Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணம் சார்பில் பங்குபற்ற திருமலை பெண்கள், அம்பாறை ஆண்கள் அணிகள் தகுதி

Featured Replies

தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணம் சார்பில் பங்குபற்ற திருமலை பெண்கள், அம்பாறை ஆண்கள் அணிகள் தகுதி
 

 

42 ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் கிரிக்கெட் போட்­டி­களில் கிழக்கு மாகாணம் சார்­பாக பெண்கள் பிரிவில் திரு­கோ­ண­மலை மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் அம்­பாறை மாவட்ட அணியும் பங்­கு­பற்­ற­வுள்­ளன.

 

17912ampara.jpg

 

42 ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வுக்கு  கிழக்கு மாகாண அணியைத் தெரிவு செய்­வ­தற்­கான கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை  அக்­க­ரைப்­பற்று பொது விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­றது.

 

இதில் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த ஆண், பெண் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்­டன. இதில் ஆண்கள் பிரிவில் அம்­பாறை மாவட்­டமும், பெண்கள் பிரிவில் திரு­கோ­ண­மலை மாவட்­டமும் முத­லா­மி­டத்தைப் பெற்று தங்கப் பதக்­கத்தைப் பெற்­றுக்­கொண்­டார்கள்.

 

பெண்­க­ளுக்­கான போட்­டிகள் தலா  6 பேர் கொண்ட அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 ஓவர் போட்­டி­க­ளாக நடத்­தப்­பட்­டன. ஆண்­க­ளுக்­கான  போட்­டிகள் தலா  11 பேர் கொண்ட அணி­களுக்கிடை­யி­லான 15 ஓவர் போட்­டி­க­ளாக நடத்­தப்­பட்­டன.

 

பெண்­க­ளுக்­கான இறுதிப் போட்­டியில் திரு­கோ­ண­மலை மாவட்ட அணியும், மட்­டக்­க­ளப்பு மாவட்ட அணியும் மோதின. இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய திரு­கோ­ண­மலை மாவட்ட அணி 5 ஓவர் முடிவில் இரண்டு விக்­கெட்­களை இழந்து 62 ஓட்­டங்­களைப் பெற்­றது. 

 

1791213619969_691725824326622_8903100532

 

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய மடட்­டக்­க­ளப்பு மாவட்ட அணி 5 ஓவர் முடிவில் 2 விக்­கெட்­களை இழந்து 44 ஓட்­டங்­களைப் பெற்­றது. இதன்­மூலம் திரு­கோ­ண­மலை மாவட்ட அணி 18 ஓட்­டங்­க­ளினால் வெற்றி பெற்­றது.

 

ஆண்­க­ளுக்­கான இறுதிப் போட்­டியில் திரு­கோ­ண­மலை மாவட்ட அணியும், அம்­பாறை மாவட்ட அணியும் மோதின.

 

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய திரு­கோ­ண­மலை மாவட்ட அணி 15 ஓவர் முடிவில் 5 விக்­கெட்­களை இழந்து 132 ஓட்­டங்­களைப் பெற்­றது.  இதில் ஹுஸைன் 24, எஸ்.றூபன் 20, எம்.சனூஸ் 20 ஓட்­டங்கள் முறையே பெற்­றனர். 

 

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய அம்­பாறை மாவட்ட அணி 14.1 பந்­து­வீச்சு ஓவர் முடிவில் 7 விக்­கெட்­களை இழந்து 133 ஓட்­டங்­களைப் பெற்­றது. இதில்  சிபான் 43 ஓட்­டங்­க­ளையும், சாஸீர் 15 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். மூன்று விக்­கெட்­க­ளினால் வென்ற அம்­பாறை மாவட்ட அணி  தங்­கப்­ப­தக்­கத்தை சுவீ­க­ரித்­தது.

 

இந்த வெற்­றி­களின் அடிப்­ப­டையில் பெண்கள் பிரிவில் திரு­கோ­ண­மலை மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் அம்­பாறை மாவட்ட அணியும் கிழக்கு மாகாணம் சார்­பாக தேசிய விளை­யாட்டு விழாவில் கலந்து கொள்­ள­வுள்­ளன.

 

42 ஆவது தேசிய விளை­யாட்டு விழா இம்­முறை யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெ­று­வ­துடன் கிரிக்கெட் போட்டிகள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அம்பாறை மாவட்ட கிரிக்கெட் அணியின் வெற்றியில் பயிற்சியாளர் சித்தத் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் அஸ்வத் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது.
இந்­நி­கழ்வின் ஆரம்ப வைப­வத்­திற்கு கிழக்கு மாகாண விளை­யாட்­டுத்­துறைப் பணிப்­பாளர் என்.மதி­வண்ணன் கலந்து கொண்டு சிறப்­பித்­தார்.

 

இறு­திப்­போட்டி நிகழ்­வு­களில் திரு­கோ­ண­மலை மாவட்ட விளை­யாட்டு உத்­தி­யோ­கத்தர் ஏ.எச்.விம­ல­சேன, அம்­பாறை மாவட்ட விளை­யாட்டு உத்­தி­யோ­கத்தர் வீ.ஈஸ்­வரன், அம்­பாறை மாவட்ட கிரிக்கட் பயிற்­று­விப்­பாளர் சிதத் லிய­னா­ராச்சி, பயிற்­று­விப்­பா­ளர்­க­ளான எம்.ஐ.அமீர் அலி, எ.சப்றி நஸார், அக்­க­ரைப்­பற்று பிர­தேச விளை­யாட்டு உத்­தி­யோ­கத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்­பித்­தனர். 

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17912#sthash.nBSBsziS.dpuf
  • தொடங்கியவர்
கிழக்கில் பெண்களில் சம்பியனாக திருகோணமலை; ஆண்களில் அம்பாறை
 
12-07-2016 07:19 PM
Comments - 0       Views - 4

-எஸ்.எம்.அறூஸ், ரீ.கே.றஹ்மத்துல்லா

article_1468324442-Inkimac16LEAD.jpg

42ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கு கிழக்கு மாகாண அணியைத் தெரிவு செய்வதற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது, அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த ஆண், பெண் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இதில், ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்டமும் பெண்கள் பிரிவில் திருகோணமலை மாவட்டமும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்வின், ஆரம்ப வைபவத்திற்கு கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் என்.மதிவண்ணன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வீரா்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இறுதிப்போட்டி நிகழ்வுகளில் திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேன, அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், அம்பாறை மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சிதத் லியனாராச்சி, பயிற்றுவிப்பாளர்களான எம்.ஐ.அமீர் அலி, எ.சப்றி நஸார், அக்கரைப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

பெண்களுக்கான போட்டி அணிக்கு ஆறு பேர், ஐந்து ஓவர்களைக் கொண்டதாகவும், ஆண்களுக்கான போட்டி  அணிக்கு 11 பேர் 15 ஓவர்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில், திருகோணமலை மாவட்ட அணியும் மட்டக்களப்பு மாவட்ட அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி ஐந்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மடட்டக்களப்பு மாவட்ட அணி ஐந்து  ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், திருகோணமலை மாவட்ட அணியும், அம்பாறை மாவட்ட அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி 15 ஓவர்கல் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.  இதில் ஹூஸைன் 24, எஸ்.றூபன் 20, எம்.சனூஸ் 20 ஓட்டங்கள் முறையே பெற்றனர். 

பதிலுக்கு 133 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய அம்பாறை மாவட்ட அணி 14.1 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில்  சிபான் 43 ஓட்டங்களையும் சாஸீர் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றிகளின் அடிப்படையில் பெண்கள் பிரிவில் திருகோணமலை மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்ட அணியும் கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தெரிவித்தார்.

42ஆவது தேசிய விளையாட்டு விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதுடன், கிரிக்கெட் போட்டிகள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/176863/க-ழக-க-ல-ப-ண-கள-ல-சம-ப-யன-க-த-ர-க-ணமல-ஆண-கள-ல-அம-ப-ற-#sthash.zcWicmqg.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.