Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துருக்கி ஜனநாயகத்தின் பலவீனம்!

Featured Replies

துருக்கி ஜனநாயகத்தின் பலவீனம்!

 

எர்டோகன்
எர்டோகன்

டான் - பாகிஸ்தான் நாளிதழில் வெளியான தலையங்கம்

 

கடந்த வாரத்தில் துருக்கி நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப் பதற்கு அந்த நாட்டின் ராணு வத்தின் ஒரு பகுதியினர் கலகம் செய்தனர். அது அந்த நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. துருக்கி அரசாங்கம், மக்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினாலோ, இந்தக் கலகத்தைக் காரணமாகக் கொண்டு ஆத்திரத்துடன் செயல்பட்டாலோ இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் விளைவுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கும்.

நாட்டில் இதுவரையிலும் 112 அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தற்காலிகப் பணிநீக்கம் அல்லது கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஆயுதம் தாங்கிய படைகளின்மீது பெருமளவில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஏறத்தாழ 9,000 காவல் துறையினரும் ஏராளமான நீதிபதிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது உண்மையில் பிரம் மாண்டமான எண்ணிக்கை. ஆட்சிக் கவிழ்ப்பு முயற் சிக்குக் காரணமான ‘நச்சுக் கிருமி’யை அழித்தொழிக்க துருக்கி அதிபர் எர்டோகன் உறுதியாக இருக்கிறார்.

தோற்றுப்போன ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னாலிருந்து இயங்கியவர்கள் எர்டோகனை எந்தவகையிலும் ஒழித்துக்கட்டிவிடுவது என்ற குறிக்கோளோடுதான் செயல்பட்டுள்ளனர் என்று தோன்றுகிறது. ஆனால், எர்டோ கன் அதற்குப் பதில் நடவடிக்கைகளில் இறங்கிவிடக் கூடாது.

துருக்கியில் அரசை எதிர்த்து குர்திஷ் இன மக்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்திவருகின்றனர். இதில் 27 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். இந்த அகதிகள் பிரச்சினையால் பக்கத்து நாடான சிரியாவோடும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடும் துருக்கிக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனால், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு, உலக நாடுகளின் கண்கள் துருக்கியை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடைமுறையை மறுபடியும் கொண்டுவர துருக்கி முயல் கிறது. அதைச் சில ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அதனால், நாடு தற் போது இருக்கும் சூழலில் ஜனநாயக உணர்வுகளுக்குத் தான் துருக்கி அரசாங்கம் விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்திய ராணுவக் கும்பல் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், மாற்றுக்கருத்து கொண்டுள்ளவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவதற்கான வாய்ப்பாக ஜூலை 14-15 தேதிகளில் நடந்த சம்பவங்களை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்ற நிலை வரக் கூடாது. அதற்குப் பதிலாக, இது போன்ற விவகாரங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக சர்வதேச அளவில் நீதித் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின்படி அவர்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

துருக்கியில் நடைபெறும் பழிவாங்கல் நடவடிக்கைகள் பற்றிய தங்கள் கவலையை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் துருக்கிக்குத் தெரிவித்துள் ளனர். பழிவாங்கும் எண்ணத்தோடு நடத்தப்படும் நியாய மற்ற விசாரணைகள் துருக்கியின் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக காயப்படுத்தவே செய்யும். பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும், மக்கள் தன்னெழுச்சியாகத் துருக்கியின் அதிபருக்கு ராணுவக் கலகத்தை அடக்குவதில் ஆதரவு அளித்தனர். மக்களின் அந்த உணர்வில்தான் எர்டோகன் தனது இதயத்தைச் செலுத்த வேண்டும். துருக்கியின் பிரதமர் பினலி இல்திரிம் சொன்னதைப் போல, இந்த ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தை நாடாளு மன்றத்துக்குத்தான் கொண்டுசெல்ல வேண்டும். அவசர கதியில் செயல்படக் கூடாது.

http://tamil.thehindu.com/opinion/columns/துருக்கி-ஜனநாயகத்தின்-பலவீனம்/article8896400.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.