Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையலாம் - விலகலாம்: மகிந்த ராஐபக்ஸ.

Featured Replies

யாரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையலாம் - விலகலாம்: மகிந்த ராஐபக்ஸ.

ஒவ்வொருவருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவும், விலகவும் உரிமையுண்டு. யாரும் கட்சியில் இணைவதையும் விலகுவதையும் நான் எதிர்க்கமாட்டேன் என மகிந்த ராஐபக்ஸ சிறீலங்கா சுதந்திரக்கட்சி உயர் குழு கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தனது அரசு தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுதலையடையச் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலராக மைத்திரிபால சிறீசேன மீள தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மங்கள சமரவீர பொருளாளராகவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்தை ரத்வத்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

-Pathivu-

  • தொடங்கியவர்

சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கட்டிக்காப்பதற்காக கடந்த காலங்களில் பட்ட துன்பங்களை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது அவ்வாறு கட்டிக்காத்து பலமிக்க கட்சியாக விளங்குகின்ற கட்சியை பிளவு படுத்துவதற்கு எம்மில் சிலர் முயற்சி செய்து வருகின்றனர் கட்சியை பிளவு படுத்துவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

www.virakesari.lk

  • தொடங்கியவர்

மிகப்பெரும் அமைச்சரவையை அமைக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு.

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவை அடுத்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் 52 அமைச்சர்களைக்கொண்ட மிகப்பெரும் அமைச்சரவையை அமைக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு எடுத்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் நாள் அமைக்கப்பட உள்ள இந்த அமைச்சரவையில் மகிந்த தன்வசம் வைத்திருக்கும் அமைச்சுப் பொறுபுக்களும் அடங்கும் என மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வட்டாரங்கள் மேலும் தகவல் தருகையில்,

இந்த தடவை ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு அமைச்சுப் பொறுப்புக்களே வழங்கப்பட உள்ளன. அமைச்சர்களுக்கு மேலதிகமாக பிரதியமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட மாட்டாது.

மகிந்த வசம் உள்ள அமைச்சுப் பொறுப்புக்களுடன் 36 அமைச்சர்களும், 24 துணை அமைச்சர்களும், 18 பிரதியமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். கட்சிதாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொத்தமாக 10 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது. இதில் 8 பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் உறுப்பினர்களுக்கும், தலா ஒவ்வொரு அமைச்சர் பதவிகள் கெல உறுமய மற்றும் முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் கெல உறுமயவுக்கு வழங்கப்படும் அமைச்சுப் பொறுப்பை ஏற்காது விட்டால் அந்தப் பதவியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கப்பட உள்ளது.

இந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் 8 துணை அமைச்சர்கள் அமைச்சர்களாகவும், மேலும் சில பிரதி அமைச்சர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.