Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் ஆஜராகினார்

Featured Replies


யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் ஆஜராகினார்
 
 

article_1468990666-IMG_5477.JPG

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) ஆஜராகினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், வணிக முகாமைத்துவபீட பீடாதிபதி ரி. வேல்நம்பி மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இவரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) இரவு விசாரணைக்கு அழைத்த கோப்பாய் பொலிஸார், விசாரணைகள் முடிந்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

article_1468990676-IMG_5480.JPGarticle_1468990682-IMG_5479.JPG

- See more at: http://www.tamilmirror.lk/177491/ய-ழ-பல-கல-க-கழக-ம-ணவர-ஒன-ற-யத-தல-வர-ந-த-மன-ற-ல-ஆஜர-க-ன-ர-#sthash.ZwBaTBme.dpuf
  • தொடங்கியவர்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்குப் பிணை
 
 

article_1468996918-gavel05.jpg-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி.சிசிதரனை, தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று புதன்கிழமை (20) அனுமதியளித்தார்.

அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவர் ஒன்றியத் தலைவரை செவ்வாய்க்கிழமை (19) கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர்.

இந்நிலையில் மாணவன் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகிய மாணவன், பிணை விண்ணப்பம் செய்தார்.

மாணவர் ஒன்றியத் தலைவரால் தாக்கப்பட்ட மாணவன் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், இவருக்குப் பிணை வழங்கக்கூடாது என பொலிஸார் மன்றில் கூறினர்.

எனினும், மாணவர் ஒன்றியத் தலைவர் எந்தவிதமான தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடவில்லையென சட்டத்தரணி கூறியதையடுத்து, நீதவான் பிணை வழங்கினார்.

- See more at: http://www.tamilmirror.lk/177516/ய-ழ-பல-கல-க-கழக-ம-ணவர-ஒன-ற-யத-தல-வர-க-க-ப-ப-ண-#sthash.P94btzIb.dpuf

uni-student-thisitharan.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலைகழக மாணவன் பிணையில் விடுதலை - எம்.ஏ.சுமந்திரன் மாணவன் சார்பில் முன்னிலையாகினார்:-

 

யாழ்.பல்கலைகழக மாணவன் பிணையில் விடுதலை - எம்.ஏ.சுமந்திரன் மாணவன் சார்பில் முன்னிலையாகினார்:-

யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான மாணவன் தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலைகழகத்தில் கடந்த சனிக்கிழமை விஞ்ஞான பீட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் , தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன், தன் மீது யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட மூன்று மாணவர்களே தாக்குதல் மேற்கொண்டார்கள் என முறைப்பாட்டை பதிவு செய்தார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கோப்பாய் பொலிசாரினால் விசாரணைகளுக்காக குறித்த மூன்று மாணவர்களையும் , அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை காலை யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தினால் மாணவர் ஒன்றிய தலைவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மாணவன் சார்பில் முன்னிலையாகி பிணை விண்ணப்பம் கோரி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

அதில் குறித்த மாணவன் , யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவராக இருப்பதனால் இவருடைய பெயர் மாணவர் மத்தியில் நன்கு அறியப்பட்டது. அதனாலேயே தாக்குதலுக்கு இலக்கான மாணவன் இந்த மாணவின் பெயரை முறைப்பாட்டில் குறிப்பிட்டு உள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் காலம் தாழ்த்தி முறைப்பாடு பதிவு செய்ததன் நோக்கம் என்ன?


அதேவேளை குறித்த மாணவன் தாக்குவது போன்றதான புகைப்படங்களோ , காணொளிகளோ இல்லை. இந்த மாணவன் தாக்குதலுக்கு இலக்காகுவது போன்று தான் உள்ளது. எனவே இந்த மாணவனே தாக்குதலுக்கு இலக்கான மாணவன் ஆவான்.

அத்துடன் மாணவனை விளக்கமறியலில் தடுத்து வைத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். எனவே இந்த மாணவனை பிணையில் விடுவிக்க வேண்டும் என சமர்ப்பணம் செய்தார்.

மாணவனை பிணையில் விடுவிக்க பொலிசார் ஆட்சேபனை தெரிவித்தார்கள். தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன் தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாலும் , இன்றைய தினம் மாணவனுக்கு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் , நீதிமன்றில் தெரிவித்து மாணவனுக்கு பிணை வழங்க ஆட்சேபணை தெரிவித்தனர்.

இவற்றை அடுத்து நீதவான் , பொலிசாரின் விசாரனைகளுக்களுக்கு மாணவனை ஒத்துழைக்குமாறும் இ, தலா  இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மாணவன் வாக்குமூலம் அளிப்பார்.

நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவன் இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது வாக்கு மூலத்தை பதிவு செய்யவுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134210/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மோதல் சம்பவத்திற்கு காரணமானவர் என சிங்கள மாணவர்களினால் குற்றஞ் சாட்டப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர் த.சிசிதரன் இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக மாணவர் ஒன்றிய தலைவர் த.சிசிதரன் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்ற மோதலில் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு மாணவன் தலையில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அந்த மாணவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் த.சிசிதரனை கைது செய்ய முயன்றிருந்தனர்.

இதனை அறிந்து சிசிதரன் இன்றைய தினம் காலை நீதிமன்றில் ஆஜரானார்.

இதன்போது, பிணை வழங்க கேட்கப்பட்டது. எனினும் சிங்கள மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளமையினால் பிணை வழங்க பொலிஸார் ஆட்சேபம் தெரிவித்தனர்.

எனினும், சிசிதரன் தாக்கியதாக சிங்கள மாணவன் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், சிசிதரன் தாக்கியமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என கூறியிருந்தோம்.

மேலும், தான் எவரையும் தாக்கவில்லை. தன்னையே சிங்கள மாணவர்கள் தாக்கினர் எனவும் அவர்களுடைய பெயர்களும் தமக்கு தெரியும் எனவும் அவர்கள் மீதும் தாம் முறைப்பாடு கொடுக்க உள்ளதாக சிசிதரன் என் ஊடாக நீதிபதிக்கு கூறினார்.

இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதிபதி சிசிதரன் கொடுக்கும் முறைப்பாட்டையும் பொலிஸார் ஏற்க வேண்டும் எனவும் விசாரணைகளுக்கு சிசிதரன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறிய நீதிபதி எஸ்.சதீஸ்கரன், தலா 2 லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையில் சிசிதரனை விடுதலை செய்ததுடன் வழக்கை ஆகஸ்ட் 25ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளார்.


You may like this video

 

http://www.tamilwin.com/politics/01/111521

  • தொடங்கியவர்

காட்டாட்சியிலேயே அரசியல்வாதிகள் நீதித்துறையில் தலையிட முடியாது

நாட்டில் நல்லாட்சி அரசு நிலவுமாயின் அரசியல் வாதிகள் பொலிஸ், நீதித்துறையில் தலையிடமுடியாத நிலை காணப்படும். அவ்வாறான நிலைமையில்லையாயின் அது காட்டாட்சியாக வர்ணிக்க முடியும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த ஆட்சியில் காட்டாட்சியே இடம்பெற்றது என்றும் குறிப்பிட்டார். IMG_20160720_091650.jpg

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கு இடையில்  இடம்பெற்ற கலவரத்தில் பல மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று திரும்பியிருந்தனர். எனினும் ஒர் மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று  யாழ். பல்கலைக்கழகத்துக்கு குறித்த சம்பவம் தொடர்பான நிலைமையை அவதானிக்க வந்திருந்த அமைச்சர்கள் இச் சம்பவம் தொடர்பில் பல்கலைகழக நிர்வாகமே ஒழுக்காற்று நடவடிக்கயை மேற்கொள்ள வேண்டும் என்று  தெரிவித்திருந்தனர். 

குறிப்பாக அமைச்சர் அநூர பிரியதர்ஷன யாப்பா, இச் சம்பவம் தொடர்பாக வேறு எவரும் தலையீடுகளை மேற்கொள்ளமுடியாது.  எனவே நாமும் இப்பிரச்சினையில்   தலையீடு செய்யப்போவதுமில்லை என  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  குறித்த தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள  மாணவனது முறைப்பாட்டுக்கமைய யாழ். நீதிவான் நீதிமன்றில் யாழ். பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவன் ஒன்றிய தலைவர் இன்றையதினம் முன்னிலையாகியிருந்ததுடன் உடனடியாகவே அவர் பிணையில்  செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய நிலையில் குறித்த மாணவனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அரசியல்வாதிகள் பொலிஸாருக்கு உத்தரவு கொடுக்கமுடியாது. அவ்வாறு உத்தரவு கொடுக்க முடியுமாயின் அது காட்டாட்சி ஆகும். அதாவது கடந்த ஆட்சியில் அவ்வாறு   காணப்பட்டிருந்தமையைக் குறிப்பிடலாம்.

நல்லதொரு ஆட்சியில் பொலிஸாரது நடவடிக்கை தொடர்பில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது. பொலிஸார்  தமக்கு கிடைக்கபெறுகின்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தமது கடமைகளை அவர்கள் செய்யவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யாது விட்டாலே அது பாரதுரமான குற்றமாகும். அதற்காக அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படவும் முடியும். எனவே பொலிஸாருடைய நீதித்துறையினுடைய நடவடிக்கையில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது. அத்தகைய  ஆட்சியே நல்லாட்சியாகும் என்றார்.  

http://www.virakesari.lk/article/9219

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.