Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கண்ணில் வெண்ணெய்..மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா?- கலங்கும் ஈழ அகதிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால், 1983 ஆம் ஆண்டு அடைக்கலம் கேட்டு முதன்முதலாக ஈழத்தமிழர்கள் தமிழகம் வந்தார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள் வருவது அதிகரித்து இலங்கையில் போர் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வந்துகொண்டே இருந்தனர். இப்படி அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் 112 முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். இந்த முகாம்களில் 63,938 பேர் வசிக்கின்றார்கள்.

இந்த முகாம்களில் 20 ஆயிரம் நபர்கள் 17வயதிற்குட்பட்டவர்கள். முகாமிற்கு வெளியே 34,482 நபர்கள்  வசித்துவருகிறார்கள். அகதிகளாக வந்து இருபது ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் வசித்துவரும் இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கபட்டு, மனித உரிமைக்கு மாற்றாக இவர்கள் நடத்தபடுகிறார்கள் என்ற குற்றசாட்டு தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசு இவர்களுக்கு நிதி உதவி அளித்து வந்தாலும், கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும், இவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கபட்டே வருகிறார்கள்.  நன்றாக படித் மதிப்பெண் பெற்றாலும்,  இலங்கை அகதிகளாக இருந்தால், மேற்படிப்பிற்கு சீட் கிடைக்காத நிலைதான் உள்ளது. இந்த அவல நிலை காரணமாக பல்வேறு குடும்பங்கள் நாங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். பலர் தங்களது சொந்த வீடு, நிலம் போன்றவற்றை விட்டு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இனி தங்களால் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாது என்றும் சொல்லுகின்றனர். பல குடும்பத்தை சேர்ந்தவர்கள், இங்கு திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட்டனர்.

இந்நி்லையில்  இலங்கை அகதிகள் மறுவாழ்வில் இந்திய அரசு அக்கறை காட்டாமல் வருகிறது என்று போர்க்கொடி துாக்கிவருகினறனர் தமிழ் இன உணர்வாளர்கள். இந்த அகதிகளுக்காக தமிழீழ எதிலியர் உரிமை கூட்டமைப்பு என்ற ஈழத்தமிழர்களின் அகதிகளுக்கான ஒரு கூட்டமைப்பை துவக்கியுள்ளார்கள். இந்த கூட்டமைப்பிற்கு தலைவராக கொளத்துார் மணி பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தில் இருக்கும் 16 அமைப்புகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் சார்பில் வரும் 27ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் 'கையெழுத்து இயக்கம்' துவக்க உள்ளார்கள்.

இந்தியாவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்து எந்த அறிவிப்பையும் வழங்காததது, தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்தஅமைப்பின் தலைவர் கொளத்துார் மணி, “இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும், தமீழிழ எதிலியர் அனைவருக்கும் இந்தியாவின் இடைக்கால குடியுரிமை வழங்கவேண்டும். தமீழிழ அகதிகளின் அரசியல், குடிமையியல் உரிமைகளும், பொருளியல் உரிமைகளும், சட்டத்திலும், நடைமுறையிலும் உறுதி செய்யபடவேண்டும். திபெத், பாகிஸ்தான் போன்ற பிறநாட்டு அகதிகளோடு ஒப்பிட்டால், தமிழீழ அகதிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதை இந்திய அரசு கைவிடவேண்டும். சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அனைவரையும், விடுதலை செய்யவேண்டும். அந்த முகாம்களை கலைத்துவிட வேண்டும். முகாம்களிலும், முகாமிற்கு வெளியே வாழும் அகதிகளுக்கு எதிராக மனித உரிமை மீறலில் ஈடுபடும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளை இல்லாமல் செய்யவேண்டும். அனைவருக்கும் முதற்கட்டமாக இடைக்கால குடியுரிமை வழங்கவேண்டும்.” என்று தெரிவித்தார்.

இந்த உரிமைக்கூட்டமைப்பின்  தலைமை குழு பொறுப்பாளர் மணியரசன் “அகதிகள் குழந்தைகள் அனைவருக்கும், கட்டாய இலவசக் கல்வியும், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உறுதி செய்யவேண்டும். மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகளைப் பெற இப்போது உள்ள தடைகளை நீக்க வேண்டும். சட்டம் பயின்றுள்ள அகதிகளை நமது நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அகதிகள் முகாம்களில் உள்ள கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளிடம் இந்தியாவில், மிகைதங்கலுக்கான தண்டம் விதிப்பதை கைவிட வேண்டும்.” என்றார்.

அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு தமிழர்கள் நல ஆணையரகத்தின் உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது, “ஆரம்பக் கல்வி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளிலும், அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளிலும், அகதிகளின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி தரப்படுகிறது. தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப் புத்தகம், நோட்டு, மிதிவண்டி, லேப்டாப் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

உயர்கல்வியில் பயில வாய்ப்பு கிடைத்தாலும் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை என்ற ஒரு குறை இருக்கிறது. ஆனால் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் ஒரு சில மாணவர்கள் படிக்கின்றார்கள். தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள் எல்லாம் இவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்களும் வழங்கப்படுகிறது. அவர்களது சமூகப் பொருளாதார வாழ்வியலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

http://www.vikatan.com/news/tamilnadu/67487-the-ignored-plight-of-sri-lankan-refugees-in-tamil-nadu.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.