Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை வேட அணுகுமுறையால் அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு.

Featured Replies

இரட்டை வேட அணுகுமுறையால் அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு.

"சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது'' இப்படி ஒரு பேச்சு மொழி வழக்கு, நம் மத்தியில் உள்ளது. அமைதி முயற்சிகளை அரசு கையா ளும் விடயத்தைப் பார்க்கும்போது இந்த மொழித் தொடர்தான் நினை வுக்கு வருகின்றது.

ஒரு புறம் இராணுவப் போர்வெறித் திட்டம். மறு பக்கத்தில் அமைதி முயற்சிகள் குறித்து சர்வதேச மட்டத்தில் ஆரவாரப் பிரசாரம். இந்த இரட்டைவேட அணுகுமுறை, நாட்டை எங்கே கொண்டுபோய் நிறுத் தப் போகின்றது?

மட்டக்களப்பு, வாகரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள பிரதேசங்களைக் கைப்பற்றும் இறுதித் தாக்குதலை இலங்கை அரசின் இராணுவம் முடுக்கி விட்டுள்ளது என்று கொழும் பில் அறிவிக்கப்படுகின்றது.

அதாவது, யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறிக் கொண்டே பெரும் எடுப்பிலான வலிந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில், தென்னிலங்கையில் பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரு குண்டுத் தாக்குதல்களையும் அமெரிக்கா வன்மையாகக் கண்டித்திருந்தது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதர், அச்சமயம் கண்டியில் இருந்தார். அவர் அங்கிருந்தபடியே இது தொடர்பான கண்டன அறி விப்பை விடுத்தார். பயணிகள் பஸ்ஸில் நடத்தப்பட்ட கொடூரமான குண்டுத் தாக்கு தலைக் கண்டித்த அவர், வாகரையில் இடம்பெறும் விவகாரம் குறித்து அதிகம் அலட்டாமல் அமுக்கி வாசித்தார். யுத்த நிறுத்தத்தைக் கடைப் பிடிப்பதாகக் கூறும் அரசு, அந்தச் சமயத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் வாகரைப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்குப் பெரும் போர் ஆக்கிரமிப்புத் திட்டத்தைச் செயற்படுத்தி வருவதைக் கண்டும், காணாமலும் அவர் விட்டுவிட்டார். அது மட்டுமல்ல. வாகரையில் இடம்பெறுவது அரசுப் படைகள், வலிந்து மேற்கொள் ளும் பெரும் இராணுவ நடவடிக்கையாகவும் அவரின் கண்ணில் படவில்லை. "வாகரை வன்செயல்கள்' என்பதோடு அவரின் கருத்து அமுங்கி விட்டது. அதேசமயம், இந்தியா சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஒரு கருத்தை அங்கு வைத்து வெளியிட்டிருக்கின்றார்.

"தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அரசியல் நடைமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். தமிழ் மக்களின் ஆதங்கங்களைத் தீர்க்கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான தேடல்கள் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். ஆனால், அதேசமயம் இரத்தக் களரியைப் புலிகள் தொடரும் வரை புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் தொடரும்.'' என்று அமைச்சர் மங்கள அறிவித்திருக்கின்றார்.

இதேபோன்ற கருத்தை இலங்கைப் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் அமைச்சர் ரம்புக்வெலவும் கொழும்பில் வைத்துத் தெரிவித்திருக்கின்றார்.

"கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற படை நடவடிக்கை கள், வாகரையை மீட்பதற்கான இறுதிக் கட்ட நகர்வாகும். இருந்த போதிலும் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நிறுத்திப் பேச்சுக்கு வந்தால் நாளையே பேச்சுகளை ஆரம்பிக்க அரசு தயாராக உள்ளது.'' என்று அமைச்சர் ரம்புக்வெல ஓரிரு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

தாமே வலிந்த தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டு, புலிகள் தாக்குதல்களை நிறுத்தினால் நாளையே பேச்சை ஆரம்பிக்கலாம் என்று அவர் கூறுவது வேடிக்கையானது. அவ்வாறு கூறி சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றும் வேலையைக் கொழும்பு தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

அரசுத் தரப்பின் இந்தப் பாணியிலான போக்குக்கு, விடுதலைப் புலிகள் தரப்பு ஏற்கனவே திட்டவட்டமாகவும், தெளிவாகவும் பதில ளித்து விட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

"கடந்த காலச் சிங்களத் தலைமைகள் போன்று மஹிந்த ராஜபக்ஷவும் இராணுவப் பலத்திலும், இராணுவ அணுகுமுறையிலும், இராணுவ வழித் தீர்விலுமே நம்பிக்கை கொண்டு செயற்படுகின்றார். தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு நாம் விடுத்த இறுதியான உறுதியான அவசர வேண்டு கோளையும் நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்துக் காலத்தை இழுத்தடித்து வருகின்றார். புலிகளை அழிக்கும் இலக்குடன் ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கிவிட்டு, மறுபுறம் சமாதான வழித் தீர்வு பற்றிப் பேசுகின்றார். போரும் சமாதானமும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை, அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்டச் சக்தியுடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமோ, அந்தப் போராட்ட சக்தியை அந்நியப்படுத்தி, அழித்துவிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது என்றுமே நடக்கப் போவதில்லை. இது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

மஹிந்தவின் அரசு, படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று, தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையிற் கட்டிவிட எண்ணுகிறது ......'' இப்படி கடந்த மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார்.

ஆகவே, போர்முனைப்புச் செயற்பாட்டில் தீவிரமாக இருக்கும் அரசு, அதில் உடனடியாக சில வெற்றிகளைக் காணலாம். காணும் வாய்ப்பு அதிகம் உண்டு. அது அரசுக்குத் தெற்கில் பெரும் ஜனரஞ்சக பலத்தைத் தற்காலிகமாக உருவாக்கித் தரும் என்பதும் உறுதி. ஆனால், அமைதி முயற்சிகளுக்கான இடைவெளியை இந்தப் போர்முனைப்புப் போக்கு நிரந்தரமாக விரிவடைய வைத்து, சமாதா னத்திற்கான சந்தர்ப்பத்தையே அது அடியோடு இல்லாதொழித்து விடும்.

ஆக, "சுகம் வரும் ஆள் தப்பாது" என்ற நிலைமைதான்.

-Sudaroli-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.