Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டர் அமைப்புக்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியல்: சிறிலங்காவுக்கு 2 ஆவது இடம்

Featured Replies

[ஞாயிற்றுக்கிழமை, 21 சனவரி 2007, 03:22 ஈழம்] [அ.அருணாசலம்]

தொண்டர் அமைப்புக்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிறிலங்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த வாரம் 'கெயார்' சர்வதேச நிறுவனம் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களின் படுகொலைகளின் அடிப்படையில் மேற்கொண்ட 2006 ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தலில் உலக நாடுகளின் வரிசையில் ஆப்கானிஸ்தான் முதலாவது இடத்தையும், சிறிலங்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

'கெயார்' சர்வதேச நிறுவனம் மேலும் தகவல் தெரிவிக்கையில்,

தொண்டர் நிறுவனப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த பத்து வருடங்களில் 2006 இல் அதிகளவு அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தில் 83 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற அதிக படுகொலைகளாகும். மேலும் 778 பணியாளர்கள் காயமடைந்ததுடன் 52 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 26 பணியாளர்களும் சிறிலங்காவில் 23 பேரும் சூடானில் 15 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் கொல்லப்பட்ட 23 பணியாளர்களில் 17 பேர் பிரான்ஸ் தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் ஆவார்கள். இவர்கள் கடந்த ஆகஸ்டில் மூதூரில் கொல்லப்படது.

இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் கந்தளாய் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும். சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை வழக்குகளை இழுத்தடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் நாள் தொடங்கப்பட உள்ளது. எனினும் இந்த வழக்கு படுகொலை செய்யப்படவர்களின் உறவினர்கள் பயத்தின் காரணமாக சமூகமளிப்பதில்லை எனவும் எனினும் சாட்சியங்களை அனுமதிக்க அல்லது அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு அரசுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் உண்டு என வழக்கறிஞர் இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

சாட்சியங்கள் சமூகமளிக்காததால் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

படுகொலைக்கான சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பிரான்ஸ் தொண்டர் அமைப்பு மீண்டும், மீண்டும் அரசை கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களுக்கான பாதுகாப்பு விசாரணைகளுக்கு முக்கியமானது என அது தெரிவித்தள்ளது.

படுகொலைகள் நடைபெற்று 5 மாதங்கள் கடந்த நிலையிலும் படுகொலைகள் தொடர்பான எல்லா தகவல்களும் திரட்டப்படவில்லை என அது மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி : புதினம்

Edited by Janarthanan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.