Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி உரைகள் உணர்த்தும் யதார்த்தம்!

Featured Replies

ஜேர்மன் நன்கொடையின் பயனாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகிய மூவரும் நேற்று ஆற்றிய உரையானது உண்மையிலேயே எமது நாட்டின் யதார்த்தங்களை எடுத்துக் காட்டியிருக்கின்றது.

இம்மூவரது உரையிலும் சம்பிரதாயத்துக்கான போலித்தனங்களைக் காண முடியவில்லை.

அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வட பகுதிக்கு சென்றிருந்த வேளைகளிலெல்லாம் தமிழில் ஆற்றிய உரையைச் செவிமடுத்து சலித்துப் போன தமிழ் மக்கள், நேற்றைய உரையை வேறுபட்ட உணர்வுடனேயே நோக்கினர்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனது உரையை ஆங்கிலத்தில் நிதானமாகவும் ஆக்ரோஷமாகவும் ஆற்றினார். அவர் அங்கு தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்.

சிங்கள மக்களுக்கு நிகரான சம உரிமையைப் பெற்று வாழ்வதற்கே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறிய சம்பந்தன், ‘இலங்கை எமது நாடு, நாம் இலங்கையர்கள்’ என்று நேற்றைய மேடையில் முழக்கமிட்டதைக் காண முடிந்தது.

இந்நாட்டில் தமிழினம் அன்று தொட்டு இன்று வரை போராடி வருவது சம உரிமைக்காகவேயன்றி, நாட்டைப் பிரிப்பதற்கல்லவென்பதை சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் மாத்திரமன்றி ஜேர்மனியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அந்நாட்டுத் தூதுவர் முன்னிலையிலும் சம்பந்தன் தெளிவாக நேற்று எடுத்துக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேற்றைய உரையின் போது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பார்க்கிலும், தென்னிலங்கையில் தீவிரமடைந்துள்ள தேசவிரோத சக்திகளையே பெருமளவு சாடியதைக் காண முடிந்தது.

சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இனவாத சக்திகள், மக்கள் மத்தியில் உண்மைகளைத் திரித்துக் கூறி அரசியல் இலாபமடைவதற்கு முற்படுவதாக ஜனாதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மாத்திரமன்றி, நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வலியுறுத்திக் கூறினார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரையும் இனவாதத்துக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது.

பல்லின மக்கள் வாழ்கின்ற நாடொன்றில், சிறுபான்மை இனங்களை காலின் கீழ் போட்டு மிதித்தபடி பெரும்பான்மை மக்கள் வாழ விரும்புவார்களாயின், இங்கு ஒருபோதுமே அமைதி நிலவப் போவதில்லையென்று உறுதியாகக் கூறினார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.

கிளிநொச்சியில் நேற்று ஆற்றப்பட்ட உரைகள் தொடர்பாக பெரும்பான்மை சமூகம் மாத்திரமன்றி சிறுபான்மையின மக்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இனவாதத்தில் ஊறிப் போயிருக்கும் நாட்டில் இரண்டாம் பட்சமாகக் கணிக்கப்பட்டு வரும் இனமொன்றின் அரசியல் தலைவர் “நாம் இலங்கையர், இது எமது நாடு” என்று ஆக்ரோஷமாக முழங்குகிறாரென்றால், சிறுபான்மை சமூகம் இலங்கை மீது இன்னும் கொண்டிருக்கும் தேசப்பற்று எத்தகையதென்பதை சிங்கள சமூகம் நன்கு புரிந்து கொள்வது இங்கு அவசியம்.

அதேசமயம் ‘இலங்கையர்’ என்ற வரையறைக்குள் தாங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற அச்சமூகத்தின் உள்ளார்ந்த ஏக்கத்தையும் பெரும்பான்மை சமூகம் உணர்ந்து கொள்வது அவசியமாகிறது.

இவ்வாறு சிறுபான்மையின மக்களை சமமாக மதிக்கத் தவறும் பட்சத்தில், நாட்டின் எதிர்காலம் என்னவாகுமென்பதை ஜனாதிபதி, மஹிந்த சமரசிங்க ஆகியோரின் உரைகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.

எமது நாட்டில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இன முரண்பாட்டின் விளைவாகத் தொடருகின்ற அவலங்கள் இவைதான். நாட்டின் சுபிட்சத்துக்கு அடிப்படையானது இன ஐக்கியமே ஆகும்.

இனங்களுக்குடையே முரண்பாடுகளும் மோதல்களும் நிலவுகின்ற நாடுகள் சீரழிந்த நிலையிலேயே உள்ளதை உலக நடப்புகள் எமக்குப் புலப்படுத்துகின்றன.

முன்னைய ஆட்சியில் சுமார் பத்து வருட காலமாக எமது நாடு இனவாதத்துக்குள்ளேயே மூழ்கிப் போயிருந்தது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முன்னைய ஆட்சியாளர்கள் இனவாதத்தையே கருவியாகப் பயன்படுத்தி வந்தனர். கடந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இனவாதத்திலிருந்து நாடு மீட்கப்பட்டுள்ளது. இனங்களின் சமத்துவம் பேணுவதில் இன்றைய அரசு காண்பிக்கும் அக்கறையை சிறுபான்மை சமூகம் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதென்பது உண்மையில் அரசியல்வாதிகளின் கைகளில் இல்லை. மக்கள் மத்தியிலேயே உண்மையான ஐக்கியம் உருவெடுக்க வேண்டும்.

http://www.tamilwin.com/politics/01/111381

  • தொடங்கியவர்
20 minutes ago, போல் said:

அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இனவாதத்தில் ஊறிப் போயிருக்கும் நாட்டில் இரண்டாம் பட்சமாகக் கணிக்கப்பட்டு வரும் இனமொன்றின் அரசியல் தலைவர் “நாம் இலங்கையர், இது எமது நாடு” என்று ஆக்ரோஷமாக முழங்குகிறாரென்றால்,

அவர் கொஞ்சமும் சூடு, சுரணை அற்றவர் என்பது நிதர்சனம்.

 

20 minutes ago, போல் said:

நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வலியுறுத்திக் கூறினார்.

 

22 minutes ago, போல் said:

சிறுபான்மை இனங்களை காலின் கீழ் போட்டு மிதித்தபடி பெரும்பான்மை மக்கள் வாழ விரும்புவார்களாயின், இங்கு ஒருபோதுமே அமைதி நிலவப் போவதில்லையென்று உறுதியாகக் கூறினார்

 

23 minutes ago, போல் said:

கடந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இனவாதத்திலிருந்து நாடு மீட்கப்பட்டுள்ளது. இனங்களின் சமத்துவம் பேணுவதில் இன்றைய அரசு காண்பிக்கும் அக்கறையை சிறுபான்மை சமூகம் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

 

23 minutes ago, போல் said:

இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதென்பது உண்மையில் அரசியல்வாதிகளின் கைகளில் இல்லை. மக்கள் மத்தியிலேயே உண்மையான ஐக்கியம் உருவெடுக்க வேண்டும்.

கிளிநொச்சி உரைகள் உணர்த்தும் யதார்த்தம், சிங்கள-பௌத்த இனமதவெறி அரசியல்வாதிகள் பேசிப்பேசி தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவார்கள். மெய்மறந்த ஏமாந்த பேர்வழிகளுக்கும், தமிழினப் படுகொலையாளர்களின் ஒட்டுண்ணி கும்பல்கள் ஆகா, ஓகோ என்று ஜாலரா போடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.