Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

""பாய பதுங்கும் புலிகள்....""

Featured Replies

""பாய பதுங்கும் புலிகள்....""

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் பாரிய திட்டமிடலுடன்

திரளாக பல பட்டாலியன் படையணிகளோடு களமுனையை திறந்து

சமராடி அந்த பகுதியை ஆக்கிரமிக்கின்ற பொழுது அதை அதற்கமைவாக

தக்க வைத்து கொள்ள வேண்டும்.

அதற்காண விநியோகங்கள் தடையின்றி நிகழ்த்த படவேண்டும்

அப்பொழுதுதான் அந்த படைகளின் இருப்பை நிலை நிறுத்தி கொள்ளலாம்

ஆனால் அது சாத்தியமா என்பதுதான் கேள்வி...?

விடுதலைப் புலிகள் விட்டு வெளியேறிய பிரதேசங்களை பல

உயர் படையணி கட்டளை தளபதிகள் விசேடமாக அங்கு பணியாற்றி

அந்த பிரதேச வேறுபாடுகள் சாதக பாதக வழிமுறைகளை முன்கூட்டியே

தெரிந்து பார்த்தறிந்து வடக்கு நோக்கி திரும்பியிருந்தார்கள்.

இவை முன்கூட்டியே தேசிய தலைமையினால் ஒருங்கிணக்கப்பட்ட

போருக்காண திட்டமிடலில் ஒன்றாக அமைகிறது.

அதற்கமைவாக அண்மை காலங்களில் அந்த படையணிகளிற்கிடையில்

நடைபெற்ற மாற்றங்கள் என்பான இதை வெளிப்படையாக தெரிவிக்கின்றன.

அடுத்து அந்த பகுதியை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் போதுதான்

தமது வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமாகும் அதற்கமைவாகவே ஏனைய

விடயங்களை அணுக முடியும்.

தற்போது நடக்கின்ற புலிகளின் பின்வாங்கல் தோல்வியின் நிலையல்ல.

அது புலி பாய்வதற்காக பதுங்குகிறது என்பதே பொருத்தம்.

அத்தோடு அந்த ஆக்கிரமிப்பு படைகள் தம்மை பலப்படுத்தி கொள்ளும் போது

அவை பல கனரக ஆயுதங்களையும் அங்கு வைத்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த கள கட்டமைப்பையும் அந்த படைகளையும் தக்கவைக்க முடியும்

அதை ஆக்கரமித்த அந்த படைகள் செய்யும்.

அப்பொழுது பல கனரகங்களை தாம் அபகரிக்கவும் தமது தேவைக்கு பயன்படுத்தவும் உதவும்

பரந்தன் ஊடறுப்பு தாக்குதலை நினைவு படுத்துகிறது. அங்கு புலிகள் 15க்கும் மேற்ப்பட் கனரக பீரங்கிகளை

கைப்பற்p அழித்திருந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

அந்த புவியியல் களத்திற்கு அமைவாக

தமது கனரக ஆயுதங்களை நகர்த்தி கொள்ள முடியாத போது

புலிகள் எதிரியிடம் இருந்து பறித்தே அந்த படைகளை

அவன் கனரகங்கள் கொண்டடித்த வரலாறுகள் முன்னர் எழுதபட்டிருக்கிறது

எனவே தற்போது தமக்கு ஏற்படும் இழப்புகளையும்

அழிவுகளையும் தவிர்த்த வாறு பின்நோக்கி நகர்ந்த புலிகள்

பாரிய படையெடுப்புக்கு தம்மை தயார் படுத்தி அந்த படைகளை

தமது பொறிக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

இது வன்னி. யாழ்களங்களை நினைவு படுத்துகிறது.

கிழக்கில் முன்னர் இருந்ததைவிட தமது அகல கால் ஊன்றலை புலிகள் விரும்புவார்கள்

ஏனெனில் தற்போதைய அரசியல் தீர்வுக்கு கிழக்கு ஒரு பிரதான களமாகவும்

அதே வேளை சச்சைகுரியதாகவும் மாறியுள்ளது.

அங்கு வேறு குழுக்களை ஆழ்வதற்கோ அன்றி

அகல கால் ஊன்றி ஒரு பொம்மையாட்சி செய்வதற்கோ

புலிகள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

அது புலிகளின் தமிழீழம் என்ற நிலைப்பாட்டுக்கு ஊறானது.

எனவே அதனை புலிகள் தமது முழுமையான ஆளுகைக்குள் வைத்திருக்கவே விரும்புவார்கள்

முன்னெப்போதும் இல்லாத கனரக ஆயுதங்களின் நகர்த்தல் அந்த களத்தின் முக்கியத்துவத்தை

கோடிட்டு காட்டுகிறது.

தற்போது படைகள் ஒரு மரண பொறிக்குள் சிக்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை

உலகத்திற்கும். மகிந்தா அரசிற்கும் ஏனைய பிற இன உறவுகளிற்கும்

விடுதலைப்புலிகள் அரசியல் ராஜதந்திரத்துடன் கூடிய ஒரு பாரிய படை நகர்வை நடத்த

வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்கள்.

அவர்கள் இதுவரை எதற்காக அமைதிகாத்தார்களோ

அந்த காலம் கடக்கும் பொழுது ஏக காலத்தில்

பல்முனை தாக்குதலை நிகழ்துவார்கள் என்பதும்

இந்த ஆண்டு இலங்கை அரசியலில் பெரும் மாற்றத்தையும்

சில வேளை ஆட்சி கவிழ்ப்பை அல்லது

பெரும் அரசியல் நெருக்கடியை கொண்டு வரக்கூடிய

சாத்தியங்களும் உள்ள ஆண்டாக மாறலாம். மாறும்

என்பது தெரிகிறது.

ஆனால் இதில் வேற்று நாட்டு தலையீடுகள் உள்நுழைய காத்திருக்கும்

ஒரு களமாகவும் இது மாறப் போகிறது. ஏனெனில் புலிகள் இனி நடாத்த போகும்

தாக்குல் என்பது பாரியளில் இருக்கும் போது அண்டை நாடுகளிடம் ஓடிய அரசு தனது

நாட்டுக்குள்ளேயே வந்து குந்திய வல்லரசு படைகளின் உடனடி ஆயுத உதவியையோ அன்றி

உளவு உதிவியையோ எதிர் பார்க்க கூடும்.

அதை அந்த நாட்டு படைகள் மறைமுகமாக அரசபடைகளிற்கு உதவ கூடிய

சாத்தியங்கள் உள்ளன .இந்த கால கட்டம் என்பது எதிர்பாரா சில எதிர்விளைவுகளையும்

கொண்டுவரக்கூடிய சூழலும் உள்ளது. அவையாவற்றையும் அறிந்த புலிகள் மிக சாதுரியமாகவே தமது

நகர்வுகளை நகாத்துவார்கள்.

அப்பொழுது தான் புலிகளின் இராணுவ பலமும் அரசியல்

சாணக்கியமும் மீண்டுமொருமுறை உலகிற்கு தெரியவரும்

அதுவரை இவ்வாறான அரசின் பிரச்சார மழை மக்களை குளிப்பாட்டுவதை

தவிர்க முடியாது.

-வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் போடுங்க அரிவாளை (ஆய்வை).. புல்லரித்து புத்துணர்ச்சி வந்தமாதிரி இருக்கு... ஒரு ரவுண்டு சினேகிதர்களுக்கு இதை அப்படியே அவிட்டுவிட்டு வருகின்றேன்.. :P

அருமையான ஆய்வு வன்னி மைந்தன் அவர்களே.

படங்களில கைக்குண்டை catch பண்ணி திருப்பி எறிஞ்சு எதிரியை முறையடிக்கிறமாதிரி எல்லாம் நடக்குது என்றியள். நினைக்கவே புல்லரிக்குது.

அதேன் கைப்பற்றினா பிறகு அழிக்கினம்? தங்களிட்டை தாராளமா இருக்கு வேண்டாம் எண்டோ? :icon_idea:

அருமையான ஆய்வு வன்னி மைந்தன் அவர்களே.

படங்களில கைக்குண்டை catch பண்ணி திருப்பி எறிஞ்சு எதிரியை முறையடிக்கிறமாதிரி எல்லாம் நடக்குது என்றியள். நினைக்கவே புல்லரிக்குது.

அதேன் கைப்பற்றினா பிறகு அழிக்கினம்? தங்களிட்டை தாராளமா இருக்கு வேண்டாம் எண்டோ? :icon_idea:

சாதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்து என்று பார்த்தாலே மாதம் நூற்றியம்பது.அப்ப சும்மா வருசத்துக்கு ஆயிரத்திஎண்ணூறு போகும். இது செலவில்லாமல் இழப்புகள் இல்லாமல்,இதை விட வருசம் தீபாவளி போல நினைவு தினங்கள் முகாம் தாக்குதல்கள் என்று எப்படி பார்த்தாலும் நல்லகணக்குத்தேறும் தானே இப்போதைக்கு.

" உள்ளதை கொண்டு திருப்திப் படுவோமாக"

நன்றி வன்னிமைந்தனே. நீங்கள் எவ்வளவு எழுதினாலும் திருந்தாத பல ஜென்மங்கள் களத்தில் இருக்கின்றன. இவர்கள் தங்களை எப்போதுமே நம்பமாட்டார்கள். மற்றவர்களைத்தான் நம்புவார்கள்.என்ன செய்வது நக்கிப்பழகிய பிறவிகள் :icon_idea:

இவர்களை பொறுத்தவரை போரிட்டு புலிகள் அழியவேண்டும்.புலி புல்லை தின்னாது. தின்னும் என்று பகல் கனவு கண்டால் அது புலியின் தவறல்ல. கெரில்லாக்கள் மரபுப்படையாகவும் மாறலாம். தேவைப்படின் மரபுப்படையை கெரில்லாபடையாகவும் மாற்றலாம். காத்திருங்கள். எங்களுக்கு முன்பாக புலிகளுக்காக இவர்கள் பரணிபாடும் காலம் வெகுதொலைவில் இல்லை. இது சத்தியம்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ஆய்வு வன்னி மைந்தன் சார்.

உங்கள் ஆய்வு கட்டுரை மிகவும் பிரயோசனமானது..நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

தற்போது நடக்கின்ற புலிகளின் பின்வாங்கல் தோல்வியின் நிலையல்ல.

அது புலி பாய்வதற்காக பதுங்குகிறது என்பதே பொருத்தம்.

அத்தோடு அந்த ஆக்கிரமிப்பு படைகள் தம்மை பலப்படுத்தி கொள்ளும் போது

அவை பல கனரக ஆயுதங்களையும் அங்கு வைத்திருக்க வேண்டும்.

ம்...என்னமோ இதில உண்மை இருக்கும் போல தாக் கிடக்கு...என்ன மாதிரி..சொல்லுறீங்க...இப்படி வேற இதுக்கள்ள நடக்குதா...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.