Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமானுக்குப் பறந்த விமானம் மாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.46 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்தும் முயற்சித்தும் விமானத்தில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.

சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.46 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்தும் முயற்சித்தும் விமானத்தில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.

   

நடுவானில் திடீரென 29 பேருடன் விமானம் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்ன என்று தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமானம் வங்கக் கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சென்னைக்கும் அந்தமானுக்கும் இடையிலான கடற்பரப்பில் மாயமான விமானம் தேடப்பட்டு வருகிறது. 2 டார்னியர் ரக விமானங்கள், 4 கடற்படை விமானங்கள் மாயமான விமானத்தைத் தேடி வருகின்றன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162033&category=IndianNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
201607221552535802_India-seeks-neighbour
சென்னை, 
 
மாயமான விமானத்தை கண்டுபிடிக்க சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இந்தியா உதவி கோரிஉள்ளது.
 
சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானம், காலை 8:46 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவலை தொடர்பை இழந்தது. விமனம் 11:30 மணியளவில் அந்தமானை சென்று அடைந்து இருக்கவேண்டும், ஆனால் விமானம் மாயமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது. 
 
சென்னை - அந்தமான் இடையில் வங்க கடலில் விமானத்தை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
விமானத்தில் பயணம் செய்தவர்கள் 
 
விமானத்தில் பயணம் செய்தவர்கள் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் என்பது தெரியவந்து உள்ளது.
 
இந்தியா உதவி
 
இதற்கிடையே மாயமான விமானத்தை கண்டுபிடிக்க உதவுமாறு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்து உள்ளது. காணாமல் போன விமானம் குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
 
சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் விமானத்தை தேடும் பணி கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. 

http://www.dailythanthi.com/News/India/2016/07/22155300/India-seeks-neighbours-help-in-search-for-missing.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13776032_922195431242135_802833958506692

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
201607221922196732_Massive-rescue-operti
 
 
புதுடெல்லி, 
 
விமானப்படை விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சித்தார்த் பாமரே கூறிஉள்ளார். 
 
சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32-ரக விமானம் இன்று காலை மாயமானது. விமானம் மாயமானதை தொடர்ந்து விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் கடற்படையால் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. விமானத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக கடலோர காவல் படையும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
 
இப்போது விமானப்படை விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பாமரே கூறிஉள்ளார்.
 
 பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பாமரே செய்தியாளர்களிடம் பேசுகையில் மிகப்பெரிய அளவில் தேடுதல் மற்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விமானத்தை தேடும் பணியானது இரவிலும் தொடரும். சென்னையில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் மாயமாகி உள்ளது. விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது, என்று கூறிஉள்ளார். முன்னதாக பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்க பேசுகையில், 
 
“மாயமான ஏ.என்.32-ரக விமானத்தை கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, பாதுகாப்பு படையினர் விமானத்தில் பயணம் செய்தனர்,” என்று கூறினார். 

http://www.dailythanthi.com/News/India/2016/07/22192226/Massive-rescue-opertion-is-on-search-can-go-on-at.vpf

மாயமான விமானத்தில் இருந்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்

 

சென்னையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ ஏ.என்.32 என்ற விமானம் மாயமானது. இதில் பயணம் செய்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தாம்பரம் விமானபடைத் தளத்தில் இருந்து இன்று காலை அந்தமானின் போர்ட் பிளேருக்கு புறப்பட்ட விமானத்தை காணவில்லை. ஏ.என்.32 என்ற அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, பதட்டமடைந்த அதிகாரிகள், விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

விமானத்தை தேடும் பணியில் மேலும் 4 டார்னியர் ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அந்த விமானத்தில், 6 விமானிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 4 பேர் பயணித்துள்ளனர். 11 விமானப்படை அதிகாரிகள், 8 கடற்படை வீரர்களும், மாயமான விமானத்தில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மாயமான விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சம்பா மூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, சின்னா ராவ் உள்ளிட்ட 8 பேர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை வைத்து பார்க்கும்போது அது நொறுங்கி விழுந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

எனவே சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

http://www.tamilwin.com/india/01/111834

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13726673_1398882533461689_70478199267081

மாயமான ஏ.என்-32 ரக ராணுவ விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்யும் ஜம்மு பள்ளி மாணவர்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
201607262014051113_Name-list-of-Onboard-
சென்னை,

மாயமான ஏ.என். 32 விமானத்தில் பயணித்த 29 பேரின் பெயர் பட்டியலை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன் வெளியிட்டார். அவை பின்வருமாறு:-
 
  1.     பட்சாரா (கேப்டன்)
  2.     பி.கே. நந்தால் (துணை விமானி)
  3.     குணார் பார்பேட்டி
  4.     ரஞ்சன் (பொறியாளர்)
  5.     ஜி.சவுத்ரி,
  6.     கபில்
  7.     தீபிகா
  8.     பி.சந்த்
  9.     முத்துகிருஷ்ணன்
  10.     முகேஷ் தாகூர்
  11.     சி.எஸ்.யாதவ்
  12.     ஏக்நாத் தாக்
  13.     ஜின்சா ஷியாம்
  14.     விமல்
  15.     பிரசாத் பாபு
  16.     பூர்ண சந்திரா
  17.     சந்திரன் மகாராணா
  18.     சின்ன ராவ்
  19.     சீனிவாச ராவ்
  20.     அகிலேஷ்
  21.     பிபின் குமார்
  22.     எல்.கே. திரிபாதி
  23.     ரகுவீர் வர்மா
  24.     நவ்ஜோத் சிங்
  25.     ரவிதேவ் சிங்
  26.     சம்பவ் மூர்த்தி
  27.     பூபிந்தர் சிங்
  28.     நாகேந்திர ராவ்
  29.     சஜீவ் குமார்

 

http://www.dailythanthi.com/News/State/2016/07/26201406/Name-list-of-Onboard-passengers-on-missing-AN32-plane.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.