Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகப்பெரிய ரத்த விழா: - கோயில் திருவிழாவில் கொல்லப்படும் 5 லட்சம் விலங்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நேபாலில் லட்சக்கணக்கில் எருமைகள் மற்றும் விலங்குகள் கோயில் திருவிழாவில் கொல்லப்படுவது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழத்துகிறது. உலகின் மிகப்பெரிய அளவிலான விலங்குகள் உயிர்த்தியாக திருவிழா நேபாலத்தில் உள்ள காதிமை (Gadhimai) கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. 2009 ல் நடந்த திருவிழாவில் மட்டும், பக்தர்கள் கொண்டுவந்த நீர் எருமை, ஆடு, பன்றி, கோழி, புறா, மற்றும் எலிகள் என 5 லட்சம் உயிர்கள் இரண்டு நாட்களில் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டன. இந்து மத தெய்வமான காதிமைக்கு விலங்குகளை பலி கொடுத்தால் தங்களுக்கு பாதுகாப்பும் செழுமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலங்குகளை கொண்டுவந்து கொடுக்கின்றனர். அவைகள் மொத்தமாக திருவிழா நாளில் படுகொலை செய்யப்படுகின்றன.

நேபாலில் லட்சக்கணக்கில் எருமைகள் மற்றும் விலங்குகள் கோயில் திருவிழாவில் கொல்லப்படுவது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழத்துகிறது. உலகின் மிகப்பெரிய அளவிலான விலங்குகள் உயிர்த்தியாக திருவிழா நேபாலத்தில் உள்ள காதிமை (Gadhimai) கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. 2009 ல் நடந்த திருவிழாவில் மட்டும், பக்தர்கள் கொண்டுவந்த நீர் எருமை, ஆடு, பன்றி, கோழி, புறா, மற்றும் எலிகள் என 5 லட்சம் உயிர்கள் இரண்டு நாட்களில் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டன. இந்து மத தெய்வமான காதிமைக்கு விலங்குகளை பலி கொடுத்தால் தங்களுக்கு பாதுகாப்பும் செழுமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலங்குகளை கொண்டுவந்து கொடுக்கின்றனர். அவைகள் மொத்தமாக திருவிழா நாளில் படுகொலை செய்யப்படுகின்றன.

   

ஜீரணிக்க முடியாத இந்த ஜீவ படுகொலைகள் வழக்கம், இன்று நேற்றல்ல, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என 265 ஆண்டுகளாக நடக்கிறது. நேபாளத்தில் தானே நடக்கிறது என்று மற்ற நாடுகள் ஒதுங்க முடியாத மாபாதகச் செயலாகவே இப்போது இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்துத்துவா அபிமானியான நேபாலம், மத நடவடிக்கைகளில் பிற்போக்கு பிடிவாதமுடையது. நேபாலத்தவர்கள் கூர்க்கா வேலைக்காக இந்தியவிற்கு படையெடுப்பதில் இருந்தே அவர்களின் முன்னேற்றத்தையும் அதை தாமதப்படுத்தும் மூடநம்பிக்கைகளையும் அறியலாம். இந்த வினோத வழக்கம் ஊடகங்களால் உலகின் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, ஏற்பட்ட சில நெருக்கடிகளால், 2009 ல் அரை மில்லியன் விலங்குகள் வரை கொல்லப்பட்ட கணக்கு. கடந்த முறை (2014) 70 சதவீதம் குறைந்தது..

இதுபோன்ற சம்பவத்தை இதிகாசங்களில் படித்தால் கூட மலைப்பாக இருக்கும். சொல்ல கேட்டாலே தலைசுற்றும், அதை படம்பிடித்து காட்டினால் சிறுவர்கள் உட்பட்ட மக்கள் மனம் எவ்வளவு பதைபதைக்கும். இதனால், இவை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதிப்பாகவும் பார்க்கப்படுகிறது.

குற்றமாக பார்க்கிறது உலகம்

இந்த திருவிழாவில் கோயில் நேர்த்திக்கடனாக விடப்படுகிற மொத்த எருமைகள் மற்றும் விலங்குகளும் இறைச்சி மற்றும் தோலுக்காக வெட்டி விற்கப்படுகிறது. இது கோயிலுக்கான வருமானமாக அமைகிறது. என்று கூறினாலும் இத்தனை பெரிய மாமிச குவியலை விற்கவும் வாங்கவும் யாரும் விரும்பமாட்டார். போர்க்களங்களில் மனிதர்களை கொன்றுகுவித்த காலத்தில் இது பெரிதுபடுத்தப்படாமல் இருந்திருக்கலாம். நவீன காலச்சூழல் வேறு.

கொல்லப்படுவன வற்றில் 70 சதவீதம் விலங்குகள் இந்தியாவிலிருந்து கடத்தப்படுவன, மீதி நேபாலத்துக்கு உரியன. நேபாலத்துக்கு அருகாமையான இந்தியாவின் நான்கு எல்லை மாநிலங்களில் இருந்து கொண்டுசெல்லப்படுகிறது. இதனால், அங்குள்ள நீதிமன்றங்கள் விலங்குகளின் இத்தகைய கடத்தலுக்கு தடை விதித்துள்ளது. சர்வதேச மனித சமூக அமைப்பின் முயற்சியால், அங்கு கொண்டுசெல்ல இருந்த 2,500 எருமைகள் மீட்கப்பட்டன. 100 பேர் கைதும் செய்யபட்டுள்ளனர்.

அறக்கட்டளை தலைவர்கள் கருத்து

காதிமை கோயிலின் அறக்கட்டளை தலைவர் ராம் சந்திரா ஷா கூறுகையில், ‘இனிமேல், இந்த கோயிலில் விலங்குகள் தியாகம் என்ற பெயரில் உயிர்ப்பலிகள் மற்றும் வன்முறைகள் நடக்காது. மாறாக, அமைதியின் அடையாளமான வழிபாடுகள் மட்டுமே காணப்படும். பக்தர்கள் கொண்டுவரும் விலங்குகள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்’. என்று கூறுவதோடு கையெழுத்திட்ட ஆணையையும் அனுப்பியுள்ளார்..

’இந்த சடங்கு, கோயிலின் நிதிநிலை சார்ந்த விஷயமாக இருப்பதால் யோசிக்க வேண்டியிருக்கிறது. விழா தொடரலாம். வேண்டுமானால், விலங்குகள் படுகொலை செய்யப்படுவதை அந்த அரங்கில் அடையாளமாக குறைத்து, அமைதியின் நினைவுச்சின்னமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அடுத்த திருவிழா வரும் 2019 ல் நடக்க உள்ளது. பக்தர்கள் அப்போதும் கொண்டுவரவே செய்வார்கள்.’ என ஜய சர்மா கூறியுள்ளார்.

முன்னேற்றமே மாற்றம்தான்

சிவப்பு ரத்தம் இல்லாத சிறு உயிர்களை கொள்வதை நாம் ஒரு தவறு போல உணர்வதில்லை. உணவுக்காக மீன்களை அறுப்பதும் நீர்வாழ் உயிரி என்பதால் பெரிய தாக்கத்தை தருவதில்லை. கோழி, ஆடு போன்றவற்றை சாப்பிடுபவர்கள் கூட அதை அறுப்பதை பார்க்க அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால், மனிதனைவிட பெரிய விலங்கான மாடு, எருமைகளை ரத்தம் பீறிட தலையை வெட்டிச் சாய்த்தால் காணச் சகிக்குமா? அதுவும் கோயில் விழாக்களை மையப்படுத்தி செய்வது, சார்ந்தவர்கள் மதத்தையும் பிற்போக்காக ஆக்கிவிடுகிறது. காலமாற்றத்துக்கு ஏற்ப வளைந்து கொடுக்காத பழமை, மக்களின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தும்.

சில வழக்கங்கள் வந்ததே தவறாக இருக்கும்போது, அதை வழக்கம் என்று காரணம் காட்டி மேலும், தொடர விடலாமா? கருத்து இறுக்கமான முன்முடிவுகளில் வாழ்பவர்களுக்கு, தங்கள் வழக்கங்களின் தவறுகள் புலப்படாமல் இருக்கலாம். ஆனால், சர்வதேசம் என்ற விசாலமான விவாதங்களுக்கு உட்படும்போது, நம் வழக்கங்களில் அறிவுக்கு பொருந்தாத தவறுகள் சூழ்ந்திருப்பது சுட்டிக்காட்டப்படும், அதை பேதமையான வாதங்களால் பிடிவாதம் செய்யாமல் மாற்றிக்கொள்வது மாற்றுபவர்களைவிட மாற்றிகொள்பவர்களுக்கே நலம்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=163226&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.