Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தேசப்பற்று இல்லாதவள் என்றபோது மனமுடைந்து போனேன்!' - சானியா

Featured Replies

'தேசப்பற்று இல்லாதவள் என்றபோது மனமுடைந்து போனேன்!' - சானியா

sans.jpgபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது சுயசரிதை புத்தகத்தை (ACE against ODDS) வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார்.

புத்தக வெளியீட்டின்போது, தன்னை   தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் விமர்சித்ததற்கு மனமுடைந்து போனதாக தெரிவித்தார்.

''நான் 2003ம் ஆண்டுதான் டென்னிஸ் களத்திற்கு வந்தேன். அப்போது எனக்கு 16 வயது. இத்தனை ஆண்டுகள் இந்த ஆட்டத்தை ரசித்து விளையாடி விட்டேன்.

பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பற்றி தவறாக எழுதப்பட்டு வந்தது. அது சரியோ தப்போ எனக்கு தெரியாது. ஒருவேளை தவறான புரிதலாக கூட இருக்கலாம்.

அதனால்தான் என்னை பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள ஒரு புத்தகம் தேவை என்று கருதினேன். இதற்கு முன் நான் எந்த புத்தகமும் எழுதியது இல்லை.

தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் என்னை விமர்சித்தபோது மனமுடைந்து போயிருக்கிறேன். ஒருவேளை எனது சிறிய வயதில் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்திருந்தால் கண்ணீரே விட்டுருப்பேன்.

 

ஓரளவுக்கு மெச்சூரிட்டி ஆன பிறகுதான் இதுபோன்ற விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்ள நேரிட்டது. இந்த நாட்டில் 120 கோடி மக்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை இருக்கப் போவதில்லை. அதில் 20 கோடி பேர் என்னை வெறுத்தாலும் 100 கோடி பேர் என்னை நேசிக்கிறார்கள் அதுபோதும் என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்'' என்றார்.

மேலும் , ''சோகைப்பை திருமணம் செய்த பிறகு எனது தேசப்பற்று மீது இன்னும் சந்தேகம் அதிகரித்தது.  எனக்கும் சோகைப்புக்கு நல்ல புரிதல் இருந்ததால் எங்களை இருவரையும் இந்த விஷயம் பாதித்ததில்லை.  நானும் ஒருநாள் குழந்தை பெற்றுக் கெர்ள்வேன். ரொட்டி தயாரிப்பேன். ஆனால் இப்போது இல்லை. அதற்கு தக்க சமயம் வரும்போது அதுவெல்லாம் நடக்கும். டென்னிசில் இருந்து விரைவாக ஓய்வு பெறும் எண்ணம் இல்லை" என தெரிவித்து உள்ளார்.

http://www.vikatan.com/news/sports/66266-painful-thing-is-to-be-called-unpatriotic-sania.art

  • தொடங்கியவர்
என்னால் திரைப்படங்களில் நடிக்க முடியும்! ஆனால்... - இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா விளக்குகிறார்
2016-07-19 18:44:29

18044761778-01-02.jpgஇந்­திய டென்னிஸ் நட்­சத்­தி­ர­மான சானியா மிர்ஸா, சர்­வ­தேச டென்னிஸ் போட்­டி­களில் பிர­கா­சிக்கத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து அவரை சினி­மாவில் நடிக்க வைக்க பலர் முயற்­சித்­தனர்.

 

பொலிவூட் பிர­ப­லங்கள் பல­ருக்கும் சானியா மிர்ஸா நெருக்­க­மா­னவர். இந்­நி­லையில், தான் சினி­மாவில் நடிக்கத் தயாரா என்ற கேள்­விக்கு சானியா மிர்ஸா பதி­ல­ளித்­துள்ளார்.


சானியா மிர்­ஸாவின் சுய­ச­ரிதை நூலான  'Ace Against Odds' (ஏஸ் எகென்ஸ்ட் ஒட்ஸ்) எனும் நூலின் வெளி­யீட்டு விழா மும்­பையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது.

 

பொலிவூட் சுப்பர் ஸ்டார் சல்மான் கான் சகிதம் இந்­நூலை மும்­பையில் வெளி­யிட்டார் சானியா மிர்ஸா.


எதிர்­கா­லத்தில் சானியா திரைப்­ப­டங்­களில் நடிப்­பாரா என இவ்­வை­ப­வத்தில் செய்­தி­யா­ளர்கள் கேட்­டனர். 'என்னால் நிச்­ச­ய­மாக நடிக்க முடியும். மிக நீண்ட கால­மாக இதை நான் அறிவேன்.

 

ஆனால், நான் சினி­மாவில் நடிப்பேன் என எண்­ண­வில்லை' என சானியா மிர்ஸா பதி­ல­ளித்தார்.


பொலி­வூட்டின் பிர­பல பெண் இயக்­கு­னரும் நடி­கை­யு­மான பராஹ் கானும் சானியாவும் மிக நெருங்கிப் பழ­கு­ப­வர்கள்.

 

ஷாருக் கான் நடித்த 'ஓம் சாந்தி ஓம்', 'ஹெப்பி நியூ இயர்' முத­லான படங்­க­ளையும் இயக்­கி­யவர் பராஹ் கான்.


18044741086-01-02.jpgஇந்­நி­லையில் பராஹ் கான் இயக்கும் திரைப்­ப­ட­மொன்றில் சானியா நடிக்­க­வுள்­ள­தாக கூறப்­ப­டு­வது குறித்து செய்­தி­யா­ளர்கள் கேள்வி எழுப்­பினர்.


அக்­கேள்­விக்கு சானியா மிர்ஸா பதி­ல­ளிக்­கையில், 'அப்­படி எது­வு­மில்லை. பராஹ் எனது நெருங்­கிய நண்­பி­களில் ஒருவர்.

 

அதி­க­மான நேரம் நான் அவ­ருடன் இணைந்து காணப்­ப­டு­வதால் அவர் என்னை வைத்து படம் இயக்கப் போகி றார் என மக்கள் எண்­ணு­கின்­றனர்' எனக் கூறினார்.


கடந்த வாரம் சானி­யாவின் சுய­ச­ரிதை நூல் ஹைத­ர­பாத்தில் வெளி­யி­டப்­பட்­ட­போது, பொலி­வூட்டின் மற்­றொரு சுப்பர் ஸ்டாரான ஷாருக் கான் இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

தனது தந்தை இம்ரான் மிர்ஸா, ஊட­வி­ய­லாளர் ஷிவானி குப்தா ஆகி­யோ­ருடன் இணைந்து இந்­நூலை சானியா மிர்ஸா எழு­தி­யுள்ளார்.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொய்ப் மாலிக்கை திரு­மணம் செய்த சானியா மிர்ஸா, தற்­போது மகளிர் இரட்­டையர் டென்னிஸ் போட்­டி­களில் சுவிட்­ஸர்­லாந்தின் மார்ட்­டினா ஹிங்­கி­ஸூடன் இணைந்து விளை­யாடி வரு­கிறார்.

 

18044Salman_2937005f.jpg

 

'சான்­டினா' (SanTina) என செல்­ல­மாக அழைக்­கப்­படும் சானியா- மார்ட்­டினா ஹிங்கிஸ் ஜோடி தற்­போது மகளிர் இரட்­டையர் டென்­னிஸில் உலகின் முதல் நிலை ஜோடி­யாக விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.


18044_new.jpgஇவ்­வ­ருடம் சிங்­கப்­பூரில் நடை­பெ­ற­வுள்ள 70 லட்சம் டொலர் பரிசுத் தொகைக் கொண்ட பீ.என்.பீ. பரிபாஸ் டென்னிஸ் சுற்­றுப்­போட்­டிக்கு தகுதி பெற்ற முதல் அணி­யா­கவும் சான்­டினா ஜோடி விளங்­கு­கி­றது.


'பெண்கள் குழந்தை பெற்­றால்தான் செட்டில் ஆகி­றார்கள் என அர்த்­தமா? – சானியா பதி­லடி

 

டென்னிஸ் உலகில் முன்­னிலை வீராங்­க­னை­யாக சானியா மிர்ஸா விளங்கும் நிலையில், அவர் எப்­போது வாழ்க்­கையில் செட்­டி­லாகப் போகிறார் என  செவ்வி கண்ட இந்­தி­யாவின் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ரான ராஜ்தீப்  கேட்ட கேள்­விக்கு சூடாக பதில் கொடுத்தார் சானியா.


இப்­ பேட்­டி­யின்­போது ஒவ்­வொரு கேள்­வி­யாகக் கேட்டு கொண்டு வந்த ராஜ்தீப் சர்­தேசாய் திடீ­ரென்று, 'நீங்கள் எப்­போது செட்டில் ஆகப் போகி­றீர்கள்?' என்று ஒரு கேள்­வியைக் கேட்டு விட்டார்.


அதா­வது, 'எப்­போது குழந்தை பெற்றுக் கொண்டு, டென்­னிஸை விட்­டு­விட்டு செட்டில் ஆகப்­போ­கி­றீர்கள்?' என்ற அர்த்­தத்தில் அமைந்­தது அக் கேள்வி.


'நான் இப்­போது செட்டில் ஆக­வில்லை என்று நினைக்­கி­றீர்­களா? கலப்பு இரட்­டையர் ஆட்­டத்தில் முத­லி­டத்தில் இருப்­ப­தை­விட, நான் குழந்தை பெற்­றுக்­கொள்­ளாமல் இருப்­பதால் நீங்கள் ஏமாற்றம் அடைந்­த­தாக தெரி­கி­றது.


18044x6ubqka7osh71z2t.D.0.Indian-Tennis-பெண்கள் எப்­போதும் எதிர்­கொள்ளும் கேள்­வி­களில் இதுவும் ஒன்று. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, நாங்கள் எத்­தனை விம்­பிள்­டனில் வெற்றி பெறு­கிறோம், நம்பர் ஒன் பிளே­ய­ராக இருக்­கிறோம் என்­ப­தெல்லாம் செட்டில் ஆன­தாக கணக்கில் எடுத்துக் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

 

குழந்தைப் பெற்றால் மட்­டுமே செட்டில் ஆன­தாக நினைக்­கி­றீர்கள்' என உண்­மையை உல­க­றிய தைரி­ய­மாக உடைத்து விட்டார்.


சானி­யாவின் பதிலைத் தொடர்ந்து உண்­மையை உணர்ந்த ராஜ்தீப், உடனே மன்­னிப்பு கேட்டார். 'நான் கண்­டிப்­பாக என் தவ­றுக்கு மன்­னிப்பு கேட்­டுக்­கொண்டே ஆக­ வேண்டும்.

 

தவ­றான வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்­தி­யது என் தவ­றுதான். உண்­மை­யா­கவே நீங்கள் சொன்­னது உண்­மைதான் சானியா. ஒரு ஆண் பிளே­ய­ரிடம் யாரும் இந்தக் கேள்­வியை கேட்க மாட்­டார்கள்' என்று கூறினார்.


தவறை உணர்ந்து மன்­னிப்பு கேட்டவரிடம், 'தவறை உணர்ந்து தேசிய அளவிலான சேனலாக இருந்தாலும் மன்னிப்பு கேட்ட முதல் பத்திரிகையாளர் நீங்கள் தான்' என்று கூறினார்.

 

1804413512148_1292678367428456_513506646

 

அடித்து விரட்டிய பந்து எத்தனை முறை வந்தாலும் திரும்ப அடித்தே பழக்கப்பட்ட சானியா மிர்ஸா, தன்னை தாக்க வந்த கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என பலரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=18044#sthash.BSB6Dcj0.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.