Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா மறுப்பு

Featured Replies


புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட வேளை விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளத் தயாரென அறிவித்திருந்த இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தற்போது மருத்துவ பரிசோதனை நடத்த மறுத்துள்ளது.


அமெரிக்கத் தூதுவரின் உறுதிமொழியையும் வடக்கு மாகாண முதலமைச்சரின் அறிவிப்பையும் அடுத்து அமெரிக்க விமானப் படையின் மருத்துவ முகாமில் பரிசோதனை மேற்கொள்ள நேற்று வெள்ளிக்கிழமை நீண்டநேரம் காத்திருந்த 25 க்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;


கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்புடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் இவர்களுக்கு சர்வதேச மருத்துவர்களின் மருத்துவ பரிசோதனை அவசியமென வலியறுத்துவது தொடர்பில் எடுத்துக் கூறியபோது இந்த முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோனைகளை நடத்த அமெரிக்கா தயாராயிருப்பதாகவும் யாழ். குடாநாட்டில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமானப் படையின் மருத்துவ குழுவால் பரிசோதனைகளை நடத்த முடியுமெனவும் அமெரிக்கத் தூதுவர் ஒப்புதலளித்திருந்தார்.


இதனையடுத்து இவ்வாறான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள விரும்பும் முன்னாள் போரளிகளை வடக்கு மாகாண செயலகத்தில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியிருந்தார். இதனையடுத்து பல போராளிகள் வியாழக்கிழமை தமது பெயர்களைப் பதிவு செய்தனர்.


இதற்கிடையில் புதன்கிழமை வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன அமெரிக்காவின் மருத்துவ பரிசோதனை எமக்குத் தேவையில்லையென அமெரிக்க தூதுவரின் அறிவிப்பை நிராகரித்தார்.


இந்நிலையில் வடக்கு மாகாண செயலகத்தில் தமது பெயர்களைப் பதிவு செய்திருந்த முன்னாள் போராளிகளில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 25 போராளிகள் நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க விமானப்படையின் மருத்துவக் குழுவிடம் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வதற்காக வடக்கு மாகாண சபை செயலகத்திற்கு அழைக்கப்பட்டதையடுத்து அவர்கள் நேற்றுக் காலை 8.30 மணிக்கு வருகை தந்திருந்தனர்.


எனினும் இப்போராளிகள் நண்பகல் 12.30 மணிவரை மருத்துவப் பரிசோதனைக்காகக் காத்திருந்த போதும் அழைக்கப்படாததால், போராளிகளின் பேச்சாளரான துளசி, வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது, மருத்துவப் பரிசோதனைகளை வழங்க கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாக செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் போராளிகளின் பேச்சாளரான துளசி கூறுகையில்,


வடக்கு மாகாண செயலகத்தில் மருத்துவ பரிசோதனைக்காகப் பெயர்களைப் பதிவு செய்துவிட்டு இன்று (நேற்று) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற தூர இடங்களிலிருந்து 25 க்கு மேற்பட்ட போராளிகள் வந்து காத்திருந்த போதும் எதுவும் நடைபெறவில்லை.


இது தொடர்பில் நான் வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பான நுணுக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்கள் யாழ். வந்துள்ள அமெரிக்க விமானப்படை மருத்துவக் குழுவிடம் இல்லையெனவும் இதற்கேற்ற கருவிகளைத் தாங்கள் கொண்டு வரவில்லையெனவும் கூறியதுடன் இந்த மருத்துவ பரிசோதனையை வழங்க முடியாதென அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாகக் கூறினார்.


அமெரிக்கத் தூதரகரத்தின் உறுதிமொழியையும் வடக்கு மாகாண சபையின் அழைப்பையும் நம்பி தூர இடங்களில் இருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வந்த முன்னாள் போராளிகள் இதனால் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது என்றார்.

http://www.thinakkural.lk/article.php?local/hgldqxfed4102984d2004bf213816niyls8a2095230e8e14993d398dgxllz

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள், உண்மையிலே, சுகாதார அமைச்சர் சொன்னது போல, முதல் யாழ் ஆஸ்பத்திரிக்கு அல்லவா செல்லவேண்டும். 

முதல் மருத்துவ ஆய்வை மேற்கொண்டு, அடிப்படையில் இப்படி பிரச்சனை இருப்பது போல் படுகிறது, என்றால் மேலதிக ஆய்வுக்காக வைத்தியர்கள் சிபார்சு செய்வதே சரியான வழிமுறை.

அப்படி செய்தால், அரசுக்கு வேறு வழி இருக்காது.

இதற்குள் அரசியலை இழுத்து....

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.