Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பில் இதன் பிரதிபலிப்பை காணலாம்

Featured Replies

புதிய அர­சி­ய­ல­மைப்பில் இதன் பிர­தி­ப­லிப்பை காணலாம்
 

இலங்­கையின் இன ஒற்­றுமை சமஷ்டி ஆட்­சி­யி­லேயே தங்­கி­யுள்­ளது என்ற கொள்­கையை அடித்­த­ள­மாகக் கொண்டு இலங்­கையின் பிர­தா­ன­மான தென்­னி­லங்கை அர­சி­யல்­கட்­சி­களும் தமிழ்ப் பகு­தி­களின் பிர­தா­ன­மான கட்­சி­களும் ஒரு காலத்தில் சிந்­தித்­தன. இதன் பிர­தி­ப­ல­னாக நாட்டில் இன ஒற்­றுமை குறைந்­த­துடன், இனங்­க­ளுக்­கி­டையே குரோ­தங்­களும் வளர்ச்சி பெற்று இனப்­ப­டு­கொ­லையும் அரா­ஜக சூழ்­நி­லையும் இடம்­பெற்­றன. இன்று அந்­நிலை இல்லை. இன்று அவற்றின் சுரு­திகள் அடங்­கிப்­போ­யுள்­ளன.

ஆயினும், மேற்­படி கொள்­கை­களை அடி­நா­த­மாகக் கொண்ட கட்­சிகள் தம் நிலையில் நின்று மாறி­விட்­ட­தாகக் கூற­மு­டி­யாது. சூழ­லுக்கு அமைய சில கருத்­துக்­களை அவை முன்­வைத்­துள்­ளன. முன்னாள் ஜனா­தி­ப­தி­யான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க எழு­தி­யுள்ள ஒரு கட்­டு­ரையில் பின்­வ­ரு­மாறு தெரி­வித்­துள்ளார்.

“தற்­போது சிலர் ஓலமிடு­கின்­றார்கள். இலங்­கையின் ஒரு­மைப்­பாட்­டுக்கு (Unitary Constitution) பாதிப்பு ஏற்­படப்போகின்­றது என்றும் அதற்­கா­கவே அர­சி­ய­ல­மைப்பு திருத்­தப்­ப­டு­கி­றது என்றும் கூறு­கி­றார்கள். உண்­மையில் நாங்கள் ஏற்றுக்கொண்­டுள்ள கொள்கை என்­ன­வெனில் எமது நாடு ஒரு தேசம் என்றும் இந்த தேசத்­திற்கு எல்லை நாலு பக்­கமும் உள்ள கடல் என்­பது மட்­டுமே என்­றாகும். இவ்­வெல்­லைக்குள் அரச நிர்­வாகம் எப்­படி அமையவேண்டும் என்­பதே ஆரா­யப்­ப­ட­வேண்டும்” என்றும் தெரி­வித்­துள்ளார்.

தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல­ த­ட­வைகள் கூறி­யுள்­ளது என்­ன­வெனில், “இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு அதி­காரப் பகிர்வில் தங்­கி­யுள்­ளது என்றும் தான் தேர்­தலில் கூறி­யது போல் சில பிரச்­சி­னையைத் தீர்ப்­பதில் ஒரு அடி­யேனும் பின்­னுக்குப் போக­மாட்டேன்” என்­று­மாகும்.

இந்­தி­யாவின் பிர­தமர் மிகச் சமீ­பத்தில் கூறி­யுள்­ள­படி இலங்­கையின் இறை­மையைக் காப்­ப­திலும் ஒற்­று­மையைக் காப்­ப­திலும் இந்­தியா துணை நிற்கும்”.

இதேபோல் தமிழ்த் தலை­வர்கள் பலரும் நாடு பிரிக்­கப்­பட்டு சமஷ்டி ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கொள்­கை­யி­னின்றும் தடம் புரண்­டுள்ளோம் என்று மக்கள் கரு­தக்­கூ­டாது என்றும் தற்­போது இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள சுமு­க­மான அர­சியல் சூழ்­நிலையை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க உதவ வேண்டும் என்ற நிலை­யி­லேயே நாம் கரு­ம­மாற்­று­கிறோம் என்­றாகும். இக்­கூற்று அர­சியல் அறிவின் முதிர்ச்­சி­யையும் சரி­யான வழி­காட்­டு­த­லையும் காட்­டு­கி­றது என்று பலரும் ஏற்றுக்கொண்­டுள்­ளனர். ஆகவே, புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி என்ற பிரிவு மாற்­றப்­ப­டக்­கூ­டிய சூழ்­நி­லை­யுண்டு என்று எண்­ணு­வதை விட உச்­ச­மட்ட அதி­கா­ரப்­ப­கிர்வு ஏற்­ப­டக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்பு அமையும் என எதிர்­பார்ப்­பதே ஞானோ­த­ய­மாகும். ஆகவே, இக்­கட்­டு­ரையில் கூறப்­ப­டப்­போ­வது இனப் பிரச்­சி­னையைத் தீர்ப்­பதில் அதி­காரப் பகிர்வு எப்­படி அமை­யலாம் என்­ப­தே­யாகும்.

அதி­காரப் பிரிவில் அடிப்­படை இலட்­ச­ணங்கள்

ஜன­நா­யக நாடு­களில் அரச அதி­காரம் மூன்று துறை­க­ளுக்கு பிரிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கை­யிலும் இதனைக் காணலாம். அவை சட்­டத்­துறை, ஆட்­சித்­துறை, நீதித்­து­றை­யாகும். ஆகவே மேற்­படி மூன்று துறை­க­ளுமே அரசை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும். இதனை ஒரு நாடு ஒற்­றை­யாட்­சி­யிலும் சமஷ்டி ஆட்­சி­யிலும் செய்­யலாம்.

இவ்­வ­ி­டத்தில் ஒற்றை ஆட்சி என்றால் என்ன?, சமஷ்டி ஆட்சி என்றால் என்ன என்­பதை ஓர­ளவு புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாட்டு அர­சாங்கம் ஒரு பாரா­ளு­மன்­றத்தின் கீழ் ஆக்­கப்­படும் சட்­டத்தின் கீழும் வேறு ஒரு கட்­டுப்­பாடும் இல்­லா­மலும் ஆட்­சியை செய்துகொண்­டு­ போனால் அங்கு ஒற்றையாட்சி நடை­பெ­று­கி­றது என்­பது பொரு­ளாகும். ஆகவே சமஷ்டி ஆட்சி என்­பது அரச அதி­காரம் பிரிக்­கப்­பட்டு அவற்றின் கீழ் ஆக்­கப்­படும் சட்­டங்­களின் கீழ் பல பகு­திகள் சுய­மாக தமது பரிபால­னத்தை செய்­வ­தைக்­ கு­றிக்கும் எனவும் ஒரு­வாறு கூறலாம்.

முழு நாடும் ஒரு ஆட்­சியின் கீழ் இருப்­பது கஷ்டம்

உலகில் பல நாடுகள் தமது முழு நாட்டையும் ஒரு பாரா­ளு­மன்­றத்தின் கீழ் ஆட்சி செய்து கொண்டு போவது கஷ்டம் என தெரி­வித்­துள்­ளன. அவை தமது அதி­கா­ரத்தை அதி­கா­ரி­க­ளுக்கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் மற்றும் அதி­கார சபை­க­ளுக்கும் பிரித்து தமக்குத் தேவை­யான விதி­களை உண்­டாக்கி அதன் மூலம் அவர்­க­ளது கட­மையைச் செய்ய இட­ம­ளித்­துள்­ளதை நாம் காணலாம். இதி­லி­ருந்து பெறப்­ப­டு­வது என்­ன­வெனில் ஒற்­றை­யாட்சி நாடு­களும் நாட்டின் பரி­பா­ல­னத்தை நடத்த தமது அதி­கா­ரத்தை பகி­ரிந்து கொடுக்­கின்­றன என்­றாகும்.

ஆனால், சமஷ்டி ஆட்­சியின் நிர்­வாக முறை இதற்கு மாறா­னது. இச்­ச­மஷ்டி ஆட்­சியில் அதி­காரம் மத்­திய அர­சாங்­கத்­தி­டமும் மாநில அர­சாங்­கங்­க­ளி­டை­யேயும் இருக்கும். இதனால் இங்கு மத்­திய அரசு என்ன என்ன அதி­கா­ரங்­களைக் கொண்­டுள்­ளது என்றும் மாநில அரசு என்ன என்ன அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருக்கும் என்றும் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டி­ருக்கும்.

உலக நாடு­களின் அபிப்­பி­ரா­யப்­படி ஒற்­றை­யாட்சி நாடு­களின் நிர்­வாகம் கஷ்­ட­மா­னதும் குழப்­ப­க­ர­மான சூழலை உரு­வாக்கக் கூடி­ய­தா­கவும் இருக்­கி­றது என்­ப­தாகும். சுபீட்­ச­மா­னதும் அமை­தி­யா­ன­து­மான ஆட்­சிக்கு அதி­காரம் ஓரி­டத்தில் குவிந்­தி­ருக்­காமல் பரந்­தி­ருப்­பது அல்­லது பகிர்வு செய்­வது அவ­சியம் என ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அதி­காரப்பகிர்வு பற்றி...

இதனை எவ்­வாறு செய்ய வேண்டும்?அதா­வது அதி­காரப்பகிர்வை எவ்­வாறு செய்ய வேண்டும் என்­பதை அர­சாங்­கமும் மக்­களும் தீர்­மா­னிக்க வேண்டும். அவ்­வாறு அதி­கா­ரத்தைப் பங்­கீடு செய்­வது எப்­படி என்­பதைத் தீர்­மா­னிக்க பல வழிகள் உண்டு.

அவை­யா­வன:

ஒரு ஆட்­சிக்குள் மத்­திய அர­சாங்­கத்­திற்­கு­ரிய அதி­கா­ரங்­களை நிர்வாக ரீதி­யாக பகிர்ந்து அளித்தல் மற்றும் அர­சாங்க அதி­கா­ரங்­களை மாகாண மட்­டத்தில் அல்­லது மாநில மட்­டத்தில் அதி­கா­ரப்­ப­கிர்வு செய்தல் என்­ப­ன­வற்றை கூறலாம்.

அப்­ப­டி­யில்லை எனில் சமஷ்­டி­மு­றையில் மத்­திய அர­சுக்கும் மாநில அல்­லது மாகாண அர­சுக்கும் மக்­க­ளது அர­சியல் உரி­மை­களைப் பகிர்ந்து கொடுக்­கலாம். இதன் கீழ் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அவரவர்க்­கு­ரிய அதி­கா­ரங்­களை பயன்படுத்த இடமளிக்­கப்­படும். இது நாட்­டுக்கு நாடு வேறு­ப­டலாம். உதா­ர­ண­மாக, இந்­தியக் கூட்­டாட்சி அமைப்­புக்கும் அமெ­ரிக்க கூட்­டாட்சி அமைப்­புக்கும் இடையே பல வேறு­பா­டு­களைக் காணலாம்.

(அ) அமெ­ரிக்­காவில் இரட்டைக் குடி­யு­ரிமை (Dual Citizenship) உண்டு. இந்­தி­யாவில் ஒரே ஒரு குடி­யு­ரிமை மட்­டு­மே­யுண்டு.

(ஆ) இந்­திய குடி­மக்கள் எங்கே வாழ்ந்­தாலும் அவர்கள் அனை­வரும் சட்­டத்தின் முன் ஒரே மாதி­ரி­யா­கவே கரு­தப்­ப­டு­வார்கள்.

(இ) அமெ­ரிக்­காவில் ஒவ்­வொரு மாநி­லமும் தமக்­கு­ரிய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை இயற்றிக் கொள்­ளலாம். ஆனால் அத்­த­கைய அதி­காரம் இந்­தி­யாவில் உள்ள மாநில அர­சு­க­ளுக்கு இல்லை.

மேலே கூறி­ய­வற்றைப் பார்க்கும் போது சமஷ்டி ஆட்சி என்­பது எல்லா நாட்­டிலும் ஒரே மாதிரி இல்லை. நாட்­டுக்கு நாடு தேவை­யான படி தேர்ந்­தெ­டுத்துக் கொள்­ளலாம். இலங்கை விரும்பின் அப்­படிச் செய்து கொள்­ளலாம்.

இலங்கை மக்கள் வடக்கு, கிழக்கில் மொழி­யாலும் கலை, கலா­சா­ரத்­தாலும் பண்­பாட்­டாலும் மற்றும் பூகோ­ள­ரீ­தி­யாலும் தென்­னி­லங்­கையில் இருக்கும் மக்­க­ளி­லி­ருந்து வேறு­ப­டு­கின்­றனர். ஆகவே அவர்­களும் தென்­னி­லங்கை மக்­களும் வெவ்­வேறு குணாம்­சங்­களைக் கொண்­டுள்­ளதால் இரு பகு­தியும் நாட்டைப் பிரிக்­கா­மலே சமஷ்டி முறையை தேவை­யானால் ஏற்றுக்கொள்­ளலாம். அல்­லது ஒற்­றை­யாட்­சிக்குள் உச்ச அதி­காரப் பகிர்வைச் செய்து கொள்­ளலாம்.

இவ்­வி­டத்தில் முக்­கி­ய­மான ஒரு விட­யத்தைக் கவ­னிக்க வேண்டும். ஒற்றை ஆட்­சிக்குள் அதி­காரப்பகிர்வை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மாகாண மட்­டத்தில் ஆட்சி செய்யும் போது கீழ்­நி­லையில் உள்­ள­வர்­க­ளான அதி­கா­ரி­க­ளுக்கு கொள்­கை­களை வகுக்கும் அதி­காரம் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. இத­னா­லேயே பல பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. இதனைத் தீர்க்­கலாம்.

உதா­ர­ண­மாக, 1987 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட மாகாண சபை­க­ளுக்கு சில அதி­கா­ரங்கள் மத்­திய அர­சுக்கு கட்­டுப்­ப­டாமல் செய்­வ­தற்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக, மாகாண சபை நிரல்கள் என அழைக்­கப்­படும் நிரல்­க­ளுக்குள் வரும் விட­யங்கள் சம்­பந்­த­மாக மாகாண சபைகள் இயற்றும் நியதிச்சட்­டங்­களில் தலை­யிட மத்­திய அர­சுக்கு அதி­கா­ர­மில்லை.

அதேபோல் ஒரு மாகாண சபை எல்­லைக்குள் உள்ள உள்­ளூ­ராட்சி சபை­களின் நிர்வா­கத்தைக் கலைக்க மாகாண சபை­க­ளுக்கு மட்­டுமே அதி­காரம் உண்டு. உள்­ளூ­ராட்சி சபைகள் தமது கொள்­கையை வகுத்து நடை­மு­றைப்­ப­டுத்­தலாம். மாகாண சபைக்கே அவை பொ­றுப்புக்கூற வேண்டும். ஆகவே அதி­கா­ரி­க­ளுக்கு கொள்கை வகுக்கும் அதி­கா­ரத்தை கொடுப்­பதை விட மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு அதனைக் கொடுப்­பதே சிறப்பு. இதனை அதி­காரப்பகிர்வின் மூலமும் செய்­யலாம்.

13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தின் கீழ் அதி­காரப் பகிர்வு

இலங்கை – இந்­திய உடன்­ப­டிக்­கையின் கீழ் இலங்கை அர­சி­ய­ல­மைப்­புக்கு 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் கொண்டுவரப்­பட்­டது. இதன்கீழ் இலங்­கையின் மாகா­ணங்­க­ளுக்கும் ஒவ்­வொரு மாகா­ண­சபை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்­டையும் இணைத்து ஒரு மாகாண சபை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. பின்னர் நீதி­மன்­றத்தின் தீர்ப்புப் படி இம்­மா­காண சபையின் இணைப்பு ரத்துச் செய்­யப்­பட்டு வடக்­குக்கு ஒன்றும் கிழக்­குக்கு ஒன்­று­மாக தனித்­தனி மாகாண சபைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இம்­மா­காண சபை­க­ளுக்கு அந்­தந்த மாகாண சபை­களின் நியா­யா­திக்­கத்தின் கீழ் உள்ள பகு­தி­களின் சட்­ட­மாக்கல் தத்­துவம், ஆட்­சித்­துறைத் தத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது. பின்னர் அவை ஆக்­கிய சட்­டங்­களின் நீதி­மன்ற தத்­து­வமும் வழங்­கப்­பட்­டது. மாகாண நீதி­மன்­றங்கள் மேற்­படி 13 ஆவது அர­சியல் யாப்பின் 9 ஆம் பிரிவின் கீழ் உள்­ள­படி மேற்­படி மாகாண சபை­க­ளுக்கு மத்­திய அரசின் அதி­கா­ரத்­திலும் ஆட்­சி­யிலும் உள்ள அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், சில அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டாமல் மத்­திய அர­சி­டமே விடப்­பட்­டன. மாகாண சபை நிரல் என அழைக்­கப்­படும் நிர­லுக்­குள்­ளவை மட்­டுமே மாகா­ண­ச­பைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஒருங்­கிணை நிர­லுக்குள் உள்ள (அதி­கா­ரங்கள்) விட­யங்­களைப் பொறுத்­த­வ­ரையில் மாகாண சபையும் மத்­திய அரசும் சட்­டங்­களை இயற்­றலாம். ஒரு விட­யத்தில் இரண்டு சபைகளும் சட்­டத்தை ஆக்­கினால் மாகாண சபை ஆக்­கிய சட்­டத்­துக்கே கூடிய அதி­காரம் உண்டு. தற்­கா­லி­க­மாக அவ்­வி­டயம் சம்­பந்­த­மாக மத்­திய அரசு ஆக்­கிய சட்டம் தற்­கா­லி­க­மாக இடைநிறுத்­தப்­ப­டலாம். ஆயினும் நீதி­மன்றத் தீர்ப்­புக்கள் இவ்­வ­தி­கா­ரத்தைக் குறைத்துக் காட்­டி­யுள்­ளன. ஆகவே இந்­நி­ரலில் உள்ள விட­யங்­களை இரத்துச்செய்து ஒருங்­கிணை நிரல் என ஒன்று தேவை­யில்லை என சிலர் வாதா­டு­கின்­றனர். இந்­தி­ய­நிலை இதற்­கு ­வேறா­னது. இன்­னு­மொரு நிரல் ஒதுக்­கிய நிர­லாகும். இதன் கீழ் உள்ள விட­யங்­களை மத்­திய அரசு மட்­டுமே இயற்­றலாம்.

13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தின் கீழ் அமைக்­கப்­பட்ட மாகாண சபை­களின் செயற்­பா­டு­க­ளுக்கும் ஒருங்­கிணை நிரலில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மாக மாகாண சபை இயற்­றிய சில சட்­டங்கள் சம்­பந்­த­மா­கவும் மத்­திய அர­சுக்கும் மாகாண சபைக்கும் கருத்து வேறு­பாடு ஏற்­படத் தொடங்­கி­யது. நீதி­மன்­றத்­தீர்ப்­புக்கள் மாகாண சபை­களின் அதி­கா­ரத்தை விட மத்­திய அரசின் சட்­டங்கள் மேல் உயர்ந்­தவை என்று எண்­ணக்­கூ­டிய தீர்ப்பை வழங்­கின. இதனால் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கிய அதி­காரப்பகிர்வு ஒரு போலி­யா­னது என்ற எண்ணம் அர­சியல் கட்­சி­க­ளிடம் வளரத் தொடங்­கி­யது.

13 ஆவது அர­சி­ய­ல­மைப்பின் கீழ் அதி­காரப் பகிர்வு சில முக்­கிய விட­யங்­களை அடக்­கி­யுள்­ளது. விசே­ட­மாக பொலிஸ் அதி­காரம், காணி அதி­காரம் என்­பன. ஆனால் அவை உரிய முறையில் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட­வில்லை.

மேலும், மாகாண மக்­களால் தெரிவுசெய்­யப்­படும் மாகாண சபை­களை கலைக்கும் அதி­காரம் மாகாண ஆளு­நர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­மையும் அதி­காரப் பகிர்­வுக்கு ஏற்­பு­டை­யா­ன­தாக கொள்ள முடி­யாது.

ஆகவே, தற்­போது அமுலில் உள்ள அதி­காரப்பகிர்வு பரி­பூ­ர­ண­மா­னது என கூற­முடி­யாது. ஆகவே, புதிய அர­சி­ய­ல­மைப்பில் தற்­போது உள்ள குறை­பா­டுகள் நீக்­கப்­பட்டு அதி உச்ச அதி­காரப்பகிர்வு வழங்­கப்­பட வேண்டும் என எல்­லோரும் விரும்­பு­கின்­றனர்.

அதி­காரப்பகிர்வு சம்­பந்­த­மாக எதிர்ப்­ப­வர்கள் கூறும் காரணம்

தற்­போது அர­சியல் கட்­சிகள் அதி­காரப் பகிர்­வுக்கு எதி­ராகக் கூறும் சில கார­ணங்கள், அவை போலி­யா­னவை எனக் கண்­டு­கொள்ளலாம்.

1. மாகாண சபை­க­ளுக்கு காணியை பகிரும் உரி­மையை வழங்­கு­வது

2. பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வது.

3. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள தரிசுநிலங்­களை பிர­யோ­ச­னப்­ப­டுத்த முடி­யாமல் இருப்­பது.

4.மத்­திய அரசை ஆலோ­சிக்­காமல் வியா­பார மத்­திய நிலை­யங்­களை உரு­வாக்­குதல்.

5. மாகா­ணங்­க­ளுக்­கி­டையே வரியை அற­விடுதல்.

6. வெளி­நாட்டு உதவி

சில அர­சி­யல்­வா­திகள் இவற்றைக் கூறு­வதன் மூலம் நாடு இரண்­டா­கப்­ பி­ரிய இட­முண்டு என போலி­யான தர்க்­கத்தை அவர்கள் முன்­வைக்­கின்­றனர். சாதா­ரண பொது மக்கள் பல சகாப்­தங்­க­ளாக ஒரே ஆட்­சியின் கீழ் (ஒற்­றை­யாட்­சியின் கீழ்) வசித்துப் பழ­கி­ய­வர்கள். ஆகவே இன்­னு­மொரு அரசு மாகாண மட்­டத்தில் வரப்­போ­கி­றது என கூறியவுடன் பயம்­கொள்­வது சகஜம். ஆகவே அவற்றை நீக்க வேண்டும். இதனை அறி­வா­ளி­களும் மக்கள் அபி­மானம் பெற்­ற­வர்­களுமே செய்­யலாம். அர­சியல்வாதிகள் செய்ய முடி­யாது.

மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்­டி­யவை

மக்­க­ளுக்கு பின்­வரும் கருத்தை அவர்கள் அறி­வு­றுத்த வேண்டும். அதி­காரப்பகிர்வு என்­பது ஒரு புதிய முறை­யல்ல. இது ஆதி­கா­லத்தில் இருந்தே நடை­மு­றையில் உள்ள ஒரு விடயம். கிராம சபை, நகர சபை, மாந­கர சபை என நிறு­வ­னங்கள் அமைக்­கப்­பட்டு அவற்றின் மூலம் சட்­ட­வி­திகள் உண்­டாக்­கப்­பட்டு அவற்றின் பகு­திகள் பரி­பா­லிக்­கப்­ப­டு­வதை அவர்­க­ளுக்கு காட்ட வேண்டும். முன்னர் வன்­னியார், முகாந்­திரம், நில­மையார் ஆகியோர் மூலம் தென்­னி­லங்­கையில் உத்­தி­யோ­கத்­தர்கள் நிய­மிக்­கப்­பட்டு அரச அதி­காரம் செலுத்தி வந்­தனர். அவர்கள் பாவித்­தது அரசின் அதி­கா­ரமே என்­பதை மக்­க­ளுக்கு உணர்த்த வேண்டும். யாழ்ப்­பாணம் மற்றும் சில பகு­தி­களும் பரி­பா­லிக்­கப்­பட்டு வந்­தது வன்­னி­யர்­களின் மூலம் என்­பது காட்­டப்­பட வேண்டும்.

வெளி­நாட்­டவர் இலங்­கையைக் கைப்­பற்­றிய போதும் அவர்­க­ளது ஆட்சி மிகக் குறு­கிய காலமே நிலைத்­தி­ருக்க முடிந்­தது. ஆகவே பிறரின் ஆட்சி ஏற்­படும் எனப் பயப்­படத் தேவை­யில்லை. ஏற்­பட்­டாலும் மிகக் குறு­கிய காலமே அது இருக்க முடியும்.

ஆகவே, அதி­காரப்பகிர்வு என்­பது இலங்­கையில் மிகச் சமீப காலத்தில் ஏற்­ப­ட­வில்லை. 21ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து இலங்­கையின் பரி­பா­லனம் பற்றி நிய­மிக்­கப்­பட்ட குழுக்கள் அனைத்தும் அதி­காரப்பகிர்­வையே சிபார்சு செய்­தன. மேலும், இங்கு அதி­காரப்பகிர்வை சிபார்சு செய்­த­வர்கள் அனை­வரும் இனப்­பிரச்­சி­னைக்கு அதி­காரப்பகிர்வே ஒரே வழி என தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஆகவே, பல வரு­ட­கா­ல­மாக இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்­க­வுள்ள ஒரேவழி அதி­காரப் பகிர்வு என்றே சுட்டிக் காட்­டினர்.

சிலர் அதி­காரப்பகிர்வின் நன்மை பற்றிக் கூறும் பொழுது அர­சியல்ரீதி­யாகத் தமது பத­வியைத் தக்கவைத்­துக் ­கொள்ள விரும்­பு­பவர்கள் அதற்கு முர­ணான கருத்­தையே முன்­வைக்­கின்றார். ஆனால், அதி­காரப்பகிர்வு என்­பது அரசின் அதி­கா­ரங்­களை மிகப்பிர­யோச­ன­மான முறையில் நடத்­திட உள்ள ஒரே வழி­யாகும். மாகாண மட்­டத்தில் உள்ள மக்­களும் நாட்டின் நிர்­வா­கத்தில் பங்கு கொள்ளும் வண்ணம் அவர்­க­ளது கருத்­தையும் தலை­மை­யையும் கைய­ளிக்­கக்­கூ­டிய ஒரே வழி இந்த அதி­காரப்பகிர்­வே­யாகும். மாகாண மட்­டத்தில் உள்­ள­வர்­களின் திறனைப் பெறக் கூடி­ய­தாக இருப்­ப­துடன், நாட்டிள் பொரு­ளா­தார வளத்­திற்கும் அவர்­க­ளது உத­வி­யையும் பெறக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கின்­ற­துடன் நாட்டின் ஒற்­று­மைக்கும் பால­மாக அமை­கி­றது.

தொகுப்­புரை

இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மிக விரைவில் வெளி­வ­ர­வி­ருக்­கி­றது. இதனை எப்­ப­டி­யா­வது தடுத்துநிறுத்த வேண்டும் என சிலர் கங்­கணம் கட்டி செயற்­பட்டு வரு­வதை நாம் காணலாம். ஆனால் அவ்­வாறு நடை­பெ­ற­மாட்­டாது என கூறலாம்.

நாட்டின் பெரும்­பான்­மை­யான பொது மக்கள் நாட்டில் அமை­தியும் சமா­தா­னமும் பொரு­ளா­தார வளமும் நிலைத்­தி­ருக்க வேண்டும் என்­ப­தை­யுமே விரும்­பு­கின்­றனர். இத­னால்தான் சில அர­சியல் கட்­சிகள் நடத்தும் எதிர்ப்­பு­க்க­ளுக்கு ஆத­ரவு அளிக்­காமல் இருக்­கி­றதை நாம் காணலாம்.

இலங்­கையில் உள்ள அதி­கா­ரப்­ப­கிர்வு 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பின் கீழ் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தே­யாகும். இனரீதி­யான பிரச்­சி­னைக்கு தீர்வு காண இவ்­வ­தி­காரப்பகிர்வு என்­பதை இலங்கை அரசும் இந்­திய அரசும் ஏற்­றுக்­கொண்­டதால் இப்­ப­கிர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால், நடை­மு­றையில் இதற்கு பல தடைகள் ஏற்­பட்­டன. சட்­ட­வி­யாக்­கி­யா­னங்கள், உள்­நாட்டில் நில­விய குழப்பம் என்­பன மிக முக்­கிய கார­ணங்­களாய் இருந்­தன. இதனால் மீண்டும் பழைய பிரச்­சினை உக்­கி­ர­ம­டையத் தொடங்­கி­யது. அதி­காரப்பகிர்வு மிக அவ­சியம் என உண­ரப்­பட்­டது.

இதன் பய­னாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் போது இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்கு உச்ச அதி­காரப் பகிர்வு செய்­யப்­படும் என எதிர்­பார்க்கை பல­ராலும் எதிர்­பார்­கப்­ப­டு­கி­றது.

முன்னர் அதி­கா­ரப்­ப­கிர்வை எதிர்த்­தவர் பலர் இன்று அதனை வர­வேற்­கின்­றனர். ஆகவே இந்த அர­சி­ய­ல­மைப்பில் உச்ச அதி­காரப்பகிர்வு இடம்­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

தற்­போ­தைய அதி­கா­ரப்­ப­கிர்வில் பல குறை­பா­டுகள் உள்­ளன. விசே­ட­மாக, மக்­களால் தெரிவுசெய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளுக்கு அளிக்­கப்­படும் ஸ்தானம் உறு­தி­யுள்­ள­தாக இல்­லாமல் இருக்­கி­றது. இந்­தி­யாவில் 356 ஆம் பிரிவின் கீழ் மாநில அரசை மத்­திய அரசு கலைக்கவேண்­டு­மானால் சில அர­சியல் சூழ்­நிலை அங்கு நிலவ வேண்டும் என இந்­திய அர­சியல் சட்டம் கூறு­கி­றது. அத்­த­கைய பாது­காப்பு இலங்­கையில் மாகாண சபை­களை கலைக்கும் போது இருக்க வேண்டும் என்ற விதி­யில்லை.

காஷ்மீர் சட்­ட­ச­பையை கலைக்க வேண்­டு­மானால் முத­ல­மைச்­சரின் வேண்­டு­கோளின் கீழேயே சட்­ட­ச­பையை ஆளுநர் கலைக்­கலாம். இலங்­கை­யிலும் இத்­த­கை­ய­தொரு விதி ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். உச்ச அதி­காரப்பகிர்வு சமஷ்­டிக்கு இணை­யான அதி­காரப்பகிர்வு என்­பதால் இதில் கரி­ச­னை­யுள்­ள­வர்கள் இதனை கவ­னத்தில் எடுக்க வேண்டும்.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=10/08/2016

 
 
 
 
 
 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.