Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா கூலிக்குழுவால் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த இளைஞர்கள் கடத்தல்.

Featured Replies

கருணா கூலிக்குழுவால் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த இளைஞர்கள் கடத்தல்.

வாகரை கண்ணன்கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த வாழைச்சேனைப்பகுதிக்கு சென்ற இரு இளைஞர்கள் கருணா கூலி இராணுவத் துணைக்குழுக்களால் நேற்று சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை 3 இடம்பெயர்ந்த இளைஞர்கள் இராணுவத்துணைக்கூலிக் குழுவான கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளனர். இதேவேளை வாகரைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற 4700 பேர்களில் 1200 பொதுமக்களே கட்டுமுறிவு ஊடாக சிங்கபுர பகுதிக்கு சென்றுள்ளார்கள் ஏனையவர்கள் மாங்கேணி கஐவத்தை பகுதிகளிலும் மற்றும் தற்காலிக இடங்களிலும் தங்கியுள்ளார்கள்.

எனினும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள் கஐவத்தை சோதனைச்சாவடி முன்னரங்க நிலைகளை கடத்கும் போது இடம்பெற்றுள்ளன. நாளுக்கு நாள் வயது குறைந்த சிறார்களை படைக்கு சேர்க்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பான முறைப்பாடுகளை காவல்துறையில் பதிவு செய்பவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இக்கூலிக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்னமும் அநேக பொதுமக்கள் சிங்கபுர நோக்கிய கஜவத்தை முன்னரங்க சோதனைச் சாவடிகளில் காத்திருப்பதாக வாழைச்சேனை மருதநகர் பகுதியை அடைந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

பெருமளவிலான இடம்பெயர்ந்த மக்கள் நீண்டதூரம் மாங்கேணியை கரையோரமாக நடந்து சென்றுள்ளார்கள். முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் உழவு இயந்திரங்களில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

42 பேரூந்துகளில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் கஜவத்தை பகுதிகளில் இருந்து மாங்கேணிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இராணுவத்தாலோ சிறீலங்கா காவல்துறையாலோ துன்புறுத்தப்பட்டதாக எதுவித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனினும் துணைக்கூலிக் குழுக்கள் கைத்தொலைபேசிகள், உந்துருளிகளை இவர்களிடம் இருந்து அபகரித்ததாக முறையிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளான சவுக்கடி, ஐயங்கேணி பகுதிகளில் இரு இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமும் வாழைச்சேனைப் பகுதியில் மற்றொரு முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பகல்வேளை இடம்பெயர்ந்த முகாமுக்கு விஜயம் செய்யும் துணைப்படைக்கூலிக்குழுவினர் இரவு வேளைகளில் அம்முகாம்களுக்கு சென்று இளைஞர்களை கடத்திச் செல்வதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

-Pathivu-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.