடுக்கவும், சர்வதேச சிலைக் கடத்தல் வழிகளை அடைக்கவும், சிலைக் கடத்தல் ‘நெட் வொர்க்’கை அடியோடு உடைக் கவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மெனக் கெடுகிறது. இதன் பின்னணியில் ஒளிந்திருப்பது ஐ.எஸ். அச்சம்.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-26-சிலைக்கடத்தலும்-ஐஎஸ்-அச்சமும்/article8972348.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 27: சிலை மீட்பின் பின்னணியில் பாஜக!

 

 
காஷ்மீரில் உள்ள ஸ்ரீ பிரதாப்சிங் மியூசியம்
காஷ்மீரில் உள்ள ஸ்ரீ பிரதாப்சிங் மியூசியம்

தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடுகள் அனைத்துமே இப்போது சிலை கடத்தல் விவ காரத்தை உற்று நோக்க ஆரம் பித்திருக்கின்றன. இந்தக் கடத் தல்களின் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாகச் சொல் லப்படுவதுதான் இதற்குக் காரணம். சர்வதேச கலைப் பொருள் கடத்தல் சந்தையில், தற்போது ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் நடப் பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இப்படி புரளும் பணம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் கைமாறு கிறதாம். சிலைகளையும் கலைப் பொருட்களையும் பல்வேறு நாடு களுக்கு தீவிரவாதிகள் கடத்தி, அதன் மூலம் நிதி திரட்டுவதாகக் குற்றம்சாட்டுகிறது அமெரிக்கா.

ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த சந்தேகம் இருப்பதால் இவர்களும் தங்கள் நாடுகளுக்குள் சிலைகள், கலைப் பொருட்கள் கடத்தி வரப்படும் வழிகளை அடைக்கத் தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் காலத்தைவிட பாஜக ஆட்சியில், கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் விஷயத்தில் அதிக அக்கறை எடுக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். நிழல் இருக்கிறது. உருவேற்றப் பட்ட வழிபாட்டுச் சிலைகள், வெளிநாடுகளில் விற்பனை பண்ட மாகவும் அலங்காரப் பொரு ளாகவும் மதிப்பிடப் படுவதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வெறுக்கிறார்கள். அதனால், வெளிநாடுகளில் உள்ள இந்தியச் சிலைகளை மீட்கும் விஷயத்தில் இவர்கள் மறைமுகமாக மெனக் கெட்டு வருகிறார்கள்.

தமிழக அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் களில் மட்டுமே, சுமார் ஒரு லட்சம் ஐம்பொன் சிலைகள் உள்ளன. ஆனால், இவைகளைப் பற்றிய விவரங்கள் அந்தந்தக் கோயில் சார்ந்தவர்களுக்கே சரிவரத் தெரிய வில்லை. இது குறித்துப் பேசிய வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன். ‘‘மெத்தப்படித்த நமது மேதாவிகள் சிலர், நமது கோயில் சிலைகளைப் பற்றியும் அவைகளின் தொன்மை குறித்தும் புத்தகங்களை எழுதி வெளியிடுகிறார்கள். அதில் உள்ள தகவல்களை வைத்துக் கொண்டுதான், கடத்தல்காரர்கள் கடத்தல் திட்டம் போடுகிறார்கள்.

தொல்லியல் துறை அதி காரிகள் பணி ஓய்வுபெற்றதும் தன்னார்வத் தொண்டு நிறு வனங்களைத் தொடங்கி, வெளி நாடுகளில் இருந்து நிதி பெறு கிறார்கள். இவர்களில் ஒருசிலர், பணி காலத்தில் சேகரித்து வைத் திருந்த கோயில் சிலைகள், தொல்லியல் சின்னங்கள் உள் ளிட்டவற்றின் தகவல் களை வெளி நாடுகளுக்கு தந்து, அதன்மூலம் பலன் அடைகிறார்கள்.

இன்னும் சிலர் கலைப் பொருள் வியாபாரத்தில் உள்ள ‘ஆர்ட் கேலரி’களுக்கு நம் நாட்டுச் சிலைகளைப் பற்றி ‘கேட்லாக்’குகளை எழுதிக் கொடுத்தும் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ‘பத்ம’ விருது பெற்றவர்களும் இருக்கிறார்கள். எனவே, தொல்லியல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரி கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட தடைவிதிக்க வேண்டும்.

எகிப்து மற்றும் சுமேரிய நாக ரிகங்கள் சம்பந்தப்பட்ட தொன்மை யான விஷயங்கள் அனைத்தை யும், பொதுமக்களுக்கு பகிரங் கப்படுத்தப்பட்டதால்தான் அவர்கள் அவற்றை தங்களின் பாரம்பரியச் சொத்தாக பாது காக்கிறார்கள். ஆனால், நமது பாரம்பரியச் சின்னங்கள் குறித்து நமது மக்களுக்கு சரி வரத் தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான், தீனதயாள், லெட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட வர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை ஏதோ தனிமனித சொத்து போல நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.’’ என்றார்.

ms1_2969388a.jpg

ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

1848-ல் இருந்து 1925 வரை காஷ்மீரை ஆட்சி செய்தவர்  பிரதாப் சிங் மகாராஜா. 1898-ல் இவர் தனது கோடைகால விருந்தினர் மாளிகையை ஒரு மியூசியமாக மாற்றி பழமையான கலைப் பொருட்களை அங்கு கொண்டுவந்து குவித்தார். துணி வகைகள், பழங்கால போர் கருவிகள், சிலைகள் உள்ளிட்ட சுமார் 300 - 400 ஆண்டுகள் பழமையான 80 ஆயிரம் கலைப் பொருட்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் மட்டுமே 1,992 உள்ளன.

இங்கிருந்த 56 பழமையான ஓவியங்கள், நாகப்பட்டினம் புத்த விகாரையில் இருந்த ஐம் பொன் புத்தர் சிலை, ஜெயின் சிலை, ஔரங்கசீப் வைத்திருந்த தங்கத்தால் ஆன ‘குரான்’ உள் ளிட்டவைகள் எப்போதோ காணாமல் போய்விட்டன. இவை கள் 1976 வரை அங்கு இருந் ததற்கான ஆவணங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுத்தபோது, இவைகள் அனைத்தும் காணாமல் போனது தெரியவந்தது.

இதனிடையே, காஷ்மீர் மியூ சியத்தில் காணாமல் போன ஓர் ஓவியமானது 1978-ல் நியூ யார்க்கில் கலைப் பொருட்கள் சந்தையில் ஏலத்துக்கு வந்தபோது பிடிபட்டது. அதேபோல், நாகப் பட்டினம் புத்த விகாரையில் இருந்த புத்தர் சிலை ஒன்றை 2006-ல் சிங்கப்பூர் ஏசியன் சிவிலை சேஷன் மியூசியத்துக்கு விற்றி ருக்கிறார் சுபாஷ் சந்திர கபூர்.

இந்தச் சிலை காஷ்மீர் மீயூசியத்தில் இருந்ததுதானா என இப்போது விசாரணைகள் நடக்கின்றன. அது உறுதியானால் காஷ்மீர் மியூசியத்தில் இருந்து அரிய கலைப் பொக்கிஷங்கள் கடத்தப்பட்டதிலும் கபூருக்கு உள்ள தொடர்புகள் அம்பலத் துக்கு வந்துவிடும்.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-27-சிலை-மீட்பின்-பின்னணியில்-பாஜக/article8978597.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 28: சோழன் காலத்து அரிய மரகத லிங்கம்

 

 
 
 
  • திருத்துறைப்பூண்டி மரகத லிங்கம்
    திருத்துறைப்பூண்டி மரகத லிங்கம்
  • ’காலிக்கோ’ மியூசியம்
    ’காலிக்கோ’ மியூசியம்

குஜராத் காலிக்கோ மியூ சியத்தில் உள்ள ராஜ ராஜன் லோகமாதேவி சிலைகள் குறித்தும், அதை மீட்டு வர எடுக்கப்பட்ட முயற்சி கள் குறித்தும் இந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்தோம். அந்தச் சிலைகள் குறித்து இரு மாறு பட்ட கருத்துக்களைப் பதிவிட் டிருக்கும் தொல்லியல் அறிஞர் நாகஸ்வாமி, ‘‘அந்தச் சிலைகள் தஞ்சை பெரிய கோயிலில் இருந் த தற்கான ஆதாரமும் இல்லை. அது அங்கிருந்து காணாமல் போய்விட்டதாக எந்தப் புகாரும் இல்லை’’ எனத் தெரிவித்திருந் தார். இதைப் படித்துவிட்டு ‘தி இந்து’ அலுவலகத்துக்கே நேரில் வந்துவிட்டார் தமிழக அறநிலையத் துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்.

ராஜராஜன் சிலைகுறித்து விரிவாகப் பேசிய சுவாமிநாதன், ‘‘ராஜராஜன் சிலை தங்கத்தால் ஆனது என காஞ்சி சங்கராச் சாரியாரே ஒருமுறை என்னிடம் தெரிவித்தார். பிரபல அணு விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் மனைவியும், தமிழக முன்னாள் அட்வகேட் ஜெனரல் கோவிந்த் சுவாமிநாதனின் தங்கையுமான, பரதநாட்டிய கலைஞர் மிருளா ளிணி சாராபாய்க்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் அந்தச் சிலை இருப்பதாகச் சொல் லப்பட்டது. இதையடுத்து 1986-ல், தஞ்சையில் இருந்த அந்த ராஜ ராஜன் சிலை காணாமல் போயிருப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அறநிலையத் துறை செய லாளருக்கு புகாராகவே எழுதினேன். ஆனால், அது தொடர்பாக முறையான நட வடிக்கை எடுக்காமல் அதி காரிகள் இழுத்தடித்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு அரசியல் சூழல் மாறிவிட்டதால், என்னால் தொடர்ந்து கண்காணிக்க முடிய வில்லை. அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கிறது என்பதை ‘தி இந்து’வைப் படித்த பிறகு தான் அறியமுடிந்தது. சிலை காணாமல் போனதாக அமைச்சரா கிய நான் புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது தொடர்பாக நடவடிக்கை எடுக் காதது மாபெரும் குற்றம். இதற் குக் காரணமான அதிகாரிகளை யும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதுடன், சிலைகளை மீட்டு வரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்தச் சிலைகள் குறித்து புரண்டு பேசும் நாகஸ்வாமி, இந்த விஷயத்தில் தீர்ப்புச் சொல் லத் தகுதியில்லாதவர். எனவே, அவரை ஒதுக்கிவிட்டு, உண்மை யிலேயே அக்கறை கொண்ட நிபுணர்களையும் அதிகாரிகளை யும் குஜராத் அனுப்பி, நமது சிலை களை மீட்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர், அறநிலையத் துறைச் செயலாளர் உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

kaliko11_2970883a.jpg

கபூருக்கு சான்றளித்த தமிழக நிபுணர்

வெளிநாட்டு ‘ஆர்ட் கேலரி’கள் மற்றும் மியூசியங்களில் கபூர் சம் பந்தப்பட்ட கடத்தல் சிலைகள் சிலவற்றுக்கு, சோழர் கால சிலைகள் சம்பந்தப்பட்ட தமிழகத் தைச் சேர்ந்த பிரபல ‘சோழா பிராண்ட்’ நிபுணர் ஒருவர் அளித் திருக்கும் சான்றையும் ஆவண மாக வைத்திருக்கிறார்கள். குறிப் பிட்ட அந்தச் சிலைகள் குறித்து அந்த நிபுணரின் கபூர் ஆர்ட் கேலரி நிர்வாகம் தகவல் கேட்டதாகவும், அதற்கு அவர், ‘இந்து சோழர் காலத்துச் செப்புத் திருமேனிதான் என்றும், இதுகுறித்த சர்ச்சைகள் எதுவும் இல்லை என்றும் தொலைபேசியில் வாய்மொழிச் சான்று அளித்ததாகவும் ‘ஆர்ட் கேலரி’ நிர்வாகம் ஆவணம் வைத் திருக்கிறது. அந்த ஆவணத்தின் நகல் நம்மிடமும் இருக்கிறது.

அந்தப் பிரபல நிபுணர் சான்று அளித்திருப்பதன் மூலம் அந்தச் சிலையின் மதிப்பு கூட்டப்பட்டிருக்கிறது. ‘‘அந்தச் சிலையைப் பற்றி தன்னிடம் கேட்டதுமே ‘இது தமிழகத்தைச் சேர்ந்த பழமையான சோழர் கால சிலை ஆயிற்றே; இது எப்படி அமெரிக்காவுக்குப் போனது?’ என்று அந்த நிபுணர் கேள்வி எழுப்பவில்லை. இங்கிருந்து கடத்தப்பட்ட நமது சிலை தற் போது அமெரிக்காவில் இன்னா ரிடம் இருக்கிறது என்ற விவரத் தையும் அந்த நிபுணர் தொல்லி யல் துறைக்கோ, போலீஸுக்கோ தெரிவிக்காதது ஏன்?’’ எனத் தொல் லியல் துறை சார்ந்தவர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.

திருத்துறைப்பூண்டியில் உள்ளது பிறவி மருந்தீஸ்வரர் கோயில். இங்கு, 990 கிராம் எடையுள்ள, குலோத்துங்க சோழன் காலத்து அரிய மரகத லிங்கம் (விடங்கர்) இருந்தது. 19.02.2009-ல் கோயில் ஜன்னலை அறுத்து இந்த லிங்கம் கொள்ளை யடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், வலங்கைமானைச் சேர்ந்த செந்தில் ஆகிய இருவரை 25.10.2009-ல் சென்னையில் போலீஸ் கைது செய்தது.

நீடூரைச் சேர்ந்தவர் விஜி. இவர் வேறொரு வழக்கில் திருச்சி சிறையில் இருந்தபோது, சிலை திருட்டுக் கும்பலைச் சேர்ந்த வேதாரண்யம் வைத்தியலிங்கத்துடன் பழக்க மாகியிருக்கிறார். அப்போது, மரகதலிங்கத்தைக் கொண்டு வந்தால் 50 கோடி ரூபாய்க்கு அதை விற்றுத் தருவதாக விஜியை உசுப்பேற்றியுள்ளார் வைத்தியலிங்கம்.

இதையடுத்து, ஜாமீனில் வெளியே சென்றதும் திருத் துறைப்பூண்டி கோயிலின் மரகத லிங்கத்தை கடத்தத் தீட்டம் தீட்டு கிறார் விஜி. இந்த வேலையில் மெர்லின் என்பவரையும் அவ ரது கூட்டாளிகளையும் ஈடுபடுத் திய விஜி, இதற்கு முன்பணமாக 2.5. லட்ச ரூபாயை மெர்லி னுக்குக் கொடுக்கிறார். பக்கா வாக திட்டம்போட்டு மரகத லிங்கத்தைக் கடத்திய மெர்லின், அதை காலி எரிவாயு சிலிண்டருக்குள் வைத்து அடைத்து, தனது வீட்டருகே புதைத்து வைத்துவிட்டார். பிறகு, அதை ரமேஷ் மூலமாக விஜியிடம் ஒப்படைத்தார். இந்த வழக்கை விசாரித்தபோது விடை தெரியாமல் இருந்த இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்தது.

- சிலைகள் பேசும்...

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-28-சோழன்-காலத்து-அரிய-மரகத-லிங்கம்/article8984220.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 29: தந்தத்தால் ஆன ஏசு சிலை!

 

 
தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன சிலுவையில் அறையப்பட்ட ஏசு சிலை
தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன சிலுவையில் அறையப்பட்ட ஏசு சிலை

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் சிவன் கோயிலிலும் ஒரு மரகத லிங்கம் இருந்தது. 201 கிராம் எடை கொண்ட இந்த லிங்கம் 1992 ஆகஸ்ட் மாதம் திருடு போனது. வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸார், மரகதலிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி 25.11.1999-ல் வழக்கை இழுத்து மூடிவிட்டார்கள்.

இந்நிலையில், திருத்துறைப் பூண்டி மரகதலிங்கம் தொடர்பான விசாரணையில் இந்த லிங்கம் தொடர்பாகவும் துப்புக் கிடைத் தது. அதை வைத்து மீண்டும் விசாரணையைத் தொடங்கிய போலீஸார், திருவெண்ணெய் நல்லூர் தேவசேனாதிபதி, விழுப் புரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், வேல்முருகன் ஆகியோரை டிசம்பர் 2009-ல் கைதுசெய்தனர். இவர்கள் தந்த தகவல்களை வைத்து, திருடுபோன திருக்கார வாசல் மகரகத லிங்கம் 17 வருடங் களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

சிங்கப்பூரின் ஏசியன் சிவிலை சேஷன் மியூசியம் கபூரிடம் இருந்து 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் நந்தி ஒன்றை 55 ஆயிரம் டாலருக்கும் 1997 அக்டோபரில் 22,500 டாலருக்கு அமராவதி சிற்பம் ஒன்றையும் வாங்கி இருக்கிறது. அதே மாதத் தில், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகப்பட்டினம் ‘நிற்கும் புத்தா’ ஐம்பொன் சிலையை 15 ஆயிரம் டாலருக்கும் 1998 பிப்ரவரி யில், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் கனோஜ் என்ற பகுதியைச் சேர்ந்த சிங்கம் சிலையையும் (35 ஆயிரம் டாலர்), பங்களாதேஷைச் சேர்ந்த காமுண்டா அம்மன் கற்சிலை யையும் (25 ஆயிரம் டாலர்) 5 ஆயிரம் டாலர் தள்ளுபடியுடன் 55 ஆயிரம் டாலருக்கு கபூர் அந்த மியூசியத்துக்கு விற்றிருக்கிறார்.

இதே மாதத்தில் 14 ஓவியங் களை 9,500 டாலருக்கும் 2002 ஏப்ரலில் 3 டெரகோட்டா ரேட்டில் களை (பொம்மைகள்) 10 ஆயிரம் டாலருக்கும் இவர்களுக்கு விற்ற வர், ஜூலை 2006-ல் 18-ம் நூற் றாண்டைச் சேர்ந்த கோவாவுக்குச் சொந்தமான, குழந்தை ஏசுவுடன் நிற்கும் மாதா சிலையை 1,35,000 டாலருக்கு விற்றிருக்கிறார். இந்தச் சிலையானது செலினா முகமதுவுக்கு அவரது தந்தை 1992-ல் அன்பளிப்பாக தந்ததாக வும் அதை கபூர் விலை கொடுத்து வாங்கியதாகவும் ஆவணங்கள் பேசுகின்றன.

silai1_2974168a.jpg

இதுவரை கபூரிடம் இருந்து மட்டும் 13 லட்சத்து 28 ஆயிரத்து 250 டாலருக்கு சிலைகள் உள்ளிட்ட கலைப் பொருட்களை வாங்கிய தாகக் கணக்குக் காட்டும் சிங்கப் பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூ சியம், தங்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட பொருட் களுக்காக 1.4 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு கபூர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் 20.03.2015-ல் வழக்கும் பதிவு செய்துவிட்டது.

புரந்தான் நடராஜர் மற்றும் விருத்தாச்சலம் அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வுக்கு கபூர் விற்றபோது, அவைகளுக்கான உத்தரவாதப் பத்திரம் ஒன்றையும் அளித்திருக்கிறார். இப்போது அந்தச் சிலைகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுவிட்டதால், அந்தச் சிலைகளுக்காக 5.7 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வும் நியூயார்க் நீதிமன்றத்தில் கபூர் மீது வழக்குப் போட்டிருக்கிறது.

இந்தியாவில் இருந்து கபூர் வழியாக 50 ஆயிரம் கலைப் பொருட்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டதாக ஓர் உத்தேசக் கணக்குச் சொல்கிறார்கள். 1,25,000 டாலர் மதிப்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் ஜெயின் சிலை, கோவாவில் இருந்து கடத்தப்பட்ட 3,37,500 டாலர் மதிப்புடைய தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன சிலுவையில் அறையப்பட்ட ஏசு, ஹைதரா பாத்துக்குச் சொந்தமான 1,75,000 மதிப்புடைய பழைய அலாரம், மதுராவில் இருந்து கடத்தப்பட்ட 1.08 மில்லியன் டாலர் மதிப் புடைய குஷன் புத்தா சிலை, இவை அனைத்தும் கபூரால் விற்கப்பட்டு தற்போது ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ மியூசியத்தில் உள்ளன.

ஜெய்பூர் மார்பிள் ஜெயின் சிலை, குஜராத் மகிஷாசுர மர்த்தினி சிலை, ஆந்திர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த புத்தர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பளிங்குச் சிலை, தமிழகத்தின் நடன சம்பந்தர் (புதையலாக எடுத்தது), விருத் தாச்சலம் பிரத்தியங்கரா சிலை, தமிழகத்தின் துவார பாலகர் சிலைகள், உத்தரப்பிரதேசத்தின் லட்சுமி நாராயணர் சிலை, மேல் ஆந்திரப்பிரதேசத்தின் பலராமர் சிலைகள் மற்றும் இந்தியாவில் இருந்து கபூரால் கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் அமெ ரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப் பூர் உள்ளிட்ட நாடு களின் மியூசிங்களிலும் ’ஆர்ட் கேலரி’களிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிஹாருக்குச் சொந்தமான சாமுண்டீஸ்வரி ஐம்பொன் சிலை, மேற்குவங்கத்தின் டெர கோட்டா பொம்மைகள், ஆந்திர மாநிலத்தின் 5 மார்பிள் ஸ்டோன்கள் - கபூரால் கடத்தி விற்கப்பட்ட இவை தற்போது சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியத்தில் உள்ளன.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-29-தந்தத்தால்-ஆன-ஏசு-சிலை/article8993831.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 30: கடத்தல் மன்னன் கபூரின் வேலைகள்!

 

 
 
  • ’நாளந்தா டிரையல்’ கண்காட்சியில் இடம்பெற்ற புத்தர் சிலை
    ’நாளந்தா டிரையல்’ கண்காட்சியில் இடம்பெற்ற புத்தர் சிலை
  • இந்திய பிரதமர் மோடியிடம் அன்றைய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் சிலைகளை ஒப்படைத்தபோது...
    இந்திய பிரதமர் மோடியிடம் அன்றைய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் சிலைகளை ஒப்படைத்தபோது...

சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூ சியம் 2007 நவம்பர் 21-ல் இருந்து மார்ச் 2008 வரை ‘நாளந்தா டிரையல் (Nalandha Trail)’ என்ற பிரம் மாண்ட கலைப் பொருள் கண் காட்சியை நடத்தியது. அப் போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்தான் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத் தார். இந்தியாவில் இருந்து கடத்தப் பட்டு, நியூயார்க்கில் தனது ‘ஆர்ட் கேலரி’யில் வைத்திருந்த புத்தர் சிலை ஒன்றை இந்தக் கண்காட் சிக்குக் கொண்டு வந்து பார்வைக்கு வைத்திருந்தார் கபூர்.

இந்தியப் பிரதமர் திறந்து வைத்த கண்காட்சியில் இடம்பெற்றது என்று சொல்லியே புத்தர் சிலையின் விலை மதிப்பைக் கூட்டினார் கபூர். இந்தச் சிலையும் இப்போது அமெரிக்கா வின் ‘ஹோம்லேண்ட் செக்யூரிட்டி’ போலீஸாரால் கபூரின் கோடவு னில் இருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து திருட்டுத்தனமாக இன்னொரு நாட் டுக்குக் கடத்தப்பட்ட இந்தியாவின் பொக்கிஷத்தை இந்திய பிரதமர் திறந்து வைத்த கண்காட்சியில் காட்சிக்கு வைத்து, அதன் விலை மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கிறார் கபூர். இப்போது தெரிகிறதா கபூர் எவ்வளவு கெட்டிக்காரர் என்று!

‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ மியூசியத் தில் கடத்தல் சிலைகள் அதிக அள வில் இருப்பதாக வெளியான தகவல் களை அடுத்து, அதுகுறித்து விரி வான விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி க்ரீனன் தலைமையில் கடந்த பிப்ரவரியில் குழு ஒன்றை அமைத் தது ஆஸ்திரேலிய அரசு.

க்ரீனன் குழுவானது கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட கலைப் பொருட்களில் உத்தேசமாக 100 பொருட்களை மட்டும் ஆய்வுக்கு எடுத்தது. அதில் 70 சதவீதம் முறை யான ஆவணங்கள் இல்லாமல் இருந்தன. இதையடுத்து, தங்க ளிடம் உள்ள அனைத்துக் கலைப் பொருட்கள் மற்றும் சிலைகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்திய அந்த மியூசியம், தங்களிடம் உள்ள கலைப் பொருட்கள் பற்றிய விவரங்களைப் பகிரங்கமாக இணை யத்தில் வெளியிட்டுவிட்டது.

கபூரால் கடத்தப்பட்ட புரந் தான் நடராஜர் சிலையும் அர்த்த நாரீஸ்வரர் சிலையும் ஆஸ்தி ரேலியாவில் உள்ள ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் இருந்து மீட்கப்பட்டது. இவற்றோடு ஆஸ்திரேலியாவின் தனியார் மியூ சியம் ஒன்று, தங்கள் வசம் வைத் திருந்த புரந்தான் கோயில் மாணிக்கவாசகர் சிலையைத் தாமாக முன்வந்து ஒப்படைத்தது. இந்த மூன்று சிலைகளையும்தான் 2014 செப்டம்பர் 5-ல் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது இந்திய வருகையின்போது டெல்லியில் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

புரந்தான் கோயிலின் ஐம் பொன் விநாயகர் சிலையை 2006-ல் அமெரிக்காவில் உள்ள டொலைடோ மியூசியத்துக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் டாலருக்கு விற்றிருக்கிறார் கபூர். அதற்கு முன் 1998-ல், ஒடிசாவில் இருந்து பாலா மன்னர்கள் காலத்திய வராகமூர்த்தி சிலையையும் கபூர் கடத்தி வந்து இந்த மியூசியத்துக்கு விற்றதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், கபூரை ஜெர்மனி யின் ‘இண்டர்போல்’ போலீஸார் கைதுசெய்த நேரத்தில், நியூயார்க் கில் இருந்த தனது மேனேஜர் ஆரோன் ஃப்ரீட்மேனுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பினார் கபூர். தனது நியூயார்க் ஆர்ட் கேலரியில் உள்ள நான்கு ஐம்பொன் சிலை களை எடுத்து, தனது பெண் தோழி செலினா முகமதுவிடம் கொடுத்துவிடவும் என்பதுதான் கபூர் அனுப்பிய அந்த ரகசிய தகவல்.

modi2_2975228a.jpg

இந்திய வம்சா வழியினரான செலினாவும் நியூயார்க்கில் ஆர்ட் கேலரி நடத்துகிறார். இவரது தந்தை அப்துல்லா மேக்கூப் 1969-ல் அமெ ரிக்கக் குடியுரிமை பெற்றவர். கபூருக்கும் செலினாவுக்கும் வணிக எல்லையைக் கடந்த நட்பு உண்டு. கபூர் சொன்னபடியே, சுத்தமல்லி கோயிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் மற்றும் 2 அம்மன் சிலை கள், பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட இன்னொரு நடராஜர் சிலை என மொத்தம் நான்கு ஐம் பொன் சிலைகளை எடுத்துக் கொண்டுபோய், 2011 நவம்பரில் செலினாவிடம் கொடுக்கிறார் ஃப்ரீட்மேன்.

அந்தச் சிலைகளின் மொத்த மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய். இந்தச் சிலைகளை இரண்டு நாட்கள் தன் வசம் வைத்திருந்த செலினா, ‘இவற்றை வைத்திருக்க எனக்கு அச்சமாக இருக்கிறது’ என்று சொல்லி, கபூரின் தங்கை சுஷ்மா சரீனிடம் கொடுக்கிறார். இந்த விவா கரங்களைத் தெரிந்து சுஷ்மா சரீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்கிறது அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ். அந்தச் சிலை களை மறைத்து வைத்ததை நீதிமன் றத்தில் ஒப்புக்கொண்ட சுஷ்மா சரீன், 10 ஆயிரம் டாலருக்கு பிணைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு, வெளியில் வந்துவிட்டார்.

நான்கு ஆண்டுகளாக தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ் கபூரிடம் இருந்து உபயோக மான எந்தத் தகவலையும் பெற முடியவில்லை என்றபோதும், அவர் ஜாமீனில் வெளியில் வரமுடியாத படிக்கு சாமர்த்தியமாக வலை பின்னிவைத்திருக்கிறது தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) போலீஸ். இதன் பின்னணி யில் அந்தப் பிரிவின் ஐ.ஜி-யான பொன் மாணிக்கவேலின் மதிநுட் பம் ஒளிந்திருக்கிறது. தமிழக சிலைக் கடத்தல் பின்னணிகள் குறித்து அவரிடமும் பேசினோம்.

- சிலைகள் பேசும்… |

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-30-கடத்தல்-மன்னன்-கபூரின்-வேலைகள்/article8998162.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 31: நேர்த்தியான சுத்தமல்லி கோயில் சிலைகள்!

 

 
சுத்தமல்லி நடராஜர்
சுத்தமல்லி நடராஜர்

‘‘விசாரணைகள் போய்க் கொண் டிருக்கிறது. இடை யில் எதாவது சொல்லி எனக்கு நானே சிக்கலை உண்டாக்கிக்கொள்ள மாட்டேன்’’ என்ற நிபந்தனையுடன் பேசிய, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி) ஐ.ஜி-யான ஏ.ஜி.பொன் மாணிக்கவேல், ‘‘சிலைக் கடத்தல் பின்னணியில் பல சதி காரர்கள் கைகோத்து இருக் கிறார்கள். எங்களது பலத்தை வைத்து நாங்கள் விசாரணை யில் முன்னேறிக் கொண்டிருக் கிறோம். இருந்தாலும் ‘இதன் பின்னணியில் இத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இத்தனை நாளைக்குள் தூக்கிவிடுவோம்’ என்றெல்லாம் நான் சொல்லவிரும்பவில்லை. ஆனால், யாரையும் தப்ப விட மாட்டோம்’’ என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமி ழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் கொலைகள் நடந்திருக்கின்றன. இது தொடர்பான வழக்குகளை 1,400 ஆய்வாளர்கள் விசாரித் திருக்கிறார்கள். எந்த வழக்கிலும் யாரும் அப்ரூவராக மாறியதாகத் தகவல் இல்லை. ஆனால், ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்ற பிறகும் சிலைக் கடத்தல் வழக்குகளில் 5 பேரை அப்ரூவராக்கி இருக்கிறார். இன்னும் ஒரு முக்கியமான நபரையும் அப்ரூவராக மாற சம்மதிக்க வைத் திருக்கிறார்’’ என்று பெரு மிதம் கொள்கிறார்கள் தற்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியில் இருப்பவர்கள்.

என்றாலும், ‘கபூரை நான்கு ஆண்டுகளாக சிறைக்குள் அடைத்து வைத்திருப் பவர்கள், தமிழகத்துக்குச் சொந்தமான அரிய சிலைகளை மறைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கும் கபூரின் தங்கை சுஷ்மா சரீனை கைது செய்து சிலை களை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று சென்னை வரைக்கும் வந்துபோன அமெரிக் காவின் ஹோம்லேண்ட் செக் யூரிட்டி போலீஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பிவிட்டுப் போயி ருக்கிறார்கள்.

சுத்தமல்லி கோயிலுக்குச் சொந்தமான நடராஜர், வீணா தாரா, ஆலிங்கனமூர்த்தி, அஷ்ட தேவர் ஆகிய நான்கு சிலை கள் நியூயார்க்கில் கபூரின் ‘ஆர்ட் கேலரி’யில் இருந்ததை அமெரிக்காவில் உள்ள ‘தி இந் தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப் பின் தன்னார்வலர்கள்தான் போட்டோ ஆதாரத்துடன் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக் குத் தகவல் கொடுத்தார்கள்.

silai1_2976320a.jpg

ஆலிங்கன மூர்த்தி

சுத்தமல்லி அந்தக் காலத் தில் சுத்தவல்லியாக இருந்திருக் கிறது. அதனால், சுத்தமல்லி கோயில் சிலைகளில் சுத்த வல்லி என்று பெயர் பொறிக் கப்பட்டுள்ளது. இது தெரியாமல், தன்னார்வலர்கள் ‘சுத்தவல்லி’ யைத் தேடி இருக்கிறார்கள். அது ‘சுத்தமல்லி’ என்பதை கண்டு பிடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. பிறகு, கபூர் ‘ஆர்ட் கேலரி’யில் எடுக்கப்பட்ட புகைப் படத்தையும் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் புகைப் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டும் ஒன்றுதான் என்பதை தன்னார்வலர்கள் உறுதிப்படுத் தினார்கள். அதுவரைக்கும் இந்த நடராஜர் சிலைதான் ஆஸ்தி ரேலியாவில் இருப்பதாக தமிழக போலீஸ் சொல்லிக் கொண்டிருந் தது. ஆனால், அது ஸ்ரீபுரந்தான் நடராஜர் என்பது இதற்குப் பிறகு தான் போலீஸுக்கே தெரிந்தது.

ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி கோயில்களுக்குச் சொந்தமான மொத்தம் 26 ஐம்பொன் சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டிருந்தும், இதுவரை நான்கு சிலைகள் மட்டுமே மீட்கப் பட்டுள்ளன. இன்னும் சில சிலை கள் பறிமுதல் செய்யப்பட்டும் தமிழகத்துக்கு மீட்டு வரப்பட வில்லை. பல சிலைகள் இருக்குமிடமே தெரியவில்லை.

டொலைடோ மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்ட ஸ்ரீபுரந்தான் விநாயகர் சிலை கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியிடம் ஒப் படைக்கப்பட்டது. நடன சம்பந்தர், மாணிக்கவாசகர் சிலைகளும் நியூயார்க்கில் கைப்பற்றப்பட் டன. இவை இரண்டும் தமிழகத் தில் இருந்து கடத்தப்பட்ட 8-வது நாளில் விற்கப்பட்டுள்ளன. இதில் மாணிக்கவாசகர் சிலையும் மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இன்னொரு அம்மன் (உமா) சிலை யும் சந்திரசேகரர் சிலையும் அமெரிக்காவில் கைப்பற்றப் பட்டுள்ளன.

ஸ்ரீபுரந்தான் சிலைகளைவிட சுத்தமல்லி கோயில் சிலைகள் நேர்த்தியானவை; பழமை யானவை. ஆனால், ‘ஆர்ட் கேலரி’யில் ஸ்ரீபுரந்தான் சிலை களை வாங்க போட்டிபோட்ட வர்கள் சுத்தமல்லி சிலைகளை வாங்கத் தயங்கி இருக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கோயில் சிலைகளின் அடியில் ‘சுத்தவல்லி’ என்று ஊரின் பெயர் இருந்ததுதான்.

திருடுபோய் மீட்கமுடியாத சிலைகள் ஒருபக்கமிருக்க, இன்னமும் வெளியில் தெரியாத சிலைத் திருட்டு சம்பவங்களும் இருக்கின்றன. அரியலூருக்கும் திருமானூருக்கும் இடையில் உள்ளது சுள்ளங்குடி. இங்கு சோழர் காலத்து சிவன்கோயில் ஒன்று உள்ளது. இங்கிருந்த 13 சிலைகளையும் காணவில்லை என்று கூறும் தொல்லியல் ஆர் வலர் பாண்டுரங்கன், ‘‘பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் கிராமத்தில் திருமுக்கூட்டீஸ் வரர் கோயில் உள்ளது. இங்கு கோஷ்டத்தில் இருந்த ஒன்பது சிலைகளில் விநாயகரைத் தவிர மற்ற எட்டு சிலைகளும் 20 வருடங்களுக்கு முன்பே களவுபோய்விட்டன. இதுவரை தேடுவார் இல்லை.

அந்த எட்டு சிலைகளில் பிரம்மா சிலை மட்டும் தீனதயாள் வீட்டில் கிடைத்துள்ளது. விழுப் புரம் மாவட்டம், குகையூரில் ராஜ நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கிருந்த ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் செப்புத் திருமேனிகளை நான்கு மாதங்களுக்கு முன்பு கடத்தி விட்டார்கள். இதுவரை ஒரு வழக்கும் இல்லை; எந்தத் தேடலும் இல்லை’’ என்கிறார்.

சிலைத் திருட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்தாலும், ஆயிரம் ஆண்டுகள் பழமை யான கோயில் சிலைகளையும் இன்னமும் போதிய பாதுகாப் பின்றி போட்டுவைத்திருக்கிறார் கள். அதற்கு ஒருசில உதாரணங் களை அடுத்து பார்ப்போம்.

silai11_2976317a.jpg

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-31-நேர்த்தியான-சுத்தமல்லி-கோயில்-சிலைகள்/article9002197.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 32: பாதிக்கப்படும் சோழ மண்டலம்!

 

 
சிலைகளைப் பார்வையிடும் நாகஸ்வாமி, ஐஜி பொன் மாணிக்கவேல்
சிலைகளைப் பார்வையிடும் நாகஸ்வாமி, ஐஜி பொன் மாணிக்கவேல்

சோழ மண்டலம்தான் சிலைக் கடத்தல் கும்பலின் முக்கி யக் கேந்திரம். சோழர் காலக் கோயில்கள் நிறைந்த இம் மண்டலத்தில் பழமையான சிலைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சிலைகள் உள்ளிட்டவைகளை ராஜேந்திர சோழன் அரண்மனை இருந்த மாளிகைமேடு பகுதி யில் திறந்தவெளியில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

கவனிப்பாரின்றி கிடக்கும் சிலைகள்

கொள்ளிடம் ஆற்றின் வடகரை யில் அருள்மொழி என்ற கிரா மத்தின் அருகே பத்தாம் நூற் றாண்டு காலத்து அம்மன் சிலை கேட்பாறின்றி விடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என் கிறார்கள் தொல்லியலாளர்கள். இதேபோல், தரங்கம்பாடிக்கும் ஆடுதுறைக்கும் இடையில் நீலவேலி என்ற இடத்தில் சிதிலமடைந்த சிவன் கோயிலிலும் கற்சிலைகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. விஜயநகரப் பேரரசு காலத்திய இந்தச் சிலை கள் 500 ஆண்டுகள் பழமை யானவை.

திருவாரூர் மாவட்டம் நாச்சி யார்கோயில் அருகே பவுத்திரீக புரம் என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது தகர்க்கப்பட்ட இந்தக் கோயில் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இங் குள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான துவாரகா - பாலகா சிலை கள் குலோத்துங்க சோழன் காலத்தில் வடிக்கப்பட் டவை. இவையும் இப் போது பாதுகாப்பற்ற நிலையில் தான் உள்ளன. இப்படி அரிய லூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சிதிலமடைந்த தொன்மையான கோயில்கள் பலவற்றில் அரிய பொக்கிஷங்களான கற் சிலைகள் கவனிப்பாறின்றி விடப்பட்டுள்ளன.

கடத்தல் அதிகரித்திருப்பது ஏன்?

40 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து உள் ளிட்ட நாடுகளில் மட்டுமே பெரிய மியூசியங்கள் இருந்தன. அதனால் அப்போது சிறிய அளவில் அதுவும் உலோகச் சிலைகள் மட்டுமே இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டன. இப் போது, பொருளாதாரத்தில் முன்னேறிய சிறிய நாடுகள் கூட தங்களது நாட்டில், பிரபல மான மியூசியங்களை உரு வாக்கி போட்டி போட்டுக் கொண்டு சிலைகளையும் கலைப் பொருட்களையும் வாங்கு கின்றன. அதேபோல். வெளிநாட்டு செல்வந்தர்களும் டாலர்களை கொட்டிக் கொடுத்து சிலைகளை விலைக்கு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், வெளிநாடுகளில் இந்தியச் சிலை களுக்கு இப்போது வரவேற்பு கூடுதல். அதனால் இப்போது கற்சிலைகளையும் அதிகமாக கடத்த ஆரம்பித் திருக்கிறார்கள்.

silai1_2978336a.jpg

சரியான புரிதல் இல்லை

நமது நாட்டில் உள்ள அரிய சிலைகள் குறித்து நாம் போதிய புரிதல் இல்லாமல் இருக்கி றோம். ஆனால், வெளிநாட்டினர் அதன் முக்கியத்துவத்தையும் தொன்மையையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை கோயில் களில் உள்ள கற்சிலைகள், ஐம் பொன் சிலைகள், மரசிற்பங்கள் உள்ளிட்டவைகளை படம் எடுத்து முறைப்படி ஆவணப்படுத்தி வைக்க அறநிலையத் துறை அதிகாரிகள் யாருமே மெனக் கெட்டதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் பெரும் பாலான அதிகாரிகளுக்கு வரலாறு, தொன்மை மற்றும் கலை சார்ந்த புரிதல் இல் லாததுதான் என்கிறார் முனைவர் நாகஸ்வாமி.

‘‘சிலைகளைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தங்களது பொறுப்பை உணராததால்தான் சிலைகள் கடத்தப்படுகின்றன. மராமத்து செய்கிறோம் என்கிற பெயரில் பழைய சிலைகளைத் தூக்கி வீசிவிட்டு புதிய சிலைகளை செய்துவைக்கிறார்கள். பழசுக்கு புதுசு மாற்றுகிறார்களா அல் லது கடத்தல்காரனுக்கு வசதியாக பழசைத் தூக்கி மூலையில் போடுகிறார்களா என்று சந்தேகம் வருகிறது’’ என்று ஆதங்கப்படுகிறார் நாக ஸ்வாமி.

பதிவுச் சட்டம் என்ன சொல்கிறது?

நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமைகொண்ட கலைப் பொருட் களை வைத்திருப்பவர்கள் அதை முறைப்படி பதிவுசெய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று 1972-ல் இந்திய அரசு தொல்லியல் சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. நூறாண்டு பழமையான கலைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றம் என்பதை மீண்டும் வலியுறுத்திய மத்திய அரசு, இந்தக் குற்றத்தைச் செய்வோ ருக்கு மூன்று மாதம் கடுங் காவல் ரூ.250 அபராதம் எனவும் சட்டத் திருத்தம் கொண்டுவந்தது.

பழமையான பொருட்களை பதிவுசெய்து சன்றிதழ் பெற் றிருந்தாலும் அவற்றை உள் நாட்டுக்குள்தான் விற்பனை செய்யமுடியும். அந்தப் பொருட் களை வாங்குபவர்கள் நான் இன்னாரிடம் இருந்து இந்தப் பொருளை வாங்கினேன் என பதிவுசெய்து புதிதாக சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பொருளை விற்றவரும் முறைப்படி தகவல் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதி காரிகள் எப்போது வந்து கேட் டாலும் அந்தப் பொருளை வாங்கியவரை விற்றவர் அடையாளம் காட்ட வேண்டும். இந்த விதிமுறைகள் எல்லாம் இப்போது பின்பற்றப்படு கின்றனவா என்பது கேள்விக்குறி தான்.

இதுகுறித்துப் பேசிய டாக்டர் நாகஸ்வாமி, ’’சிலைகள் உள் ளிட்ட பழமையான கலைப் பொருட்களைக் கடத்துகிறவர் களுக்கு இப்போது உள்ள தண்டனை போதாது. 5 ஆண்டு கள் சிறைத் தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என நான் உட்பட பல்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒன்பது பேர் குழுவானது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய் தோம்.

ஆனால், அப்படிச் சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் எங் களது தொழில் பாதிக்கப்படும் என கலைப் பொருள் வியாபாரிகள் போர்க் கொடி தூக்கினார்கள். இதன் பின்னணியில் என்ன நடந்ததோ தெரியாது. எங்களது பரிந்துரையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது மத்திய அரசு’’ என்றார்.

- சிலைகள் பேசும்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-32-பாதிக்கப்படும்-சோழ-மண்டலம்/article9007073.ece

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 33: ’ஆபரேஷன் ஹிடன் ஐடல்ஸ்’

 

கபூரால் கடத்தப்பட்ட இந்தியாவின் சொத்துக்கள்
கபூரால் கடத்தப்பட்ட இந்தியாவின் சொத்துக்கள்

பழமையான சிலைகள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் இந்தியாவில் சுமார் 70 லட்சம் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் பொருட்களுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது. 2010 - 2012 காலகட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகள் உள்ளிட்ட 4,408 கலைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை சொல்கிறது.

20 ஆயிரம் கோடி ரூபாய்

1950-லிருந்து சுமார் 20 ஆயிரம் பழமையான கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு வெளியே கடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் எனவும் இன்னொரு அறிக்கை சொல்கிறது. இந்தியாவிலிருந்து 1989 வரை 50 ஆயிரம் பழமையான கலைப்பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டுள்ளதாக 2011-ல் ’யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது.

முடக்கப்பட்ட கன்டெய்னர் ரகசியம்

இந்திய கோயில்களில் இருந்து கபூர் ஆட்களால் திருடப்பட்ட 80 கல் மற்றும் ஐம்பொன் சிலைகள் ‘மார்பிள் கார்டன் டேபிள் செட்’ ஃபர்னிச்சர்ஸ் என்ற பெயரில் கன்டெய்னர் மூலம் 2007-ல் மும்பை துறைமுகம் வழியாக நியூயார்க்கிற்கு கடத்தப்பட்டது. இது இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்து தடுத்து நிறுத்துவதற்குள் மும்பையிலிருந்து கப்பல் கிளம்விவிட்டது. அதனால் நியூயார்க் சுங்கத் துறைக்கு தகவல் கொடுத்து கன்டெய்னர் முடக்கப்பட்டது.

அதற்குள்ளாக இந்தக் தகவல் சில கறுப்பு ஆடுகள் மூலமாக கபூருக்கு தெரிவிக்கப்பட்டதால், ’கன்டெய்னரில் வரும் பொருட்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்துக் கொண்டார் கபூர். அன்பிறகு, இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தொல்லியல் துறை, சுங்கத் துறை, அரசியல் புள்ளிகள் என பலரும் கபூரோடு கைகோர்த்து நின்றதால் கன்டெய்னர் ரகசியங்களை வெளிக்கொண்டுவர இந்தியத் தரப்பில் யாரும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

’ஆபரேஷன் ஹிடன் ஐடல்ஸ்’

இதனிடையே, இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக் காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸுக்கு பிரெண்டன் ஈஸ்டர் (Brendon Easter) என்பவர் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இவர் பொறுப்பேற்றதும் கபூரின் கன்டெய்னர் விவகாரத்தைத் துருவுகிறார். கபூர் வட்டாரத்தின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கிய பிரெண்டன், அந்தக் கன்டெய்னரைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த ஐந்து ’கிரேட்டு’களில் கடத்தல் சிலைகள் உள்ளிட்டவை இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கபூரின் சிலைக் கடத்தல் வேலைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ’ஆபரேஷன் ஹிடன் ஐடல் (Operation Hidden Idol)’ என்ற நடவடிக்கையை தொடங்குகிறது ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ். இதற்காக, கபூரின் ’ஆர்ட் கேலரி’யில் தனது உளவாளி ஒருவரை வேலைக்குச் சேரவைக்கிறார் பிரெண்டன். உளவாளி மூலமாக கபூரின் கடத்தல் நடவடிக்கைகள், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட விஷயங்களை ஆடியோ மற்றும் வீடியோ ஆவணங்களாக திரட்டியவர், கபூரின் ’லேப் டாப்’ ரகசியங்களையும் அவருக்கே தெரியாமலேயே கைப்பற்றினார்.

kappor1___2983124a.jpg

கபூரிடம் 2,622 சிலைகள்

இதற்கிடையில் தான், கபூரை ஜெர்மனியில் கைது செய்கிறது ஜெர்மனி ‘இண்டர்போல்’ போலீஸ். இதையடுத்து, இன்னும் வேகமாக இயங்கிய பிரெண்டன், நியூயார்க்கில் கபூருக்குச் சொந்தமான ஆர்ட் கேலரி, கோடவுன்கள் என 12 இடங்களில் சோதனை நடத்தினார். அங்கிருந்து ஐம்பொன் சிலைகள் உள்பட மொத்தம் 2,622 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 107,682,000 டாலர்கள். இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.710 கோடி. அதில் எண்பதுக்கும் மேற்பட்ட சிலைகள் தமிழகத்தின் சொத்து.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டாலும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து மேல்நடவடிக்கையை தொடரமுடியாத சூழல். அதனால், தமிழக சிறையில் அடைபட்டுள்ள கபூரை விசாரணைக்கு எடுப்பதற்காக தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ்.

இதற்காக பிரெண்டன் ஈஸ்டர் தலைமையில் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸார் 2014-ல் தமிழகம் வந்தனர். அவர்களுக்கு தமிழக போலீஸார் போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் தமிழகம் வந்த பிரெண்டன் ஒருவாரம் இங்கே தங்கி இருந்தார். பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்கும் சென்று விசாரணை நடத்தினார். அந்தப் பயணத்தில், கபூரிடம் விசாரணையை முடித்துக் கொண்டு அவரை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி பிரெண்டன் கேட்டதாகவும் அதற்கு தமிழக போலீஸ் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் கடந்த மே மாதம் அவசரப் பயணமாக நியூயார்க் சென்றார். அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து சிலைகளை மீட்கும் விவகாரத்தில் தமிழக போலீஸார் மீது அதிருப்தி தெரிவித்த ஹோம்லேண்ட் செக்யூரிட்டி சர்வீஸ் போலீஸார், இனியும் இதேநிலை தொடர்ந்தால் தாங்கள் கைப்பற்றி வைத்திருக்கும் இந்தியாவின் 200 சிலைகளை இந்தியப் பிரதமரிடம் நேரில் ஒப்படைத்துவிடுவோம் என நெருக்கடி கொடுத்தார்கள். அதை சமாளிப்பதற்காக இங்கே தீனதயாள் உள்ளிட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கையை தொடங்கியது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸ்.

சிலைகள் பேசும்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-33-ஆபரேஷன்-ஹிடன்-ஐடல்ஸ்/article9021802.ece

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 34: தீனதயாள் பின்னணி!

 

 
nakku1_2982959f.jpg
 

அமெரிக்காவில் இருந்து மே 28-ல் இந்தியா திரும்பிய பிரதீப் வி.பிலிப், ரூ.11.75 கோடி மதிப் புடைய ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிறிய சக்கரத்தாழ் வார், பூதேவி சிலைகளைக் கையோடு எடுத்துவந்தார். அதற்கு முன்பாகவே தீனதயாள், லட்சுமிநரசிம்மன் உள்ளிட்டோ ருக்கு எதிரான நடவடிக்கைகளை அவசரகதியில் தொடங்கிவிட்டது தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி) போலீஸ். இதனி டையே, ஜூன் 7-ல் அமெரிக்கா சென்றிருந்த மோடியிடம் தமிழகத் துக்கு சொந்தமான ஏழு சிலை களை ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸார் ஒப்படைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் சிவன் கோயிலில் திருடுபோன விநாயகர், சம்பந்தர், பைரவர் சிலைகளின் படங்களை அண் மையில் பிரெஞ்சு ஆய்வு நிறு வனத்துக்கு அனுப்பி ஒப் பீடு கேட்டிருக்கிறது தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி போலீஸ். அவை சேந்தமங்கலம் கோயிலுக் குச் சொந்தமானவைதான் என் பதை உறுதிப்படுத்தியிருக்கிறது பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்.

84 வயதான தீனதயாள் ஆந்திர மாநிலம் கடப்பாவை பூர்வீகமா கக் கொண்டவர். சென்னை லயோலா வில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர், 1965-க்கு முன்பு வரை சென்னையில் தனது அண்ணன் நடத்தி வந்த ‘ஆர்ட் கேலரி’யில் பணிபுரிந்தார். 1965-ல் அங்கிருந்து வெளியேறி தனது மகள் அபர்னா வின் பெயரில் தனியாக ‘ஆர்ட் கேலரி’ தொடங்கினார்.

தீனதயாளும் மைசூரைச் சேர்ந்த சிலைக் கடத்தல் புள்ளி யான சீதாராமய்யரும் மிக நெருங் கிய கூட்டாளிகள். மைசூர் ராஜாக் களின் ஆஸ்தான ஜோதிடர்கள் பரம்பரையைச் சேர்ந்த சீதாராமய் யர் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தவர். தனக்கு வாரிசு இல்லை என்பதால் தனது மனைவியின் அண்ணன் மகன் லட்சுமிநரசிம்மனை தத்தெடுத்திருக்கிறார். இந்த லட்சுமிநரசிம்மனும் தீனதயாளும் சிலைக் கடத்தல் வியாபாரத்தில் கூட்டாளிகள்.

தீனதயாளைத் தொடர்ந்து லட்சுமிநரசிம்மனுக்குச் சொந்த மான, மகாபலிபுரம் ‘ஆர்ட் கேலரி’ யில் இருந்தும் ஒன்பது ஐம்பொன் சிலைகளைக் கைப்பற்றிய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, லட்சுமி நர சிம்மனையும் கைது செய்திருக் கிறது. கபூருடன் சஞ்சீவி அசோகன் மூலமாக தீனதயாள் தொடர்பு ஏற் படுத்திக் கொண்டு, அவருக்காக கோயில் சிலைகளைக் கடத்தி யிருக்கிறார். அதற்கான ஆவணங் களும் இப்போது கிடைத் திருக்கின்றன.

பழமை அல்லாத, தற்காலத் தில் செய்யப்படும் கலைப் பொருட் கள், கைவினைப் பொருட்கள், ஐம் பொன் சிலைகள், கல் சிற்பங் கள், மர சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து இப்போதும் அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கு அனுப் பப்படுகின்றன. இந்தியத் தொல் லியல் துறையிடம் முறையாக உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியும்.

இத்தகைய பொருட்களை அனுப்புவதற்கு அவை பழமை யான கலைப் பொருட்கள் இல்லை என்ற சான்றிதழை (Non-Antiquity Certificate) இந்திய தொல்லியல் துறையிடம் பெறவேண்டும். இதற் கென உள்ள படிவத்தில், வெளி நாட்டுக்கு அனுப்பவிருக்கும் கலைப் பொருள் பற்றிய விவரங் களைத் தெளிவாகக் குறிப்பிடுவ துடன், அவற்றின் புகைப்படத்தை யும் இணைக்க வேண்டும்.

உலோகச் சிலைகளாக இருந் தால் அவற்றின் பின்பக்கத் தோற் றம் குறித்த புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். போட் டோக்களின் பின்புறத்தில், அந்தப் பொருளின் நீளம், அகலம், உயரம், எடை, அது எதனால் செய்யப்பட் டது என்ற விவரங்களுடன் பொருளை அனுப்புபவரின் விவர மும் (கையெழுத்துடன்) கட்டாயம் இடம்பெறவேண்டும்.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி யாகும் பொருளாக இருந்தால் இந்த விவரங்களை சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு, தொல்லியல் துறை அதிகாரிகள் குறிப்பிடும் நாளில் அந்தப் பொருட் களை கொண்டுவந்து காட்சிப் படுத்த வேண்டும். இதற்காக இந்திய தொல்லியல் துறை அலு வலகத்தில் மாதத்தில் இரண்டு நாட்கள் கலைப் பொருட்களுக்கு சான்றளிக்கும் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.

தங்கள் முன்னிலையில் காட்சிப் படுத்தப்படும் கலைப் பொருட் களை இக்குழுவினர் பரிசீலனை செய்து, அவை பழமையான கலைப் பொருட்கள் இல்லை என்று தெரியவரும்பட்சத்தில் நான்கு நாட்களில் தடையின்மைச் சான் றிதழ் அளிப்பார்கள். இந்தச் சான் றிதழ் 180 நாட்கள் வரை செல்லுபடி யாகும். இப்படிச் சான்றளிக்கப் படும் பொருட்கள் முறையாக ‘பேக் கிங்’ செய்யப்பட்டு விமான நிலை யம் அல்லது துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படும். அங்கே சுங்கத்துறை அதிகாரிகள் முன் னிலையில் மீண்டும் ‘பேக்கிங்’ பிரிக்கப்பட்டு, சான்றிதழில் குறிப் பிடப்பட்டுள்ள பொருள்தான் பார் சலில் உள்ளதா என சரிபார்க்கப் படும். இதன்பிறகு மீண்டும் ‘பேக் கிங்’ செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும்.

சிலைகளைக் கடத்துபவர்கள் ஒரிஜினல் சிலையைப் போல போலி சிலையைத் தயாரித்து அந்த சிலையை வெளிநாட்டுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லி தொல்லியல் துறையில் சான்றிதழ் பெற்றுவிடுவர். அதையே ஆவண மாக்கி நிஜமான சிலையைப் பெட்டிக்குள் வைத்து ‘பேக்கிங்’ செய்து ஏற்றுமதி தளத்துக்குக் கொண்டுவந்துவிடுவார்கள்.

பொதுவாக, சுங்கத்துறை அதிகாரிகள், குறிப்பிடும்படியான புகார்கள் வந்தால் தவிர மற்ற நேரங்களில் இதுபோன்ற பார்சல் களை சந்தேகிப்பதில்லை. சான்றித ழில் உள்ளது போன்ற சிலை அந்தப் பார்சலில் இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பார்கள். அது இருந்தால் பார்சலை அனுமதித்து விடுவார்கள். அது பழமையான சிலையா, புதிதாக செய்யப்பட்ட சிலையா என்பதைப் பற்றி எல் லாம் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் அந்த பார்சலை நிறுத்தி வைப்பார்கள்.

- சிலைகள் பேசும்…

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-34-தீனதயாள்-பின்னணி/article9020741.ece

  • தொடங்கியவர்

சிலை சிலையாம் காரணமாம் - 35: தெய்வம் நின்று கொல்லுமா?

 

 
 
 
  • துர்கா சிற்பம்
    துர்கா சிற்பம்
  • silai1_2984055g.jpg
     

சுங்கத் துறையால் நிறுத்தி வைக்கப்படும் பார்சல்களில் உள்ள கலைப் பொருட்களின் தன்மையைப் பரிசோதிப்பதற்காக இந்திய தொல்லியல் துறையில் உள்ள சர்வேயர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் துறைமுகம், விமான நிலையங்களுக்கு வருவார்கள். அவர்கள் பரிசோதித்து தடையின்மை சான்றளித்தால் மட்டுமே அவை வெளிநாட்டுக்குப் பயணமாகும்.

தொல்லியல் துறையிடம் ஏற்றுமதிக் கான பொருட்களைக் காட்சிப் படுத்தும்போது அவைகள் சோதிக்கப் பட்டு, சான்றளிக்கப்பட்டதற்கான எந்த முத்திரையும் அவற்றின் மீது பதிக்கப் படுவது இல்லை. இதுதான் கடத்தல் புள்ளிகளுக்கு சாதகமாகிவிடுகிறது. ‘‘தொல்லியல் துறையிடம் காட்சிப் படுத்தப்பட்ட பொருட்கள் மீது முத்திரை பதிப்பதோடு அவற்றை அப்போதே ‘பேக்கிங்’ செய்து அதன் மீதும் முத்திரை பதிக்க வேண்டும். இப்படிச் செய்தால் கடத்தலைத் தவிர்த்துவிடலாம்.’’ என்கிறார்கள் கலைப் பொருள் ஏற்றுமதியில் இருப்பவர்கள்.

இதுகுறித்து பேசிய தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர், ‘‘நல்ல யோசனைதான். ஆனால், அதிகாரிகளிலும் சிலர் கள்ளம் பாய்கிறார்களே. முன்பாவது போலி சிலைக்கு சான்று பெற்று அத்தோடு ஒரிஜினல் சிலைகளையும் கலந்து வைத்துக் கடத்தினார்கள். ஆனால் இப்போது, அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு தைரிய மாக ஒரிஜினல் சிலைகளை மட்டுமே வைத்து கடத்துகிறார்கள். இதன் பின்னணியில் பல முக்கியக் கைகள் இருப்பதால் எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் சிலைக் கடத்தலைத் தடுக்கமுடியாது’’ என்றார்.

தமிழக சிலைக் கடத்தல் மன்னர்கள்

சுபாஷ் சந்திர கபூர், தீனதயாள், சஞ்சீவி அசோகன், லெட்சுமிநரசிம்மன் போன்றவர்கள் பிரபலமான சிலைக் கடத்தல் புள்ளிகளாக பேசப்பட்டாலும் சிறியதும் பெரியதுமாக இன்னும் பலர் இந்தத் தொழிலில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நாற் பது ஆண்டுகால தமிழக சிலைக் கடத்தல் தளத்தின் பிதாமகனாக சி.வி.ராமனைச் சொல்கிறார்கள். இவர் ஒரு சிவில் இன்ஜினீயர்.

காஞ்சிபுரத்தில் போலி பதிவெண் கொண்ட லாரியைப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ராமன். அப்போது சிறைக்குள் திருட் டுக் கும்பலைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி, சுப்பிரமணியன் உள்ளிட்டவர் களோடு அவருக்கு சகவாசம் ஏற்படு கிறது. அவர்களைக் கொண்டே சிறைக் குள்ளேயே ஒரு அணியை உருவாக்கிய ராமன், விடுதலை ஆனதும் அவர்களை வைத்தே கோயில் சிலைகளுக்குக் குறி வைக்கிறார். சிலையைப் பார்த்த மாத் திரத்தில் அது எந்தக் காலத்து சிலை என்ப தை தெளிவாகச் சொல்லி விடும் ராமன், கோயில்களுக்குச் சென்று சிலைகளை அடையாளம் காட்டுவார். அவரால் இயக்கப்படும் நபர்கள் அந்த சிலைகளை வெற்றிகரமாக கடத்தி முடிப்பார்கள் என்று சொல்கிறது போலீஸ்.

இதே போல் மும்பை வல்ல பிரகாஷ், அடையாறு கார்னெட், சென்னைவாசிகளான பகதூர்சிங் லாமா, ராமச்சந்திர ராஜ், பால்ராஜ் நாடார், மணி செட்டியார், சீதாராமய்யர் (இவர் தற்போது கைதாகியுள்ள லெட்சுமிநரசிம்மனின் மாமா), காரைக் குடி குமரப்ப செட்டியார், தினகரன், சுப்பிரமணியன், மதுரை மணி, நாச்சியார்கோவில் கிருஷ்ணமூர்த்தி, நெல்லை சேதுராமலிங்கம், தூத்துக் குடி உதயகுமார் உள்ளிட்டவர்களும் தமிழக சிலைக் கடத்தல் தளத்தில் இயங்கி இருக்கிறார்கள்.

silai11_2984057a.jpg

மோசமான முடிவுகள்

இவர்களில் பெரும்பகுதி யினர் இப்போது உயிருடன் இல்லை. அதே நேரம், இவர்களில் பலரது இறுதி நாட்கள் மிகவும் சோக மாகவே கழிந்திருக்கின்றன. இவர்களைப் பற்றி நன்கு அறிந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி ஒருவர் இப்படிச் சொன்னார்: ‘‘சட்டத்தின் ஓட்டைகளையும் பண பலத்தையும் வைத்து இந்தத் திமிங்கலங்கள் தப்பினாலும், தெய்வம் நின்று கொல்லும் என்ற சொலவடை நினைவுக்கு வருகிறது. பால்ராஜ் நாடார் ஹைதராபாத் லாட்ஜில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். விடுதியில் போலி முகவரி கொடுத்து தங்கி இருந்ததால், அடை யாளம் கண்டுபிடிக்க முடி யாமல் மூன்று நாட்கள் வைத்திருந்து, அழுகிய நிலையில்தான் அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது. பாகனேரியில் கோயில் சிலைகளைத் திருடிய ‘தமிழர் விடுதலைப் படை’ நாகராஜன், பின்னர் திண்டுக்கல்லில் சைலேந்திர பாபு எஸ்.பி-யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிவபுரம் நடராஜர் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட மும்பை தாஸ், 1987-ல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி போலீ ஸார் சம்மன் கொடுக்கப் போனபோது மாரடைப்பில் இறந்து கிடந்தார். நெல்லை சேதுராமலிங்கம் சிறைக்குள்ளேயே தூக்குமாட்டிக்கொண்டு உயிர்விட்டார். தூத்துக்குடி உதயகுமார் தற்கொலை செய்துகொண்டார். பகதூர் சிங் லாமா கார் விபத்தில் பலியானார்.

திருப்பனந்தாள் ராமசாமி தொழு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். நன்னிலம் அருகே துளார் நடராஜர் சிலையைத் திருடிய ராம கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார். நாச்சியார்கோவில் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகளும் கண் பார்வை இழந்தனர். மதுரை மணி கும்பகோணம் கோர்ட்டில் விடுதலை பெற்று வெளியில் வந்த போது பக்கவாதத்தால் சுருண்டு விழுந்தார்.

நெல்லையைச் சேர்ந்த ஆசீர்வாதம் தங்கய்யாவை மூன்று வழக்குகளில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம். முதல் வழக்கில் இருந்து அவர் விடுதலையான நாளில் குற்றாலத்தில் அவரது மகன் விபத்தில் பலியானார். இரண்டாவது வழக்கில் விடுதலையான அதே நாளில் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். மூன் றாவது வழக்கில் விடுதலையாகி நீதிமன்றத்தைவிட்டு வெளி யில் வந்த தங்கய்யா, அந்த இடத்தி லேயே பக்கவாதம் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார்’’ என்று சொன்ன அந்த அதிகாரி, ‘‘சிலைக் கடத்தல் வழக்குகளைக் கையாளும் போலீஸாரில் கடவுளுக்குப் பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் மனசாட்சிக்கே பயப் படாத பலரும் இருக்கிறார்கள். கடத்தல் புள்ளிகளோடு கைகோத்து கோடீஸ்வரர் ஆன போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள். அப்படி பணம் சம்பாதித்தவர்களில் விபரீதமான முடிவு களைச் சந்தித்தவர்களும் உண்டு.

காசிநாதன் என்ற ஆய்வாளர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சி.வி.ராமன் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்த ஆய்வாளர் ஜோசப் 1980-ல் பக்கவாதத்தில் முடங்கினார். ஆய் வாளர் காதர் மொய்தீன் சிலைத் திருட்டு வழக்கு ஒன்றில் போலி சிலை களைத் தயார்செய்தார். அதை வைத்தே குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர். தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். பிறகு, ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்ட அவர், 1996-ல் ரயில் தண்டவாளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்’’ என்று சொன்னார்.

35 ஆண்டுகளாக கோயில் சிலை களைக் கடத்திவிட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள வடநாட்டு கோடீஸ்வரர் சுபாஷ் சந்திர கபூரும் தீவிர நோயின் தாக்கத்தில் இருக்கிறார்.

சர்வதேச அளவில் ஆண் டுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் சிலைக் கடத்தல் மர்மங்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே என்னால் இந்தத் தொட ரில் விவரிக்க முடிந்திருக்கிறது. இன்னும் பல வெளியில் தெரியாத மர்மங்களும் விடை தெரியாத கேள்விகளும் ஏராளம் உண்டு. அவற்றுக்கான பதில்கள் பின்னொரு தருணத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்!

முந்தைய அத்தியாயம்: சிலை சிலையாம் காரணமாம் - 34: தீனதயாள் பின்னணி!

- நிறைந்தது

http://tamil.thehindu.com/opinion/reporter-page/சிலை-சிலையாம்-காரணமாம்-35-தெய்வம்-நின்று-கொல்லுமா/article9025352.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.