Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் சுற்றுலா தேசம் (STORY MAP)

Featured Replies

போர் சுற்றுலா தேசம் (story map)

போரில் தமிழர்களை வென்ற நினைவுச்சின்னங்கள் வன்னி முழுவதும் பெரும்பான்மையுணர்வோடு நிமிர்ந்து நிற்கின்றன. இராணுவம் அதனை மிக அழகாக அமைக்கிறது. மிஞ்சிய ஆயுதங்களைக் கொண்டு அலங்கரிக்கின்றது. வன்னிக்குள் பொதுச் சுற்றுலாவிகளுக்காக மட்டும் 10க்கும் குறையாத போர் சுற்றுலா மையங்கள் உண்டு .

இம்மையங்களில் நடப்பதென்ன? வரலாற்றுப் போதிப்புத்தான் நடக்கிறது. தெற்கிலிருந்து படையெடுத்து வரும் பெரும்பான்மையின மக்களுக்கு, புலிகளை – தமிழர்களை இராணுவம் வெற்றிகொண்ட கதைகள் வாய்மொழி வரலாறாக, சுவை சொட்ட எடுத்துச் சொல்லப்படுகின்றது. வயது – பால் – வர்க்கம் கடந்த நிலையில் சமதளத்தில் நின்று இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்கின்றனர். இவ்விடம் வரும் விவரமறியா பெரும்பான்மையின குழந்தைக்கும் தமிழர்களை தாம் அடிமைகொண்ட கதை போதிக்கப்படுகின்றது.

ஒருவகையில் பெரும்பான்மையினரின் நவீன வரலாற்றுக் கதைசொல்லிகளாக இராணுவச் சிப்பாய்கள் வலம்வருகின்றனர். எனவே இராணுவ மேலான்மையில் நின்றபடி போதிக்கப்படும் இலங்கையின் நவீன காலத்து வரலாறும், தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே கையாளுகின்றது. “அவர்களைக் கொல்வது பாவமில்லை” என மகாவம்சம் போதித்ததை, “அவர்களைக் கொன்றது பாவமில்லை” என இக்கட்டுரையில் வரும் போர் வெற்றி நினைவுச் சின்னங்கள் குறீயீடாய் உணர்த்துகின்றன.

இவ்வாறு போதிக்கப்படும் தமிழர்களை அடிமைகொண்ட வரலாறு, இலங்கையில் நல்லிணக்கத்தை இனங்கள் மத்தியில் உண்டாக்குமா என்கிற கேள்வி ஒரு புறமிருக்க, இங்கு அமைக்கப்பட்டிருக்கும், போர் வெற்றி நினைவுச் சின்னங்களைத் தமிழர்கள் அவமான உணர்வோடும், அடிமைப்பட்ட வலியோடும்தான் நோக்குகின்றனர். ஆனால் பெரும்பான்மையினருக்கோ, வெற்றிக் களிப்புக்குரிய இடமாக அது இருக்கின்றது.

மிக நுண்ணிய வகையில், அதேநேரத்தில் பலரும் பார்த்திருக்கும்படியான பிரம்மாண்டமான வடிவில் போதிக்கப்படும் வரலாறு இனச்சிக்கலை மேலும் கூர்மைப்படுத்தும் என்பதை ஆள்பவர்கள் உணரல் வேண்டும். போரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தைத் தானும் அமைக்க தமிழர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் அவர்களை வெற்றிகொண்ட நினைவுச் சின்னங்களை நிலமெங்கும் அமைத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது, இனங்கள் மத்தியில் மேலும்மேலும் பிளவுகளை ஆழப்படுத்தும்.

தோற்றவர் முன்னிலையில் வெற்றியைக் கொண்டாடுதல் போன்றதொரு பழிவாங்கல் நிகழ்வு எல்லா வடுக்களையும் விட ஆழமானது. இந்த மாதிரியான வடுக்கள்தான் இலங்கை வாழ் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை சாத்தியமற்றதாக்குகின்றது. வெற்றி தரும் மேலான்மைத்தனம், அதிகாரத்தை மேலிருந்து கீழ் நோக்கி பரவலாக்கம் செய்வது சரியெனில், நல்லிணக்க எண்ணங்களையும் மேலிருந்து கீழ் நோக்கி பகிர்ந்துகொள்ளுவதுதான் நியாயம்.

வன்னிக்குள் அமைக்கப்பட்டுள்ள போர் வெற்றி நினைவுச்சின்னங்கள் பற்றியும், அங்கு என்னவெல்லாம் வரலாற்றைப் போதிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியவும் இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

(https://uploads.knightlab.com/storymapjs/28df636a76ab2f5af69f8fa01276e058/poor-currrrulaa-teecm/draft.html)

 

அறிமுகம்

இங்கு அமைக்கப்பட்டுள்ள போர் வெற்றி நினைவுச்சின்னங்களை தமிழர்கள் அவமான உணர்வோடும் அடிமை வலிமையோடும் தான் நோக்குகின்றனர், ஆனால் பெரும்பாண்மையினருக்கோ வெற்றிக்களிப்பிற்குரிய இடமாக இது இருக்கிறது.

மிக நுண்ணிய வகையில், அதேநேரத்தில் பலரும் பார்த்திருக்கும்படியான பிரம்மாண்டமான வடிவில் போதிக்கப்படும் வரலாறு இனச்சிக்கலை மேலும் கூர்மைப்படுத்தும் என்பதை ஆள்பவர்கள் உணரல் வேண்டும். போரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தைத் தானும் அமைக்க தமிழர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் அவர்களை வெற்றிகொண்ட நினைவுச் சின்னங்களை நிலமெங்கும் அமைத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது, இனங்கள் மத்தியில் மேலும்மேலும் பிளவுகளை ஆழப்படுத்தும்.

தோற்றவர் முன்னிலையில் வெற்றியைக் கொண்டாடுதல் போன்றதொரு பழிவாங்கல் நிகழ்வு எல்லா வடுக்களையும் விட ஆழமானது. இந்த மாதிரியான வடுக்கள்தான் இலங்கை வாழ் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை சாத்தியமற்றதாக்குகின்றது.

WAR MUSEUM – மந்துவில்

war%20meu-%20manthuvil.jpg

manthuvilபுதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு செல்லும் வழியில் வருகின்ற மந்துவில் கிராமத்தில் அமைந்துள்ளது WAR MUSEUM. அதாவது இறுதிப் போரின் போத விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை உபகரணங்களை படகுகளை இங்கு காட்சிப்படுத்தியிருக்கின்றனர். அத்துடன் இறுதிப் போரை இராணுவம் நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், போர் வெற்றியைக் குறிக்கும் பாரிய நினைவுச் சின்னத்தையும் இங்கு அமைத்திருக்கிறார்கள். இதனையெல்லாம் வெற்றி சுவைசொட்ட விளங்கப்படுத்துவதற்கு இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தலைவரின் வீடு – புதுக்குடியிருப்பு

ptk%20home.jpg

போர் ஓய்வுக்கு வந்தவுடன் வடக்கு நோக்கி படையெடுக்கும் பெரும்பான்மையின் சுற்றுலாவிகளுக்கு அரச தரப்பினாலேயே ஊக்கமளிக்கப்பட்டது.அதிலும் புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவரின் வீடு எனப்படும் நிலக்கீழ் கட்டடத்தைப் பெரும்பான்மையினர்கள் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள். பிரபாகரன் எவ்வளவு வசதிகளுடன் வாழ்ந்தார் என்பதை அங்கு நின்ற சிப்பாய்கள் விளங்கப்படுத்தினர். ஆனால் கடந்த வருட தொடக்கத்தில் அந்த நிலக்கீழ் கட்டிடத்தை குணடுவைத்து அழித்து விட்டதாகவும், அங்கு இனி யாரும் செல்ல முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது. இப்போது விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டைப் பார்க்க யாருக்கும அனுமதியில்லை.

கடற்புலிகளின் தளபதியின் வீடு – கோம்பாவில்

kombavil.jpg

புதுக்குடியிருப்பின் கோம்பாவில் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்துக்கு அருகில் இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தளபதியின் வீடு இவ்வீட்டைப் பார்ப்பதற்குத் தெற்கிலிருந்து வரும் சுற்றுலாவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு அமைக்கப்பட்டிருக்கும் பெரியளவிலான பதுங்கு குழி அவர்களுக்கு வியப்புத் தரும் விடயமாக இருக்கின்றது. சமாதான காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இவ்வீட்டில்தான் புலிகளின் தளபதி சூசை தன் குடும்பத்தினருடன் சொகுசாக தங்கியிருந்தார் என விளங்கப்படுத்துகின்றனர்.

நீச்சல் தடாகம் – தேவிபுரம்

thevipuram.jpg

புதுக்குடியிருப்பின் தேவிபுரம் என்னும் கிராமத்தின் காட்டுக்குள் அமைந்திருக்கிறது.கடற்புலிகளினுடையது எனச் சொல்லப்படும் நீச்சல் தடாகம் இங்கு குவியும் சுற்றுலாவிகளிடம் இது விடுதலைப்புலிகளின் தலைவர் தன் மகனுடன் பொழுதுபோக்குவதற்காக நீச்சல் விளைய்ட்டில் ஈடுபட அமைந்த தளம் எனவும், கடற்புலிகளின் கரும்புலிகள் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்ட தடாகம் எனவும் விளக்கமளிக்கப்படுகிறது. இதனையும் பெரும்பான்மையான மக்கள் வியப்போடு பார்த்துச் செல்கின்றனர்.

கொக்காவில் இராணுவ வெற்றி தூபி

kokkavil.jpg

போர் முடியும் வரை கொக்காவில் உயரமான வானலைக் கோபுரங்களுக்குத்தான் பிரபலமாக இருந்தது. ஆனால் 2009க்குப் பின்னர் இராணுவம் விடுதலைப் புலிகளின் வெற்றி கொண்டதை நினைவுபடுத்தும் பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக வந்து இந்த நினைவுத்தூபியை பெருவிழா நடத்தித் திறந்தும் வைத்தார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடமேறிய பின்னர் மீண்டும் இவ்விடம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இங்கு இராவத் தூபியுடன் வன்னி போரில் இறந்த இராணுவத்தினர் பெயர் விபரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவும் பெரும்பான்மையினத்தவர் பயபக்தியுடன் விரும்பிப் பார்க்கும் சுற்றுலா மையங்களுள் ஒன்று.

இரணைமடு பௌத்த விகாரை

iranamadu.jpg

இரணைமடு என்றவுடன் விடுதலைப்புலிகளின் விமான நிலையத்தைப் பார்க்க முடியும் என்ற ஆவலோடு தான் பெரும்பான்மையின சுற்றுலாவிகள் நுழைகின்றனர். ஆனால், விமான நிலையம் அமைந்துளள இடத்தைப் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. இரணைமடு குளத்தையும், குள அணையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையையும் பார்த்து வழிபட்டுச் செல்கின்றனர். செல்லும் வழியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆட்லெறிகள், பாங்கிகள் போன்றவையும் சுற்றுலாவிகளை ஈர்க்கின்றன.
 

கிளிநொச்சி போர் வெற்றிச் சின்னம்

kilinochchi2.jpg

கிளிநொச்சியில் டிப்போ சந்திக்கு நேரெதிர் திசையில் அமைந்திருக்கிறது இச்சின்னம். போரில் இராணுவம் வெற்றி கொண்டதை நினைவுபடுத்தும் வகையில், பிரம்மாண்டமான அளவில் எழுப்பப்பட்டுள்ள சுவரில் அனைத்து வெடிப்புக்களும், ஒரு ரவையின் மையத்துக கொண்டு வரப்பட்டுள்ளது என்ற தொனியில் படிமம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிமத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் எந்நேரமும், சிப்பாய்கள் நிமிர்ந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனை பெரும்பான்மையின் சுறறுலாவிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் பார்த்துச் செல்கின்றனர்.

 

சரிந்த தண்ணீர் தாங்கி

போரில் விடுதலைப் புலிகள் தகர்த்துவிட்டுச் சென்ற தண்ணீர் தாங்கி இது‘ என பெரும்பான்மையின சுற்றுலாவிகளுக்கு விளக்கமளிக்கப்படும் போர்சுற்றுலா மையம் கிளிநொச்சி நகரில் உள்ளது. ‘இனியொரு அழிவுக்கு இடமளிக்க மாட்டோம்‘ என்ற மும்மொழி வாசகத்துடன் பூக்கன்றுகளால் அலங்கரிக்கப்பட்ட இடமாகக இது இருக்கின்றது. இவ்விடத்திலும் புகைப்படக் காட்சிக்கூடம் ஒன்றுள்ளது. இறுதிப் போரின் சம்பவங்களைப் புகைப்படங்களாக்கி பெரும்பான்மையினர்க்கு புலிகள் பற்றிய கதைகளைச் சொல்கின்றனர்.

ஆனையிறவு வெற்றித் தூபி – I

el.jpg

ஆனையிறவு வெளியில் நீளமான சுவரொன்றும், அதற்கு முன்னர் சிறு தடாகமும், நிமிர்ந்து நிற்கும் இராணுவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.இராணுவத்தினன் ஒருவர் தாக்கியழித்த விடுதலைப் புலிகளின் டாங்கி என்ற வரலாற்றைச் சொல்லும் போரின் எச்சமான டாங்கி ஒன்றும் பாதுகாப்பான மேடையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதே டாங்கியை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவு வெளியில் காட்சிப்படுத்தியிருந்ததை சமாதான காலத்தில் ஏ9சாலையில் யாழ்ப்பாணம் சென்றவர்கள் நினைவில் வைத்திருக்கக்கூடும். இப்போது அதே டாங்கி இராணுவத்தினரின் வெற்றியைக் குறிப்பதற்காகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெரும் பயபக்தியுடன் அல்லிப் பூக்களை வைத்துப் பெரும்பான்மையினர் வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆனையிறவு வெற்றித் தூபி – II

ele.jpg

ஆனையிறவை இராணுவம் வெற்றி கொண்டதைக் குறிக்கும் பாரிய நினைவுத் தூபி இதுவாகும். ஆனையிறவு வெளியில் உயரமான அமைப்பில் இலங்கைத் தீவை தாங்கியிருக்கும் கரங்களை இந்தப் படிமம் வெளிப்படுத்துகின்றது. இங்கு வரும் சுற்றுலாவிகளுக்குப் புலிகளை தாம் வெற்றி கொண்ட கதைகள் சிப்பாய்கள் கூறுகின்றனர். கதைகளைக் கேள்வியுரும் பெரும்பான்மையினத்தவர்கள் இராணுவத்தைப் பெருமிதத்தோடு தம் நினைவுகளில் காவிச் செல்கின்றனர்.

http://thuliyam.com/?p=34480

வன்னியிலிருந்து ஜெரா.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.