Jump to content

சுவாரசியமான செவ்விகள்


Recommended Posts

  • 2 weeks later...
  • Replies 65
  • Created
  • Last Reply
  • 3 weeks later...
  • 3 weeks later...
  • 4 months later...
  • 5 weeks later...
  • 3 weeks later...
  • 9 months later...

ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955)

 
 
ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955) மனித வரலாற்றின் தலை சிறந்த மேதைகளில் முதன்மையானவர். அரிஸ்டாட்டில், கலீலியோ, நியூட்டன் வரிசையில் அடுத்து இடம் பெறும் பெரிய அறிவு ஜீவி ஐன்ஸ்டீன். 1905ல் சார்பு தத்துவம் முதல், ஒளியின் மின் விளைவு வரை இவர் வழங்கிய நான்கு ஆய்வுகள் இயற்பியலை மட்டுமல்ல உலக நடப்பையே மாற்றி அமைத்தன. இவர் அமைத்து வழங்கிய  E=mc2 சமன்பாடு இல்லையேல் இன்றைய மின் அணு சாதனம் ஏதும் இல்லை. இதே சமன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு நடந்தபோது அதன் விளைவுகளை முன் வைத்து அறிவியலை அழிவுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக முதலில் களமிறங்கிய மாமனிதர் ஐன்ஸ்டீன், யூதராகப் பிறந்ததற்காக ஹிட்லரால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, சுவிட்சர்லாந்திலும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலுமாய் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஐன்ஸ்டீன் இன்றைய அறிவியல் மயமான நவீன உலகின் ஆக்கச் சிற்பிகளில் முதன்மையானவர் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.  ஐன்ஸ்டீன் எந்த நாடுகளுக்கெல்லாம் சென்று வாழ்ந்தாரோ, உலக அறிவியல் கண்டு பிடிப்புகளின் மைய நீரோட்டமும் அந்த நாடுகளை நோக்கி நகர்ந்தது. தலைசிறந்த மனிதநேய சிந்தனையாளரான ஐன்ஸ்டீன் தன் வாழ்நாளில் ஏறக்குறைய 26 முறை நேர் காணல்கள் செய்யப்பட்டார். அதைத் தவிர தன் கருத்துக்களை சுதந்திரமாகவும் திறந்த மனதுடனும் கட்டுரைகளாக, எழுத்துக்களாக, உரைகளாக கடிதங்களாகப் பகிர்ந்தார். அப்படியான அவரது உரையாடல்களிலிருந்து இன்றைய பொருத்தப்பாட்டோடு கூடியவற்றைத் தேர்வு செய்து இங்கு வழங்கப்படுகிறது. பதிலின் முடிவில் யாருக்கு எந்த ஆண்டு கூறிய பதில் என்பதை அடைப்புக் குறிக்குள் பார்க்கலாம்.
 நன்றி: விக்கிப்பீடியா.

ஒரு சராசரி கடவுள் நம்பிக்கைவாதி நீங்கள் இல்லை, என்பது தெரியும். ஆனால் உள்ளுணர்வு, ஆழ்மனம் என்றெல்லாம் நம்பிக்கை வைத்துள்ளீர்களே... இது முரணாக இல்லையா?

அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்ன? மனித உள்ளுணர்வு என்பதில் சந்தேகமே இல்லை. 1919 மே 29, ராயல் அகாடமியின் இரு குழுக்கள் எனது சார்பியல் சரியா என்பதை பரிசோதிக்க களம் இறங்கின. அந்த சூரிய கிரஹணத்தின் அனைத்து ஆய்வுகளின் போதும் எனது அனுமானங்கள்  (Hypotheses)  சரியென நிரூபிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்பினேன். எனது அனுமானம் எனது உள்ளுணர்வின் வெளிப்பாடு. அனைவரும் நம்பிக்கைகொண்டிருந்த ஒரு பாதைக்கு முற்றிலும் எதிராக எனது உள்ளுணர்வு ஒரு பாதையை முன்மொழிந்தது. அன்று அவர்கள் சார்பியலுக்கு தங்களது கணக்கீடுகள் ஒத்துப் போகவில்லை என்று சொல்லி இருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர்கள் என்பாதை சரி என்று நிருபித்தது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. கற்பனை வளமிக்க படைப்பாக்க சிந்தனை அறிவுப் பூர்வமான அணுகுமுறையை விட முக்கியம். உள்ளுணர்வு என்பது இயற்கையில் அமைந்த மனித இயல்புகளில் ஒன்று. எல்லாரும் பனியில் விறைத்து செத்துக் கொண்டிருந்தபோது கற்களால் தீப்பொறி வரவழைத்து  நெருப்பை படைத்தது அது தான் (விவேரஃக்\1929)

பயன்அறிவியல்  (Applied Science)  எனும் தனித்துறை உருவாகி வருகிறதே. அற்றி உங்கள் கருத்து என்ன?தைப் ப
பாட்டு 

வாழ்வை எளிதாக்கி மனித வேலைப்பளுவை குறைக்க, வீட்டு உபயோக கருவிகளாகவும், இயந்திர உற்பத்தியாகவும் இன்று அறிமுகமாகி இருக்கும் அறிவியல் இயற்பியல், வேதியியல் என அனைத்தின் கலவை. ஆனால் வாழ்வை எளிதாக்கிவிட்ட கருவி யுகம் நமக்கு மிக குறைவான மன மகிழ்ச்சியே தருகிறது. அறிவியல் தொழில் நுட்பம் யுத்தத்தின்போது நம் ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொள்ளப் பயனாகிறது. அமைதி காலத்திலோ நம் வாழ்வை துரிதப்படுத்தி நிச்சயமற்ற தன்மையை அது வழங்குகிறது. மனித இனத்தின் அடிமை முறையை ஒரு வகையில் முடிவுக்கு கொண்டு வந்துள்ள இது முழு மனித இனத்தையும் இயந்திரவியலின் அடிமையாக்கிவிடும் அபாயம் கொண்டது. இயந்திர யுக மனிதன் நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தொழில்நிலையத்தில் உற்பத்தி சக்திகளின் ஒருவனாய் ஒருநாள் முழுவதும் ஒரே மாதிரி வேலையில் ஈடுபட்டு பங்கீட்டின்போது மிகக் குறைவான மதிப்பீடை அடையும் துயரமாய் வெடிக்கும் அபாயம் இதற்கு உண்டு. மனித இனம் குறித்த அக்கறையும் அவனது பயன்பாடு குறித்த மனத்தெளிவும் மறந்த அறிவியல் ஆபத்தில் தான் போய் முடியும். விற்பனைக்காக சந்தைகளை நிரப்ப இருக்கும் கருவிகளில் நான் அறிவியலை மட்டும் பார்க்கவில்லை அதன் பின் ஒளிந்திருக்கும் கலாச்சார சரிவையும் சந்தைகளின் மாய வலையையும் சேர்த்தே காண்கிறேன். சாதாரண மனிதர்களின் தீர்க்க இயலாத கூலி - வேலை மற்றும் படைப்பாக்க பங்களிப்பின் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயமாக நான் அதை பார்க்கிறேன். உங்கள் அறிவியல் வரைபடங்கள் சமன்பாடுகள் நடுவே மனிதனை மறந்து விடாதீர்கள். மனித  முன்னேற்ற வரமாக அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும். சாபமாக அல்ல. (நியூயார்க் டைம்ஸ்-1931)

E=mc2  சமன்பாட்டின் கணித நிரூபணம், சமீபத்திய அறிவியல் ஆய்வு அடிப்படையிலான நிரூபணம் எது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது?


ப: காக்ராஃட்(Cockcroft) மற்றும் வால்டன் (Walton) இருவருமாக ஆய்வடிப்படையில் நிறைக்கும் ஆற்றலுக்குமான சார்பை நிறுவி இருக்கிறார்கள். நிறையும் ஆற்றலும் பருபொருளின் அடிப்படையில் சொல்வதானால் ஒரே நாணயத்தின் இருமுகங்கள். இச்சமன்பாடு, இது நான் எனது 1905 ஆய்வுக் கட்டுரையில்  (Does the Inertia of a Body Depend upon its Energy Content) ஒரு வாசகமாக இடம் பெற வைத்திருந்ததன் சுருக்கம். ஒரு பொருள் L எனும் ஆற்றலை கதிர்வீச்சாக வழங்குமாயின் நிறை L/C2  எனும் விகிதத்தில் முற்றிலும் சுருக்கமுறும் என்பதிலிருந்து அது தொடங்கியது. m=L/c2 என முதலில் விரிவாக்கம் அடைந்த அதை கணித நிரூபணப் படி நிலையின்போது  E=mc2 என அடைய நேர்ந்தது. அறிவியல் ஆய்வு அந்த கருத்துரு (Hypothesis) அறிவியல் மெய்மையாக  (fact)  விரிவாக்கம் பெற்றுள்ளது. இந்தப் படிநிலைகளில் கணிதமா, அறிவியல் ஆய்வா எது எதனை விட அவசியம்  என்றெல்லாம்  நாம் புரிந்து கருதவாய்ப்பில்லை. இவை ஒன்றுக்குள் ஒன்று. (ஆண்டனோயா வாலண்டின் -1940)

சமீபத்தில் கோட்பாட்டு இயற்பியல் குறித்த உங்களது ஹெர்பெர் ஸ்பென்சர் உரையில் 'எளிமையாக புரிந்து கொள்வதற்கும் எளிமைப்படுத்திவிடுவதற்கும் வித்தியாசமுள்ளதாக' பேசி இருக்கிறீர்கள். இதை சற்று விளக்க முடியுமா?


சார்பு தத்துவத்தின் அடிப்படைகள்  வெளிவந்தபோது உலகெங்கும் அது புரியவில்லை எனும் கருத்தாக்கம் எழுந்தது. எவ்வளவோ சித்தாந்தங்கள் வெளிவந்த இந்த நூற்றாண்டின் இந்த கால கட்டம் சார்பியலை ஏற்றதற்கு அதை அவசியமான குவாண்டவியல் விஞ்ஞானிகள் புரிந்து விவாதித்ததே முக்கிய காரணம். இயற்பியல் அடிப்படைகள் மனித மனதின் படைப்பாக்கத்திலிருந்தே உருவாகின்றன. ஆனால் அக உலக சக்திகளின் வெளிப்பாடுபோல ஒரு வகை பாவனையோடு வேண்டுமென்றே கடினத்தன்மையை சிலர் வரிந்தேற்றுவதை நான் அறிவியல் என்று ஏற்கமாட்டேன். அதேசமயம் எல்லாமே புல் அறுக்கும் தொழிலாளி அளவுக்கு எளிதில் பிடிபடும்படி எளிமைப்படுத்தி விடுதல் நியாயமே இல்லாதது. கைக் கடிகாரத்தை ஒருவர் புரிந்து கொள்வது போன்றது அது. அவர் இரண்டு முட்கள் இருப்பதையும் அவை நகர்வதை வைத்து காலமறிதலையும் கற்கிறார். அவரால் 'கிளிக் கிளிக்' சத்தத்தையும் கேட்க முடிகிறது. ஆனால் வாட்சை திறந்து உள்ளே என்ன உள்ளது என்றும் அவர் அறிந்திருக்க அவசியமில்லை. ஆனால் அது குறித்து அவருக்கு கற்பனையில் ஒரு அமைப்பாக்கம் பிடிபடுகிறது. அவர் பார்த்த பொருட்களை கருவிகளை வைத்து அவருக்கு ஏற்பட்ட அனுமானம் அது. உண்மையான அமைப்பிலிருந்து அவர் மனங்கொண்ட கற்பனை அமைப்பு எவ்வகையில் ஒற்றுமை- வேற்றுமை கொண்டது என்பதை ஒப்பிட நீண்ட புரிதல் தேவை. கடிகார உட்கட்டமைப்பு பிடிபட அதன் தேவை, அவரது நிபுணத்துவம், அவர் யார் என பல படிநிலைகளில் நாம் கருத வேண்டியுள்ளது. கடிகார நிபுணத்துவமிக்க ஒருவரோடு ஒப்பிடும் அளவில் இவர் வேறுபட்டாலும் ஒவ்வொரு அறிவு நிலையாக விரிவடையும்போதுதான் உண்மை கருவியாக்கம் அவருக்குப் பிடிபடும். இத்தகைய அளவில் கோட்பாட்டு இயற்பியலை நாம் அணுக வேண்டும். கடிகாரத்தின் உட்கட்டமைப்பும் முழுமையாக அந்த கைக்கடிகார பயன்பாட்டாளருக்குப் புரியவேண்டும் என்றால் அது அவரது ஈடுபாடு பொறுத்த விஷயம். கடிகார உற்பத்தியாளர்கள் அவருக்குப் புரியும் வகையில் தான் அதன் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்வதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்காது என்றே நம்புகிறேன் (லியோப்போர்டு இன்ஃபீல்டு-1941)

இன்றைய உலகின் அவசியமான கல்வியறிவு எந்த புதிய துறையை வெகுஜனங்களுக்கு எடுத்துப் போகும்படி இருக்க வேண்டும். பள்ளி அளவில் நாம் சார்பியலை குழந்தைகளுக்குத் தரலாமா?


உலகை இருவித உலகாக வரலாற்றாளர்கள் பார்க்கிறார்கள். சிலர் நவீன நாகரீகம் வந்த பிறகு - அதற்கு முன் என பிரிக்கிறார்கள். சிலர் கிருஸ்த்துவிற்கு முன்- பின் என பிரிக்கிறார்கள். ஹாவர்டு பல்கலைக்கழகம் சார்பியலுக்கு முன் - பின் என வரலாற்றைப் பிரித்து சமீபத்தில் அறிவித்தது. ஆனால் ஹிரோஷிமா- நாகசாகி அணுகுண்டு வீச்சிற்கு பின் அணுஆயுதப் பெருக்கம், அணுக்கதிர் ஆபத்துகளுக்கு முன் அதன் பின் என உலக வரலாறு எதிர்காலத்தில் புரிந்து கொள்ளப்படும் நிலையே உண்மைநிலை எனப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்ல நாம் மக்களிடம் அணுக்கதிர் வீச்சின் அடிப்படைகள் குறித்தே இன்று கல்வியளிக்கும் அவசியத்தில் உள்ளோம்.  உலகம் இதுவரை பார்த்திராத பயங்கரமான பேரழிவுப் பாதையைத் தேர்வு செய்து விட்டதென்றே தோன்றுகிறது. புதிய வகை அணுகுமுறை தேவை, புதிய பாதையில் பேரழிவைத் தவிர்ப்பது எப்படி என்பதையே நாம் கல்வியின் அடிப்படையாக, நீரோட்டமாகக் கொள்ள வேண்டும். புவியின் கதிர்வீச்சு நிரந்தரமாக நமது வாழ்நிலத்தை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றப்போகிறது. புவியின் ஆதார இயற்கை நலங்களை மனிதர்களின் ஆதிக்க அரசியலும் பேராசை பொருளாதார அமைப்புகளும் பெரிய அளவில் அழிவுக்கு உட்படுத்தப் போவதைப்பார்க்க முடிகிறது. கல்வி இதற்கு எதிராக செயல்பட வேண்டும். புவியை காப்பது குறித்தே அனைத்து வகைப் பாடப் பொருளையும் கட்டமைக்க வேண்டியுள்ளது. தீர்வு அறிவியலிடம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அது மனிதர்களின்  இதயத்தில் உள்ளது. (நியூயார்க் டைம்ஸ்-1946)

ரஷ்யாவில் நடப்பதை உலகின் அச்சுறுத்தலாகப் பார்க்கிறீர்களா?


போல்ஷ்விஸம் ஒரு முக்கியமான சோதனை. தனிமனிதர்களுக்கு மேலாக சமூகம். மனிதஇன சமூக-பரிணாமவியலின் உச்சமாய் கம்யூனிசமே இறுதி இலக்காகக் கூட கருதலாம். போல்ஷிவிய சோதனையை குறிப்பாக நாடுகள் பரிசீலித்து பரிசோதிக்கலாம். ஆனால் ஸ்டானின் மீதான சர்வாதிகார குற்றச்சாட்டுகளின் மறுபக்கத்தையும் நாம் அறிய வேண்டும். ஹிட்லர் மாதிரி ஒரு ஆதிக்க அதிகார வெறியை எதிரியாக முகங்கொள்ளும்போது நாம் வெளியிலிருந்து விமர்சிப்பது மிகவும் எளிது. ரஷ்யாவின் அறிவுஜீவிகள் கூட அதை ஊர்ஜிதம் செய்கிறார்கள். தற்போதைய உலக அமைதி நேசராக நாம் சோவியத்தைப் பார்க்கிறோம். ஆனால் தேசிய வாதம், ஒரு சமூகத்தின் பாரம்பரியம், தனிமனித பங்களிப்புகள் இனக்குழு அங்கீகாரம் இவையும் சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. இது ரஷ்யர்களுக்கும் தெரியாததல்ல. (எம்.கே.வைஸ் ஹர்ட்-1949)

ஐன்ஸ்டீன் அறிவு ஜீவி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பணம் பண்ணத் தெரியாதவர்! செல்வந்தராகும் அளவுக்குத் திறனில்லை என்று உங்கள் மீது ஒரு விமர்சனம் உள்ளதே?


அமெரிக்கர்களுக்கு செல்வந்தர் ஆவது ஒன்றே இலக்காக இருப்பது தெரிந்ததுதான். நான் எனது கண்டுபிடிப்புகளுக்காக அறிவியலுக்காக ஒரு போதும் ஊதியம் எதுவும் பெறவிரும்பவில்லை. எனது அறிவியல் நோக்கிய விருப்பும் ஈர்ப்பும் என் சுய ஆர்வம் சார்ந்தவை. இத்தனை டன் பருத்திக்கு இத்தனை டாலர் என விலை சொல்ல எனது பங்களிப்பைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். ஒரு இசையை நோக்கி ஈர்க்கப்படும் ரசிகனாய், நான் அறிவியலைப் பின் தொடர்கிறேன். அறிவியலால் வரும் பணம், மதிப்பு, அது தரும் பதவி பட்டங்கள் பெயர் அடைமொழி எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. எதுவும் அதனினும் சிறந்ததாக இல்லவே இல்லை. எனது மகிழ்ச்சியாகவும் ஒரே மனநிறைவாகவும் இருக்கும் ஒன்றை செய்திட தொடர்ந்து என்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நான் வேறு நோக்கங்களுக்கு என்னை திசை திருப்பிட யார் நிர்பந்தித்தாலும் பணியமாட்டேன். சுதந்திர படைப்பாக்க சிந்தனையை கற்பனைத் திறனை தொடர்ந்திட தேவையான அனைத்தும் என்னிடமே உள்ளது. உங்களிடமும் உள்ளது என்பதை மதித்தபடி என் ஈடுபாட்டை தொடர்ந்திட விரும்புகிறேன் (வைஸ்ஹார்ட், 1930)

இயற்பியலின் பன்முனைக் கோட்பாடுகளை இணைக்கும் யூனிஃபைடு ஃபீல்டு தியரி நோக்கிய உங்கள் பயணம் எந்த அளவிற்க உள்ளது?


அணுக்கருவியல், அணுவிற்கு உள்ளே இருக்கும் உட்கரு துகள்களின் அமைப்பை ஆராய்கிறது. குவாண்டவியல் சார்புதத்துவமான விண்வெளியின் பிரமாண்ட அமைப்புகளும் இணைத்து ஒருமித்த கோட்பாட்டை எட்டுவதற்கான வேலையிலேயே என் வாழ்வை முழுமையாக்கிட விரும்புகிறேன். அதற்கு மட்டுமே என் நேரத்தை, வேலைபோக மீதி நேரத்தை- கழிக்கிறேன். அவ்வகைக் கோட்பாடு சாத்தியமாகும்போது அறிவியல் மனித வாழ்வின் அடுத்த வளர்ச்சிப் படி நிலையை எட்டி இருக்கும். (ரேமாண்ட் ஸ்விங்-1950)

ஒரு இயற்பியலாளராக, விஞ்ஞானியாக ஆகாமல் போயிருந்தால் என்ன ஆகி இருப்பீர்கள்?


அறிவியல் மனிதனாக ஆகாமல் போயிருந்தால் நான் இசைக்கான மனிதனாக ஆகியிருப்பேன். இப்போதும் எனது வயலின் கருவியும் விசைப் படகும் எனக்கு என் அடையாளமாக நான் கருதும் ஈடுபாடான விஷயங்கள். நாட்டின் அதிபராகும்படி மட்டுமல்ல பல்கலைக்கழக வேந்தர் முதல், நகர மேயர் என பல பதவிகள். ஆனால் என் ஈடுபாடு அறிவியலும் என் ஆசிரியர் பணியும் தான். ஒருவர் பெரிய ஆளாக வாழ்கிறாரா என்பதைவிட தன் சுய விருப்பப்படி பாசாங்கற்ற மனிதராக வாழும் உரிமை பெரியது என்பது என் கருத்து.

சோஷலிஸம் ஏன்?  (Why Socialism?)

 
மனித இனவளர்ச்சி குறித்த இயலில் சோஷலிஸமே நிரந்தர அறிவியல் என்று எனக்குப்படுகிறது. மனிதர்களின் சமூக சிந்தனை என்பதன் பரிணாம வளர்ச்சி சோஷலிஸ சமுதாயத்தை நோக்கியே இட்டுச் செல்ல முடியும். உற்பத்தி- லாபம் இவை பற்றிய பொருளாதார நிபுணத்துவம் இல்லாத என்னைப் போன்ற ஒருவருக்கு இது குறித்து கருத்துகூற  உரிமை உள்ளதா என்றால், அது இன்னும் சிறப்பான தகுதியாக இருக்குமெனக் கருதுகிறேன். தற்போதைய முதலாளிய சமூகத்தின் பொருளாதார ஆதிக்கமும் மூலதன குவிப்பிற்காக நடக்கும் சுரண்டலுமே அனைத்து வகையிலும் பிரச்சனைகளின் தீய ஊற்றாக உள்ளது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் உச்சத்தில், இருப்போருக்கும் இல்லாதோர்க்குமான இடைவெளியை சந்தைப் பொருளாதாரம் ஆழப்படுத்துவதால் சமூகத்தின்  அனைத்து தட்டு மனிதர்களுமே, அபாயகரமான போட்டி, பாதுகாப்பின்மை, சுரண்டல் மனப்பான்மை, ஏமாற்று என எதிலும் மன அமைதியற்று சிதைவதைக் கண்கூடாகக்  காணமுடிகிறது. இவ்வகை திட்டமிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பு சோஷலிஸமல்ல. இதில் அதிகார அமைப்புகள் நிறுவனமாகி சந்தைகளை ஆக்கிரமிக்கின்றன. இன்றைய உலகில் மிகப் பெரிய சிக்கல் தனிமனிதனுக்கும் அவனை உருவாக்கிய சமூகத்திற்குமான பரஸ்பர முரண்கள் தீயசக்தியாக உருவெடுப்பதே ஆகும். மேற்கண்ட அனைத்து வகை சிக்கல்களுக்குமான ஒரே நிரந்தரத் தீர்வு சோஷலிஸ பொருளாதாரமென்றே நான் நம்புகிறேன். அத்தோடு நமது கல்வியில் சோஷலிஸத்தை ஒரு அங்கமாக இணைக்க வேண்டும். 
(மன்த்லி ரிவ்யூ-1949)

ஆத்திகவாதமா? நாத்திகவாதமா? உங்கள் நிலைப்பாடு என்ன?


நான் ஒரு அறிவியல்வாதி. ஒரு உதாரணம் சொல்கிறேன். X  எனும் மனிதர் கடுமையாக உழைப்பவர்; Y ஒரு நிறைந்த பக்திமான். Y ஐ ஆதரித்து X ஐவிட அதிர்ஷ்டம் கொட்டவைக்கும் ஒரு கடவுள் எப்படி நியாயமானதாக இருக்க முடியும்? குண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோஷிமாவின் பவுத்த ஆலயங்களின் சிதிலமடைந்த பகுதிகளுக்குப் போனபோது ஸ்பீனோசாவின் கடவுள் குறித்த நிலைப்பாடுகளை நான் பரிசீலிக்கத் தொடங்கினேன். ஆட்சியாளனின் முன்நோக்கிய திட்டம் - ஆதிக்க அரசியலின் சமரசம், இவர்களது கடவுள் யார் பக்கம் என்பதை நாம் கூறவேண்டியதே இல்லை. இன அடையாளமாய் லட்சக்கணக்கில் கொலையுண்டு தேசிய அடையாளமாய் பேரழிவுக்கு உட்படும் ஒரு மத அமைப்பைக் கடந்த சர்வதேச மனித நேயத்தை அறிவியல் சிந்தனை மட்டுமே விதைக்க முடியும். Be Scientific. (பால்.ஏ.ஸ்ஷில்ப் (1949).
 
thanks புதிய புத்தகம் பேசுது (2013 அக்டோபர்)
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • 1 month later...

உன்னதமான தலைவர் பிரபாகரன் - ஓவியர் புகழேந்தி | ஒரு படைப்பாளரின்  கதை

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 4 weeks later...
  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.